search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பவானி கூடுதுறையில்"

    • சபரிமலை செல்ல மாலை அணிந்திருக்கும் பக்தர்கள் பவானி கூடுதுறைக்கு வந்து புனித நீராடி செல்கிறார்கள்.
    • அதிகாலை நேரங்க ளில் பக்தர்களின் கூட்டம் அதிகளவில் காணப்படுறது.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி பகுதியில் காவிரி, பவானி மற்றும் அமுதநதி என 3 நதிகள் சங்கமிக்கும் கூடுதுறை உள்ளது. இந்த பகுதியில் வேதநாயகி உடனமர் சங்க மேஸ்வரர் கோவிலும் அமை ந்துள்ளது. இந்த கோவிலில் பெருமாள், முருகன் சன்ன திகளும் அமைந்து உள்ளது.

    பவானி கூடுதுறை தமிழக த்தில் உள்ள பரிகார தலங்க ளில் சிறந்த பரிகார தலமாகவும் திகழ்ந்து வருகிறது. இதனால் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த வர்கள் மட்டுமின்றி தமிழக த்தின் பல பகுதிகளிலும் இரு ந்து ஏராளமான பக்தர்கள் வந்து கூடுதுறையில் புனித நீராடி செல்கிறார்கள்.

    குறி ப்பாக திருப்பூர், கோவை, நாமக்கல், சேலம், கரூர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலர் வந்து தங்கள் முன்கேனார்க ளுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து செல்கிறார்கள்.

    இதனால் கூடுதுறையில் எப்போது மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். மேலும் பவுர்ணமி, அமா வாசை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வழக்கத்தை விட அதிகமாக ஆயிரகண க்கான மக்கள் வந்து புனித நீராடி சங்கமேஸ்வரர் மற்றும் வேதநா யகி அம்மனை வழிபடுகிறார்கள்.

    ேமலும் ராமேஸ்வ ரத்துக்கு அடுத்தப்படியாக சிறந்த தலமாக கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் இருப்பதால் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் வட மாநிலங்களின் பல பகுதி களில் இருந்தும் ஏரா ளமான பக்தர்கள் கூடுதுறை க்கு வந்து புனித நீராடி ஈசனை வழிபட்டு செல்கிறார்கள்.

    இதே போல் தமிழகத்துக்கு புனித யாத்திரை வரும் பெரும்பா லான மக்கள் கூடு துறைக்கு வந்து புனித நீராடி விட்டு செல்வது வழக்கமாக கொண்டு உள்ளனர்

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கார்த்திகை மாதம் பிறந்தது. இதையொட்டி சபரிமலை செல்வதற்காக அய்யப்ப பக்தர்கள் பலர் மாலை அணிவித்து விரதம் தொடங்கி உள்ளனர். இதே போல் ஈரோடு மாவட்ட த்திலும் பக்தர்கள் பலர் மாலை அணிந்து உள்ளனர்.

    பவானி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சபரி மலை செல்ல மாலை அணி ந்திருக்கும் பக்தர்கள் பவானி கூடுதுறைக்கு வந்து ஆற்றில் புனித நீராடி சங்கமேஸ்வ ரரை வழிபட்டு செல்கிறார்கள்.

    மேலும் அய்ய ப்ப பக்தர்கள் சாமியே சரணம் அய்யப்ப என சரண கோஷம் முழங்க தரிசனம் செய்து வருகிறார்கள்.

    இதனால் கடந்த சில நா ட்களாக காலை மற்றும் மாலை நேரங்களில் பவானி கூடுது றையில் அய்ய ப்ப பக்தர்க ளின் கூட்டமாகவே காண ப்பட்டு வருகி றது. குறிப்பாக அதிகாலை நேரங்க ளில் பக்தர்களின் கூட்டம் அதிகளவில் காணப்படுறது.

    மேலும் சபரிமலைக்கு செல்லும் தமிழகத்தின் பல பகுதிகளை சேர்ந்த பக்த ர்கள் பலர் கூடு துறைக்கு வந்து புனித நீராடி விட்டு மீண்டும் சபரி மலைக்கு செல்கிறார்கள்.

