search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருஞானசம்பந்தர் சாமிக்கு குருபூஜை
    X

    குருபூஜை முன்னிட்டு திருஞானசம்பந்தர் சிறப்பு அலங்காரத்தில் இருந்த போது எடுத்த படம்.

    திருஞானசம்பந்தர் சாமிக்கு குருபூஜை

    • காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை தேவாரம் மற்றும் திருவாசகம் ஓதலுடன் வைகாசி மாத மூலம் நட்சத்திரத்தை முன்னிட்டு திருஞானசம்பந்தர் சுவாமிக்கு குருபூஜை நடைபெற்றது.
    • திருஞானசம்பந்தர் உடனே நால்வர் பெருமக்களுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் - பரமத்தி வேலூர் பேட்டை திருஞானசம்பந்தர் மடாலயத்தில் நேற்று திங்கள்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை தேவாரம் மற்றும் திருவாசகம் ஓதலுடன் வைகாசி மாத மூலம் நட்சத்திரத்தை முன்னிட்டு திருஞானசம்பந்தர் சுவாமிக்கு குருபூஜை நடைபெற்றது.

    திருஞானசம்பந்தர் உடனே நால்வர் பெருமக்களுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி, கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. மதியம் மகேஸ்வர பூஜை நடை பெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்ன தானமும், பிரசாதமும் வழங்கப்பட்டது.

    Next Story
    ×