search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதுகாப்பு"

    • வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் அரசு பஸ்சை ஒப்படைத்த டிரைவர்
    • நாகர்கோவிலில் இருந்து இருந்து நெல்லைக்கு டி.என்.74-1841 என்ற எண் கொண்ட அரசு பஸ் இயக்கபடுகிறது

    கன்னியாகுமரி :

    நாகர்கோவிலில் இருந்து இருந்து நெல்லைக்கு டி.என்.74-1841 என்ற எண் கொண்ட அரசு பஸ் இயக்கபடுகிறது. இந்த பஸ்சை இன்று வடசேரியில் இருந்து மேலசங்கரன் குழியை சேர்ந்த டிரைவர் ஞான பெர்க்மான்ஸ் ஓட்டிச் சென்றார்.

    இந்த நிலையில் வள்ளியூர் வரை பஸ்சை ஓட்டிய அவர், அதற்கு மேல் இயக்க முடியாது எனக்கூறி பயணிகளை கீழே இறக்கி மாற்று பஸ்சில் அனுப்பி உள்ளார். தொடர்ந்து தான் ஓட்டிய பஸ்சை, விசுவாசபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் கொண்டு வந்துள்ளார்.

    இந்த பஸ்சில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இது பற்றி பணிமனை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் பலன் இல்லை. எனவே நீங்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட்டார போக்குவரத்து அலுவலரிடம் புகார் கூறினார். இந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கடந்த சில நாட்களாக பஸ்சில் பிரேக் பிடிக்கவில்லை. வலது பக்கம் திருப்பினால் இடது பக்கம் திரும்புகிறது. இடது பக்கம் திருப்பினால் வலது பக்கம் செல்கிறது. இதனை சரி செய்ய வேண்டும் என்று பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பயணிகளை பாதுகாப்பாக கொண்டு செல்ல முடியாது என்று நோட்டு புத்தகத்தில் எழுதி வைத்த போதும் இதுவரை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

    • பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
    • பவானி போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    பவானி:

    பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் ஆடி 1, அமா வாசை தினத்தில் பக்தர்கள் வசதிக்காக மேற் கொள்ளப்படும் பாதுகாப்பு மற்றும் பல்வேறு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் பவானி தாசில்தார் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

    பவானி தாசில்தார் தியாகராஜ் தலைமை தாங்கி னார். கூட்டத்தில் வரும் 17-ந் தேதி (திங்கட்கிழமை) ஆடி மாதம் பிறக்கிறது. மேலும் ஆடி அமாவாசை வரும் 17-ந் தேதி மற்றும் அடுத்த ஆகஸ்ட்டு 15-ந் தேதி என ஆடி மாதத்தில் 2 அமாவாசை தினங்கள் வருகிறது.

    இதையொட்டி வரும் 17-ந் தேதி பவானி சங்க மேஸ்வரர் கோவிலுக்கு ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி பக்கத்து மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுதுறைக்கு வந்து தங்கள் முன்னோர்க ளுக்கு திதி, தர்ப்பணம், எள்ளும், தண்ணியும் விடுதல், பிண்டம் விடுதல் உட்பட பல்வேறு பரிகார பூஜைகள் செய்து வழிபாடு செய்வார்கள் என எதிர்ப் பார்க்கப்படுகிறது.

    எனவே ஆடி அமாவாசை நாட்களில் சங்கமேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்க ளுக்கு மேற்கொள்ளப்படும் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    இதில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர், பவானி போலீசார், தீயணைப்பு துறை, சுகாதாரத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் மின்சார துறை போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பவானி போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். போக்குவரத்து போலீசார் மூலம் போக்கு வரத்து தடை மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் சரி செய்வது, கோவிலுக்கு வரும் பக்தர்க ளுக்கு கார் பார்க்கிங் வசதி ஏற்படுத்தி தருவது குறித்து ஆலோசனை வழங்க ப்பட்டது.

    மேலும் 25 தீயணைப்புத் துறை வீரர்கள் மூலம் ஆண்கள் மற்றும் பெண்கள் படித்துறை பகுதி, காவிரி ஆறு என பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டு எந்த விதமான அசம்பாவிதம் நடக்காமல் தடுப்பது, 108 ஆம்புலன்சு மற்றும் மருத்துவ வசதி ஏற்படுத்தி கொடுக்க முடிவு செய்யப் பட்டது.