    இதே போல் தர்மபுரி, கிருஷ்ணகிரி, மேட்டூர் பகுதிகளில் இருந்து பவானி வழியாக அய்யப்ப கோவி லுக்கு செல்லும் பக்தர்கள் கூடு துறைக்கு வந்து சங்கமேஸ்வ ரரை வழிபட்டு விட்டே செல்கிறா ர்கள்.

    மேலும் சபரிமலை செ ல்லும் ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் பல்வேறு புனித தலங்களுக்கு செல்லும் பலரும் கூடுதுறை க்கு வந்து புனித நீராடி விட்டு செல்கிறார்கள்.

    • பக்தர்கள் பரிகார பூஜைகள் செய்திட தற்காலிக இரும்பு சீட் செட் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • இந்தாண்டு ஆடி முதல் நாள் மற்றும் ஆடி கடைசி நாள் என 2 நாட்களில் அமாவாசை வருகிறது.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக கூடு துறை சங்க மேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.

    இந்தக் கோவிலில் பின்பகுதியில் இரட்டை விநாயக சன்னதி படித்துறை யில் காவிரி, பவானி, கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம், தென்னகத்தின் காசி, பரிகார தலம், சுற்றுலா தலம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல் தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம், எள்ளும் தண்ணீர் விடுதல், பிண்டம் விடுதல் உட்பட பல்வேறு பரிகார பூஜைகள் செய்து காவிரி ஆற்றில் புனித நீராடி சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.

    இதனால் பவானி கூடுதுறையில் எப்போதும் பக்தர்களின் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

    இந்த நிலையில் வரும் 17-ந் தேதி (திங்கட்கிழமை) ஆடி மாதம் பிறக்கிறது. மேலும் அன்று ஆடி அமா வாசை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

    இதனால் பவானி கூடுதுறைக்கு உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநில பக்தர்கள் என ஆயிரக்கணக்கான வர்கள் வந்து பரிகார பூஜைகள் செய்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    இதனை தொடர்ந்து சங்க மேஸ்வரர் கோவில் நிர்வாக த்தின் சார்பில் கோவில் பின் பகுதியில் பக்தர்கள் பரிகார பூஜைகள் செய்திட தற்காலிக இரும்பு சீட்டினால் ஆன செட் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    அதேபோல் கோவிலின் பல்வேறு இடங்களில் சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தி பவானி போலீ சார் மூலம் பாதுகாப்பு பணிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. இந்தாண்டு ஆடி முதல் நாள் மற்றும் ஆடி கடைசி நாள் என 2 நாட்களில் அமாவாசை வருகிறது.

    இதனால் தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு 2 அமாவாசை தினங்களிலும் பரிகார பூஜைகள் செய்து வழிபட உகந்தது என புரோகிதர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதனால் வழக்கத்தை விட கூட்டம் அதிகளவில் வர வாய்ப்புள்ளது. இதையொட்டி கோவில் வளாகம் மற்றும் கூடுதுறை புனித நீராடும் பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    • பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
    • பவானி போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    பவானி:

    பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் ஆடி 1, அமா வாசை தினத்தில் பக்தர்கள் வசதிக்காக மேற் கொள்ளப்படும் பாதுகாப்பு மற்றும் பல்வேறு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் பவானி தாசில்தார் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

    பவானி தாசில்தார் தியாகராஜ் தலைமை தாங்கி னார். கூட்டத்தில் வரும் 17-ந் தேதி (திங்கட்கிழமை) ஆடி மாதம் பிறக்கிறது. மேலும் ஆடி அமாவாசை வரும் 17-ந் தேதி மற்றும் அடுத்த ஆகஸ்ட்டு 15-ந் தேதி என ஆடி மாதத்தில் 2 அமாவாசை தினங்கள் வருகிறது.

