search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குருபூஜை"

    • சோழவந்தானில் மருதுபாண்டியர் குருபூஜை விழா நடந்தது.
    • நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

    சோழவந்தான்

    சோழவந்தானில் மருதுபாண்டியர் 222-வது குருபூஜை விழா நடந்தது. சோழ வந்தான் பஸ் நிலையம் முன்பு மருது பாண்டியர் படம் வைக்கப் பட்டு அனைத்து கட்சியினர் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது.தி.மு.க. சார்பில் வெங்க டேசன் எம்.எல்.ஏ. தலைமை யில் மரியாதை செலுத்தப் பட்டது. பின்னர் அன்ன தானம் வழங்கப்பட்டது.

    நகர செயலாளர் மாவட்ட திட்ட குழு உறுப்பினர் வக்கீல் சத்யபிரகாஷ், பேரூராட்சி தலைவர் ஜெய ராமன், துணைத் தலைவர் லதா கண்ணன், ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன், பேரூர் துணை செயலாளர் ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்ட னர்.

    அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் கொரி யர் கணேசன், ஒன்றிய தலைவர் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெய குமார், இளைஞரணி கேபிள் மணி, நிர்வாகிகள், தொண்டர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பா.ஜ.க. சார்பில் மண்டல தலைவர்கள் கதிர்வேல், அழகர்சாமி ஆகியோர் தலைமையில் மரியாதை செலுத்தப் பட்டது.

    காங்கிரஸ் கமிட்டி சார்பில் நகரத் தலைவர் முத்துப்பாண்டி, முன்னாள் வட்டார தலைவர் ராமன், மற்றும் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

    தே.மு.தி.க. சார்பில்பேரூர் செயலாளர் கிருஷ்ணன், தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துப்பாண்டி, குருநாதன் தேவேந்திரன், நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

    சங்கங்கோட்டை கிராம கமிட்டி தலைவர் வக்கீல் சிவகுமார் மரியாதை செலுத்தினார்.

    சோழவந்தான் சப்-இன்ஸ்பெக்டர் முத்து தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.

    • நரிக்குடி அருகே உள்ள மறையூர் கிராமத்தில் மருதுபாண்டியர்கள் குருபூஜை விழா நடந்தது.
    • முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள மறையூர் கிராமத்தில் மருதுபாண்டியர்கள் குருபூஜை விழா நடந்தது. இதையொட்டி அங்குள்ள சிலைக்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    தொடர்ந்து அன்ன தானத்தை தொடங்கி வைத்த அவர் நரிக்குடி அருகே உள்ள என்.முக்குளம் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மருது பாண்டியர்கள் படத்துக்கு மாலை அணிவித்தார். அப்போது கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறுகையில், எடப் பாடி பழனிசாமி ஆட்சியில் தான் தியாகிகளுக்கு மரி யாதை செலுத்தப்பட்டது.

    அவர் மீண்டும் ஆட்சி பொறுப்பேற்றவுடன் தியாகிகள் தொடர்பான அனைத்து கோரிக்கைகளும் நிறை வேற்றப்படும். மேலும் மருதுசகோதரர்கள் பிறந்த என்.முக்குளம் கிராமத்தில் மணி மண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இதேபோல் விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பாக அதன் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.கே. ரவிச்சந்திரன் மற்றும் நரிக்குடி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரும், நரிக்குடி ஒன்றிய துணை சேர்மனுமான அம்மன்பட்டி ரவிச்சந்திரன ஆகியோர் தலைமையில் மருதுபாண்டி யர்கள் சிலைக ளுக்கு மாலையணிவித்து மரியா தை செலுத்தப்பட்டது. அப்போது வாரிசு தாரர்க ளின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்படு மென அவர்கள் தெரி வித்தனர்.

    இந்த குருபூஜை விழாவில் முன்னாள் நரிக்குடி ஒன்றிய சேர்மன் பஞ்சவர்ணம், அண்ணா தொழிற்சங்க மாநில போக்குவரத்து பிரிவு துணை செயலாளர் பி.வி.வீரேசன்,நரிக்குடி ஒன்றிய கவுன்சிலர் சரளா தேவி போஸ்,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பள்ளப் பட்டி முருகன்,கூட்டுறவு சங்க தலைவர்களான நாயனேந்தல் மனோகரன், பனைக்குடி ராஜா மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் இந்த விழாவில் திரளாக கலந்து கொண்டனர்.

