search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதுகாப்பு"

    • பாமினி ஆற்றில் மாலை 6 மணிக்கு கரைக்கப்படுகிறது.
    • முத்துப்பேட்டை பகுதியில் உள்ள 9 டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் 31-ம்ஆண்டு விநாயகர் சிலை ஊர்வலம் இன்று மாலை நடைபெற உள்ளது.

    இதற்கு பா.ஜனதா மாநில விவசாய அணி துணைத்தலைவர் ரமேஷ் தலைமை தாங்குகிறார்.

    இந்து முன்னணி ஒன்றிய தலைவர் வெங்கடேசன் அனைவரையும் வரவேற்று பேசுகிறார்.

    அனைத்து கிராம கமிட்டி ஒருங்கிணைப்பு குழு தலைவர் சிவபிரகாஷம், இந்து முன்னணி மாவட்ட தலைவர் ரமேஷ், முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், ஊராட்சி உறுப்பினர் பாலு ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    சிதம்பரம் ராமஜெயம் அறக்கட்டளை நிறுவனர் ராமகிருஷ்ணன் ஊர்வலத்தை தொடங்கி வைக்கிறார்.

    சிறப்பு அழைப்பாளர்களாக பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகாணந்தம், இந்து முன்னணி மாநில செயலாளர் செந்தில்குமார், பா.ஜனதா மேலிட பார்வையாளர் பேட்டை சிவா, மாவட்ட துணை தலைவர் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    ஊர்வலத்தில் உப்பூர், ஆலங்காடு, தில்லைவிளாகம், ஜாம்புவானோடை உள்பட 19 பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் எடுத்து வரப்படுகிறது.

    ஊர்வலமானது மதியம் 2 மணிக்கு தொடங்கி ஜாம்புவானோடை வடக்காடு சிவன் கோவிலிருந்து புறப்பட்டு வைரவன் சோலை, ஜாம்புவானோடை தர்ஹா, மேலக்காடு, கொய்யா முக்கம், பங்களாவாசல், ஓடக்கரை வழியாக செம்படவன்காடு சென்று அங்குள்ள பாமினி ஆற்றில் மாலை 6 மணிக்கு கரைக்கப்படுகிறது.

    இதனை முன்னிட்டு முத்துப்பேட்டையின் முக்கிய பகுதி மற்றும் ஊர்வல பாதை முழுவதும் 165 இடங்களில் கண்காணிப்பு கேமாரக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.

    5ஆளில்லா குட்டி விமானங்கள், ஊர்வலம் செல்லும் பாதையில் கண்காணிக்க ஆங்காங்கே தற்காலிக கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

    100-க்கும் மேற்பட்ட இடத்தில் போலீசார் நிறுத்தி பைனாக்குலர் பயன்படுத்த உள்ளது.

    மேலும் பதற்றமான பகுதிகளில் சாலை இருபுறங்களிலும் தடுப்பு கம்புகள் கொண்டு வேலிகள், ஆஸ்பட்டாஸ் சீட் கொண்ட தடுப்பு வேலிகள் அமைத்து மற்றும் ஆங்காங்கே நூற்றுக்கணக்கான பேரிக்காடுகள் போடப்பட்டுள்ளது.

    ஊர்வலத்தை முன்னிட்டு திருச்சி சரக ஐ.ஜி. கார்த்திகேயன், தஞ்சை டிஐஜி ஜெயசந்திரன், திருச்சி டிஐஜி பலவன், விழுப்புரம் டிஐஜி ஜியாவுல் ஹக், திருவாரூர் எஸ்.பி.சுரேஷ்குமார், மயிலாடுதுறை எஸ்பி மீனா, தஞ்சை எஸ்.பி ஆஸிஷ் ராவத், எஸ்ஐயூ எஸ்பி பாண்டியராஜன், திருச்சி டிராபிக் எஸ்பி செல்வகுமார், சேலம் எஸ்பி மதிவாணன், கரூர் எஸ்பி சுந்தரவதனம், கடலோர காவல் படை எஸ்பி அதிவீரப்பாண்டியன், திருச்சி ரயில்வே எஸ்பி செந்தில்குமார், அரியலூர் எஸ்பி பரோஸ்கான் அப்துல்லா உட்பட 10 ஏடிஎஸ்பி, 37 டிஎஸ்பிகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர், சப்இன்ஸ்பெக்டர், சிறப்பு சப்இன்ஸ்பெக்டர்கள் தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசார், ஆயுதப்படை போலீசார், ஊர்காவலர் படை போலீசார் உள்பட திருச்சி மண்டலத்தில் உள்ள தஞ்சை, நாகை, திருச்சி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களை சேர்ந்த சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டு உள்ளனர்.

