search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    14 துணை மின்நிலையங்கள், மேம்பாலங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி
    X

    14 துணை மின்நிலையங்கள், மேம்பாலங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

    புதியதாக கட்டப்பட்ட போலீஸ், தீயணைப்பு நிலையம், 14 துணை மின்நிலையங்கள் மற்றும் மேம்பாலங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். #TNCM #Edappadipalaniswami
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தருமபுரி மாவட்டம், சோகத்தூரில் 16 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 110/11 கி.வோ துணை மின் நிலையத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

    மேலும், தேனி மாவட்டம்- தப்புக்குண்டுவில் 93 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 400/110 கி.வோ துணை மின் நிலையம்; காஞ்சிபுரத்தில் 43 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 230/110 கி.வோ. துணை மின் நிலையம்; திசையன்விளையில் 11 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 110/33 கி.வோ. துணை மின் நிலையம்;

    முசிறி, பச்சூர் மற்றும் திருவலம், குப்புச்சிப்பாளையம், டி.கிருஷ்ணாபுரம், நன்னை, உடையார் பாளையம், அ.துலுக்கப்பட்டி, வள்ளிபுரம் மற்றும் குறிச்சி ஆகிய இடங்களில் 37 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 33/11 கி.வோ. துணை மின் நிலையங்கள்;

    என மொத்தம் 202 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 14 துணை மின் நிலையங்களை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

    நாமக்கல் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, 295 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட மல்லியக்கரை ராசிபுரம்-திருச்செங்கோடு-ஈரோடு சாலையை காணொலிக் காட்சி மூலமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

    மேலும், காரமடையில் ரயில்வே கடவுக்கு மாற்றாக 41 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலம்;

    திண்டிவனம் நகரில் ரயில்வே கடவுக்கு மாற்றாக 24 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலம்;

    திண்டுக்கல் நகரில் ரயில்வே கடவுக்கு மாற்றாக 20 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலம்;

    பாப்பிரெட்டிப்பட்டியில் 7 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வாணியார் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம்;

    என மொத்தம், 388 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 சாலை மேம்பாலங்கள், ஒரு ஆற்றுப் பாலம் மற்றும் மேம்படுத்தப்பட்ட சாலை ஆகியவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

    சேரன்மகாதேவியில் 3 கோடியே 33 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 26 காவலர் குடியிருப்புகளை காணொலிக் காட்சி மூலமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

    மேலும், தேளூரில் 15 குடியிருப்புகள், காடல்குடி மற்றும் தட்டார்மடத்தில் 56 குடியிருப்புகள், ஒரத்த நாட்டில் 34 குடியிருப்புகள், தஞ்சாவூர் ரெயில்வே காவலர்களுக்கான 43 குடியிருப்புகள், என மொத்தம் 17 கோடியே 94 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 148 காவலர் குடியிருப்புகள்;

    வேளச்சேரி மற்றும் அரியமங்கலம் ஆகிய இடங்களில் 1 கோடியே 60 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 காவல் நிலையங்கள்;

    சத்தியமங்கலம் சிறப்பு இலக்குப்படைக்கான காவல் மோப்ப நாய் பிரிவுக் கட்டடம் மற்றும் சத்தியமங்கலம் சிறப்பு இலக்குப்படைக்கான கட்டடம் என மொத்தம் 9 கோடியே 63 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 காவல் துறை கட்டடங்கள்;

    புகளூரில் 17 குடியிருப்புகள் மற்றும் ஆலங்குடியில் 17 குடியிருப்புகள் என மொத்தம் 4 கோடியே 42 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை பணியாளர் குடியிருப்புகள்;

    பர்கூர் மற்றும் பேர்ணாம்பட்டு ஆகிய இடங்களில் 1 கோடியே 28 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்கள்;

    என மொத்தம், 38 கோடியே 23 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை கட்டடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பி.தங்கமணி, கே.பி.அன்பழகன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். #TNCM #Edappadipalaniswami
    Next Story
    ×