    இதையொட்டி வரும் 17-ந் தேதி பவானி சங்க மேஸ்வரர் கோவிலுக்கு ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி பக்கத்து மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுதுறைக்கு வந்து தங்கள் முன்னோர்க ளுக்கு திதி, தர்ப்பணம், எள்ளும், தண்ணியும் விடுதல், பிண்டம் விடுதல் உட்பட பல்வேறு பரிகார பூஜைகள் செய்து வழிபாடு செய்வார்கள் என எதிர்ப் பார்க்கப்படுகிறது.

    எனவே ஆடி அமாவாசை நாட்களில் சங்கமேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்க ளுக்கு மேற்கொள்ளப்படும் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    இதில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர், பவானி போலீசார், தீயணைப்பு துறை, சுகாதாரத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் மின்சார துறை போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பவானி போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். போக்குவரத்து போலீசார் மூலம் போக்கு வரத்து தடை மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் சரி செய்வது, கோவிலுக்கு வரும் பக்தர்க ளுக்கு கார் பார்க்கிங் வசதி ஏற்படுத்தி தருவது குறித்து ஆலோசனை வழங்க ப்பட்டது.

    மேலும் 25 தீயணைப்புத் துறை வீரர்கள் மூலம் ஆண்கள் மற்றும் பெண்கள் படித்துறை பகுதி, காவிரி ஆறு என பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டு எந்த விதமான அசம்பாவிதம் நடக்காமல் தடுப்பது, 108 ஆம்புலன்சு மற்றும் மருத்துவ வசதி ஏற்படுத்தி கொடுக்க முடிவு செய்யப் பட்டது.

    அதேபோல் பவானி நகராட்சி நிர்வாகத்தின் மூலம் தூய்மை பணியை மேற்கொள்வது, மின்சார துறை மூலம் மின்தடை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது, சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் என பல்வேறு துறைகளில் மேற்கொள்ள படும் பணிகள் குறித்த ஆலோசனை நடத்தப் பட்டது.

    கடந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கடந்த ஆடி 1 மற்றும் அமாவாசை தினங்களில் பக்தர்கள் பரிகாரங்கள் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இந்த ஆண்டு காவிரி ஆற்றில் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் சென்று கொண்டி ருக்கிறது. இதனால் வரும் 17-ந் தேதி ஆடி 1 அன்று கூடுதுறையில் குளிக்க பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள். எனவே கூடுதுறை பகுதியில் பாதுகாப்பை தீவிரப்படுத்த அதிகாரிகள் மற்றும் போலீசார் முடிவு செய்யப் பட்டது.

    • பவானி தீயணைப்பு துறை சார்பில் முதல் உதவி சிகிச்சை ஒத்திகை பயிற்சி தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது.

    பவானி:

    தென்மேற்கு பருவமழையின் காரணமாக காவேரி ஆற்றில் ஏற்படும் வெள்ள பெருக்கின் போது தண்ணீரால் ஏற்படும் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் விதமாக ஒத்திகை பயிற்சி தீயணைப்பு துறை வீரர்கள் மூலம் ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல் இந்தாண்டு பவானி சங்கமேஸ்வரர் கோவில் பின் பகுதியில் உள்ள இரட்டை விநாயகர் சன்னதி கூடுதுறையில் பவானி தீயணைப்பு துறை சார்பில் தண்ணீரில் அடித்து செல்லும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்து முதல் உதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு கொண்டு செல்வது வரை என ஒத்திகை பயிற்சி தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது.

    இதில் பவானி தீயணை ப்பு நிலைய அலுவலர் மற்றும் வீரர்கள், பொது மக்கள், பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • இன்று அதிகாலை முதலே ஏராளமான அய்யப்ப பக்தர்கள் பவானி கூடுதுறைக்கு வந்தனர்.
    • இதனால் கோவில் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் ஆண்டு தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி–மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து முன்னோர் களுக்கு திதி கொடுத்து புனித நீராடி செல்வார்கள்.