    இந்தநிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினரும், கமோண்டோ போலீசாரும் வந்துள்ளனர்.

    மேலும் திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள வருவாய்துறை அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர். முத்துப்பேட்டை நகரை போலீசார் தீவிர கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

    இதனை முன்னிட்டு முத்துப்பேட்டை பகுதியில் உள்ள 9 டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    • பதற்றமான பகுதிகளில் வேலிகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
    • 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    முத்துப்பேட்டை:

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முத்துப்பேட்டையில் இந்து முன்னணி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு இந்து முன்னணி சார்பில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை விநாயகர் சிலை ஊர்வலம் நடக்கிறது. ஊர்வலத்தில் உப்பூர், ஆலங்காடு, தில்லைவிளாகம், ஜாம்புவானோடை, அரமங்காடு, கோவிலூர், மருதங்காவெளி உள்பட 19 பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் எடுத்து வரப்படுகிறது. மதியம் 2 மணிக்கு தொடங்கும் ஊர்வலம் ஜாம்புவானோடை வடக்காடு சிவன் கோவிலில் இருந்து புறப்பட்டு வைரவன் சோலை, ஜாம்புவானோடை தர்கா, மேலக்காடு, கோரை ஆற்றுபாலம் பகுதி வழியாக ஆசாத்நகர் சென்றடைகிறது. பின்னர் அங்கிருந்து திருத்துறைப்பூண்டி சாலை, பழைய பஸ் நிலையம் சென்று அங்கிருந்து பட்டுக்கோட்டை சாலையில் உள்ள நியூபஜார், கொய்யா முக்கம், பங்களாவாசல், ஓடக்கரை வழியாக செம்படவன்காடு சென்று அங்குள்ள பாமினி ஆற்றில் மாலை 6 மணிக்கு கரைக்கப்படுகிறது. ஊர்வலத்தை முன்னிட்டு போலீஸ் துறை சார்பில் கடந்த ஒரு வார காலமாக பல முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மாவட்ட வருவாய் துறை சார்பிலும் பணிகள் நடந்து வருகிறது. மேலும் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு உள்ளது. ஊர்வலம் செல்லும் பாதையில் கண்காணிக்க ஆங்காங்கே தற்காலிக கோபுரங்கள். பதற்றமான பகுதிகளில் சாலையின் இருபுறங்களிலும் தடுப்பு கம்புகள் கொண்டு வேலிகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த ஊர்வலத்தில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    • நாளை முதல் நீர்நிலைகளில் சிலைகளை கரைக்க ஏற்பாடு
    • ஆற்றுப்பகுதியில் தடுப்புகள் அமைப்பது உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகளை போலீசார் செய்து வருகின்றனர்

    கோவை,

    விநாயகர் சதுர்த்தியை யொட்டி கோவை மாநகரில் 676 சிலைகள், புறநகரில் 1,611 சிலைகள் என மாவட்டத்தில் மொத்தமாக 2,287 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதனை யொட்டி மாநகரில் 2,500 போலீசார், புறநகரில் 2 ஆயிரம் போலீசார் என மொத்தம் 4,500 போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். போலீசார் விடிய, விடிய ரோந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள சிலைகள் முன்பு தலா ஒரு போலீசார் நிறுத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.

    கோவை நகரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலம் நாளை (புதன்கிழமை) மற்றும் 22-ந் தேதி ஆகிய நாட்களில் நடந்கிறது. கோவை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் சிங்காநல்லூர், குறிச்சி, குனியமுத்தூர், வெள்ளக்கி ணறு, வடவள்ளி ஆகிய பகுதிகளில் உள்ள குளங்க ளிaல் கரைக்கப்படுகிறது. 22-ந் தேதி முத்தணங்குளத்தில் சிலைகள் கரைக்கப்படுகிறது. இதற்காக அந்தந்த பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் தடுப்புகள் அமைப்பது உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

    விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி நாளை (புதன்கிழமை) மாந கரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள் ளது. இது குறித்து மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

    விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு நாளை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நகருக்குள் கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள் இயக்கக்கூடாது. பொள்ளாச்சியிலிருந்து உக்கடம் வரும் கனரக வாகனங்கள் மற்றும் பஸ்கள் ஈச்சனாரி சர்வீஸ்ரோடு வழியாக சென்று ஈச்சனாரியில் யுடர்ன் செய்து செட்டிப்பாளையம் ரோடு வழியாக ஜி.டி டேங்க், ரெயில் கல்யாண மண்டபம் சந்திப்பு, போத்தனூர் கடைவீதி, குறிச்சி பிரிவு, ஆத்துப்பாலம் வழியாக உக்கடம் சென்றடையலாம்.

    பொள்ளாச்சி சாலையில் இருந்து உக்கடம் நோக்கி செல்லும் இலகுரக வாக னங்கள் ஈச்சனாரி, தக்காளி மார்க்கெட்டில் வலது புறமாக திரும்பி சாரதா மில் ரோடு ரெயில் கல்யாண மண்டம் சந்திப்பு, போத்தனூர் கடைவீதி, குறிச்சி பிரிவு, ஆத்துப்பாலம் வழியாக உக்கடம் செல்லலாம்.

    உக்கடத்தில் இருந்து பொள்ளாச்சி செல்லும் பஸ்கள் ஆத்துப்பாலம், குறிச்சி பிரிவில் இடது புறமாக திரும்பி போத்த னூர் சாலை, போத்தனூர் கடைவீதி, ரெயில் கல்யாண மண்டபம் சந்திப்பு, செட்டி பாளையம் ரோடு, ஈச்சனாரி சென்று பொள்ளாச்சி ரோட்டை வந்தடைந்து செல்ல வேண்டும்.

    உக்கடத்திலிருந்து பொள்ளாச்சி செல்லும் இலகுரக வாகனங்கள் ஆத்துப்பாலம், குறிச்சி பிரிவு, போத்தனூர் சாலை, போத்தனூர் கடைவீதி, ரெயில் கல்யாண மண்டபம் சந்திப்பில் வலது புறமாக திரும்பி சாரதாமில் ரோடு வழியாக பொள்ளாச்சி ரோட்டை வந்தடைந்து செல்ல வேண்டும்.

    உக்கடத்தில் இருந்து குனியமுத்தூர் வழியாக பாலக்காடு நோக்கி செல்லும் கனரக வாக னங்கள் மற்றும் பஸ்கள் அனைத்தும் உக்கடம் பேரூர் பைபாஸ் சாலை வழியாக அசோக் நகர் ரவுண்டானா, பள்ளியின் இடது புறமாக திரும்பி சிவாலயா சந்திப்பு பேரூர், சுண்டக்காமுத்தூர், கோவைப்புதூர் வழியாக பாலக்காடு நோக்கி செல்ல லாம். உக்கடத்திலிருந்து குனிய முத்தூர் வழியாக பாலக் காடு நோக்கி செல்லும் இலகுரக வாகனங்கள் உக்கடம் பேரூர் பைபாஸ் சாலைவழியாக அசோக் நகர் ரவுண்டானாவில் இடது புறம் திரும்பி புட்டு விக்கி ரோடு வழியாக பாலக்காடு நோக்கி செல்லலாம்.

    பாலக்காடு சாலையிலி ருந்து உக்கடம் நோக்கி வரும் கனரக வாகனம் மற்றும் பஸ்கள் பாலக்காடு ரோடு, கோவைப்புதூர் பிரிவில் இடது புறமாக திரும்பி கோவைப்புதூர் ஆசரமம் பள்ளி, பேரூர், செல்வபுரம் சிவாலயா சந்திப்பு வழியாக செல்வபு ரம் மேல்நிலைப் பள்ளியின் வலது புறமாக திரும்பி அசோக் நகர் ரவுண்டானா வழியாக உக்கடம் வந்தடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

    இலகுரக வாகனங்கள் கோவைப்புதூர் பிரிவு, குனியமுத்தூர், கண்ணாம்பு காளவாயில் இடது புறமாக திரும்பி, புட்டுவிக்கி சாலை, அசோக் நகர் ரவுண்டானா வழியாக உக்கடம் வந்தடைந்து செல்லவேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    • இமானுவேல் சேகரன் நினைவு தின பாதுகாப்பு ஏற்பாடுகளை கலெக்டர், எஸ்.பி ஆய்வு செய்தார்.
    • தேவேந்திரர் பண்பாட்டு கழக தலைவர் பரம்பை பாலா உள்ளிட்ட நிர்வாகி கள் உடனிருந்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வருகிற 11-ந்தேதி இமானுவேல் சேகரன் 66-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. தமிழக அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டு மரியாதை செலுத்த உள்ளனர்.