    அதேபோல் பவானி நகராட்சி நிர்வாகத்தின் மூலம் தூய்மை பணியை மேற்கொள்வது, மின்சார துறை மூலம் மின்தடை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது, சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் என பல்வேறு துறைகளில் மேற்கொள்ள படும் பணிகள் குறித்த ஆலோசனை நடத்தப் பட்டது.

    கடந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கடந்த ஆடி 1 மற்றும் அமாவாசை தினங்களில் பக்தர்கள் பரிகாரங்கள் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இந்த ஆண்டு காவிரி ஆற்றில் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் சென்று கொண்டி ருக்கிறது. இதனால் வரும் 17-ந் தேதி ஆடி 1 அன்று கூடுதுறையில் குளிக்க பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள். எனவே கூடுதுறை பகுதியில் பாதுகாப்பை தீவிரப்படுத்த அதிகாரிகள் மற்றும் போலீசார் முடிவு செய்யப் பட்டது.

    • சி.சி.டி.வி. காமிராக்கள், நீரில் தவறி விழுந்தவரை மீட்கும் உபகரணங்கள் போதுமான அளவில் உள்ளதா? என்பது குறித்து எஸ்.பி. ஆய்வு மேற்கொண்டார்.
    • போக்குவரத்து முறையாக செல்கிறதா என்பது குறித்தும் போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் ஆய்வு செய்தார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம், குற்றாலம் சீசனை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வரும் நிலையில் அவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது சி.சி.டி.வி. காமிராக்கள், நீரில் தவறி விழுந்தவரை மீட்கும் உபகரணங்கள் போதுமான அளவில் உள்ளதா? அவை சரியான நிலையில் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்தார். மேலும் ஒலிபெருக்கியில் தொடர் விழிப்புணர்வு, ஆண் மற்றும் பெண் காவலர்கள் போதுமான அளவில் பணியில் உள்ளனரா, போக்குவரத்து முறையாக செல்கிறதா என்பது குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து அருவிகளில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் அனைவரையும் பாதுகாப்பாக குளித்து மகிழ்ந்து செல்லுமாறும் அறிவுறுத்தினார்.

    • கோவில் பாதுகாப்பு மாநாடு நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • அனைவரையும் மாநாட்டுக்கு அழைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அவிநாசி:

    திருமுருகன்பூண்டியில் இந்து முன்னணி சார்பில் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் பாதுகாப்பு மாநாடு நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்து முன்னணி மாநில செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மணிகண்டன், நகர தலைவர் வடிவேல், பொருளாளர் மதியழகன் முன்னிலை வகித்தனர். வருகிற 30-ந் தேதி அவிநாசியில் பெரிய கோவில் பாதுகாப்பு மாநாடு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக வீடு வீடாக சென்று நோட்டீஸ் கொடுத்து மக்களை அழைப்பது, 16ந் தேதி திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதிகளில் 27 இடங்களில் மாநாடு குறித்து தெருமுனை கூட்டங்கள் நடத்துவது, பக்தி அமைப்புகள், சிவனடியார்கள், சமுதாய தலைவர்கள், ஆன்மிக பெரியோர்கள் உள்ளிட்ட அனைவரையும் மாநாட்டுக்கு அழைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

    • ஆனி திருவிழா கடந்த 29-ந்தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
    • முத்துப்பேட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    திருவாரூர்:

    தில்லைவிளாகம் அடுத்த ஜாம்புவானோடை தெற்கில் நாககாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆனி திருவிழா கடந்த 29-ந்தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி பால்குட ஊர்வலம், காவடி எடுத்தல், மாவிளக்கு போடுதல், கஞ்சிவார்த்தல் ஆகியவை நடந்தது. அதனை தொடர்ந்து சாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவையொட்டி ஊராட்சி மன்றம் சார்பில் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • ஒப்பிலியப்பன் கோவிலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
    • சி.சி.டி.வி கேமராக்களை தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளோம்.

    திருநாகேஸ்வரம்:

    கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவில் வெங்கடாசலபதி சுவாமி கோயில் 108 திவ்ய தேசங்களில் புகழ்பெற்றதும் நம்மாழ்வார் திருமங்கையாழ்வார் பொய்கையாழ்வார் பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டதுமான தலமாகும்.

