search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Devotees gather at"

    • பாலாலயம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது.
    • புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பு.புளியம்பட்டி:

    புஞ்சை புளியம்பட்டி அடுத்து கோவில் புதூரில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ கருத்திருமராயப் பெருமாள் எனும் ஸ்ரீ கரிவராஜ பெருமாள் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலாலயம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது.

    மேலும் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருவதால் விநாயகர் கருத்திருமராய பெருமாள் எனும் ஸ்ரீ கரிவரத வரதராஜ பெருமாள், கருடாழ்வார், ஆஞ்சநேயர், கிருஷ்ணர் பாமா ருக்மணி மற்றும் கோவில் கோபுரங்கள் ஆகியவை அத்தி மரத்தினால் உருவ சிலைகள் அமைத்து பாலாலயம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    இதில் புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து தாசர்களுக்கு அரிசி, பருப்பு, புளி, காய்கறிகள் உள்ளிட்டவை கொடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    கோவில் வளாகத்தில் கூடியிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கோவில் சார்பில் அன்ன தானம் வழங்கப்பட்டது.

    மேலும் கோவில் திருப்பணி நடைபெற்று கொண்டி ருப்பதால் கோவிலுக்கு வரும் பொதுமக்கள் அவர்களால் முடிந்த நிதிகளை நன்கொடையாக வழங்கி வருகிறார்கள்.

    • பெருமாள் கோவில்களில் இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
    • வாசனை திரவியங்கள் அடங்கிய அபிஷேகங்கள் நடைபெற்றன.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில் களில் புரட்டாசி 2-ம் சனி க்கிழமையையொட்டி இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    புரட்டாசி 2-ம் சனிக்கிழ மையை யொட்டி பவானி அருகே உள்ள பெருமாள் மலையில் அமைந்துள்ள மங்களகிரி பெருமாள் கோவிலில் இன்று அதி காலை பெருமாளுக்கு பால், தயிர், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து மங்களகிரி பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதையொட்டி இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். இதை தொடர்ந்து அவர்கள் மலை படிகளில் நீண்ட வர வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    கோபிசெட்டிபாளையம் பகுதி பெருமாள் கோவில் களில் புரட்டாசி 2-ம் சனிக்கிழமை யொட்டி இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    கோபி அருகே உள்ள மூல வாய்க்கா ல் ஸ்ரீதேவி பூதேவி கரி வரத ராஜ பெருமாள் கோவிலில் காலை 7 மணி அளவில் சாமி க்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், மற்றும் வாசனை திரவியங்கள் அடங்கிய அபிஷேகங்கள் நடைபெற்றன.

    அதை தொடர்ந்து சுவாமி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. மேலும் பக்தர்கள் மலையை சுற்றி சுவாமியை தேரில் இழுத்து வலம் வந்தனர்.

    மேலும் கோபிசெட்டி பாளையம் வரதராஜ பெரு மாள் கோவில், பாரியூர் ஆதிநாராயண பெருமாள் கோவில், கோபி மொடச்சூர் பெருமாள் கோவில், கொளப்பலூர் பெருமாள் கோவில்,

    அழுக்குளி பெருமாள் கோவில், மேட்டுவளவு பெருமாள் கோவில் மற்றும் சுற்று வட்டாரபகுதியில் உள்ள பெருமாள் கோவில்க ளில் சிறப்பு பூஜைகள் செய்ய ப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றன.

    இதையொட்டி பக்தர்க ளுக்கு துளசி தீர்த்தம் பிர சாதமாக வழங்கப்பட்டது.

    அந்தியூர் வரதராஜ பெருமாள், சீனிவாச பெருமாள், அழகுராஜ பெருமாள், அந்தியூர் திருப்பதி பேட்டை பெருமாள் உள்ளிட்ட கோவில்களில் புரட்டாசி 2-வது சனிக்கிழமையை யொட்டி சிறப்பு அலங்கார த்தில் சாமி பக்தர்களுக்கு அருள் பாளித்தார்.

    அந்தியூர் தவிட்டுப்பாளை யம் வெள்ளையம்பாளையம் சின்னத்தம்பி பாளையம் அண்ணா மடுவு கந்த ம்பாளையம், பச்சாம் பாளை யம்உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பக்த ர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து சென்றனர்.

    இதையொட்டி கவுந்தப்பாடி சந்தைபேட்டை பழமையான கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று அதி காலை சிறப்பு அபிஷேம் செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து சிறப்பு அலங்கா ரத்தில் அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பவானி சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள பூதேவி, ஸ்ரீதேவி ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் பலர் வந்து தரிசனம் செய்தனர். முன்ன தாக பக்தர்கள் கூடுதுறை யில் நீராடி பெருமாளை வழிபட்டனர்.

    ஆப்பக்கூடல் அருகே உள்ள கள்ளிப்பட்டி அடுத்த பெருமுகை சஞ்சீவிராயன் பெருமாள் கோவிலில் இன்று காலை சிறப்பு தரிசனம் நடந்தது. இதில் சுற்று வடடார பகுதுகளை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இதே போல் பு.புளி யம்பட்டி கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனை த்து பெருமாள் கோவில்களி லும் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் பலர் வழிபாடு நடத்தினர்.

    மேலும் ஈரோடு கோட்டை அழகிரிநாதர் (பெருமாள்) கோவிலில் இன்று அதி காலை சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து சிறப்பு அலங்கார செய்யப் பட்டு அழகிரி நாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களு க்கு அருள் பாலித்தார்.

