search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதுமக்கள் தாழி"

    • மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டி அருகே பெருங்கற்காலத்தை சேர்ந்த முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது.
    • வளையம் போன்ற ஆபரணம் வரையப்பட்டுள்ளது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே நல்லமரம் கொட்டாணிபட்டி கிராமத்தில் பெருங்கற்கா லத்தை சேர்ந்த முதுமக்கள் தாழி கண்டெடுக் கப்பட்டது.

    டி.கல்லுப்பட்டி அருகே நல்லமரம் கொட்டணிபட்டி கிராமத்தை சேர்ந்த பண்டியன் என்பவர் தன் வீட்டிற்கு கழிவுநீர் தொட்டி கட்டுவதற்கு குழி தோண்டிய போது பெரிய பாணை இருப்பதாக அவ்வூரே சேர்ந்த கணேசன் என்பவர் தகவலின்படி சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூ ரியின் வரலாற்றுத்துறை பேராசிரியரும், மதுரை பாண்டியநாடு பண்பாட்டு மையம் தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் து முனீஸ்வரன், ஆய்வாளர் அனந்தகுமரன் ஆய்வு செய்த போது பெருங் கற்காலத்தை சேர்ந்த முது மக்கள் தாழி கண்டறி யப்பட்டது.

    உடனடியாக கிராம நிர்வாக அதிகாரி அய்யனார் பாண்டியராஜ் அவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு நேரடியாக களத்திற்கு வந்து அவர் முதுமக்கள் தாழி கைப்பற்றி கிராம நிர்வாக அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ளது. இது குறித்து தொல்லியல் கள ஆய்வாளர் முனீஸ்வரன் கூறியதாவது:-

    இன்றைய தமிழ் சமூகத்தில் இறப்பு சடங்கு முறைக்கு அதிக முக்கியத்து வம் கொடுக்கப்பட்டு வருகின்றோம். குறிப்பாக பெருங்கற்கால ஆரம்பத்தில் இறந்தவர்களின் உடலை தங்கள் வாழ்விடங்களுக்கு வெளியே மலைப்பகுதி களிலும் காட்டுப் பகுதி களிலும் போட்டு விடுவார்கள். அதை நாய், நரி, கழுகு, பறவைகள், மிருகங்கள் இரையாக உண்டப்பின்பு அங்கு கிடக்கும் எலும்புகளை சேகரித்து அதோடு அவர்கள் பயன்படுத்திய மண்பானைகள், தானியங்களையும் உள்ளே வைத்து மூடி வீ வடிவ குழியில் வைத்து அடக்கம் செய்துள்ளனர்.

    பிற்காலத்தில் தான் மனிதன் இறந்த பிறகு உடலை முதுமக்கள் தாழியில் வைத்து அடக்கம் செய்து அவர்கள் நினைவாக புதைத்த முதுமக்கள் தாழியை சுற்றி கல் அடுக்குகள் வைத்துப் பாதுகாத்துள்ளனர்கள்.

    முதுமக்கள் தாழி பொதுவாக தாய் தெய்வம் போன்ற குறியீடுகள் காணப்படுகின்றன. குறிப்பாக தாய் குறியீடு என்பது மனிதன் இறந்த பின் மீண்டும் தாயின் கருவறைக்குள் சென்று பிறக்கிறான் என ஆதிமனிதன் நம்பினார்கள்.ஆகவே தாழியின் நடுவில் அகன்று கருவுற்ற தாயின் வயிற்றை போன்ற அமைக்கப்பட்டிருக்கிறது.

    நல்லமரம் கிராமத்தில் கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழி மேற்குப்பகுதியில் உடைந்த நிலையில் கிட்டத்தட்ட 7 அடி அழம் குழித் தோண்டும் போது கண்டறியப்பட்டது.முதுமக்கள் தாழியின் கழுத்துப்பகுதியில் வளையம் போன்ற ஆப ரணம் வரையப்பட்டுள்ளது.

    குறிப்பாக முதுமக்கள் தாழியின் உயரம் 2.5 அடி, அகலம் 1.5 அடி , சுற்றளவு 6.1 அடி, விட்டம் 1.5 அடி கொண்டதாகும் .இதன் உள்ளே கருப்பு சிவப்பு நிறத்தில் மெல்லிய தடித்த பானைகள் ஓடுகள், உடைந்து நிலையில் உள்ளது. இவைபானை மேல்பகுதி மெல்லிய பானையால் மூடப்பட்டிருக்கலாம்.

