கொடைக்கானல்: அரசு ஆஸ்பத்திரியில் புதிய கட்டிடங்கள்

நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் தங்குவதற்கு புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தையும் பார்வையிட்டு கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.நோயாளிகளுக்கு வாட்டர் ஏ.டி.எம்.மில் கட்டணம் இல்லாமல் குடிநீர் வழங்கவும் அல்லது ஒரு ரூபாய் கட்டணத்தில் வழங்கவும் நகராட்சி ஆணையாளரிடம் அறிவுறுத்தினார்.
அரசு ஆஸ்பத்திரியில் மாவட்ட கலெக்டர் விசாகன் ஆய்வு மேற்கொண்டார்.
அரசு ஆஸ்பத்திரியில் மாவட்ட கலெக்டர் விசாகன் ஆய்வு மேற்கொண்டார்.
Published on

கொடைக்கானல்:

கொடைக்கானலில் மாவட்ட கலெக்டர் விசாகன் பல லட்சம் ரூபாய் மதிப்பில் நடைபெற்று வரும் கட்டிட பணிகளை திடீர் ஆய்வு கொண்டார். வில்பட்டி ஊராட்சி பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை அரைக்கும் அரவை எந்திரத்தை ஆய்வு மேற்கொண்டு தூய்மை பணியாளர்களிடம் பணியின் தன்மை குறித்து கேட்டறிந்தார்,

இதனைத்தொடர்ந்து குடி நீர் செல்வதற்கு அமைத்து வரும் குடி நீர் குழாய்கள் , புதிதாக கட்டப்பட்டு வரும் நவீன கழிப்பறை கட்டிடங்கள், கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் தங்குவதற்கு புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் அரசு ஆஸ்பத்திரியில் புதிதாக நகராட்சி சார்பில் புதிதாக அமைத்த கட்டண வாட்டர் ஏ.டி.எம் எந்திரத்தினை ஆய்வு மேற்கொண்ட பிறகு நோயாளிகளுக்கு வாட்டர் ஏ.டி.எம்.மில் கட்டணம் இல்லாமல் குடிநீர் வழங்கவும் அல்லது ஒரு ரூபாய் கட்டணத்தில் வழங்கவும் நகராட்சி ஆணையாளரிடம் அறிவுறுத்தினார், இதில் நகராட்சி ஆணையாளர் நாராயணன், கோட்டாட்சியர் ராஜா, வட்டாட்சியர் முத்துராமன், வட்டார வளர்ச்சி ஆணையாளர் ஜெசி ஞானசேகரன், கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயசந்திரிகா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com