    • மருதுபாண்டியர்கள் 222-வது குருபூஜை; அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
    • பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு நடத்தினர்.

    காளையார்கோவில்

    ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு வீரமரணம் அடைந்த மாமன்னர்கள் மருது சகோத ரர்களின் 222-வது குருபூஜை விழா அவர்களது நினைவிடம் அமைந்துள்ள காளையார்கோ விலில் கொண்டாடப்பட்டது.

    மருதுபாண்டியர்களின் நினைவிடத்தில் காலை 8 மணிக்கு சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து மருதுபாண்டியர் பேரவை சார்பில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து வழிபாடு நடத்தினர். நினைவிடத்தில் பால் அபிசேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பு கள், பொதுமக்கள் திரளாக வந்து மருதுபாண்டி யர்கள் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    மருதுபாண்டியர்கள் நினைவு நாளை முன்னிட்டு மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் அரவிந்த் தலை மையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சிவகங்கை, இளையான்குடி, திருப்புவனம், கல்லல், காளை யார் கோவில் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த சோ தனைச் சாவடி களில் சி.சி.டி.வி. கேமராவுடன் அமைக்கப் பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மருதுபாண்டியர்கள் நினைவு நாளை முன்னிட்டு மதுரையில் இருந்து சிவகங்கை வழியாக காளையார் கோவில் சருகனிவழியாக தேவ கோட்டை தொண்டி செல்லும் அனைத்து பேருந்துகளும் பரமக்குடியி லிருந்து இளையான்குடி காளையார் கோவில்,கல்லல் வழியாக திருச்சி, தஞ்சாவூர் செல்லும் அனைத்து பேருந்து களும் முழுவதும் ரத்து செய்யப்பட்டது. எவ்வித முன்அறிவிப்பின்றி பேருந்து கள் ரத்துசெய்யப்பட்டதால் பொதுமக்கள் மிகவும் சிரமப் பட்டார்கள். இன்று முகூர்த்த நாளாக இருந்ததால் பொது மக்கள் மிகவும் பாதிப்பிற் குள்ளானார்கள். மருது பாண்டியர்கள் நினைவி டத்தில் பல்வேறு அரசியல் கட்சி பிரதிநிதிகள் சமுதாய அமைப்பு நிர்வாகிகள் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

    • தேவர் குருபூஜைக்கு வருகை தரும் அன்புமணி ராமதாசுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
    • மாவட்ட செயலாளர் தேனி.சை.அக்கீம் தலைமை தாங்கினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் அவசர ஆலோ சனை கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட செய லாளர் தேனி.சை.அக்கீம் தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் சந்தன தாஸ் கலந்து கொண்டார்.மாவட்ட துணை செயலாளர் தொண்டி ராசிக், மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர், மாணவர் சங்க செயலாளர் சந்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம் நகர செயலாளர் வர வேற்றார். ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் பொறி யாளர் சரீப் நன்றி கூறினார்.

    வருகிற 30-ந் தேதி பசும்பொன்னில் நடைபெற இருக்கிற தேவர் குருபூஜை அரசு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிற பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாசுக்கு ராமநாதபுரம் மாவட்ட பா.ம.க சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்.

    கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக மாவட்ட செயலாளர் தலைமையில் 50 வாக னங்களில் சென்று அழைத்து வரவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாட்டாளி தொழிற்சங்க செயலாளர் லட்சுமணன், மாவட்ட மாணவர் சங்க அமைப்பா ளர் கபில், நகர அமைப்பு செயலாளர் கார்த்திக், மண்டபம் ஒன்றிய செய லாளர் வெங்கடேசன், திருப்புல்லாணி ஒன்றிய தலைவர் ராஜேந்தி ரன், ஒன்றிய செயலாளர் மக்தூம் கான், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் இப்ராகிம், மாவட்ட துணை அமைப்பா ளர் இஸ்மாயில், நகர துணை செயலாளர் பாலா, உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்ட னர்.

    இதுகுறித்து கிழக்கு மாவட்ட செயலாளர் தேனி.சை.அக்கிம் கூறுகையில், கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் தேவரின் நினைவிடத்தில் நடைபெற உள்ள குருபூஜை விழாவில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளார். அதற் காக வருகிற 30-ந் தேதி மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக வரும் அன்புமணி ராமதாசுக்கு எனது தலைமையில் கிழக்கு மாவட்ட பா.ம.க நிர்வாகி கள், தொண்டர்கள் பாரதி நகரில் இருந்து 50 அனுமதிக் கப்பட்ட வாகனங்களில் ராமநாதபுரம் எல்லை பார்த்திபனூர் சென்று உற்சாக வரவேற்பு கொடுக் கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.