    இந்த நிலையில் இமானு வேல் சேகரன் நினைவி டத்தில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன், போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, முருகேசன் எம்.எல்.ஏ., உதவி கலெக்டர் அப்தாப் ரசூல் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகள், கண்காணிப்பு காமிராக்கள், வி.ஐ.பி.க்கள் வந்து செல்லும் வழித்தடங்கள், வாகனங்கள் நிறுத்துமிடம், புற காவல் நிலையங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது தேவேந்திரர் பண்பாட்டு கழக தலைவர் பரம்பை பாலா உள்ளிட்ட நிர்வாகி கள் உடனிருந்தனர்.

    • மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • தங்கும் விடுதிகள், லாட்ஜ், ஓட்டல், சர்வீஸ் அபார்ட்மெண்ட்டுகளிலும் போலீசார் சோதனை நடத்த தொடங்கி உள்ளனர்.

    கோவை,

    வருகிற 15-ந் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனைமுன்னிட்டு கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    கோவை மாநகரில் கார் குண்டு வெடிப்பு, சமூக விரோத கும்பல் நடமாட்டம், பல்வேறு குற்றவாளிகள் பிடிபட்ட சம்பவங்களை தொடர்ந்து அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    நாளை முதல் நகரில் உச்சகட்ட பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. விமான நிலையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது. ரெயில் நிலையங்களில் பயணிகள் உடமைகள், பார்சல்கள் தீவிரமாக சோதனை செய்யப்படுகின்றன.

    சோதனைக்கு பின்னரே பயணிகள் ரெயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். இதுதவிர வழிபாட்டு தலங்கள், சினிமா தியேட்டர், மால்கள், மார்க்கெட், வணிக வளாகம் என மக்கள் கூட்டம் நிறைந்த பகுதிகள், கடைவீதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர 10க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

    அங்கும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி பகுதிகளில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

    மேலும் மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகள், லாட்ஜ், ஓட்டல், சர்வீஸ் அபார்ட்மெண்ட்டுகளிலும் போலீசார் சோதனை நடத்த தொடங்கி உள்ளனர்.

    அங்கு வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டை சேர்ந்த நபர்கள் தங்கி இருந்தால் அவர்களின் முழு விபரங்களை சேகரித்து வருகின்றனர். மேலும் யாராவது சந்தேகத்திற்கிடமாக தெரிந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும் உரிமையாளர்களுக்கு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    சுதந்திர தின விழா நடக்க உள்ள கோவை வ.உ.சி பூங்கா போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அங்கு சந்தேகத்திற்கிடமாக யாராவது சுற்றி திரிந்தால் அவர்களை பிடித்து விசாரித்தும் வருகின்றனர். மேலும் டிரோன் காமிரா மூலம் கண்காணிக்க திட்டமிட்டு அதற்கான பணிகளும் நடந்து வருகிறது.

    விழா நடக்கும் இடங்களிலும், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்களில் மோப்பநாய், வெடிகுண்டு கண்டறியும் கருவிகளுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • வட்டார அளவிலான பெண் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
    • குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    வெள்ளகோவில்

    வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று வட்டார அளவிலான பெண் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர், சுகாதார ஆய்வாளர் கதிரவன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு, இளம்வயதில் திருமணம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இதில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • கோவையில் வ.உ.சி. மைதானத்தில் சுதந்திர தின விழா நடக்கிறது.
    • பஸ், ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு தொடங்கியது.

    கோவை,

    சுதந்திர தின விழா வருகிற 15-ந் தேதி நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

    கோவையில் வ.உ.சி. மைதானத்தில் சுதந்திர தின விழா நடக்கிறது. விழாவில் கலெக்டர் கிராந்திகுமார் பங்கேற்று தேசிய கொடியினை ஏற்றி வைக்க உள்ளார்.

    தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொள்வதுடன், நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார். விழாவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளது.

    சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    கோவை மாவட்டத்தில் மாநகர் பகுதிகளில் 1,700 போலீசாரும், புறநகரில் 800 போலீசார் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    குறிப்பாக பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், மார்க்கெட்டுகள், கோவில்கள், தேவாலயங்கள், பள்ளி வாசல்கள், வணிக வளாகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் வரும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.அங்கு போலீசார் 24 மணி நேரமும் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மார்க்கெ ட்டுகள், பஸ் நிலையங்களில் அடிக்கடி ரோந்து சென்று வருகின்றனர்.

    அங்கு யாராவது சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்தால் அவர்களை பிடித்து விசாரித்தும் வருகின்றனர். அவர்களின் முகவரியை பெற்ற பின்னரே அவர்களை விடுவிக்கின்றனர். மேலும் மெட்டல் டிடெக்டர் மூலம் பஸ் நிலையங்கள் முழுவதும் சோதனை செய்யப்படுகிறது.

    கோவையில் கடந்த சில தினங்களாகவே போலீஸ் கண்காணிப்பும், ரோந்தும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இரவில் முக்கியமான சாலை சந்திப்புகள், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் ஆகியவற்றில் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றன்.

    இதுதவிர மாவட்டத்தில் உள்ள விடுதிகள், ஓட்டல்கள், மேன்சன்கள் ஆகியவற்றிலும் அடிக்கடி போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகத்திற்கிடமாக யாராவது தங்கி இருந்தால் பிடித்தும் விசாரித்தும் வருகின்றனர்.

    கோவையில் உள்ள கோவை சந்திப்பு ரெயில் நிலையம், போத்தனூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    அங்கு ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினரும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரெயில் நிலைய வளாகம், ரெயில் பெட்டிகள் மற்றும் ரெயில் தண்டவாளங்களில் அடிக்கடி ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் ரெயில் நிலையத்திற்கு வருபவர்களின் உடமைகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. சோதனைக்கு பின்னரே பயணிகள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். இதுதவிர சுதந்திர தினத்தையொட்டி வன்முறையை தூண்டும் வகையிலும், மத மற்றும் சாதி மோதல்களை ஏற்படுத்தும் வகையிலும் கருத்துக்களை பதிவு செய்யப்படுவதை தடுக்க சைபர் குற்றப்பிரிவு மற்றும் உளவுத்துறையினரும் சமூக வலைதளங்களை கண்காணித்து வருகின்றனர்.

    சுதந்திர தினத்தையொட்டி கோவை விமான நிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் பலகட்ட சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படு கின்றனர்.

    • 2.50 லட்சம் கலப்பின கறவை மாடுகள் பால் உற்பத்திக்காக வளர்க்கப்படுகின்றன
    • மடிநோயால் பாதிக்கப்பட்ட மாடுகளின் பாலை, மனிதர்கள் கன்றுகளுக்கு கொடுக்கக்கூடாது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் 2.50 லட்சம் கலப்பின கறவை மாடுகள் பால் உற்பத்திக்காக வளர்க்கப்படுகின்றன. மடிவீக்க நோயால் கறவை மாடுகள் பாதிக்கின்றன என பால் உற்பத்தியாளர்கள் கூறி வரும் நிலையில் பொங்கலூர் கே.வி.கே., திட்ட ஒருங்கிணைப்பாளர் இளையராஜன் மேற்பார்வையில், கால்நடை மருத்துவ அறிவியல் துறை இணை பேராசிரியர் சித்ரா விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    மடிவீக்க நோயில் இருந்து கால்நடைகளை பாதுகாப்பது குறித்த வழிமுறைகளை விளக்கினார். மாட்டுத்தொழுவம், அதன் சுற்றுப்புறத்தை சுத்தமாகவும், உலர்ந்த நிலையிலும் வைக்க வேண்டும். சாணம், சிறுநீர் தேங்காமல் உடனுக்குடன் சுத்தம் செய்ய வேண்டும்.

