search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Deputy Superintendent of Police"

    • பாகிஸ்தானில் 2 சதவீதம் பேர் மட்டுமே இந்து மதத்தை சேர்ந்தவர்கள்
    • மனிஷாவின் சகோதரிகளும் சகோதரனும் மருத்துவ கல்வி பயில்கின்றனர்

    1947ல் ஒன்றுபட்ட இந்தியா சுதந்திரமடைந்த போது இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகள் உருவானது.

    இந்தியாவில் மதசார்பின்மை கடைபிடிக்கப்படுகின்றது. ஆனால், பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசு நாடாகும். அங்கு 96.47 சதவீதம் மக்கள் இஸ்லாமிய மதத்தவர்கள்; 2.14 சதவீதம் பேர் மட்டுமே இந்துக்கள்.

    இந்நிலையில், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் முதல் பெண் துணை காவல்துறை கண்காணிப்பாளர் (DSP) பதவிக்கு 26 வயதான இந்து மதத்தை சேர்ந்த பெண் மனிஷா ரொபேடா (Manisha Ropeta) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    தனது இந்த அரிய சாதனை குறித்து பேசிய மனிஷா, "பெண் என்னதான் கடினமாக படித்தாலும் மருத்துவப்பணி அல்லது ஆசிரியை பணியில் மட்டுமே செல்ல முடியும் என்பதை சிறு வயது முதலே நான் கேட்டு வந்துள்ளேன். காவல்துறையிலும், நீதிமன்றங்களிலும் பெண்கள் பணியாற்ற கூடாது எனும் நம்பிக்கையை தகர்ப்பதே எனது லட்சியமாக இருந்தது. பல குற்றங்களில் பாதிக்கப்படுவது பெண்ணினம்தான். சமுதாயத்தில் உள்ள பெண்களை காக்கும் விதமாக ஒரு பெண் பாதுகாவலர் தேவை என நினைத்ததால் காவல்துறையில் சேர்ந்தேன். நான் கடந்து வந்த பாதை எளிதானதாக இல்லையென்றாலும் எனக்கு பலரும் ஊக்கம் அளித்தனர்" என கூறினார்.

    சிந்து மாகாணத்தின் ஜேக்கபாபாத் பகுதியை சேர்ந்த ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் மனிஷா. மனிஷாவிற்கு 3 சகோதரிகளும் 1 சகோதரரும் உள்ளனர். அவரது தந்தை இறந்ததும், அவரது தாயார், தனது குழந்தைகளுடன் கராச்சி நகருக்கு இடம்பெயர்ந்தார்.

    மனிஷாவுடன் உடன் பிறந்தவர்கள் அனைவரும் மருத்துவ கல்வி பயின்று வருகின்றனர். மனிஷாவும் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வு எழுதி ஒரே ஒரு மதிப்பெண் வித்தியாசத்தில் இடத்தை தவற விட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சிந்து மாகாண பொது சேவைகளுக்கான ஆணையம் நடத்தும் தேர்வுகளில் 468 தேர்வாளர்களில் 16-வது இடத்தை பிடித்து காவல்துறையில் இந்த உயர் பதவிக்கு வந்தவர் மனிஷா. 

    • பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
    • பவானி போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    பவானி:

    பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் ஆடி 1, அமா வாசை தினத்தில் பக்தர்கள் வசதிக்காக மேற் கொள்ளப்படும் பாதுகாப்பு மற்றும் பல்வேறு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் பவானி தாசில்தார் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

    பவானி தாசில்தார் தியாகராஜ் தலைமை தாங்கி னார். கூட்டத்தில் வரும் 17-ந் தேதி (திங்கட்கிழமை) ஆடி மாதம் பிறக்கிறது. மேலும் ஆடி அமாவாசை வரும் 17-ந் தேதி மற்றும் அடுத்த ஆகஸ்ட்டு 15-ந் தேதி என ஆடி மாதத்தில் 2 அமாவாசை தினங்கள் வருகிறது.

    இதையொட்டி வரும் 17-ந் தேதி பவானி சங்க மேஸ்வரர் கோவிலுக்கு ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி பக்கத்து மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுதுறைக்கு வந்து தங்கள் முன்னோர்க ளுக்கு திதி, தர்ப்பணம், எள்ளும், தண்ணியும் விடுதல், பிண்டம் விடுதல் உட்பட பல்வேறு பரிகார பூஜைகள் செய்து வழிபாடு செய்வார்கள் என எதிர்ப் பார்க்கப்படுகிறது.

    எனவே ஆடி அமாவாசை நாட்களில் சங்கமேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்க ளுக்கு மேற்கொள்ளப்படும் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    இதில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர், பவானி போலீசார், தீயணைப்பு துறை, சுகாதாரத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் மின்சார துறை போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பவானி போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். போக்குவரத்து போலீசார் மூலம் போக்கு வரத்து தடை மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் சரி செய்வது, கோவிலுக்கு வரும் பக்தர்க ளுக்கு கார் பார்க்கிங் வசதி ஏற்படுத்தி தருவது குறித்து ஆலோசனை வழங்க ப்பட்டது.

