search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களியலில் பாதுகாப்பு இல்லாத படகு பயணம்
    X

    களியலில் பாதுகாப்பு இல்லாத படகு பயணம்

    • விதிமுறைகளை மீறும் படகு உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை
    • கலெக்டர் ஸ்ரீதர் எச்சரிக்கை

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    கடையால் பேரூராமட சிக்குட்பட்ட களியல் கிராமம் வழியாக செல்லும் கோதையாறு ஆற்றுப்பகுதி யில் படகுதளம் அமைக்கப்பட்டு பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் படகுகளில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த படகுதளத்தில் கடையால் பேரூராட்சி வாயிலாக படகுகள் டெண்டர் விடப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. படகு தளத்தில் 10 நபர்கள் பயணம் செய்யக்கூடிய 2 உந்து படகுகளும், 4 நபர்கள் பயணம் செய்யக்கூடிய 10 பெடல் படகுகளும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக விளவங்கோடு தாசில்தார் ஆய்வு மேற்கொண்டதில் பயணம் மேற்கொள்ப வர்கள் பாதுகாப்பு கவசம் இல்லாமல் பயணம் செய் வது கண்டறியப்பட்டது.

    எனவே, உரிய நிபந்தனைகளை தவறாது பின்பற்றி படகுகளை இயக்குவதை கடையால் பேரூராட்சி செயல் அலுவலர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலாக பயணிகளை படகில் அனுமதிக்க கூடாது. படகில் பயணம் செய்பவர்கள் கண்டிப்பாக பாதுகாப்பு கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். அனும திக்கப்பட்ட எண்ணிக் கையை விட கூடுதலான படகுகள் கோதையாறு ஆற்றுப்பகுதியில் செல்வதை அனுமதிக்க கூடாது. காலாவதியான படகுகளை அனுமதிக்க கூடாது. மேற்படி படகின் உறுதித் தன்மையை சம்பந்தப்பட்ட அலுவவர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்வதை தொடர்ந்து கடையால் பேரூராட்சி செயல் அலுவலர் உறுதி செய்ய வேண்டுமென கலெக்டரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறும் படகு உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வதோடு, உரிமங்கள் ரத்து செய்யப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    மாவட்ட கலெக்டர் அறிவுறுத்த லின்படி, விளவங்கோடு தாலுகா தாசில்தார் குமாரவேல் படகு தளத்தில் உரிய நிபந்தனைகள் பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    Next Story
    ×