    ேமலும் அமாவாசை மற்றும் முக்கிய முகூர்த்த நாட்களில் வழக்கத்தை விட அதிகளவில் பக்தர்கள் கூட்டம் வருகை இருக்கும்.

    தற்போது கார்த்திகை மாதம் என்பதால் சபரி மலைக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்களும் அதிகளவில் பவானி கூடுதுறைக்கு வர தொடங்கியுள்ளனர். அவர்கள் புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிப்பட்டு சென்று வருகிறார்கள்.

    இன்று அதிகாலை முதலே ஏராளமான அய்யப்ப பக்தர்கள் பவானி கூடுதுறைக்கு வந்தனர். மேலும் இன்று ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாள் என்பதாலும் கூட்டம் அலைமோதியது. இதனால் கோவில் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 

    • பவானியில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.
    • பவானி கூடுதுறையில் விடுமுறை தினமான ஞாயிறு மற்றும் பவுர்ணமி யை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் புனித நீராடி பரிகாரங்கள் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

    பவானி:

    பவானி கூடுதுறையில் விடுமுறை தினமான ஞாயிறு மற்றும் பவுர்ணமி யை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் புனித நீராடி பரிகாரங்கள் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

    பவானியில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.

    இந்த கோவிலின் பின் பகுதியில் உள்ள இரட்டை விநாயகர் சன்னதி படி த்துறை பகுதியில் காவிரி, பவானி, கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமமாக உள்ளது. மேலும் தென்னகத்தின் காசி என்றும் சிறந்த பரிகார தலம் எனவும் பெயர் பெற்று விளங்கி வருகிறது.

    ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வரும் இந்த கோவிலில் உள்ளூர், வெளியூர் வெளி மாநில பக்தர்கள் வந்து கூடுதுறை காவிரி ஆற்றில் புனித நீராடி தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம், எள்ளும் தண்ணீரில் விடுதல், பிண்டம் விடுதல், திருமண தடை தோஷம் நீக்குதல் உட்பட பல்வேறு பரிகார பூஜைகள் செய்து செல்வது வழக்கம்.

    இதனால் விடுமுறை நாட்கள், அமாவாசை, பவுர்ணமி மற்றும் விஷேச நட்களில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காண ப்படும்.

    இந்த நிலையில் விடுமுறை தினமான இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஏராளமான பக்தர்கள் கூடுதுறைக்கு வந்திருந்தனர். மேலும் இன்று பவுர்ணமி தினமாக உள்ளதால் பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் பலர் வந்தனர்.

    இதையொட்டி அதிகாலை முதல் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டு மின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் தங்கள் குடுமுபத்துடன் பவானி கூடுதுறைக்கு வந்திருந்தனர். அவர்கள் தொடர்ந்து காவிரி ஆற்றில் புனித நீராடி திதி, தர்ப்பணம் மற்றும் பல்வேறு வகையான பரிகார பூஜைகள் செய்து முன்னோரை வழிபட்டனர்

    மேலும் பக்தர்கள் பலர் ஆற்றில் புனித நீராடி சங்கமேஸ்வரரை தரிசனம் செய்தனர்.

    இதனால் கூடுதுறை பகுதியில் பல்வேறு இடங்க ளிலும் இன்று அதி காலை முதலே பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

    இதே போல் கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள கொடிவேரி அணைக்கு விடுமுறை தினமான இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.

    அவர்கள் அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் பலர் குடும்பத்துடன் வந்து குளித்து விட்டு தங்கள் கொண்டு வந்த உணவு வகைகளை அங்கே அமர்ந்து சாப்பிட்டனர்.

    • பவானி சங்கமேஸ்வரர் கோவில் பின்பகுதியில் உள்ள இரட்டை விநாயகர் சன்னதி பகுதியில் காவிரி, பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிக்கிறது.
    • இதனால் இப்பகுதி முக்கூடல் சங்கமம், தென்னகத்தின் காசி, பரிகார ஸ்தலம், சுற்றுலா தளம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.