    முதுமக்கள் தாழியின் உட்பகுதியில் மனிதனின் மண்டை ஓடு மேல்பகுதி, கை கால் எலும்புகள் உடைந்த நிலையில் கிடைத்துள்ளன. இப்பகுதியில் பெருங்கற்கால பண்பாடு முறை இருந்தற்கான சான்றாக கண்டறியப்பட் முதுமக்கள் தாழி காணப்படுகின்றது. தற்போது கிராம நிர்வாக அலுவலகத்தில் பாதுகாப்பாக இருக்கின்ற பழமையான முதுமக்கள் தாழியை முறையாக ஆய்வுக்குட்படுத்தி பாதுகாக்க வேண்டும் என்றார்.

    • இரட்டை மூடிகளுடன் இருந்த அந்த முதுமக்கள் தாழிக்குள் 2 பேரின் மண்டை ஓடுகள், கை, கால் எலும்புகள் போன்றவை இருந்தன.
    • மேலும் சிறு பானைகளும், இரும்பாலான உளியும் இருந்தன.

    ஸ்ரீவைகுண்டம்:

    பண்டைய தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் மத்திய அரசு சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் மற்றும் சைட் மியூசியம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கு நடைபெற்ற அகழாய்வில் கிடைக்கப்பெற்ற முதுமக்கள் தாழிகள் உள்ளிட்ட பழங்கால பொருட்களை ஆவணப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் அகழாய்வில் கல்வட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு முதுமக்கள் தாழியை தொல்லியல் துறையினர் திறந்து பார்த்து ஆய்வு செய்தனர். இரட்டை மூடிகளுடன் இருந்த அந்த முதுமக்கள் தாழிக்குள் 2 பேரின் மண்டை ஓடுகள், கை, கால் எலும்புகள் போன்றவை இருந்தன. மேலும் சிறு பானைகளும், இரும்பாலான உளியும் இருந்தன.

    இதுகுறித்து தொல்லியல் துறையினர் கூறுகையில், ''முதுமக்கள் தாழியில் இருந்தது கணவன்-மனைவியின் எலும்புக்கூடுகளா? அல்லது தாய்- குழந்தையின் எலும்புக்கூடுகளா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது'' என்றனர்.

    இதுதொடர்பாக தொல்லியல் ஆர்வலர்கள் கூறும்போது, 'கலம்செய் கோவே, கலம்செய் கோவே' என்ற புறநானூறு பாடலில், போரில் கணவர் இறந்ததால், அவரது உடலுடன் தன்னையும் அடக்கம் செய்யுமாறு மனைவி கூறுவதாக உள்ளது. அதனை மெய்ப்பிக்கும் வகையில், ஒரே முதுமக்கள் தாழியில் 2 எலும்புக்கூடுகள் கிடைத்துள்ளன' என்று தெரிவித்தனர்.

    • 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது.
    • மண்ணில் புதைக்கப் பயன்படுத்தப்பட்ட புதைகலன்கள், ஈமத்தாழிகள் என்றும் அழைக்கின்றனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள வலசை கிராமத்தில் தென்னக வரலாற்று மையத்தைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர்கள் மீனாட்சி சுந்தரம், சிவக்குமார், தருனேசுவரன், கமுதி பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவர் நினைவு கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் தங்கமுத்து ஆகியோர் களப்பணி மேற்கொண்டனர்.

    அப்போது அங்கு மண் மூடியவாறு வாய் பகுதி மட்டும் வெளியே தெரியும் நிலையில் முதுமக்கள் தாழி புதைந்திருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

    இந்த கிராமப் பகுதியில் நத்தபுரக்கி செல்லும் தார் சாலையின் காட்டுப் பகுதியில் மழை பெய்து மண் அரிப்பு ஏற்பட்டதால் இந்த முதுமக்கள் தாழி வெளியே தெரிய வந்துள்ளது.

    முழுமையாக தரைத்த ளத்தை தோண்டினால் முழு வடிவிலான முது மக்கள் தாழி தெரியும். முதுமக்கள் தாழிகள் என்பது பண்டைய தமிழகத்தில் இறந்தவர்களின் உடல்களை வைத்து மண்ணில் புதைக்கப் பயன்படுத்தப்பட்ட புதைகலன்கள், ஈமத்தாழிகள் என்றும் அழைக்கின்றனர்.