    கறவைக்கு முன், கறவை மாடுகளின் மடியை பொட்டாசியம் பெர்மாங்கனேட் கிருமிநாசினி மருந்தை தண்ணீரில் கலந்து நன்கு கழுவி உலர்ந்த சுத்தமான துணியால் துடைக்க வேண்டும். பால் கறப்பவரின் கைகள் சுத்தமாக இருக்க வேண்டும். பால் கறந்தவுடன் மாடுகள் உடனடியாக படுத்தால் மடி நோய் ஏற்படும். எனவே அவை படுக்காமல் இருக்க பசுந்தீவனம் அல்லது உலர் தீவனம் ஏதாவது ஒன்றை மாடுகளுக்கு கொடுக்க வேண்டும். மடிநோயால் பாதிக்கப்பட்ட மாடுகளின் பாலை, மனிதர்கள் கன்றுகளுக்கு கொடுக்கக்கூடாது. அந்த பாலை கன்றுகள் குடிக்கும் போது தீவிர இதய தசை அலர்ஜியால் பாதிக்கப்பட்டு இறக்க நேரிடும்.

    சோற்று கற்றாழையை 250 கிராம் அளவுக்கு சிறு, சிறு துண்டுகளாக வெட்டி அதனுடன் 50 கிராம் விரலி மஞ்சள், 5 கிராம் சுண்ணாம்பு ஆகியவற்றை சேர்த்து, நன்கு அரைத்து இந்த கலவையை 100 மி., தண்ணீரில் கலந்து பாதிக்கப்பட்ட மாடுகளின் மடிப்பகுதி முழுக்க, நோய் தாக்குதல் குறையும் வரை தினமும் 8 முதல் 10 முறை பூச வேண்டும்.

    நோய் தாக்குதல் அதிகமாக இருந்தால் கால்நடை மருத்துவரின் உதவியை நாட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
    • 2 நாள் சுற்றுப்பயணம்

    கன்னியாகுமரி,ஜூலை.24-

    தமிழக கவர்னர் ஆர்.என். ரவி 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று கன்னியாகுமரிக்கு வருகிறார். அவர் இன்று (திங்கட்கிழமை) மதியம் விமானம் மூலம் தூத்துக் குடிக்கு வருகிறார். பின்பு அங்கிருந்து கார் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தி னர் மாளிகைக்கு வருகிறார்.

    அங்கு கவர்னர் ஆர்.என். ரவிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அரசு விருந்தினர் மாளிகையில் கவர்னர் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். பின்பு சன்செட் பாயிண்ட் கடற் கரைக்கு சென்று சூரியன் மறையும் காட்சியை கண்டு ரசிக்கிறார்.

    இரவில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கும் அவர், நாளை (25-ந்தேதி) காலையில் கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை கண்டு ரசிக்கிறார். அதன்பிறகு கடல் நடுவில் அமைந்துள்ள விவே கானந்தர் நினைவு மண்ட பத்துக்கு தனிப்படகில் சென்று தியானம் செய்கிறார்.

    பின்னர் விவேகானந்தபு ரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திராவுக்கு செல்லும் கவர்னர், அங்கு பாரத மாதா கோவில் மற்றும் ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடத்தை பார்வையிடுகிறார். தொடர்ந்து அவர் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவி லுக்கு சென்று தரிசனம் செய்கிறார். அதன்பிறகு அவர் கன்னியாகுமரியில் இருந்து கார் மூலம் புறப்பட்டு தூத்துக்குடி செல்கிறார்.

    கவர்னர் வருகையை யொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கன்னியா குமரி நகரப்பகுதி முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    அனைத்து சோதனைச் சாவடிகளிலும் போலீசார் தீவிர காண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கன்னியாகுமரிக்கு வரக்கூ டிய அனைத்து வாகனங்களை யும் போலீசார் தீவிர சோதனை செய்தபிறகே அனுமதிக்கி றார்கள். கவர்னர் பயணிக்கக் கூடிய அனைத்து பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு உள்ளனர்.

    கவர்னர் தங்கக்கூடிய அரசு விருந்தினர் மாளிகை, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம், விவேகானந்தர் மண்டபம், விவேகானந்தா கேந்திரா, சுசீந்திரம் கோவில் உள்ளிட்ட பகுதிகள் அனைத்தும் முழுவது மாக போலீஸ் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவரப் பட்டு உள்ளது.

    கன்னியாகுமரியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடு களை குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் குமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    • தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேச்சு
    • தி.மு.க., காமராஜருக்கு விரோதி போல ஒரு பொய்யான தகவலை பரப்பி உள்ளார்.

    நாகர்கோவில் :

    குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் நடைபெற்றது. தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளரும், மாநகராட்சி மேயருமான மகேஷ் தலைமை தாங்கினார்.

