search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "new buildings"

    • கட்டிடங்களை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன், குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
    • பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இந்தியாவிற்கு வழிகாட்டும் மாநிலமாக தமிழகத்தை மாற்றி வருகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    உடன்குடி:

    உடன்குடி ஊராட்சி ஓன்றியம், செம்மறிக்குளம் ஊராட்சி சத்யா நகரில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம், செம்மறிக்குளத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ. 23.57 லட்சம் மதிப்பில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம், குமாரலட்சுமிபுரத்தில் ரூ.11 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையம் ஆகிய வற்றிற்கான கட்டுமான பணிகள் நிறைவு பெற்றன.

    இக்கட்டிடங்களை தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன், குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களோடு மக்களாக இருந்து மக்கள்பணி செய்து வருகிறார். அரசு கொண்டுவரும் அனைத்து திட்டங்களும் அனைத்து தரப்பு மக்களுக்கும் அதுவும் அடித்தளமக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் தனி கவனம் செலுத்தி வருகிறார்.

    முன்பெல்லாம் கிராம மக்கள்அரசு அலுவலகம் நோக்கி செல்ல வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இன்று தமிழக அரசு மக்களை தேடி வந்து மக்கள் பணி செய்கிறது. இப்படி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இந்தியாவிற்கு வழிகாட்டும் மாநிலமாக தமிழகத்தை மாற்றி வருகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்சிக்கு உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு தலைவரும், உடன்குடி மேற்கு ஓன்றிய தி.மு.க. செயலாள ருமான டி.பி.பாலசிங் தலைமை தாங்கினார்.உதவி கலெக்டர் குருசந்திரன், தாசில்தார் வாமனன், உடன்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் சுடலை, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஜெசி பொன்ராணி, செம்மறிக்குளம் ஊராட்சி மன்ற தலைவி ஆகஸ்டா மரியதங்கம், துணைத்தலைவர் நாராய ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில வர்த்தக அணி துணை செயலர் உமரிசங்கர், உடன்குடி கிழக்கு ஓன்றிய தி.மு.க. செயலர் இளங்கோ, தி.மு.க. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், உடன்குடி பேரூராட்சி கவுன்சிலர்கள் அஸ்ஸாப் அலி, ஜான்பாஸ்கர், செட்டியாபத்து ஊராட்சி மன்றத் தலைவர் பாலமுருகன், தி.மு.க. கிளை நிர்வாகிகள் விஜயன், தினகரன், கோபால கிருஷ்ணன், முத்துசாமி, ரூபன், ராஜேந்திரன், செல்வின் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் ஜார்ஜ் செல்வின் சகாயம் நன்றி கூறினார்.

    • மேலூர் தொகுதியில் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் 9 புதிய கட்டிடங்களை பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் திறந்து வைத்தார்.
    • பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் சட்டமன்ற தொகு திக்கு உட்பட்ட மேலூர், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மதுரை பாரா ளுமன்ற உறுப்பினர் நிதி மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 1 கோடி மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டி டம், ரேசன்கடை, பயணியர் நிழற்குடை கட்டிடங்களை மதுரை பாராளுமன்ற உறுப் பினர் வெங்கடேசன் ரிப் பன் வெட்டி திறந்து வைத் தார்.

    தெற்குதெரு ஊராட்சி டி.தர்மசானப்பட்டியில் 11 லட்சத்தி 97 ஆயிரம் மதிதப் பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டடிமும், அரசப் பன்பட்டி ஊராட்சியில் 15 லட்சம் மதிப்பீட்டில் பொது விநியோகம் (ரேசன் கடை), கோட்டநத்தம்பட்டி ஊராட் சியில் ரூ. 11 லட்சத்தி 97 ஆயிரம் மதிப்பீட்டில் அங் கன்வாடி கட்டிடம், தனியா மங்கலம் ஊராட்சியில் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் பொதுவிநியோகம் (ரேசன் கடை) கட்டிடமும், கொங்கம் பட்டி ஊராட்சியில் உள்ள பன்னிவீரன்பட்டியில் ரூ. 10 லட்சத்து 93 ஆயிரம் மதிப் பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடமும், கொடுக்கம் பட்டி ஊராட்சியில் உள்ள கொன்னப்பட்டியில் ரூ. 10 லட்சத்து 93 ஆயிரம் மதிப் பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடம், 5 லட்சம் மதிப் பீட்டில் பயணியர் நிழற் குடை கட்டிடம், கொட்டாம் பட்டி ஊராட்சியில் ரூபாய் 10 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய அங்கன் வாடி மைய கட்டிடமும், பட்டூர் ஊராட்சியில் 5 லட்சம் மதிப்பீட்டில் பயணி யர் நிழற்குடை கட்டிடம் திறந்த வைக்கப்பட்டன.

    மேலூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் குமரன், ராஜேந்திர பிரபு, பாலகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் அரசப் பன்பட்டி தலைவர் முரு கேஸ்வரி வெள்ளையன், கோட்ட நத்தம்பட்டி உஷா இளையராஜா, தனியா மங்கலம் குமார், கொங்கம் பட்டி சந்தோஷ், கொடுக்கம் பட்டி ராஜா, கொட்டாம் பட்டி பாலசுப்பிரமணியன், தும்பைபட்டி அயூப் கான், மேலூர் தாசில்தார் செந்தா மரை, மேலூர் வட்ட வழங் கல் அலுவலர் நாகராணி, மேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசந்தர், வேலவன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாநில குழு உறுப்பினர் பாலா, மேலூர் தாலுகா செயலாளர் கண்ணன், மாநில கரும்பு விவசாய சங்க தலைவர் வழக்கறிஞர் பழனிச்சாமி, தாலுகா குழு உறுப்பினர்கள் அடக்கி வீரணன், மணவா ளன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின் படி புதியதாக கட்டப்படும் அனைத்து கட்டிடங்களுக்கும் சுகாதார சான்றிதழ் அவசியம் பெற வேண்டும்.
    • தமிழக அரசு உத்தரவின்படி உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து சுகாதார சான்றிதழ் பெற வேண்டும்.

    திருப்பூர்:

    வெள்ளகோவில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கட்டப்படும் அனைத்து கட்டிடங்களுக்கும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையிடம் இருந்து குடியேற்ற சான்றிதழ் பெறுவது அவசியம் என வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின் படி புதியதாக கட்டப்படும் அனைத்து கட்டிடங்களுக்கும் சுகாதார சான்றிதழ் அவசியம் பெற வேண்டும். அவ்வாறு சுகாதார சான்றிதழ் பெற்ற கட்டிடங்களுக்கு மட்டுமே வீட்டின் குடிநீர் வசதி மற்றும் மின் இணைப்பு, சொத்து வரி விதிப்புக்கான அனுமதி சான்றிதழ் பெற முடியும். இவை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து இடங்களிலும் நடைமுறையில் உள்ள சட்டம் ஆகும்.

    புதிய கட்டிடங்களில் முறையற்ற வகையில் கழிவுநீர் தேக்கம், கழிவு நீர் வெளியேற்றம், போதுமான குடிநீர் வசதி இல்லாதது, கழிவு நீர் பொருட்களை தேக்கி வைத்து முறையாக அப்புறப்படுத்தாதது, சுகாதார முறைப்படி கழிவுகளை அப்புறப்படுத்தாமல் இருப்பது போன்றவற்றால் அருகில் வசிப்பவர்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது மற்றும் நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே இதை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு உத்தரவின்படி உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து சுகாதார சான்றிதழ் பெற வேண்டும்.

