search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை பகுதியில் ரூ.60 லட்சத்தில் கட்டப்பட்ட  புதிய கட்டிடங்கள் - அமைச்சர் திறந்து வைத்தார்
    X

    புதிய கட்டிடங்களை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் திறந்து வைத்த காட்சி. .

    உடுமலை பகுதியில் ரூ.60 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்கள் - அமைச்சர் திறந்து வைத்தார்

    • செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் திறந்து வைத்தார்.
    • போடிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் சௌந்தர்ராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட போடிபட்டியில் ரூ.20 லட்சம் செலவில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தையும் பாப்பனூத்து ஊராட்சியில் ரூ.20 லட்சம் செலவில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தையும் உடுமலை ராமசாமி நகரில் ரூ .20 லட்சம் செலவில் கட்டப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தையும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில்மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம்,திட்ட இயக்குனர் லட்சுமணன், ஒன்றிய பெருந்தலைவர் மகாலட்சுமி முருகன் , முன்னாள் எம்.எல்.ஏ., இரா. ஜெயராமகிருஷ்ணன், நகர செயலாளர் வேலுச்சாமி, நகர்மன்ற தலைவர் மத்தீன், நகர்மன்ற துணை தலைவர் கலைராஜன், ஒன்றிய செயலாளர் மெய்ஞானமூர்த்தி, ஈஸ்வர சாமி ,அடி வெள்ளி முரளி மற்றும் எளையமுத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மாரிமுத்து ,கணக்கம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகாஅய்யாவு, போடிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் சௌந்தர்ராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×