    • காளையார் கோவிலில் மருதுபாண்டியர்கள் குருபூஜை விழா நடந்து வருகிறது.
    • அரசியல் கட்சியினர் மரியாதை-2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    காளையார்கோவில்

    சுதந்திர போராட்ட வீரர்களான மருது சகோதரர்களை ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டனர். பின்னர் அவர்களது கடைசி ஆசை யின்படி மருது சகோத ரர்களின் உடல்கள் காளை யார்கோவிலில் உள்ள சொர்ண காளீஸ் வரர் கோவில் முன்பு அடக்கம் செய்யப்பட்டது. மருது சகோதரர்களின் தியா கத்தை போற்றிடும் வகை யில் ஆண்டுதோறும் அக். 27-ந்தேதி மருது பாண்டி யர்கள் குருபூஜை விழா காளையார்கோவிலில் விமரிசையாக நடைபெற்று வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டுக்கான 222-வது குருபூஜை விழா வருகிற 27-ந்தேதி (வௌ்ளிக் கிழமை) நடைபெறுகிறது. அன்றைய தினம் மருது பாண்டியர் நினைவிடத்தில் சிறப்பு தியாக பூஜைகள் நடைபெறுகிறது. தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் நினைவிடம் முன்பு பொங்கல் வைத்தும், முடி காணிக்கை செலுத்தி யும் வழிபாடு நடத்துவார்கள்.

    அதன்பின் அரசியல் கட்சி பிரதிநிதிகள், பல்வேறு சமுதாய அமைப் பினர், பொதுமக்கள் மருது பாண்டியனர் நினை விடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்து வார்கள். குரு பூஜை விழா வில் ராமநாதபுரம், சிவ கங்கை, மதுரை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கலந்து கொள்ள காளை யார்கோவிலுக்கு வரு வார்கள்.

    இதையொட்டி சிவகங்கை மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    முக்கிய வழித்தடங்க ளான திருப்புவனம், சிவ கங்கை, கல்லல், இளை யான்குடி, காளையார் கோவில் ஆகிய பகுதிகளில் சோதனை சாவடி அமைக் கப்பட்டு கண்காணிப்பு காமிராவும் பொருத்தப் பட்டுள்ளது. இங்கு 24 மணி நேரம் போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபடுத் தப்பட உள்ளனர். குருபூஜை விழாவிற்கு வருவோர் அரசு விதித்துள்ள கட்டுப் பாடுகளை கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டும். வாகனங்ளில் ஒலிபெருக்கி பயன்படுத்த கூடாது. கோஷங்கள் போடக்கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது. இதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறி உள்ளனர்.

    மருதுபாண்டியர் குரு பூஜை மற்றும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் வருகிற 30-ந் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • மருதுபாண்டியர்களின் 222-வது குருபூஜை விழாவை முன்னிட்டு பரமக்குடி நகர் அகமுடைய சங்கத்தின் சார்பில் சங்கத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி கொடியேற்றினார்.
    • துணைத் தலைவர் காளிமுத்து கொடியசைத்து வாகனங்களை தொடங்கி வைத்தார்.

    பரமக்குடி

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள மாமன்னர் மருதுபாண்டியர்களின் 222-வது குருபூஜை விழாவை முன்னிட்டு பரமக்குடி நகர் அகமுடைய சங்கத்தின் சார்பில் சங்கத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி கொடியேற்றினார். துணைத் தலைவர் காளிமுத்து கொடியசைத்து வாகனங்களை தொடங்கி வைத்தார். இதில் சங்கச் செயலாளர் கண்ணுச்சாமி தீர்மானங்களை வாசித்தார்.

