search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய கட்டிடங்கள்"

    • மேலூர் தொகுதியில் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் 9 புதிய கட்டிடங்களை பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் திறந்து வைத்தார்.
    • பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் சட்டமன்ற தொகு திக்கு உட்பட்ட மேலூர், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மதுரை பாரா ளுமன்ற உறுப்பினர் நிதி மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 1 கோடி மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டி டம், ரேசன்கடை, பயணியர் நிழற்குடை கட்டிடங்களை மதுரை பாராளுமன்ற உறுப் பினர் வெங்கடேசன் ரிப் பன் வெட்டி திறந்து வைத் தார்.

    தெற்குதெரு ஊராட்சி டி.தர்மசானப்பட்டியில் 11 லட்சத்தி 97 ஆயிரம் மதிதப் பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டடிமும், அரசப் பன்பட்டி ஊராட்சியில் 15 லட்சம் மதிப்பீட்டில் பொது விநியோகம் (ரேசன் கடை), கோட்டநத்தம்பட்டி ஊராட் சியில் ரூ. 11 லட்சத்தி 97 ஆயிரம் மதிப்பீட்டில் அங் கன்வாடி கட்டிடம், தனியா மங்கலம் ஊராட்சியில் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் பொதுவிநியோகம் (ரேசன் கடை) கட்டிடமும், கொங்கம் பட்டி ஊராட்சியில் உள்ள பன்னிவீரன்பட்டியில் ரூ. 10 லட்சத்து 93 ஆயிரம் மதிப் பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடமும், கொடுக்கம் பட்டி ஊராட்சியில் உள்ள கொன்னப்பட்டியில் ரூ. 10 லட்சத்து 93 ஆயிரம் மதிப் பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடம், 5 லட்சம் மதிப் பீட்டில் பயணியர் நிழற் குடை கட்டிடம், கொட்டாம் பட்டி ஊராட்சியில் ரூபாய் 10 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய அங்கன் வாடி மைய கட்டிடமும், பட்டூர் ஊராட்சியில் 5 லட்சம் மதிப்பீட்டில் பயணி யர் நிழற்குடை கட்டிடம் திறந்த வைக்கப்பட்டன.

    மேலூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் குமரன், ராஜேந்திர பிரபு, பாலகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் அரசப் பன்பட்டி தலைவர் முரு கேஸ்வரி வெள்ளையன், கோட்ட நத்தம்பட்டி உஷா இளையராஜா, தனியா மங்கலம் குமார், கொங்கம் பட்டி சந்தோஷ், கொடுக்கம் பட்டி ராஜா, கொட்டாம் பட்டி பாலசுப்பிரமணியன், தும்பைபட்டி அயூப் கான், மேலூர் தாசில்தார் செந்தா மரை, மேலூர் வட்ட வழங் கல் அலுவலர் நாகராணி, மேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசந்தர், வேலவன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாநில குழு உறுப்பினர் பாலா, மேலூர் தாலுகா செயலாளர் கண்ணன், மாநில கரும்பு விவசாய சங்க தலைவர் வழக்கறிஞர் பழனிச்சாமி, தாலுகா குழு உறுப்பினர்கள் அடக்கி வீரணன், மணவா ளன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின் படி புதியதாக கட்டப்படும் அனைத்து கட்டிடங்களுக்கும் சுகாதார சான்றிதழ் அவசியம் பெற வேண்டும்.
    • தமிழக அரசு உத்தரவின்படி உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து சுகாதார சான்றிதழ் பெற வேண்டும்.

    திருப்பூர்:

    வெள்ளகோவில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கட்டப்படும் அனைத்து கட்டிடங்களுக்கும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையிடம் இருந்து குடியேற்ற சான்றிதழ் பெறுவது அவசியம் என வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின் படி புதியதாக கட்டப்படும் அனைத்து கட்டிடங்களுக்கும் சுகாதார சான்றிதழ் அவசியம் பெற வேண்டும். அவ்வாறு சுகாதார சான்றிதழ் பெற்ற கட்டிடங்களுக்கு மட்டுமே வீட்டின் குடிநீர் வசதி மற்றும் மின் இணைப்பு, சொத்து வரி விதிப்புக்கான அனுமதி சான்றிதழ் பெற முடியும். இவை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து இடங்களிலும் நடைமுறையில் உள்ள சட்டம் ஆகும்.