    மாநகர செயலாளர் ஆனந்த் வரவேற்று பேசினார். மாநகராட்சி மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலா வாணி, வேல்முருகன் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக அமைச்சர் மனோதங்கராஜ், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்ட னர். கூட்டத்தில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது:-

    குமரி மாவட்டம் அரசியல் விழிப்புணர்ச்சி கொண்ட மாவட்டமாகும். ஏனென்று சொன்னால் தி.மு.க.வின் வரலாறை குறிப்பாக கலைஞருடைய வரலாறை முழுமையாக தெரிந்தவர்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகர்கோவில் வந்த பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தி.மு.க. அரசை அவதூறாக பேசியுள்ளார். பல பொய்யான தகவல்களையும் கட்ட விழ்த்துள்ளார்.

    தி.மு.க., காமராஜருக்கு விரோதி போல ஒரு பொய்யான தகவலை பரப்பி உள்ளார். காமராஜருக்கும், தி.மு.க.வுக்கும் உள்ள உறவும், முன்புள்ள வரலாறும் தெரிய மால் அண்ணாமலை உளறி விட்டு சென்றுள்ளார்.

    காமராஜரை சட்டமன்ற உறுப்பினராக ஆக்கியது தி.மு.க. தான். 1961-ல் முதன் முதலில் காமராஜருக்கு சிலை வைத்தது தி.மு.க. என்பதை அண்ணாமலை மறந்து விடக்கூடாது. ராமர் கோவில் வைத்து வடக்கே அரசியல் செய்வது போல், இங்கு காமராஜரை வைத்து அரசியல் செய்ய பாரதிய ஜனதா நினைக்கிறது. காமராஜருக்கு பதவி ஆசை இருப்பது போன்று நாகர்கோவிலில் அண்ணாமலை சித்தரித்து பேசி உள்ளார்.

    காமராஜரை கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்ட போது, தனது முதல்-அமைச்சர் பதவியை தூக்கி எறிய முன்வந்தவர் கலைஞர். தமிழ்நாட்டில் தமிழ் மண்ணுக் காக போராடிய காமராஜர் பெயரை சென்னை விமான நிலையத்திற்கு வைத்துக்காட்டியது தி.மு.க.வாகும்.

    நாகர்கோவிலை நகராட்சி யில் இருந்து மாநகராட்சியாக மாற்ற பலரும் ஆசைப்பட்டார் கள். ஆனால் அதனை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி காட்டினார்.

    மக்களின் உணர்வுகளை மதிக்கும் கட்சி நாட்டில் ஆட்சி அமைப்பது நிச்சயம். அப்படி பார்க்கும்போது மணிப்பூரில் நடத்த கொடூரங்களை பார்த்தால் பாரதிய ஜனதா அரசு ஒரு கையாலாகத அரசு என தெரிகிறது. இதன்மூலம் சிறுபான்மையினர் மக்க ளுக்கு நாட்டில் பாதுகாப்பு இல்லாத நிலை உருவா கியுள்ளது.

    செந்தில் பாலாஜி மீது ஜெயலலிதா காலத்தில் போடப்பட்ட வழக்கிற்கு இப்போது நடவடிக்கை எடுக்க காரணம் என்ன?. ஓட்டுக்கு காசு கொடுப்பவர் களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் வேட்பாளர்களையே பணம் கொடுத்து வாங்கும் கட்சி பா.ஜ.க. தான். தமிழகத்தில் 40-க்கு 40 என நாடாளுமன்ற தேர்தல் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் தலைமை கழக வக்கீல் சூர்யா வெற்றி கொண்டான், மாவட்ட பொருளாளர் கேட்சன் மற்றும் நிர்வாகிகள் நசரேத் பசலியான், தில்லை செல்வம், தாமரை பாரதி, தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவம், ஆர்.எஸ். பார்த்த சாரதி, அணி அமைப்பாளர்கள் அகஸ்தீசன், பிரபா ராம கிருஷ்ணன், இ.என். சங்கர், துணை மேயர் மேரி பிரின்சி லதா, ஒன்றிய செயலாளர்கள் பாபு, செல்வன், மதியழகன், சுரேந்திர குமார், பிராங்கிளின், லிவிங்ஸ்டன் மற்றும் வக்கீல் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநகர மண்டல தலைவர் ஜவகர் நன்றி கூறினார்.