    மேலும் 25 தீயணைப்புத் துறை வீரர்கள் மூலம் ஆண்கள் மற்றும் பெண்கள் படித்துறை பகுதி, காவிரி ஆறு என பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டு எந்த விதமான அசம்பாவிதம் நடக்காமல் தடுப்பது, 108 ஆம்புலன்சு மற்றும் மருத்துவ வசதி ஏற்படுத்தி கொடுக்க முடிவு செய்யப் பட்டது.

    அதேபோல் பவானி நகராட்சி நிர்வாகத்தின் மூலம் தூய்மை பணியை மேற்கொள்வது, மின்சார துறை மூலம் மின்தடை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது, சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் என பல்வேறு துறைகளில் மேற்கொள்ள படும் பணிகள் குறித்த ஆலோசனை நடத்தப் பட்டது.

    கடந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கடந்த ஆடி 1 மற்றும் அமாவாசை தினங்களில் பக்தர்கள் பரிகாரங்கள் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இந்த ஆண்டு காவிரி ஆற்றில் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் சென்று கொண்டி ருக்கிறது. இதனால் வரும் 17-ந் தேதி ஆடி 1 அன்று கூடுதுறையில் குளிக்க பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள். எனவே கூடுதுறை பகுதியில் பாதுகாப்பை தீவிரப்படுத்த அதிகாரிகள் மற்றும் போலீசார் முடிவு செய்யப் பட்டது.

    • கஞ்சா போன்ற போதை பொருட்களை யாராவது வைத்து இருப்பதாக தெரிந்தால் உடனே போலீசுக்கு தகவல் கொடுக்க வேண்டும்.
    • தகவல் தெரிவிப்பவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும்.

    ஊத்துக்கோட்டை:

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் வரவேற்பாளர் அறை அமைக்க வேண்டும் என்று டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டு உள்ளார். அதன்படி ஊத்துக்கோட்டை போலீஸ் நிலைய வளாகத்தில் வரவேற்பாளர் அறை புதிதாக கட்டப்பட்டது. இதனை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் குமார் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    போலீசார் பொது மக்களிடம் நண்பர்களாக பழக வேண்டும். அதேபோல் பொதுமக்கள் வழக்கு விசாரணையின் போதும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் போலீசுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

    தங்களது பகுதிகளில் சந்தேகிக்கும் படியான நபர்கள் யாராவது திரிந்தால் உடனே அருகே உள்ள போலீஸ் நிலையங்களுக்கு பொதுமக்கள் தெரியப்படுத்த வேண்டும்.

    மேலும் கஞ்சா போன்ற போதை பொருட்களை யாராவது வைத்து இருப்பதாக தெரிந்தால் உடனே போலீசுக்கு தகவல் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும். தகவல் தெரிவிப்பவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும். இவ்வாறு துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் குமார் பேசினார். நிகழ்ச்சி யில் இன்ஸ் பெக்டர் சத்ய பாமா, சப்-இன்ஸ் பெக்டர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒரத்தநாடு அரசு மகளிர் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
    • ஒரத்தநாடு போலீஸ் துணை சூப்பிரண்டு பிரசன்னா ரத்த தானம் செய்தார்.

    தஞ்சாவூர்:

    பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம் வழிகாட்டுதலின் படி, தஞ்சை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் எழிலன் ஆலோசனையின் பேரில் ஒரத்தநாடு அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரத்ததான முகாம் இன்று நடைபெற்றது.

    இந்த முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல் தலைமையேற்று தொடக்கி வைத்தார்.

    இந்த நிகழ்வில் ஒரத்தநாடு போலீஸ் துணை சூப்பிரண்டு பிரசன்னா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதலாவது ஆளாக தானாக முன்வந்து ரத்த தானம் செய்தார்.

    இந்த முகாமில் தஞ்சை மாவட்ட யூத் ரெட் கிராஸ் அமைப்பாளரும் திருக்காட்டுப்பள்ளி அரசு கலைக் கல்லூரியின் உதவி பேராசிரியருமான முருகானந்தம், அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் வாசுகி, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் தஞ்சை மாவட்ட மேலாண்மை குழு உறுப்பினர் ஜெயக்குமார், திருச்சி விகாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நிர்வாக இயக்குனர் வசந்த், தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி அலுவலர் மருத்துவர் வேல்முருகன், கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் கற்பகம் மற்றும் கல்லூரியின் பேராசிரியர்கள் முன்னிலை வகித்தனர்.

    இந்த முகாமில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 75 மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் ரத்ததானம் செய்தனர்.

    ×