    புதிய கட்டிடங்களில் முறையற்ற வகையில் கழிவுநீர் தேக்கம், கழிவு நீர் வெளியேற்றம், போதுமான குடிநீர் வசதி இல்லாதது, கழிவு நீர் பொருட்களை தேக்கி வைத்து முறையாக அப்புறப்படுத்தாதது, சுகாதார முறைப்படி கழிவுகளை அப்புறப்படுத்தாமல் இருப்பது போன்றவற்றால் அருகில் வசிப்பவர்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது மற்றும் நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே இதை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு உத்தரவின்படி உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து சுகாதார சான்றிதழ் பெற வேண்டும்.

    சான்றிதழ் பெறுவதற்கான மாதிரி விண்ணப்பம் அந்தந்த ஊராட்சி அமைப்புகளிடம் இருக்கும் எனவும் கட்டுவதற்கு முன்பே அந்த விண்ணப்பித்தினை பூர்த்தி செய்து தொடர்புடைய சுகாதார அலுவலகத்தில் அதிகாரிகளிடம் விண்ணப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் சுகாதார ஆய்வாளர் புதிய கட்டிடத்தை கட்டுவதற்கு முன்பும் மற்றும் கட்டியதற்கு பின்பும் ஆய்வு மேற்கொள்ளுவர். இதற்கு சான்றிதழ்களும் வழங்கப்படும். அதன் பின்னரே குடிநீர் இணைப்பு, சொத்து வரி விதிப்பு, மின் இணைப்பு நடவடிக்கைகள் போன்றவை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    வாலாஜாவில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் புதிய கட்டிடங்களை அமைச்சர் திறந்து வைத்தார்.

    ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.23லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நுழைவு வாயில் மற்றும் மாணவிகளுக்கான சிகிச்சை அறை, தி.மு.க.ராஜ்யசபா உறுப்பினர் சண்முகம் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகக் கட்டிடம், நமக்கு நாமே திட்டத்தில் ரூ.27லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கழிப்பறை கட்டிடம் என மொத்தம் ரூ.1 கோடியே 1 லட்சம் மதிப்பில் முடிவுற்ற 4 கட்டிடங்களுக்கான திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

    கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். அரக்கோணம் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகத்ர ட்சகன், ராஜ்யசபா உறுப்பினர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் சீனிவாசன் வரவேற்றார்.

    விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு கல்லூரி நுழைவு வாயில், நூலகம், மாணவியர்களுக்கான சிகிச்சை அறை ஆகியவற்றை திறந்து வைத்து , குத்து விளக்கேற்றி வைத்து பேசினார்.

    இதில் ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன்.எம்.எல்.ஏ, ஜி.கே. உலகப் பள்ளி இயக்குனர் வினோத்காந்தி ,மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றிய குழு தலைவர்கள் வெங்க ட்ரமணன், வடிவேலு, நகரமன்றத் தலைவர்கள் ஹரிணி தில்லை, தமிழ்ச் செல்வி உள்பட கல்லூரி பேராசிரி யர்கள், விரிவுரை யாளர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • இளையான்குடி யூனியனில் ஊராட்சி மன்ற புதிய கட்டிடங்களை தமிழரசி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
    • அங்கன்வாடி, பள்ளி சமையலறை கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற கட்டிடங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் திறப்பு விழா நடந்தது.

    எஸ்.காரைக்குடி ஊராட்சியில் ரூ.28.56 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற கட்டிடம் திறப்பு விழாவுக்கு மானாமதுரை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தமிழரசி தலைமை தாங்கி கட்டிட த்தை திறந்து வைத்தார்.