    சான்றிதழ் பெறுவதற்கான மாதிரி விண்ணப்பம் அந்தந்த ஊராட்சி அமைப்புகளிடம் இருக்கும் எனவும் கட்டுவதற்கு முன்பே அந்த விண்ணப்பித்தினை பூர்த்தி செய்து தொடர்புடைய சுகாதார அலுவலகத்தில் அதிகாரிகளிடம் விண்ணப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் சுகாதார ஆய்வாளர் புதிய கட்டிடத்தை கட்டுவதற்கு முன்பும் மற்றும் கட்டியதற்கு பின்பும் ஆய்வு மேற்கொள்ளுவர். இதற்கு சான்றிதழ்களும் வழங்கப்படும். அதன் பின்னரே குடிநீர் இணைப்பு, சொத்து வரி விதிப்பு, மின் இணைப்பு நடவடிக்கைகள் போன்றவை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    வாலாஜாவில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் புதிய கட்டிடங்களை அமைச்சர் திறந்து வைத்தார்.

    ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.23லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நுழைவு வாயில் மற்றும் மாணவிகளுக்கான சிகிச்சை அறை, தி.மு.க.ராஜ்யசபா உறுப்பினர் சண்முகம் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகக் கட்டிடம், நமக்கு நாமே திட்டத்தில் ரூ.27லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கழிப்பறை கட்டிடம் என மொத்தம் ரூ.1 கோடியே 1 லட்சம் மதிப்பில் முடிவுற்ற 4 கட்டிடங்களுக்கான திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

    கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். அரக்கோணம் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகத்ர ட்சகன், ராஜ்யசபா உறுப்பினர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் சீனிவாசன் வரவேற்றார்.

    விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு கல்லூரி நுழைவு வாயில், நூலகம், மாணவியர்களுக்கான சிகிச்சை அறை ஆகியவற்றை திறந்து வைத்து , குத்து விளக்கேற்றி வைத்து பேசினார்.

    இதில் ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன்.எம்.எல்.ஏ, ஜி.கே. உலகப் பள்ளி இயக்குனர் வினோத்காந்தி ,மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றிய குழு தலைவர்கள் வெங்க ட்ரமணன், வடிவேலு, நகரமன்றத் தலைவர்கள் ஹரிணி தில்லை, தமிழ்ச் செல்வி உள்பட கல்லூரி பேராசிரி யர்கள், விரிவுரை யாளர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் தங்குவதற்கு புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தையும் பார்வையிட்டு கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
    • நோயாளிகளுக்கு வாட்டர் ஏ.டி.எம்.மில் கட்டணம் இல்லாமல் குடிநீர் வழங்கவும் அல்லது ஒரு ரூபாய் கட்டணத்தில் வழங்கவும் நகராட்சி ஆணையாளரிடம் அறிவுறுத்தினார்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் மாவட்ட கலெக்டர் விசாகன் பல லட்சம் ரூபாய் மதிப்பில் நடைபெற்று வரும் கட்டிட பணிகளை திடீர் ஆய்வு கொண்டார். வில்பட்டி ஊராட்சி பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை அரைக்கும் அரவை எந்திரத்தை ஆய்வு மேற்கொண்டு தூய்மை பணியாளர்களிடம் பணியின் தன்மை குறித்து கேட்டறிந்தார்,

    இதனைத்தொடர்ந்து குடி நீர் செல்வதற்கு அமைத்து வரும் குடி நீர் குழாய்கள் , புதிதாக கட்டப்பட்டு வரும் நவீன கழிப்பறை கட்டிடங்கள், கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் தங்குவதற்கு புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் அரசு ஆஸ்பத்திரியில் புதிதாக நகராட்சி சார்பில் புதிதாக அமைத்த கட்டண வாட்டர் ஏ.டி.எம் எந்திரத்தினை ஆய்வு மேற்கொண்ட பிறகு நோயாளிகளுக்கு வாட்டர் ஏ.டி.எம்.மில் கட்டணம் இல்லாமல் குடிநீர் வழங்கவும் அல்லது ஒரு ரூபாய் கட்டணத்தில் வழங்கவும் நகராட்சி ஆணையாளரிடம் அறிவுறுத்தினார், இதில் நகராட்சி ஆணையாளர் நாராயணன், கோட்டாட்சியர் ராஜா, வட்டாட்சியர் முத்துராமன், வட்டார வளர்ச்சி ஆணையாளர் ஜெசி ஞானசேகரன், கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயசந்திரிகா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • இளையான்குடி யூனியனில் ஊராட்சி மன்ற புதிய கட்டிடங்களை தமிழரசி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
    • அங்கன்வாடி, பள்ளி சமையலறை கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற கட்டிடங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் திறப்பு விழா நடந்தது.