    முன்னதாக மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மருது பாண்டியர்களுக்கு பரமக்குடி ஓட்டபாலத்தில் அவர்களது உருவச்சிலை நிறுவவும், அகமுடையர் இனத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கவும் மற்றும் அகமுடையர் என மாணவ-மாணவிகளுக்கு சலுகைகளை வழங்கவும் போன்ற தீர்மானங்களை நிறைவேற்றினர். பொருளாளர் ராஜி நன்றி கூறினார். இதில் செயற்குழு உறுப்பினர்கள், பரமக்குடி புதுநகர் சங்க செயலாளர் எஸ்.ராமு, வழக்கறிஞர் சரவணாபாண்டியன் மற்றும் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கீரம்பூர் அருகே உள்ள தொட்டிப்பட்டி சாய் தபோவனத்தில் ஸ்ரீ சாயிபாபா குருபூஜை 105-ம் ஆண்டு விழா நடைபெற்றது.
    • காலை 7.45 முதல் 8.30 வரை ஆரத்தி, கூட்டு பிரார்த்தனையும், 10 மணி முதல் 11 மணி வரை ஸ்ரீவித்யாரம்பம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அருகே உள்ள தொட்டிப்பட்டி சாய் தபோவனத்தில் ஸ்ரீ சாயிபாபா குருபூஜை 105-ம் ஆண்டு விழா நடைபெற்றது. காலை 7.45 முதல் 8.30 வரை ஆரத்தி, கூட்டு பிரார்த்தனையும், 10 மணி முதல் 11 மணி வரை ஸ்ரீவித்யாரம்பம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு காலை முதல் மாலை வரை கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை சீரடி சாய்பாபா வழிபாட்டு மன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    • பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • பசும்பொன்னில் முத்துராம லிங்கத்தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத் தத்தப்படும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் பசும்பொன் முத்துராம லிங்கத் தேவரின் 116-வது பிறந்தநாள் விழா மற்றும் 61-வது குருபூஜை விழாவை யொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் தங்கதுரை முன்னிலையில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை யில் ஆேலாசனை கூட்டம் நடந்தது.

    இதில் முத்துராமலிங்க தேவர் பிறந்தநாள் விழா வினை முன்னிட்டு மேற்கொள்ளப் பட்டு வரும் பணிகள் தொடர்பாக அலுவலர்க ளுடன் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. ஒவ்வொரு வருடமும் அக்.

    30-ந் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பிறந்தநாள், குருபூஜை விழா அரசு விழாவாக கொண்டா டப்பட்டு வருகிறது.

    அன்றைய தினம் தமிழக அரசின் சார்பில் பசும் பொன்னில் முத்துராம லிங்கத்தேவர் நினைவி டத்தில் மரியாதை செலுத் தத்தப்படும். அன்றைய தினம் பல்வேறு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் மரியாதை செலுத்தப் படும். பசும்பொன்னுக்கு வருகை தரும் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் சென்று வர ஏதுவாக அப்பகுதியில் வாகன நிறுத்தும் இடம், முக்கிய பிரமுகர்கள் செல்லும் வழி, பொதுமக்கள் செல்லும் வழி, சாலைகளை சீர மைத்தல், மின் இணைப்பு வசதி, அன்னதானம் நடை பெறும் இடங்களில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உரிய அனுமதிகள் வழங்கப் படுவதை உறுதி செய்தல்.

    பசும்பொன் பகுதியில் சுற்றி உள்ள பகுதிகளில் கண்காணிப்பு காமிரா பொருத்துதல், குடிநீர் வசதி போன்றவைகள் தொடர்பு டைய அலுவலர்கள் தங்க ளுக்கு ஒதுக்கப்பட்ட பணி களை விரைந்து முடிக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.

    அதனைத் தொடர்ந்து கலெக்டர் விஷ்ணுசந்திரன், மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் தங்கதுரை ஆகியோர் விழா நடை பெறும் இடங்களை பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்ட னர்.

    • தேவர் குருபூஜை விழாவில் விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
    • அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தேவர் ஜெயந்தி விழா முன்னேற்பா டுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் தேவர் ஜெயந்தியின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தப் பட்டது. இதில் கலெக்டர் விஷ்ணுசந்திரன் பேசிய தாவது:-

