search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கல்லூரியில் ரூ.1 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள்
    X

    அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கல்லூரியில் ரூ.1 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள்

    • அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    வாலாஜாவில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் புதிய கட்டிடங்களை அமைச்சர் திறந்து வைத்தார்.

    ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.23லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நுழைவு வாயில் மற்றும் மாணவிகளுக்கான சிகிச்சை அறை, தி.மு.க.ராஜ்யசபா உறுப்பினர் சண்முகம் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகக் கட்டிடம், நமக்கு நாமே திட்டத்தில் ரூ.27லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கழிப்பறை கட்டிடம் என மொத்தம் ரூ.1 கோடியே 1 லட்சம் மதிப்பில் முடிவுற்ற 4 கட்டிடங்களுக்கான திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

    கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். அரக்கோணம் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகத்ர ட்சகன், ராஜ்யசபா உறுப்பினர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் சீனிவாசன் வரவேற்றார்.

    விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு கல்லூரி நுழைவு வாயில், நூலகம், மாணவியர்களுக்கான சிகிச்சை அறை ஆகியவற்றை திறந்து வைத்து , குத்து விளக்கேற்றி வைத்து பேசினார்.

    இதில் ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன்.எம்.எல்.ஏ, ஜி.கே. உலகப் பள்ளி இயக்குனர் வினோத்காந்தி ,மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றிய குழு தலைவர்கள் வெங்க ட்ரமணன், வடிவேலு, நகரமன்றத் தலைவர்கள் ஹரிணி தில்லை, தமிழ்ச் செல்வி உள்பட கல்லூரி பேராசிரி யர்கள், விரிவுரை யாளர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×