    எஸ்.காரைக்குடி ஊராட்சியில் ரூ.28.56 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற கட்டிடம் திறப்பு விழாவுக்கு மானாமதுரை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தமிழரசி தலைமை தாங்கி கட்டிட த்தை திறந்து வைத்தார்.

    ஊராட்சி மன்ற தலைவர் குழந்தை பாண்டியன் வரவேற்றார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன், மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கட் ராமன், கண்ணமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் சுப. தமிழரசன், வட்டார வளர்ச்சி அலுவலர் ரஜினிதேவி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டி, ஊராட்சி துணைத் தலைவர் முத்தையா, தி.மு.க. விவசாய அணி காளிமுத்து, தெற்கு ஒன்றிய துணை செயலாளர் கருணாகரன், மாவட்ட பிரதிநிதிகள் சாரதி, அய்யாச்சாமி, வடக்கு சந்தனூர் கிளைச் செயலாளர் சடைமுனி, அவைத் தலைவர் சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து தமிழரசி எம்.எல்.ஏ. மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

    பின்னர் முனைவென்றி யில் புதியஊராட்சி மன்றக் கட்டிடம், விஜயன்குடி, மெய்யனேந்தல் ஆகிய கிராமங்களில் அங்கன்வாடி, பள்ளி சமையலறை கட்டிடங்களையும் தமிழரசி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    • செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் திறந்து வைத்தார்.
    • போடிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் சௌந்தர்ராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட போடிபட்டியில் ரூ.20 லட்சம் செலவில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தையும் பாப்பனூத்து ஊராட்சியில் ரூ.20 லட்சம் செலவில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தையும் உடுமலை ராமசாமி நகரில் ரூ .20 லட்சம் செலவில் கட்டப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தையும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில்மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம்,திட்ட இயக்குனர் லட்சுமணன், ஒன்றிய பெருந்தலைவர் மகாலட்சுமி முருகன் , முன்னாள் எம்.எல்.ஏ., இரா. ஜெயராமகிருஷ்ணன், நகர செயலாளர் வேலுச்சாமி, நகர்மன்ற தலைவர் மத்தீன், நகர்மன்ற துணை தலைவர் கலைராஜன், ஒன்றிய செயலாளர் மெய்ஞானமூர்த்தி, ஈஸ்வர சாமி ,அடி வெள்ளி முரளி மற்றும் எளையமுத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மாரிமுத்து ,கணக்கம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகாஅய்யாவு, போடிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் சௌந்தர்ராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் ஆர்.காந்தி திறந்துவைத்தார்
    • பல்வேறு நலதிட்ட உதவிகளை வழங்கினார்

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றிய பகுதிகளில் ரூ.1.33கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற 9 திட்ட பணிககள் தொடக்க விழா பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.

    ஆற்காடு ஈஸ்வரப்பன் எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி, ஒன்றியக்குழு தலைவர் வெங்கட்ரமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு வாலாஜா ஒன்றியம் அனந்தலை ஊராட்சி பி.ஆர் நகரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.10.19 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மையக் கட்டிடத்தினையும், திருவள்ளுவர் நகரில் மாநில நிதி குழு மானியம் திட்டத்தின் கீழ் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நீர் தேக்க தொட்டியிணையும் தொடங்கி வைத்தார்.

    வன்னிவேடு ஊராட்சியில் 15-வது நிதி குழு வட்டார ஊராட்சி நிதி ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய தரைமட்ட நீர் தேக்க தொட்டியினை திறந்துவைத்தும், ஜே.ஜே.நகர் மற்றும் இந்திரா நகரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.14.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பகுதி நேர ரேசன் கடை கட்டிடத்தையும் அமைச்சர் காந்தி தொடங்கி வைத்து பொருட்களை பொது மக்களுக்கு வழங்கினார்.