    பசும்பொன் முத்து ராமலிங்கத்தேவரின் குருபூஜை விழாவில் எந்த ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சனை நடைபெறாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பல்வேறு விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் அறிவுறுத் தப்பட்டுள்ளன.விதிமுறை களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என அனைவரிடமும் மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த ஆலோசனை கூட்டத்தில் அறிவு றுத்தப்பட்டது. பிற மாவட்டங்களில் இருந்தும் அதிகமான பொதுமக்கள் இந்நிகழ்ச்சிக்கு வருவதை கருத்தில் கொண்டு பிற மாவட்டத்தினரும் நமது மாவட்ட நிர்வாகம் மூலம் வழங்கப்பட்ட விதி முறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கூட்டத்தில் பல்வேறு அமைப்புகள் மூலம் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆண்டு போல் பேனர் வைப்பதை தடுத்திடவும், அரசு கட்டடங்களில் விளம்பரம் செய்வதை தடுத்திடவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை மூலம் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து இந்நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு , உதவி ஆட்சியர் (பயிற்சி) சிவானந்தம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணா கருப்பையா , ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
    • பசும்பொன்னில் வருகிற 28-ந்தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும் பொன் கிராமத்தில் முத்து ராமலிங்கத் தேவர் 116-வது ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜை விழா இந்த மாதம் 28, 29, 30 ஆகிய மூன்று தினங்கள் மிகச் சிறப் பாக நடைபெறுகிறது.

    அக்டோபர் 28-ந்தேதி தேவரின் ஆன்மீக விழாவா கவும், 29-ந்தேதி அரசியல் விழாவாகவும், 30-ந்தேதி குருபூஜை விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. முதல் நாள் தேவரின் ஆன்மீக விழாவில் சிவாச்சா ரியார்கள் தெய்வ புராணங் களை பாடி தேவரின் நாமத்தை போற்றி பூஜை நடைபெறும். அதனை தொடர்ந்து தேவன பக்தர் கள் தேவர் சமாதியில் அஞ்சலி செலுத்துகிறார்கள்.

    29-ந்தேதி தேவரின் அர சியல் மிக சிறப்பாக நடை பெறும். அன்று அகில இந்திய பார்வர்டு கட்சியின் சார்பில் தேவர் ஆற்றிய பணிகளைப் பற்றியும், ஆன் மிக விழாவை பற்றியும் சொற்பொழிவு நடைபெ றும். 30-ந்தேதி குருபூஜை விழா நடைபெறும். இந்த விழாவில் தமிழக முதல்-அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் அனைத்து அரசி யல் கட்சியின் உடைய தலைவர் பெருமக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்துவார்கள்.

    இந்த ஆண்டு தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு சிறப் பாக ஏற்பாடுகள் செய்யப் பட்டு வருகிறது. 30-ந்தேதி நடைபெறும் விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ராஜகண்ணப்பன், மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. உட்பட எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கி றார்கள்.

    அதேபோல் அ.தி.மு.க. சார்பில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், திண்டுக் கல் சீனிவாசன், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., கே.பி.முனுசாமி, ஒ.எஸ்.மணியன் உள்பட நிர்வாகிக ளும், ஓ.பி.எஸ். அணி சார்பில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், தஞ்சை அறிவுடை நம்பி, ம.தி.மு.க. சார்பில் பொதுச் செயலா ளர் வைகோ, தலைமை நிலைய செயலாளர் துரை.வைகோ, மாவட்ட செயலா ளர் வி.கே.சுரேஷ்,

    காங்கிரஸ் சார்பில் தமி ழகத் தலைவர் கே.எஸ்.அழ கிரி, பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநிலத் தலைவர் அண்ணாமலை, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், மண்டபம் ஜி.முனியசாமி, மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முதுகுளத் தூர் முருகன் உள்பட அனைத்து அரசியல் தலை வர்களும் வருகை தந்து பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சமாதியில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

    இதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக பசும்பொன் னில் தேவர் நினைவாக பொறுப்பாளர் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி, ஹெலி காப்டர் தளம், பக்தர்கள் வந்து செல்லும் இடங்கள் உள்பட அனைத்தையும் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் ஆய்வு செய்து அதற்கான பணிகளை தீவி ரமாக செய்து வருகி றார்கள். விழா ஏற்பாடுகளை நினை வாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன், தங்க வேல் ராமச்சந்திரன் உட்பட பொறுப்பாளர்கள் செய்து வருகிறார்கள்.

    • இங்கு 27 நட்சத்திரங்களுக்குரிய மரங்கள் வைத்தும், கோசாலை அமைத்தும் பராமரிக்கப்படுகிறது.
    • உலக நன்மை வேண்டி ஆறுபடை வீடு முருகப்பெருமானின் மகாயாகம் நடைபெற உள்ளது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா காரைமேடு சித்தர் புரத்தில் ஒளிலாயம் அமைந்துள்ளது. இங்கு 18 சித்தர்கள் தனி சன்னதியில் அருள்பாளிக்கின்றனர்..மேலும் இங்கு 27 நட்சத்திரங்களுக்குரிய மரங்கள் வைத்தும் , கோசாலை அமைத்தும் பராமரிக்கப்படுகிறது .