    இந்த கோவிலில் விமானங்கள், கோபுரங்கள், பிரகாரங்கள், சிறு சிறு சன்னதிகள் முதலியன சுமார் ரூ.3.50 கோடி மதிப்பில் புனரமைத்து திருப்பணி வேலைகள் அனைத்தும் பூர்த்தி அடைந்துள்ளன. இதையடுத்து வரும் 29-ம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் வெங்கடாசலபதி சுவாமி கோவில், வடக்கு வீதியில் எழுந்தருளி இருக்கும் ஜெயவீரஆஞ்சநேயர் கோவிலுக்கும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று மாலை ஆலய வளாகத்தில் திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    ஒப்பிலியப்பன் கோவிலில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் 29ஆம் தேதி சுமார் 20000 பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வாகனங்கள் நிறுத்துவதற்கு வி.ஏ.ஓ நகர், அங்காளம்மன் கோவில், நாகநாதசுவாமி கோவில், பிரத்தியங்கிராதேவி கோவில் என நான்கு புறமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கோவில் கூட்டங்களை பயன்படுத்தி நகை திருட்டு போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் விதத்தில் சுமார் 25 இடங்களில் உள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்கள் தொடர்ந்து கவனிக்கும் வகையில் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளோம். நான்கு இடங்களில் சுகாதாரத்துறை மூலமாக முகாம் அமைக்கப்படுகிறது. 200-க்கும் மேற்பட்ட போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    29 ஆம் தேதி அன்று கும்பாபிஷேகம் நடைபெறும் நேரம் வரை கோவிலுக்குள் 1000 பேர் மட்டுமே இருக்க முடியும் என்பதால் பொதுமக்களும் பக்தர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும். மதியம் 12 மணிக்கு மேல் அனைவரும் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். 29ஆம் தேதி நாள் முழுவதும் தரிசனம் செய்யலாம். நிலமாலை, வஸ்திரம் சாத்துதல், அர்ச்சனை ஆகியவை கிடையாது. சுவாமி தரிசனம் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. உப்பிலியப்பன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருநாகேஸ்வரத்தில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் கடைகள் இரண்டையும் 28 மற்றும் 29ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களும் மூடுவதற்கு அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு இன்று முதல் 29ஆம் தேதி முடிய ஐந்து நாட்களுக்கு பூமி தேவி திருமண மண்டபத்தில் அன்னதானம் போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது கோவில் உதவி ஆணையர் கூடுதல் பொறுப்பு சாந்தா, கண்காணிப்பாளர் சக்திவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கோபிசெட்டிபாளையம் கோர்ட்டு பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து பூட்டி சீல் வைக்கப்படும்.
    • ஆணி கழட்டப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    கோபி, 

    கோபிசெட்டிபாளைய த்தில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு உள்பட 5 கோர்ட்டுகள் செயல்பட்டு வருகிறது.

    இங்கு சத்தியமங்கலம் வனப்பகுதி வழக்கு, கோபி செட்டிபாளையம், பங்களா புதூர் போலீஸ் நிலையங்களில் போடப்பட்ட வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட நகை, பணம் ஆகியவை கோபிசெட்டிபாளையம் கோர்ட்டு பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து பூட்டி சீல் வைக்கப்படும். இதை யடுத்து அந்த பெட்டகம் கோபிசெட்டிபாளையம் கருவூலத்தில் பாது காப்பாக வைக்கப்படுவது வழக்கம்.

    இந்த நிலையில் கோர்ட்டு ஊழியர் மற்றும் பங்களா புதூர் போலீசார் வழக்கு விசாரணைக்காக முதலாம் வகுப்பு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு தொடர்புடைய பெட்டகத்தை கோபிசெட்டி பாளையம் கருவூலத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்தனர்.

    இதை தொடர்ந்து அந்த பெட்டியை நீதிபதி தனது அறையில் வைத்து திறக்க முயன்றார். அப்போது பெட்டியின் பூட்டின் மேல் வைக்கப்பட்டு இருந்த அரக்கு சீல் உடைக்கப்படா மல் அப்படியே இருந்தது. ஆனால் பெட்டியின் பூட்டு மாட்டி இருந்த கொண்டியில் இருந்து ஆணி கழட்டப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் பெட்டியை திறந்து பார்த்தனர்.