    தொடர்ந்து குடிமல்லூர் ஊராட்சியில் வட்டார ஊராட்சி நிதி ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய தரைமட்ட நீர் தேக்க தொட்டியினையும், விசி.மோட்டூர் ஊராட்சியில் பி.ஆர் அம்பேத்கர் நகரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.23.57 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தையும், வட்டார ஊராட்சி நிதி ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல் நீர் தேக்க தொட்டி, துளசி மாட வீதியில் ரூ.10.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய் கல்வெட்டினையும், தனலட்சுமி நகர் பகுதியில் கட்டப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாயினையும் அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்து பார்வையிட்டார்.

    மேலும் பாரத பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகளையும், 15 பயனாளிகளுக்கு முதியோர் ஓய்வு ஊதியம் பெறுவதற்கான ஆணைகளையும், 5 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை களையும் அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.

    • புதிய கட்டிடம் கட்ட 6 ஏக்கர் நிலம் அரசுக்கு அளித்த கொம்பன்குளம் கிராமத்தை சேர்ந்த பிரமுகர்களுக்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. பாராட்டு.
    • வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ் தலைமை தாங்கினார்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் ஒன்றியம் கொம்பன்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ 1 கோடியை 90 லட்சம் மதிப்பீட்டில் 4 வகுப்பறைகள், பள்ளி சுற்றுசுவர் உள்ளிட்ட கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன.

    இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ் தலைமை தாங்கினார். ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சிக்கு கொம்பன்குளம் பஞ்சாயத்து தலைவர் வயனபெருமாள், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ரூபன் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் பார்த்தசாரதி வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராணி, மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் பொன் முருகேசன், சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர் போனிபாஸ், ஒன்றிய கவுன்சிலர் குருசாமி, மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் சங்கர், தெற்கு மாவட்ட தலைவர் லூர்துமணி உள்பட கட்சி பிரமுகர்களும், பொதுமக்களும், பெற்றோர்களும் கலந்து கொண்டனர். புதிய கட்டிடம் கட்ட 6 ஏக்கர் நிலம் அரசுக்கு அளித்த கொம்பன்குளம் கிராமத்தை சேர்ந்த பிரமுகர்களுக்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. பாராட்டு தெரிவித்து பொன்னாடை போர்த்தினார்.

    நிகழ்ச்சியில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. மற்றும் அரசு அலுவலர்கள், பிரமுகர்களுக்கு வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் பார்த்தசாரதி பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

    ரூ.142 கோடியே 94 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். #TNCM #Edappadipalaniswami
    சென்னை:

    நபார்டு நிதியுதவி திட்டத்தின் கீழ், ஈரோடு மாவட்டம், செங்கோடம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 1 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆய்வகத்துடன் கூடிய 4 வகுப்பறைக் கட்டடம், கலை மற்றும் ஓவிய அறை, கணினி அறை மற்றும் நூலக அறை ஆகியவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

    கடலூர், கோயம்புத்தூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 33 அரசு உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 54 கோடியே 61 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 160 வகுப்பறைக் கட்டடங்கள், 33 ஆய்வகக் கட்டடங்கள், குடிநீர் வசதி, கழிவறைகள் மற்றும் சுற்றுச்சுவர்;

    கோயம்புத்தூர், கடலூர், திண்டுக்கல், தருமபுரி, கரூர், மதுரை, நாகப்பட்டினம், இராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருப்பூர், திருவாரூர், திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 57 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் 86 கோடியே 63 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 57 பள்ளிக் கட்டடங்கள் என மொத்தம் 142 கோடியே 94 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக பள்ளிக் கல்வி இயக்ககத்தின் அமைச்சுப் பணிக்கு 62 உதவியாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

    மேற்கண்ட 62 உதவியாளர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 7 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா. வளர்மதி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் கலந்து கொண்டனர்.

    வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 50 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன கிடங்கினை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

    மேலும், 3 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருவாடானையில் கட்டப்பட்டுள்ள கிடங்குடன் கூடிய அலுவலகக் கட்டடம், மதுரை மற்றும் விருதுநகரில் கட்டப்பட்டுள்ள 2 வேளாண்மைப் பொறியியல் விரிவாக்க மையக் கட்டடங்களையும் திறந்து வைத்தார்.  #TNCM #Edappadipalaniswami
    புதியதாக கட்டப்பட்ட போலீஸ், தீயணைப்பு நிலையம், 14 துணை மின்நிலையங்கள் மற்றும் மேம்பாலங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். #TNCM #Edappadipalaniswami
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தருமபுரி மாவட்டம், சோகத்தூரில் 16 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 110/11 கி.வோ துணை மின் நிலையத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

    மேலும், தேனி மாவட்டம்- தப்புக்குண்டுவில் 93 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 400/110 கி.வோ துணை மின் நிலையம்; காஞ்சிபுரத்தில் 43 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 230/110 கி.வோ. துணை மின் நிலையம்; திசையன்விளையில் 11 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 110/33 கி.வோ. துணை மின் நிலையம்;

    முசிறி, பச்சூர் மற்றும் திருவலம், குப்புச்சிப்பாளையம், டி.கிருஷ்ணாபுரம், நன்னை, உடையார் பாளையம், அ.துலுக்கப்பட்டி, வள்ளிபுரம் மற்றும் குறிச்சி ஆகிய இடங்களில் 37 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 33/11 கி.வோ. துணை மின் நிலையங்கள்;

    என மொத்தம் 202 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 14 துணை மின் நிலையங்களை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

    நாமக்கல் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, 295 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட மல்லியக்கரை ராசிபுரம்-திருச்செங்கோடு-ஈரோடு சாலையை காணொலிக் காட்சி மூலமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

    மேலும், காரமடையில் ரயில்வே கடவுக்கு மாற்றாக 41 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலம்;

    திண்டிவனம் நகரில் ரயில்வே கடவுக்கு மாற்றாக 24 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலம்;

    திண்டுக்கல் நகரில் ரயில்வே கடவுக்கு மாற்றாக 20 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலம்;

    பாப்பிரெட்டிப்பட்டியில் 7 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வாணியார் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம்;

    என மொத்தம், 388 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 சாலை மேம்பாலங்கள், ஒரு ஆற்றுப் பாலம் மற்றும் மேம்படுத்தப்பட்ட சாலை ஆகியவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

    சேரன்மகாதேவியில் 3 கோடியே 33 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 26 காவலர் குடியிருப்புகளை காணொலிக் காட்சி மூலமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

    மேலும், தேளூரில் 15 குடியிருப்புகள், காடல்குடி மற்றும் தட்டார்மடத்தில் 56 குடியிருப்புகள், ஒரத்த நாட்டில் 34 குடியிருப்புகள், தஞ்சாவூர் ரெயில்வே காவலர்களுக்கான 43 குடியிருப்புகள், என மொத்தம் 17 கோடியே 94 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 148 காவலர் குடியிருப்புகள்;

    வேளச்சேரி மற்றும் அரியமங்கலம் ஆகிய இடங்களில் 1 கோடியே 60 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 காவல் நிலையங்கள்;

    சத்தியமங்கலம் சிறப்பு இலக்குப்படைக்கான காவல் மோப்ப நாய் பிரிவுக் கட்டடம் மற்றும் சத்தியமங்கலம் சிறப்பு இலக்குப்படைக்கான கட்டடம் என மொத்தம் 9 கோடியே 63 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 காவல் துறை கட்டடங்கள்;

    புகளூரில் 17 குடியிருப்புகள் மற்றும் ஆலங்குடியில் 17 குடியிருப்புகள் என மொத்தம் 4 கோடியே 42 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை பணியாளர் குடியிருப்புகள்;

    பர்கூர் மற்றும் பேர்ணாம்பட்டு ஆகிய இடங்களில் 1 கோடியே 28 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்கள்;

    என மொத்தம், 38 கோடியே 23 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை கட்டடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பி.தங்கமணி, கே.பி.அன்பழகன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். #TNCM #Edappadipalaniswami
    ×