search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வட்டார போக்குவரத்து அதிகாரி"

    • வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் அரசு பஸ்சை ஒப்படைத்த டிரைவர்
    • நாகர்கோவிலில் இருந்து இருந்து நெல்லைக்கு டி.என்.74-1841 என்ற எண் கொண்ட அரசு பஸ் இயக்கபடுகிறது

    கன்னியாகுமரி :

    நாகர்கோவிலில் இருந்து இருந்து நெல்லைக்கு டி.என்.74-1841 என்ற எண் கொண்ட அரசு பஸ் இயக்கபடுகிறது. இந்த பஸ்சை இன்று வடசேரியில் இருந்து மேலசங்கரன் குழியை சேர்ந்த டிரைவர் ஞான பெர்க்மான்ஸ் ஓட்டிச் சென்றார்.

    இந்த நிலையில் வள்ளியூர் வரை பஸ்சை ஓட்டிய அவர், அதற்கு மேல் இயக்க முடியாது எனக்கூறி பயணிகளை கீழே இறக்கி மாற்று பஸ்சில் அனுப்பி உள்ளார். தொடர்ந்து தான் ஓட்டிய பஸ்சை, விசுவாசபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் கொண்டு வந்துள்ளார்.

    இந்த பஸ்சில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இது பற்றி பணிமனை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் பலன் இல்லை. எனவே நீங்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட்டார போக்குவரத்து அலுவலரிடம் புகார் கூறினார். இந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கடந்த சில நாட்களாக பஸ்சில் பிரேக் பிடிக்கவில்லை. வலது பக்கம் திருப்பினால் இடது பக்கம் திரும்புகிறது. இடது பக்கம் திருப்பினால் வலது பக்கம் செல்கிறது. இதனை சரி செய்ய வேண்டும் என்று பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பயணிகளை பாதுகாப்பாக கொண்டு செல்ல முடியாது என்று நோட்டு புத்தகத்தில் எழுதி வைத்த போதும் இதுவரை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

    ×