    ஒளிலாயத்தை நிர்மானித்த மறைந்த ராஜேந்திரா சுவாமிகளின் 6-வது ஆண்டு குருபூஜை விழா மற்றும் உலக நன்மை வேண்டி ஆறுபடை வீடு முருகப்பெருமானின் மகாயாகம் ஆகியவை நாளை ( ஞாயிற்றுக்கிழமை )காலை 9 மணிக்கு தொடங்குகிறது.

    விழாவில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ, அ.தி.மு.க மாவட்ட செயலாளர் பவுன்ராஜ், முன்னாள் சீர்காழி எம்.எல்.ஏ. பாரதி,

    மாவட்ட மகளிர் அணி செயலாளர் சக்தி ஆகியோர் பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி தொடக்கி வைக்கின்றனர்.

    தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

    இதில் பக்தர்கள் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று இறையருள பெற சத்குரு ஒளிலாய பீடம் நாடி. செல்வமுத்துக்குமரன், நாடி .செந்தமிழ் செல்வன், நாடி.மாமல்லன், நாடி.பரதன் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.

    • சிவதொண்டுக்கே தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்கள் தான் நாயன்மார்கள்.
    • அதிபத்த நாயனார் என்றால் ஒரு சிறந்த பக்தர் என்று பொருள்.

    இறைவனாகிய சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு சிவதொண்டுக்கே தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்கள் தான் நாயன்மார்கள்.

    விரிதிரைசூழ் கடற்நாகை அதிபதற்கடியேன் என்று திருத்தொண்டர் தொகையில் சுந்தரமூர்த்தி சுவாமிகளால் புகழ்ந்து சொல்லப்படுகிற அதிபத்த நாயனார் பற்றி இந்த நாயனார் வரலாற்றில் தெரிந்து கொள்ளலாம்.

    சோழநாட்டில் நாகப்பட்டினம் கடற்கரைக்கு அருகில் திருநுழைப்பாடி என்ற இடத்தில் மீன்பிடித்து வியாபாரம் செய்யக்கூடிய மீனவ சமுதாயமான பரதவ இன மக்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு தலைவராக அதிபத்த நாயனார் இருந்தார்.

    அதிபத்த நாயனார் என்றால் ஒரு சிறந்த பக்தர் என்று பொருள். தன்னுடைய சிறு வயதில் இருந்தே சிறந்த சிவ பக்தராக இருந்து வந்தார். ஒவ்வொரு நாளும் கடலுக்கு மீன்பிடிக்கப்போகும் போதும் தன்னுடைய வலையில் சிக்கக்கூடிய முதல் மீனை எடுத்து இந்த மீன் இறைவனாகிய சிவபெருமானுக்கு உரியது என்று சொல்லி கடலில் விடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

    அதிபத்த நாயனாரில் உயர்ந்த பக்தியை உலகிற்கு உணர்த்த சிவபெருமான், தன்னுடைய திருவிளையாடலை அதிபத்த நாயனாரிடம் நடத்த ஆரம்பித்தார்.

    அதிபத்த நாயனார் தினமும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் போது மீன்கள் சிக்குவது குறைந்துகொண்டே வந்தது. இதனால் அதிபத்த நாயனாரின் குடும்பத்தில் வறுமை ஏற்படத்தொடங்கியது. ஆனாலும் அதிபத்த நாயனார் தன்னுடைய வலைகளில் சிக்கும் முதல் மீனை சிவபெருமானுக்கு அளிப்பதை நிறுத்தவே இல்லை.

    இப்படியே நாட்கள் நகர்ந்தது. அடுத்து வரக்கூடிய நாட்களில் அதிபத்த நாயனாரின் வலையில் ஒரேஒரு மீன் மட்டும் சிக்குமாறு விளையாடினார் சிவபெருமான். அதிபத்த நாயனாரும் வழக்கம்போல இந்த மீன் என்னை படைத்த சிவபெருமானுக்கு உரியது. சிவார்ப்பணம் என்று கூறி கடலில் விட்டார்.