    பவானி:

    பவானி சங்கமேஸ்வரர் கோவில் பின்பகுதியில் உள்ள இரட்டை விநாயகர் சன்னதி பகுதியில் காவிரி, பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிக்கிறது.

    இதனால் இப்பகுதி முக்கூடல் சங்கமம், தென்னகத்தின் காசி, பரிகார ஸ்தலம், சுற்றுலா தளம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.

    இந்நிலையில் தினசரி கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் ஞாயிற்று க்கிழமை விடுமுறை தினமான இன்று உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

    காலை முதல் கூடுதுறைக்கு வருகை தந்து காவிரி ஆற்றில் புனித நீராடி தங்கள் குடும்பத்தில் இறந்த நபர்களுக்கு திதி, எள்ளும், தண்ணியும் விடுதல், பிண்டம் விடுதல் போன்ற பரிகார பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

    • புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையை மகாளய அமாவாசையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது
    • இதையொட்டி நீர் நிலைகளில் பொது மக்கள் புனித நீராடி முன்னேர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

    பவானி:

    புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையை மகாளய அமாவாசையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நீர் நிலைகளில் பொது மக்கள் புனித நீராடி முன்னேர்களுக்கு தர்ப்பணம் ெகாடுப்பது வழக்கம்.இதே போல் இந்த ஆண்டு புராட்டாசி அமா வாசை நாளை (ஞாயிற்றுக்கி ழமை) வரு கிறது.

    ஈரோடு மாவட்டம் பவானியில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.

    இக்கோவிலில் பின் பகுதியில் உள்ள இரட்டை விநாயகர் சன்னதி படித்துறை பகுதியில் காவேரி, பவானி, கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என மூன்று நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம் தென்னகத்தின் காசி பரிகார தலமாகவும், சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. இதனால் ஏராளமான பொதுமக்கள் வருவார்கள்.

    பவானி கூடுதுறைக்கு புரட்டாசி மாத மகாளய அமாவாசை தினமான நாளை ஈரோடு மாவட்ட மக்கள் மட்டுமின்றி வெளியூர், வெளிமாநில பக்தர்கள் என ஏராளமானோர் வந்து புனித நீராடி முன்னோர்களுக்கு திதி, எள்ளும் தண்ணியும் விடுதல், பிண்டம் விடுதல், பித்ரு பூஜை, தர்ப்பணம் போன்ற பரிகாரங்களை செய்து சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொள்வார்கள்.

    வழக்கமாக பக்தர்கள் வருவார்கள். மகாளய அமாவாசை என்பதால் வழக்க த்தை விட ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரு வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனைத் தொடர்ந்து பவானி சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தின் சார்பில் கோவில் பின்பகுதியில் பல்வேறு இடங்களில் தற்காலிக இரும்பு செட் அமைக்கப்பட்டு உள்ளது.

    ஆண்கள் மற்றும் பெண்கள் புனித நீராட தனித்தனியாக இரும்பு செட் அமைத்தும் அனைத்து விதமான முன்னேற்பாடு நடவடி–க்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதேபோல் பக்தர்களுக்கு பரிகார பூஜைகளுக்கு தேவையான தேங்காய், வாழைப்பழம் உட்பட பல பொருட்கள் பிளாஸ்டிக் கேரி பேக் தவிர்த்து துணிப்பைகளில் பூஜை பொருட்கள் போடப்பட்டு பணியாளர்கள் மூலம் தயார் நிலையில் வைக்க ப்பட்டுள்ளன.

    மேலும் கோவில் வளாகத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    இந்த பகுதியில் அசம்பா வித சம்பவங்கள் நடை பெறாமல் இருக்கும் பொருட்டு கோவில் நிர்வாகத்தின் மூலம் பல்வேறு இடங்களில் 50-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு பவானி போலீசார் மூலம் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளனர்.

    இதையொட்டி பவானி சங்கமேஸ்வரர் கோவில் கூடுதுறையில் நாளை மகாளய அமாவாசையை யொட்டி முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    ×