    • இந்துக்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வு பொதுக்கூட்டம் அனைத்து ஒன்றியங்கள், வட்டங்களில் நடத்தப்பட்டது.
    • தமிழக மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள கோவில்களை காக்க முன்வர வேண்டும்.

    திருப்பூர்:

    தமிழகத்தில் கோவில்களின் அவல நிலை குறித்து கவர்னரை சந்தித்து மனு அளிக்க உள்ளதாக இந்து முன்னணி தெரிவித்துள்ளது.இது குறித்து அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த ஜூலை 16-ந் தேதி, 'நம்ம சாமி, நம்ம கோவில், நாமே பாதுகாப்போம்' என்ற முழக்கத்தை முன்னிறுத்தி இந்து முன்னணி கொள்கை விளக்கம், இந்துக்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வு பொதுக்கூட்டம் அனைத்து ஒன்றியங்கள், வட்டங்களில் நடத்தப்பட்டது.

    மொத்தம் 3,500 இடங்களில் நடந்த தெருமுனை கூட்டங்களில், 1.75 லட்சம் மக்கள் பங்கேற்றனர். 10 லட்சத்துக்கும் அதிகமான துண்டறிக்கைகள் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டன.

    கோவில்களுக்கு ஏற்பட்டுள்ள சீர்கேடுகள் குறித்தும், இந்துக்களின் நம்பிக்கைகள் திட்டமிட்ட ரீதியில் கொச்சைப்படுத்தும் தி.மு.க., - தி.க., - காங்., - கம்யூ., - விடுதலை சிறுத்தைகள் கட்சி என, ஆகிய கட்சிகள் மற்றும் அவர்களது ஆதரவாளர் களான சமூக ஊடகத்தினர் (யூ-டியூபர்) பற்றியும்,இந்து விரோத செயல்பாடுகள் குறித்தும் விளக்கப்பட்டது

    இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு அந்தந்த பகுதியில் உள்ள இந்து முன்னணி பொறுப்பாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.இந்த தெருமுனை கூட்டங்கள் நடத்தப்பட் சமயத்தில் ராளமான மக்கள், அவரவர் ஊர்களில் உள்ள கோவில்களின் அவல நிலை குறித்து கூறினர்.தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ள கோவில்கள் அவல நிலையில் உள்ளது.

    இந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக, 'அரசே கோவிலை விட்டு வெளியேறு,' என்ற கோஷத்தை முன்னிறுத்தி, தமிழக கவர்னர் ரவியை சந்தித்து அறிக்கை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள கோவில்களை காக்க முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

    • வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் அரசு பஸ்சை ஒப்படைத்த டிரைவர்
    • நாகர்கோவிலில் இருந்து இருந்து நெல்லைக்கு டி.என்.74-1841 என்ற எண் கொண்ட அரசு பஸ் இயக்கபடுகிறது

    கன்னியாகுமரி :

    நாகர்கோவிலில் இருந்து இருந்து நெல்லைக்கு டி.என்.74-1841 என்ற எண் கொண்ட அரசு பஸ் இயக்கபடுகிறது. இந்த பஸ்சை இன்று வடசேரியில் இருந்து மேலசங்கரன் குழியை சேர்ந்த டிரைவர் ஞான பெர்க்மான்ஸ் ஓட்டிச் சென்றார்.

    இந்த நிலையில் வள்ளியூர் வரை பஸ்சை ஓட்டிய அவர், அதற்கு மேல் இயக்க முடியாது எனக்கூறி பயணிகளை கீழே இறக்கி மாற்று பஸ்சில் அனுப்பி உள்ளார். தொடர்ந்து தான் ஓட்டிய பஸ்சை, விசுவாசபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் கொண்டு வந்துள்ளார்.

    இந்த பஸ்சில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இது பற்றி பணிமனை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் பலன் இல்லை. எனவே நீங்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட்டார போக்குவரத்து அலுவலரிடம் புகார் கூறினார். இந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கடந்த சில நாட்களாக பஸ்சில் பிரேக் பிடிக்கவில்லை. வலது பக்கம் திருப்பினால் இடது பக்கம் திரும்புகிறது. இடது பக்கம் திருப்பினால் வலது பக்கம் செல்கிறது. இதனை சரி செய்ய வேண்டும் என்று பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பயணிகளை பாதுகாப்பாக கொண்டு செல்ல முடியாது என்று நோட்டு புத்தகத்தில் எழுதி வைத்த போதும் இதுவரை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

    ×