    காலப்போக்கில் அதிபத்த நாயனாரின் குடும்பமே கடுமையான வறுமையில் வாடியது. அதிபத்த நாயனாரின் உடலும் நாளுக்கு நாள் தளர்ந்துகொண்டே வந்தது. இதைபார்த்து மிகுந்த கவலையுடன் அதிபத்த நாயனாரின் மனைவி கணவனிடம் நம் பசியை தீர்க்க வீட்டில் எந்த பொருளுமே இல்லை. நம் குழந்தைகள் எல்லோரும் பசியுடன் பலவீனமாக இருக்கிறார்கள். நீங்கள் பொருள் ஏதாவது சம்பாதித்துக்கொண்டு வாருங்கள் என்று கூறினார்.

    அதிபத்த நாயனாரும் தனது மனைவி சொல்வதை கேட்டு தனது குழந்தைகளுக்காக கடலுக்கு மீன்பிடிக்க சென்றார். அதிபத்த நாயனார் வீசிய வலையில் நவரத்தினங்களும், நவமணிகளும் பதித்த ஒரு தங்க மீன் ஒன்று வலையில் மாட்டியது.

    இதைக்கண்டதும் அருகில் இருந்தவர்கள் அதிபத்த நாயனாரே இன்று உமக்கு ராசியான நாள். அதனால் தான் நீங்க வீசிய வலையில் தங்க மீன் கிடைத்துள்ளது. இந்த மீனை கொண்டுபோய் உங்க மனைவியிடம் கொடுங்க. உங்களது வம்சமே செல்வச்செழிப்பாக வாழலாம் என்று சொன்னார்கள்.

    தங்க மீனை கண்டதும் அதிபத்த நாயனாரின் மனதில் எந்த சலனமும் இல்லாமல் வழக்கம் போல் வலையில் சிக்கிய முதல் மீனை இறைவனுக்கு கொடுப்பது போலவே இந்த தங்க மீனையும் சிவபெருமானுக்கு உரியது என்று கூறி கடலில் விட்டு விட்டார்.

    அதிபத்த நாயனாரின் இந்த செயலைக்கண்டு அருகில் இருந்தவர்கள் எல்லாரும் திகைத்து நின்றனர். அப்போதுதான் சிவபெருமானும், பார்வதிதேவியும் அதிபத்த நாயனாருக்கு காட்சி அளித்தனார். அதுமட்டுமில்லாமல் கையில் தன்னுடன் இருக்கக்கூடிய பேரின்ப வரத்தையும் அதிபத்த நாயனாருக்கு அளித்தனர்.

    இன்றைக்கும் ஆவணி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தன்று தங்க மீனை சிவபெருமானுக்கு கொடுக்கும் திருவிழா நாகப்பட்டினத்தில் உள்ள காயரோகன சுவாமி கோவில் நடைபெறுகிறது.

    இந்த திருவிழாவில் அதிபத்த நாயனாரின் உற்சவ சிலையை ஒரு கட்டுமரத்தில் வைத்து மீன்பிடிக்க கடலுக்கு போவார்கள். அப்போது கடலில் வலைவீசுவது போலவும், அந்த வலையில் தங்க மீன் சிக்குவது போலவும் அதை அதிபத்த நாயனார் சிவபெருமானுக்கு அர்ப்பணிப்பது போலவும் பாவணை செய்வார்கள்.

    அந்தநேரத்தில் கோவிலில் இருக்கக்கூடிய சிவபெருமான், அதிபத்த நாயனாருக்கு முக்தி அளிக்க கடற்கரைக்கு வருகிறார். கடற்கரைக்கு வரும் சிவபெருமானுக்கு அந்த தங்க மீனை படைத்து பூஜையும் செய்வார்கள். அப்போது அந்த கடற்கரைக்கு வரக்கூடிய அனைத்து பொதுமக்களுக்கும் சிவபெருமான் அருளாசி புரிவார்.

    அதிபத்த நாயனாரின் குருபூஜை ஆண்டுதோறும் ஆவணி மாதம் ஆயில்யம் நட்சத்திரம் அன்று அனைத்து சிவன் கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது. சிவபெருமானின் அருள் கிடைக்க பணமோ, பொருளோ கல்வியோ தேவையில்லை. தூய்மையான மனமும்ம் இறை அர்ப்பணிப்பு மட்டும் இருந்தால் போதுமானது. சிவபெருமானின் அருள் கிடைக்கும் என்பதை தான் இந்த அதிபத்த நாயனாரின் வரலாறு நமக்கு உணர்த்தி நிற்கிறது.

    ×