என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வேதாரண்யத்தில் மாணிக்கவாசகர் குருபூஜை விழா
- மாணிக்கவாசகரின் சிலை வைக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
- அவரது படத்துக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாணிக்கவாசக சுவாமிகள் குருபூஜையை முன்னிட்டு நடராஜசுவாமி சன்னதியில் மாணிக்கவாசகர் உருவ சிலை வைக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
பின்னர் நடராஜர், தியாகராஜசுவாமிகள், மாணிக்கவாசகருக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாரதனை நடந்தது. தொடந்து வேதாரண்யம் மேலவீதியில் உள்ள மாணிக்கவாசக சுவாமிகள் மடத்தில் மாணிக்கவாசகர் உருவ படத்துக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாரதனை நடந்தது.
இதில் யாழ்பாணம் கரணவாய் வரணி ஆதினம் மற்றும் மாணிக்கவாசக மடத்தின் தர்மகர்த்த செவ்வந்திநாத பண்டார சந்நிதி, ஆதிவார மடம் நிர்வாகி குமரேசமூர்த்தி மற்றும் கல்லூரி பேராசிரியா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனர்.
கோயில் ஓதுவார் மூர்த்தி பரஞ்சோதி ஓதுவார் தலைமையில் தேவார திருப்பதிகம் பாடப்பட்டது. அறுசுவை அன்னதானம் அளிக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்