    இதைப் பற்றி சங்கப் பாடல்களிலும் குறிப்புகள் உள்ளன. குளமுற்றத்து துஞ்சிய கிள்ளிவளவன் பற்றி ஐயூர் முடவனார் பாடிய புறநானூற்றுப் பாடல் முதுமக்கள் தாழி பற்றி குறிப்பிடுகிறது.

    ஒருவர் இறந்த பின்னர் அவரது உடலை அல்லது எலும்புகளை அல்லது உடலை எரித்த சாம்பலை அவர் பயன்படுத்திய பொருட்களுடன் தாழியில் வைத்துப் புதைத்து விடுவது வழக்கம். இப்படி புதைக்கப்பட்ட தாழிகள் தமிழ்நாட்டில் பல இடங்களில் கிடைத்துள்ளன. உடல் செயலிழந்த முதியவர்களை உயிருடன் புதைக்கவும் இந்த தாழிகள் பயன்பட்டன என்ற கருத்தும் நிலவுகிறது.

    மானாமதுரை பகுதியில் பல இடங்களில் முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த பகுதியில் மக்கள் வாழ்ந்ததற்கான ஆதரமாக இவை உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தியாகதுருகம் அருகே 800 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.
    • இந்தக் கல்வெட்டின் தொடர்ச்சி தலைகீழாக வெட்டப்பட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் சிங்கார உதியன் தலைமையில்,தொல்லியல் ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், காப்பாட்சியர் ரஷீத்கான், நூலகர் அன்பழகன், பண்ரூட்டி இமானுவேல், ஆசிரியர் உமாதேவி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சோழர்கால வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கல்வெட்டு 5 அடி நீளம் 3.5 அடி அகலத்தில் உள்ள கல்லில் இருபுறமும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இரு பக்கத்திலும் 2-ம் குலோத்துங்க சோழனின் 12 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு. முழுமையாகப் படித்து அறியமுடியாத 44 வரிகளைக் கொண்டது. எழுத்துகள் சிதைந்து உள்ளன. இந்த கல்வெட்டில் 2-ம் குலோத்துங்கசோழனின் "பூமேவி வளர" என்னும் மெய்க் கீர்த்தி முழுமையாக இடம்பெற்றுள்ளது. மேலும் இவ்வூரை பிரமதேயமாகவும், சதுர்வேதி மங்களமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஊரின் பெயரை அறியமுடியாதவண்ணம் சிதைந்துள்ளது.

    இங்குள்ள இறைவன் பெயரை அகத்தீஸ்வரமுடைய மகாதேவர் என்று அழைக்கப்படுகிறார். மிலாடு நாட்டுக்கு உட்பட்ட கிளியூரை (இன்றைய கிளியனூர்) தலைநகராகக் கொண்டு கி.பி.1133 முதல் 1150 வரை அரசாண்ட இரண்டாம் குலோத்துங்கசோழன் காலத்தில் இப்பகுதியை ஆட்சி செய்த "திருநீரேற்றான் ராஜேந்திர சோழ மலையகுலராயன்" என்ற சிற்றரசன் காலத்தில் பல்வேறு அளவுகோலால் அளவீடு செய்யப்பட்ட 4004 குழிகள் கொண்ட நிலத்தை அகத்தீஸ்வரர் ஆலயத்திற்கு தினசரி பூசைக்காகத் தானம் அளிக்கபட்ட செய்திக் காணப்படுகிறது. மேற்கண்ட நிலங்களுக்கு எல்லைகள் குறிப்பிடப் பட்டுள்ளன. முன்பக்கத்தில் 20 வரிகளுடன் முடிவடைகிறது. அடுத்தப் பக்கத்தில் 4 வரிகள் மட்டும் இந்தக் கல்வெட்டின் தொடர்ச்சி தலைகீழாக வெட்டப்பட்டுள்ளது. இரண்டாம் பக்கத்தில் மொத்தம் 24 வரிகள் உள்ளது. அதில் 4வரிகள் முன்பக்கத்திற்குரியது. கல்வெட்டின் இறுதியில் வழக்கமாகக் காணப்படும் எச்சரிக்கை வாசகம் இக்கல்வெட்டில் காணப்படவில்லை.