    அப்போது அதில் கடம்பூர் போலீசாரால் பறிமுதல் செய்து கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு இருந்த 48 கிராம் எடை கொண்ட 2 தங்க ஆரம், சத்தியமங்கலம் வனத்துறை மற்றும் பங்களா புதூர், கோபிசெட்டிபாளையம் போலீசார் பறிமுதல் செய்து வைக்கப்பட்டு இருந்த ரூ. 3 ஆயிரத்து 255 பணம் மாயமாகி இருந்தது தெரிய வந்தது.

    இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.மேலும் கைரேகை பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இத னால் பரபரப்பு நிலவியது.

    • உரிமையா ளர்கள் மற்றும் ஓட்டுனர்கள், பணியாளர்க ளுக்கான விழிப்பு ணர்வுக்கூட்டம் நடை பெற்றது.
    • பாதுகாப்பு முறையில் மோட்டார் வாகனம் மூலம் மட்டும் கழிவுநீர் அகற்றவேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் கழிவுநீர் அகற்றும் லாரி உரிமையா ளர்கள் மற்றும் ஓட்டுனர்கள், பணியாளர்க ளுக்கான விழிப்பு ணர்வுக்கூட்டம் நடை பெற்றது.

    கூட்டத்திற்கு நகராட்சி ஆணையர் வாசுதேவன் தலைமை வகித்தார். மோட்டார் வாகன ஆய்வாளர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நகராட்சி ஆணையர் வாசுதேவன் கூறுகையில், நகராட்சியில் உரிய அனுமதி பெறாத வாகனங்கள் ஏதுவும் செப்டிக்டேங்க் எடுப்பதற்கு அனுமதிக்கப்படாது ,கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் உரிய நடைமுறையைப் பின்பற்றா மல் சாலை ஓரங்கள், நீர்நிலைகள்,ஓடைகள் மற்றும் இதர பகுதிகளில் கொட்டு வதை கண்காணிக்கப்பட்டு வருகிறது. கழிவுநீர் அகற்றுவது சம்பந்தமாக தூய்மை பணியாளர்கள் உரிய பாதுகாப்பு உபகர ணங்கள் அணிந்து பாதுகாப்பு முறையில் மோட்டார் வாகனம் மூலம் மட்டும் கழிவுநீர் அகற்றவேண்டும். அவ்வாறு இல்லாமல் ஈடுப்பட்டால் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கூட்டத்தில் சுகாதார ஆய்வாளர் செல்லத்துரை ஆகியோர் பங்கேற்றனர்.

    • 63 நாயன்மார்கள் சிலைகள் அருகே உள்ள சிலைகளை சேதப்படுத்தபட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.
    • பிரசித்த பெற்ற கோவிலின் பாதுகாப்பை மேலும் அதிகப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கின்றேன்.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் வரலாற்று சிறப்புமிக்க பெருங்கருணை நாயகி- அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 22ந் தேதி இரவு புகுந்த நபர் அங்கிருந்த சிலைகள் மற்றும் உண்டியலை சேதப்படுத்தி கருவறைக்குள் புகுந்து பூஜை பொருட்களை தாறுமாறாக தூக்கி வீசி எரிந்துள்ளார்.

    இதுகுறித்து அவினாசி தொகுதி எம்.எல்.ஏ.ப தனபால் கண்டன அறிக்கையில் கூறியதாவது:-

    கோவிலுக்குள் ஒரு நபர் புகுந்து சிலைகளை உடைத்து சேதப்படுத்தியும், பூஜை பொருட்களை தூக்கி எறிந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனது தொகுதிக்குட்பட்ட,1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில்,சம்பவத்தன்று இரவு சமூக விரோதிகளால் 63 நாயன்மார்கள் சிலைகள் அருகே உள்ள சிலைகளை சேதப்படுத்தபட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.இதற்கு காரணமானவர்களுக்கு உரிய தண்டனை கொடுக்க வலியுறுத்துகிறேன் .பிரசித்த பெற்ற கோவிலின் பாதுகாப்பை மேலும் அதிகப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கின்றேன்.இவ்வாறு எம்.எல்.ஏ.ப.தனபால் தெரிவித்துள்ளார்.