    இதையொட்டி இன்று காலை முதலே ஈரோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏரா ளமான பக்தர்கள் கோவி லுக்கு வந்திருந்தனர்.

    இதை தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் வழங்கப்பட்டது.

    இதேபோல் ஈரோடு சத்தி ரோட்டில் உள்ள பெரு மாள் கோவிலில் இன்று பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையொட்டி பக்தர்கள் பலர் வந்து பெருமாளுக்கு துளசி அணிவித்து தரிசனம் செய்தனர்.

    மேலும் பக்தர்கள் பலர் பெருமாளை குல தெய்வ மாக நினைத்து வணங்கி வருகிறார்கள். இதனால் பக்தர்கள் பலர் மஞ்சள், வேட்டி துண்டு அணிந்தும் மற்றும் மாலை அணிந்து விரதம் இருந்து வரு கிறார்கள்.

    தொடர்ந்து அவர்கள் 4-ம் சனிக்கிழமை அன்று குடும்பத்துடன் சென்று விரதத்தை முடிப்பார்கள். இதே போல் பக்தர்கள் பலர் வீடுகளில் அறுசுவை உணவு சமைத்து பெருமாளுக்கு படைத்து வணங்குகிறார்கள்.

    • பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் புனித நீராடி பரிகார பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.
    • கொடுமுடியில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    பவானி:

    பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்க மேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலின் பின்பகுதியில் இரட்டை விநாயகர் சன்னதி படி த்துறை பகுதியில் காவிரி, பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம் என்றும் தென்னகத்தின் காசி என்றும் சிறந்த பரிகார தலம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.

    ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வரும் இந்த கோவிலில் ஆடி அமாவாசை, தை அமா வாசை, மகாலய அமாவாசை ஆடி பெருக்கு, விடுமுறை தினங்கள் உள்பட ஆண்டு மமழுவதும் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநில பக்தர்கள் வந்து புனித நீராடி சங்கமேஸ்வ ரரை வழிபடுகிறார்கள்.

    மேலும் பொதுமக்கள் பலர் ஆற்றில் நீராடி தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம், எள்ளும் தண்ணீர் விடுதல், பிண்டம் விடுதல் உட்பட பல்வேறு பரிகார பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொள்வது வழக்கம். இந்த ஆண்டு ஆடி மாதத்தில் 2 அமாவாசைகள் வந்தது. கடந்த மாதம் முதல் ஆடி அமாவாசை வந்தது. இதை தொடர்ந்து இன்றும் ஆடி அமாவாசை அனுஷ்டி க்கப்பட்டது.

    ஆடி அமவாசையை யொட்டி பவானி கூடுதுறைக்கு இன்று அதிகாலை முதலே ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ண கிரி உட்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் புனித நீராடி தங்கள் குடு ம்பத்தில் இறந்தவர்களுக்கு பல்வேறு வகையான பரிகார பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

    இதையடுத்து தங்கள் குடும்பத்துடன் வந்த மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி, மற்றும் மற்றும் பரிகார பூஜைகள் செய்தனர்.

    ஆடி அமாவாசை இன்று மதியம் வரை மட்டுமே உள்ளதால் இன்று அதி காலையிலேயே பக்தர்கள் பலர் கோவிலுக்கு வந்திரு ந்தனர். தொடர்ந்து கூடு துறையில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. இதனால் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காண ப்பட்டது.

    பவானி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு படுத்தப்பட்டு கண்காணித்து வந்தனர்.

    இதே போல் ஆடி அமாவாசையையொட்டி கொடு முடி காவிரி ஆற்றுக்கு இன்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். தொடர்ந்து அவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி மகுடேஸ்வரரை வழிபட்டனர். மேலும் பொ துமக்கள் பலர் காவிரி ஆற்றில் நீராடி தங்கள் மு ன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர். இதே போல் வாலிபர்கள் மற்றும் இளம் பெண்கள் திருமண தடை தோஷ பரிகார பூஜை செய்தனர்.

    இதனால் கொடுமுடியில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதை யொட்டி போலீஸ் பாது காப்பும் போடப்பட்டு இருந்தது.

    • பவானி சங்கமேஸ்வரர் கோவில் பின்பகுதியில் உள்ள இரட்டை விநாயகர் சன்னதி பகுதியில் காவிரி, பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிக்கிறது.
    • இதனால் இப்பகுதி முக்கூடல் சங்கமம், தென்னகத்தின் காசி, பரிகார ஸ்தலம், சுற்றுலா தளம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.

    பவானி:

    பவானி சங்கமேஸ்வரர் கோவில் பின்பகுதியில் உள்ள இரட்டை விநாயகர் சன்னதி பகுதியில் காவிரி, பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிக்கிறது.

    இதனால் இப்பகுதி முக்கூடல் சங்கமம், தென்னகத்தின் காசி, பரிகார ஸ்தலம், சுற்றுலா தளம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.

    இந்நிலையில் தினசரி கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் ஞாயிற்று க்கிழமை விடுமுறை தினமான இன்று உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

    காலை முதல் கூடுதுறைக்கு வருகை தந்து காவிரி ஆற்றில் புனித நீராடி தங்கள் குடும்பத்தில் இறந்த நபர்களுக்கு திதி, எள்ளும், தண்ணியும் விடுதல், பிண்டம் விடுதல் போன்ற பரிகார பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

    ×