search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister AnithaRadhakrishnan"

    • கட்டிடங்களை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன், குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
    • பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இந்தியாவிற்கு வழிகாட்டும் மாநிலமாக தமிழகத்தை மாற்றி வருகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    உடன்குடி:

    உடன்குடி ஊராட்சி ஓன்றியம், செம்மறிக்குளம் ஊராட்சி சத்யா நகரில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம், செம்மறிக்குளத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ. 23.57 லட்சம் மதிப்பில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம், குமாரலட்சுமிபுரத்தில் ரூ.11 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையம் ஆகிய வற்றிற்கான கட்டுமான பணிகள் நிறைவு பெற்றன.

    இக்கட்டிடங்களை தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன், குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களோடு மக்களாக இருந்து மக்கள்பணி செய்து வருகிறார். அரசு கொண்டுவரும் அனைத்து திட்டங்களும் அனைத்து தரப்பு மக்களுக்கும் அதுவும் அடித்தளமக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் தனி கவனம் செலுத்தி வருகிறார்.

    முன்பெல்லாம் கிராம மக்கள்அரசு அலுவலகம் நோக்கி செல்ல வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இன்று தமிழக அரசு மக்களை தேடி வந்து மக்கள் பணி செய்கிறது. இப்படி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இந்தியாவிற்கு வழிகாட்டும் மாநிலமாக தமிழகத்தை மாற்றி வருகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்சிக்கு உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு தலைவரும், உடன்குடி மேற்கு ஓன்றிய தி.மு.க. செயலாள ருமான டி.பி.பாலசிங் தலைமை தாங்கினார்.உதவி கலெக்டர் குருசந்திரன், தாசில்தார் வாமனன், உடன்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் சுடலை, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஜெசி பொன்ராணி, செம்மறிக்குளம் ஊராட்சி மன்ற தலைவி ஆகஸ்டா மரியதங்கம், துணைத்தலைவர் நாராய ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில வர்த்தக அணி துணை செயலர் உமரிசங்கர், உடன்குடி கிழக்கு ஓன்றிய தி.மு.க. செயலர் இளங்கோ, தி.மு.க. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், உடன்குடி பேரூராட்சி கவுன்சிலர்கள் அஸ்ஸாப் அலி, ஜான்பாஸ்கர், செட்டியாபத்து ஊராட்சி மன்றத் தலைவர் பாலமுருகன், தி.மு.க. கிளை நிர்வாகிகள் விஜயன், தினகரன், கோபால கிருஷ்ணன், முத்துசாமி, ரூபன், ராஜேந்திரன், செல்வின் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் ஜார்ஜ் செல்வின் சகாயம் நன்றி கூறினார்.

    • மாணவர்கள் தரையில் இருந்து பாடம் படிப்பதால், பல்வேறு பிரச்சினைகள் வருகிறது.
    • மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    உடன்குடி:

    உடன்குடி பேரூராட்சி 17-வது வார்டு கவுன்சிலர் ஹமீதா சபானா, தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பரா மரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் ஆகியோரை நேரில் சந்தித்து ஒரு கோரிக் கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

    உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட 17-வது வார்டு புதுமனையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 4-வது மற்றும் 5-வது படிக்கும் பள்ளி மாணவ-மாணவிகள் மண் தரையில் அமர்ந்து பாடம் படிக்கி றார்கள். தரையில் இருந்து பாடம் படிப்பதால், பல்வேறு பிரச்சினைகள் வருகிறது. இதை தடுப்ப தற்காக இவர்களுக்கு சிமெண்ட் தளம் அல்லது டைல்ஸ் அமைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரி களுடன் கலந்து ஆலோசித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    • உடன்குடி டி.டி.டி.ஏ. மேல்நிலைபள்ளியில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
    • மு.க.ஸ்டாலின் மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு வருமுன் காப்போம், காப்பீட்டு திட்டங்கள், மக்களைத் தேடி மருத்துவம் உள்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் பேசினார்.

    உடன்குடி:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவையொட்டி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் உடன்குடி டி.டி.டி.ஏ. மேல்நிலைபள்ளியில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

    தூத்துக்குடி சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பொற்செல்வன் வரவேற்றார். தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் பங்கேற்று முகாமை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பேசியதாவது:-

    இந்திய அளவில் சுகாதாரம் மிக்க மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது.நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழிக்கேற்ப முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு வருமுன் காப்போம், காப்பீட்டு திட்டங்கள், மக்களைத் தேடி மருத்துவம் உள்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    இந்தியாவிலேயே சுகாதாரத் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாகவும், முதன்மையாகவும் திகழ்வ தாக மத்திய அரசின் சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தேசிய சுகாதார இணைய தலைமை அதிகாரிகள் ஆகியோர் பாராட்டி உள்ளனர்.

    இந்த முகாமில் அனைத்து தரப்பு நோய்களுக்கும் உயர்ந்த தரத்தில் மருத்து பரிசோதனைகள், சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. மக்கள் இதனை பயன்படுத்தி நலமான ஆரோக்கியமான, வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ், ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சிவக் குமார், மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குநர் கற்பகம், துணை இயக்குநர்கள் சுந்தரலிங்கம், யமுனா, திருச்செந்தூர்

    ஆர்.டி.ஓ. குருசந்திரன், தாசில்தார் வாமனன், சுகாதார பணிகள் தொழில்நுட்ப நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன், உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு தலைவர் பாலசிங், துணைத்தலைவி மீரா சிராஜூதீன், உடன்குடி பேரூராட்சி தலைவி ஹூமைரா அஸ்ஸாப், துணைத்தலைவர் மால் ராஜேஷ், உடன்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜான்சிராணி, பழனிச்சாமி ,பேரூராட்சி நியமனக்குழு தலைவர் ஜான்பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தி.மு.க. மாநில வர்த்தக அணி இணை செயலர் உமரிசங்கர், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பாக்கியராஜ், உடன்குடி கிழக்கு ஓன்றிய தி.மு.க. செயலர் க.இளங்கோ, உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அஸ்ஸாப், செட்டியாபத்து உராட்சி மன்றத் தலைவர் பாலமுருகன், திருச்செந்தூர் நகராட்சி துணைத்தலைவர் ரமேஷ், உடன்குடி வட்டார காங்கிரஸ் தலைவர் துரைராஜ் ஜோசப், தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் தனீஷ், மாவட்ட பிரதிநிதி மதன்ராஜ், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் மகா விஷ்ணு, மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சிந்தியா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் செல்வகுமார், ஜெசிபொன்ராணி, பள்ளி தலைமை ஆசிரியர் லிவிங்ஸ்டன் மற்றும்

    உள்ளாட்சி பிரதிநிதிகள், தி.மு.க., காங்கிரஸ் நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சமத்துவபுரத்தில் அரசு இடத்தில் சுமார் 20 வருடங்களாக குடியிருக்கும் 25 குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளனர்.
    • மனுவைப்பெற்றுக்கொண்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்து பேசி, மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

    உடன்குடி:

    தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை, உடன்குடி தேர்வு நிலைபேரூராட்சி 17-வது வார்டு கவுன்சிலர் ஹமீதா ஷபானா நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில், உடன்குடி பேரூராட்சி 17-வது வார்டு புதுமனை பள்ளிவாசல் தெரு சமத்துவபுரத்தில் அரசு இடத்தில் சுமார் 20 வருடங்களாக குடியிருக்கும் 25 குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி இருந்தார். மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்து பேசி, மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

    ×