    மேலும் மிகப்பெரிய சிவாலயம் ஒன்று இங்கிருந்ததற்கான ஆதாரமாக இப்பகுதியைச் சுற்றிக் காணப்படும் நேர்த்தியானப் பழமைவாய்ந்த, பல்வேறு அளவுகளில் உள்ள சிலைகளைக் காணலாம். இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் சிங்கார.உதியன் கூறுகையில் எங்களது மையத்தின் சார்பில் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய கண்ணாடி மணி உருக்கு உலைக்கலன் வீரபாண்டி கிராமத்தில் புலிக்கல் பகுதியிலும், கல்திட்டை (டால்மன் ) திருக்கோவலூர் வட்டத்தில் உள்ள ஆதிச்சனூரிலும், அந்திலி கிராமத்தில் முதுமக்கள் தாழியையும் கண்டெடுத்துள்ளோம். இப்பகுதியும் வரலாற்றுச் சிறப்பு மிக்கப் பகுதி என்று இந்த ஆய்வு மூலம் வெளிப்பட்டு வருகிறது. ஆகவே மத்திய மாநில அரசுகள் இப்பகுதியில் தொல்லியல் அகழாய்வு நடத்தினால் இப்பகுதியின் தொன்மை வரலாறு வெளிப்டும் என கூறினார்.

    • சிவகங்கை அருகே பழமையான கல்வெட்டு-முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டது.
    • இதன் அருகிலேயே எல்லைக்கல் ஒன்றும் காணப்படுகிறது.

    சிவகங்கை

    சிவகங்கையை அடுத்த சித்தலூர் பகுதியில் கல்வெட்டுகள், முதுமக்கள் தாழிகள், கல் வட்ட எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு சிவகங்கையை சேர்ந்த புத்தகக்கடை முருகன் சித்தலூர் பகுதியில் முதுமக்கள் தாழிகள், கல்வட்ட தொல் எச்சங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தொல் நடைக்குழு நிறுவனர் கா.காளிராசா கூறியதாவது:-

    சிவகங்கையில் இருந்து மதுரை செல்லும் சாலையில் சித்தலூர் விலக்கில் இருந்து செல்லும் பிரிவு சாலையில் இடப்பக்கம் இரண்டு அம்மன் கோவில்கள் காணப்படுகின்றன. கோவிலை ஒட்டி குவியலாகக் கிடக்கும் கற்குவியலில் ஒரு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. இக்கல்வெட்டு இரு பகுதியிலும் வெட்டி சிதைக்க பெற்றிருக்கிறது.

    இந்த கல்வெட்டில் உள்ள எழுத்துக்கள் 13-ம் நூற்றாண்டாக இருக்கலாம் என தெரிகிறது. மடையை ஒட்டிய பகுதியில் கல்லாலான அரைத்தூண் ஒன்று மக்களால் முருகனாக வணங்கப்படுகிறது. சிவன் கோவில் ஒன்று இருந்து அழிந்து இருக்கலாம். இக்கல்வெட்டு அருகிலுள்ள கோவானூரில் பழமையான சிவன் கோவிலில் இருந்து இப்பகுதிக்கு வந்திருக்கலாம்.

    இதுதவிர முத்தலூர் கிராமத்தில் உள்ள கண்மாயில் 2000 ஆண்டுகள் பழமையான 15-க்கும் மேற்பட்ட தாழிகள் காணக்கிடைக்கின்றன. முத்தலூரில் முதுமக்கள் தாழிகள், கல்வட்ட எச்சங்கள் உள்ள இடம் இன்றும் இறந்தவர்களை புதைக்கும் இடுகாட்டுப் பகுதியாகவே மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முத்தலூரை ஒட்டிய நாடகமேடை பகுதியில் 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்தூண் காணப்படுகிறது.

    இதில் கல், மோட்சம் போன்ற சொற்கள் இடம் பெற்றிருப்பதால் இது நினைவுக்கல் என்பதும், மோட்சம் கருதி தர்மம் செய்த செய்தி எழுதப்பட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது.

    மேலும் இவ்விடத்திற்கு அருகில் வேம்பத்தூர் காரருக்கு பழமையான கட்டுமான நினைவிடம் ஒன்று இருப்பதாக இவ்வூரை சேர்ந்த ஆசிரியர் ரவிச்சந்திரன் கள ஆய்வில் தெரிவித்தார். இதன் அருகிலேயே எல்லைக்கல் ஒன்றும் காணப்படுகிறது. இதில் வட்டவடிவிலான சக்கரம் போன்ற அமைப்பும், அதில் 4 ஆரங்களும் உள்ளன.

    ×