    • பல்வேறு துறை சார்ந்த ஜி20 சர்வதேச கூட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.
    • எந்தவித அசம்பாவித சம்பவமும் நிகழாமல் தடுப்பதற்காக பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    ஸ்ரீநகர்:

    உலகின் வளர்ந்த, வளரும் நாடுகளை உள்ளடக்கிய ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா வகித்து வருகிறது.

    இதையொட்டி பல்வேறு துறை சார்ந்த ஜி20 சர்வதேச கூட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஜி20 கூட்டம் இன்று தொடங்கியது. சுற்றுலா தொடர்பான ஜி20 பணிக் குழுவின் 3-வது கூட்டம் ஸ்ரீநகரில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் தொடங்கியது. 3 நாட்கள் இந்த மாநாடு நடைபெறும்.

    ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு நடைபெறும் முதல் சர்வதேச கூட்டமாகும். உலகின் பல்வேறு பகுதியில் இருந்து 60-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், 20 பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கிறார்கள்.

    ஸ்ரீநகரில் நடைபெறும் இந்த கூட்டத்தின்போது எந்தவித அசம்பாவித சம்பவமும் நிகழாமல் தடுப்பதற்காக பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. காவல்துறை, ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை, தேசிய பாதுகாப்பு படை, கடற்படை, கமாண்டோக்கள் என பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    ஜபர்வன் மலைப்பகுதி முதல் எழில்மிக்கதால் ஏரி வரை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தால் ஏரியில் கடற்படை காமாண்டோக்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் பரவலாக சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஆசியாவின் சுவிட்சர்லாந்து என அறியப்படும் குல்மார்க் மற்றும் இதர சுற்றுலா தலங்களுக்கு சர்வதேச பிரதிநிதிகள் வருகை புரிவதால் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    சுற்றுலா தொடர்பான முதல் கூட்டம் குஜராத்தின் கட்ச் பகுதியிலும், 2-வது கூட்டம் மேற்கு வங்காளத்தில் உள்ள சிலிகுரியிலும் நடைபெற்றது.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் மண் வளத்தை பாதுகாக்க கோடை உழவு செய்யுங்கள் என விவசாயிகளுக்கு உதவி இயக்குநர் அறிவுறுத்தினார்.
    • பறவைகளுக்கு இரையாக்கி மண்ணை உதிரியாக வைப்பதற்கு உதவுகிறது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்ட விதைச்சான்று, அங்ககச்சான்று உதவி இயக்குநர் சிவகாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சித்திரை மாத புழுதி, பத்தரை மாற்றுத் தங்கம். சித்திரையில் மழை பெய்தால் பொன் ஏர் பூட்டலாம் என்று பழமொழிகள் கூறுகின்றன. கோடை மழையை பயன்படுத்தி மானாவாரி நிலத்தில் சரிவிற்கு குறுக்காக கடைசி உழவு அமையுமாறு உழுவதே கோடை உழவு ஆகும்.

    இதனால் மழை நீர் மண்ணுக்குள் இழுக்கப்பட்டு நீண்ட காலம் தேங்கி மண்ணின் ஈரத்தன்மையை அதிகரிக்கிறது. நெல் அறுவடைக்கு பின் களிமண் சுருங்குவதால் ஆழமான வெடிப்பு ஏற்பட்டு நிலத்தின் அடிமண் ஈரம் ஆவியாகிறது.

    4 அல்லது 5 மாதங்கள் கழித்து இந்த நிலத்தில் நெல் சாகுபடி செய்ய நீர் பாய்ச்சும்போது நீர் வேர் உறிஞ்சும் மட்டத்திற்கு கீழே சென்று விடுகிறது. நிலத்தை தயார்படுத்த அதிக அளவு கால்வாய் நீர் தேவைப்படுகிறது. நீர் விரயமாவதுடன் நிலம் தயார் செய்ய தேவைப் படும் நாட்களும் அதிகமாகின்றன.

    இவற்றை எல்லாம் நீக்கி மண் வளத்தை காக்க நடவு நிலத்தை தயார் செய்ய நீரின் தேவையை குறைக்க, அடிமண் இறுக்கம் நீங்கி நீர் கொள்திறன் அதிகரிக்க மண்ணுக்கடியில் காணப்படும் கூட்டுப் புழுக்களை மேற்பரப்பில் தள்ளி, பறவைகளுக்கு இரையாக்கி மண்ணை உதிரியாக வைப்பதற்கு உதவுகிறது.

