search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம்
    X

    கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசியபோது எடுத்த படம்.

    தி.மு.க. இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம்

    • தி.மு.க. இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது.
    • கூட்டத்திற்கு சோழவந்தான் வெங்கடேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    சோழவந்தான்

    தி.மு.க. இளைஞரண சார்பில் வருகின்ற டிசம்பர் 17-ந் தேதி சேலத்தில் மாநில மாநாடு நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தின் பல் வேறு பகுதிகளில் தி.மு.க. சார்பில் இளைஞர் அணி ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் சோழவந்தான் பேரூர் சார்பில் சோழவந்தானில் நடைபெற்ற இளைஞரணி செயல் வீரர்கள் ஆலோ சனை கூட்டம் மற்றும்

    2024-ம் ஆண்டு பாராளு மன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்வதற்கான ஆலோ சனை கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்திற்கு சோழ வந்தான் வெங்கடேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சோழவந்தான் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், பேரூராட்சி தலைவர் ஜெயராமன், துணைத் தலைவர் லதா கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், பேரூர் துணைச் செயலாளர் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மதுரை வடக்கு மாவட்ட செயலா ளருமான, அமைச்சருமான மூர்த்தி கலந்து கொண்டு பேசியதாவது:-

    வருகிற டிசம்பர் 17-ந் தேதி சேலத்தில் நடைபெறும் இளைஞரணி 2-வது மாநில மாநாட்டில் மதுரை புறநகர் வடக்கு மாவட்டத்தின் சார்பில் இளைஞர்கள் அதிக அளவில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் 2024 நடைபெறுகின்ற பாராளுமன்றத் தேர்தலில் சோழவந்தான் பேரூர் சார்பில் அதிகமான வாக்கு களை பெற பூத் கமிட்டி அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.இதில் மாவட்ட பொருளா ளர் சோமசுந்தர பாண்டியன், மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளர் நேரு, ஒன்றிய செயலாளர் சிறைச் செல்வன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் வெற்றி செல்வன், சோழவந்தான் பேரூர் நிர்வாகிகள், வார்டு உறுப்பி னர்கள் மாவட்ட பிரதி நிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×