search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
    X

    பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள்

    • பெருமாள் கோவில்களில் இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
    • வாசனை திரவியங்கள் அடங்கிய அபிஷேகங்கள் நடைபெற்றன.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில் களில் புரட்டாசி 2-ம் சனி க்கிழமையையொட்டி இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    புரட்டாசி 2-ம் சனிக்கிழ மையை யொட்டி பவானி அருகே உள்ள பெருமாள் மலையில் அமைந்துள்ள மங்களகிரி பெருமாள் கோவிலில் இன்று அதி காலை பெருமாளுக்கு பால், தயிர், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து மங்களகிரி பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதையொட்டி இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். இதை தொடர்ந்து அவர்கள் மலை படிகளில் நீண்ட வர வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    கோபிசெட்டிபாளையம் பகுதி பெருமாள் கோவில் களில் புரட்டாசி 2-ம் சனிக்கிழமை யொட்டி இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    கோபி அருகே உள்ள மூல வாய்க்கா ல் ஸ்ரீதேவி பூதேவி கரி வரத ராஜ பெருமாள் கோவிலில் காலை 7 மணி அளவில் சாமி க்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், மற்றும் வாசனை திரவியங்கள் அடங்கிய அபிஷேகங்கள் நடைபெற்றன.

    அதை தொடர்ந்து சுவாமி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. மேலும் பக்தர்கள் மலையை சுற்றி சுவாமியை தேரில் இழுத்து வலம் வந்தனர்.

    மேலும் கோபிசெட்டி பாளையம் வரதராஜ பெரு மாள் கோவில், பாரியூர் ஆதிநாராயண பெருமாள் கோவில், கோபி மொடச்சூர் பெருமாள் கோவில், கொளப்பலூர் பெருமாள் கோவில்,

    அழுக்குளி பெருமாள் கோவில், மேட்டுவளவு பெருமாள் கோவில் மற்றும் சுற்று வட்டாரபகுதியில் உள்ள பெருமாள் கோவில்க ளில் சிறப்பு பூஜைகள் செய்ய ப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றன.

    இதையொட்டி பக்தர்க ளுக்கு துளசி தீர்த்தம் பிர சாதமாக வழங்கப்பட்டது.

    அந்தியூர் வரதராஜ பெருமாள், சீனிவாச பெருமாள், அழகுராஜ பெருமாள், அந்தியூர் திருப்பதி பேட்டை பெருமாள் உள்ளிட்ட கோவில்களில் புரட்டாசி 2-வது சனிக்கிழமையை யொட்டி சிறப்பு அலங்கார த்தில் சாமி பக்தர்களுக்கு அருள் பாளித்தார்.

    அந்தியூர் தவிட்டுப்பாளை யம் வெள்ளையம்பாளையம் சின்னத்தம்பி பாளையம் அண்ணா மடுவு கந்த ம்பாளையம், பச்சாம் பாளை யம்உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பக்த ர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து சென்றனர்.

    இதையொட்டி கவுந்தப்பாடி சந்தைபேட்டை பழமையான கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று அதி காலை சிறப்பு அபிஷேம் செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து சிறப்பு அலங்கா ரத்தில் அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பவானி சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள பூதேவி, ஸ்ரீதேவி ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் பலர் வந்து தரிசனம் செய்தனர். முன்ன தாக பக்தர்கள் கூடுதுறை யில் நீராடி பெருமாளை வழிபட்டனர்.

    ஆப்பக்கூடல் அருகே உள்ள கள்ளிப்பட்டி அடுத்த பெருமுகை சஞ்சீவிராயன் பெருமாள் கோவிலில் இன்று காலை சிறப்பு தரிசனம் நடந்தது. இதில் சுற்று வடடார பகுதுகளை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இதே போல் பு.புளி யம்பட்டி கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனை த்து பெருமாள் கோவில்களி லும் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் பலர் வழிபாடு நடத்தினர்.

    மேலும் ஈரோடு கோட்டை அழகிரிநாதர் (பெருமாள்) கோவிலில் இன்று அதி காலை சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து சிறப்பு அலங்கார செய்யப் பட்டு அழகிரி நாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களு க்கு அருள் பாலித்தார்.

    இதையொட்டி இன்று காலை முதலே ஈரோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏரா ளமான பக்தர்கள் கோவி லுக்கு வந்திருந்தனர்.

    இதை தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் வழங்கப்பட்டது.

    இதேபோல் ஈரோடு சத்தி ரோட்டில் உள்ள பெரு மாள் கோவிலில் இன்று பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையொட்டி பக்தர்கள் பலர் வந்து பெருமாளுக்கு துளசி அணிவித்து தரிசனம் செய்தனர்.

    மேலும் பக்தர்கள் பலர் பெருமாளை குல தெய்வ மாக நினைத்து வணங்கி வருகிறார்கள். இதனால் பக்தர்கள் பலர் மஞ்சள், வேட்டி துண்டு அணிந்தும் மற்றும் மாலை அணிந்து விரதம் இருந்து வரு கிறார்கள்.

    தொடர்ந்து அவர்கள் 4-ம் சனிக்கிழமை அன்று குடும்பத்துடன் சென்று விரதத்தை முடிப்பார்கள். இதே போல் பக்தர்கள் பலர் வீடுகளில் அறுசுவை உணவு சமைத்து பெருமாளுக்கு படைத்து வணங்குகிறார்கள்.

    Next Story
    ×