    கோடை உழவு செய்யாத நிலங்களில் களைகளின் பெருக்கம் அதிகமாகி, மண்ணில் உள்ள நீர் மற்றும் சத்துகளை உறிஞ்சி விடுகிறது. அடுத்த பயிர் சாகுபடியில் அதிக களை முளைத்து பயிர் சேதம், சாகுபடி செலவு அதிகமாகிறது.

    அருகு, கோரை, கண்டங்கத்தரி, காட்டு கண்டங்கத்தரி, பார்த்தீனியம். சாரணை, மஞ்சக்கடுகு, நாயுருவி, தொய்யாக்கீரை, பண்ணைக் கீரை களைகள் அதிகமாக உற்பத்தியாகின்றன. கோடை உழவு செய்வதால் இந்த களைகளின் பெருக்கம் வெகுவாக குறைகிறது.

    பயிர் அறுவடைக்கு பின் எஞ்சிய கட்டைப்பயிர் பெரும்பாலான பூச்சிகள், நோய்க்கிருமிகளுக்கும் உணவாகவும், உறைவிடமாகவும், இனப்பெருக்கம் செய்யும் இடமாகவும் அமைகிறது. கோடை உழவு செய்வதால் இந்த கட்டைப்பயிர் உரமாகி நுண்ணுயிர்களுக்கு உணவாகி மண்வளத்தை கூட்டுகிறது.

    கோடை உழவு செய்வதால் மண்ணில் காற்றோட்டம் அதிகமாகி நுண்ணுயிர் எண்ணிக்கை பெருகி மண்வளமாகிறது. ராமநாதபுரம் மாவட்ட உழவர்கள் அனைவரும் கோடை உழவு செய்து சாகுபடி நிலங்களை வளமான நிலங்களாக மேம்படுத்தி கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விதிமுறைகளை மீறும் படகு உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை
    • கலெக்டர் ஸ்ரீதர் எச்சரிக்கை

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    கடையால் பேரூராமட சிக்குட்பட்ட களியல் கிராமம் வழியாக செல்லும் கோதையாறு ஆற்றுப்பகுதி யில் படகுதளம் அமைக்கப்பட்டு பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் படகுகளில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த படகுதளத்தில் கடையால் பேரூராட்சி வாயிலாக படகுகள் டெண்டர் விடப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. படகு தளத்தில் 10 நபர்கள் பயணம் செய்யக்கூடிய 2 உந்து படகுகளும், 4 நபர்கள் பயணம் செய்யக்கூடிய 10 பெடல் படகுகளும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக விளவங்கோடு தாசில்தார் ஆய்வு மேற்கொண்டதில் பயணம் மேற்கொள்ப வர்கள் பாதுகாப்பு கவசம் இல்லாமல் பயணம் செய் வது கண்டறியப்பட்டது.

    எனவே, உரிய நிபந்தனைகளை தவறாது பின்பற்றி படகுகளை இயக்குவதை கடையால் பேரூராட்சி செயல் அலுவலர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலாக பயணிகளை படகில் அனுமதிக்க கூடாது. படகில் பயணம் செய்பவர்கள் கண்டிப்பாக பாதுகாப்பு கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். அனும திக்கப்பட்ட எண்ணிக் கையை விட கூடுதலான படகுகள் கோதையாறு ஆற்றுப்பகுதியில் செல்வதை அனுமதிக்க கூடாது. காலாவதியான படகுகளை அனுமதிக்க கூடாது. மேற்படி படகின் உறுதித் தன்மையை சம்பந்தப்பட்ட அலுவவர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்வதை தொடர்ந்து கடையால் பேரூராட்சி செயல் அலுவலர் உறுதி செய்ய வேண்டுமென கலெக்டரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறும் படகு உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வதோடு, உரிமங்கள் ரத்து செய்யப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    மாவட்ட கலெக்டர் அறிவுறுத்த லின்படி, விளவங்கோடு தாலுகா தாசில்தார் குமாரவேல் படகு தளத்தில் உரிய நிபந்தனைகள் பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    ×