    ஊராட்சி மன்ற தலைவர் குழந்தை பாண்டியன் வரவேற்றார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன், மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கட் ராமன், கண்ணமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் சுப. தமிழரசன், வட்டார வளர்ச்சி அலுவலர் ரஜினிதேவி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டி, ஊராட்சி துணைத் தலைவர் முத்தையா, தி.மு.க. விவசாய அணி காளிமுத்து, தெற்கு ஒன்றிய துணை செயலாளர் கருணாகரன், மாவட்ட பிரதிநிதிகள் சாரதி, அய்யாச்சாமி, வடக்கு சந்தனூர் கிளைச் செயலாளர் சடைமுனி, அவைத் தலைவர் சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து தமிழரசி எம்.எல்.ஏ. மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

    பின்னர் முனைவென்றி யில் புதியஊராட்சி மன்றக் கட்டிடம், விஜயன்குடி, மெய்யனேந்தல் ஆகிய கிராமங்களில் அங்கன்வாடி, பள்ளி சமையலறை கட்டிடங்களையும் தமிழரசி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    • செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் திறந்து வைத்தார்.
    • போடிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் சௌந்தர்ராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட போடிபட்டியில் ரூ.20 லட்சம் செலவில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தையும் பாப்பனூத்து ஊராட்சியில் ரூ.20 லட்சம் செலவில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தையும் உடுமலை ராமசாமி நகரில் ரூ .20 லட்சம் செலவில் கட்டப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தையும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில்மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம்,திட்ட இயக்குனர் லட்சுமணன், ஒன்றிய பெருந்தலைவர் மகாலட்சுமி முருகன் , முன்னாள் எம்.எல்.ஏ., இரா. ஜெயராமகிருஷ்ணன், நகர செயலாளர் வேலுச்சாமி, நகர்மன்ற தலைவர் மத்தீன், நகர்மன்ற துணை தலைவர் கலைராஜன், ஒன்றிய செயலாளர் மெய்ஞானமூர்த்தி, ஈஸ்வர சாமி ,அடி வெள்ளி முரளி மற்றும் எளையமுத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மாரிமுத்து ,கணக்கம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகாஅய்யாவு, போடிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் சௌந்தர்ராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் ஆர்.காந்தி திறந்துவைத்தார்
    • பல்வேறு நலதிட்ட உதவிகளை வழங்கினார்

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றிய பகுதிகளில் ரூ.1.33கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற 9 திட்ட பணிககள் தொடக்க விழா பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.

    ஆற்காடு ஈஸ்வரப்பன் எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி, ஒன்றியக்குழு தலைவர் வெங்கட்ரமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு வாலாஜா ஒன்றியம் அனந்தலை ஊராட்சி பி.ஆர் நகரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.10.19 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மையக் கட்டிடத்தினையும், திருவள்ளுவர் நகரில் மாநில நிதி குழு மானியம் திட்டத்தின் கீழ் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நீர் தேக்க தொட்டியிணையும் தொடங்கி வைத்தார்.

    வன்னிவேடு ஊராட்சியில் 15-வது நிதி குழு வட்டார ஊராட்சி நிதி ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய தரைமட்ட நீர் தேக்க தொட்டியினை திறந்துவைத்தும், ஜே.ஜே.நகர் மற்றும் இந்திரா நகரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.14.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பகுதி நேர ரேசன் கடை கட்டிடத்தையும் அமைச்சர் காந்தி தொடங்கி வைத்து பொருட்களை பொது மக்களுக்கு வழங்கினார்.

    தொடர்ந்து குடிமல்லூர் ஊராட்சியில் வட்டார ஊராட்சி நிதி ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய தரைமட்ட நீர் தேக்க தொட்டியினையும், விசி.மோட்டூர் ஊராட்சியில் பி.ஆர் அம்பேத்கர் நகரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.23.57 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தையும், வட்டார ஊராட்சி நிதி ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல் நீர் தேக்க தொட்டி, துளசி மாட வீதியில் ரூ.10.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய் கல்வெட்டினையும், தனலட்சுமி நகர் பகுதியில் கட்டப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாயினையும் அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்து பார்வையிட்டார்.

    மேலும் பாரத பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகளையும், 15 பயனாளிகளுக்கு முதியோர் ஓய்வு ஊதியம் பெறுவதற்கான ஆணைகளையும், 5 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை களையும் அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.

    ×