search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதுகாப்பு"

    • ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
    • ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை ரயில் நிலையத்தி லிருந்து ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் தொடங்கியது. அப்போது வழி நெடுகிலும் கூடியிருந்த பெண்கள் ஆர் எஸ் எஸ் கொடிக்கு மலர் தூவி அவர்களுக்கு வரவேற்பு அளித்தனர்.

    அதன் பின்னர் முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலமானது நாகை அவுரித்திடலில் நிறைவடைந்தது.

    அதன் பின்னர் அவுரித்தி டலில் கொடியேற்றப்பட்டு ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டு, உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் யோகாசனம் மற்றும் உடற்பயிற்சியை செய்து காண்பித்தனர்.

    நாகையில் நடைபெற்ற ஆர் எஸ் எஸ் தொண்டர்களின் அணிவகுப்பு ஊர்வலத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்சிங் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

    • இரவு முழுவதும் வியாபாரம் செய்ய போலீசார் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
    • வணிகர்களிடம் அரசு அதிகாரிகள் எனக்கூறி வசூல் செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட, நகர வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அவசர கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது.

    மாவட்ட தலைவர் சூரியகுமார் தலைமை தாங்கினார், செயலாளர் ஆனந்த், பொருளாளர் சோலையம்மாள் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில், தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில் இரவு முழுவதும் வியாபாரம் செய்வதற்கு போலீசார் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

    குறிப்பிட்ட நேரத்திற்குள் சிறு வணிகர்களையும், சாலையோர வியாபாரிகளையும் கடையை அடைக்க சொல்லி வற்புறுத்தக் கூடாது.

    வணிகர்களை அந்தந்த பகுதியில் உள்ள சமூக விரோதிகள் சட்ட விரோதமாக பணம் கேட்டு தொல்லை கொடுத்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வணிகர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

    வணிகர்களிடம் அரசுத்துறை அதிகாரிகள் என கூறி கட்டாய வசூல் செய்தும், பொருட்கள் கேட்டு தொல்லை கொடுப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வருகின்ற 19ஆம் தேதி புதிதாக தலைமை கட்டிட திறப்பு விழாவிற்கு தஞ்சை மாவட்டத்திலிருந்து ஏராளமான பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தப்பட்டது.

    இதில் பொறுப்பாளர்கள் வல்லம் கோவிந்தராஜ், திருக்காட்டுப்பள்ளி தியாக சுந்தரமூர்த்தி, பூதலூர் சண்முகராஜ், செங்கிப்பட்டி நந்தகுமார், ஒரத்தநாடு மணிசுரேஷ், பட்டுக்கோட்டை வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் மாநகர அமைப்பாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

    • கடையின் வெளியே வாளிகளில் மணல், தண்ணீர் வைத்திருக்க வேண்டும்.
    • கடைகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும்.

    பேராவூரணி:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் பட்டாசு கடைகள் அமைக்கப்படுவது வழக்கம். இந்த கடைகளுக்கு தற்காலிக மற்றும் நிரந்தர உரிமம் வழங்கப்படுகிறது. நிகழாண்டு பட்டாசு தொழிற்சாலைகளில் சில இடங்களில் வெடிவிபத்துகள் நடந்து உயிரிழப்புகள் ஏற்பட்டன.

    எனவே, பட்டாசு கடைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி இருந்தது.

    இதனால் பெரும்பாலான கடை களுக்கு இன்னும் உரிமம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் பேராவூரணி பகுதிகளில் பட்டாசு விற்பனை செய்ய உரிமத்திற்கு விண்ணப்பித்திருந்த கடைகளில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின்போது வாளிகளில் மணல், தண்ணீர் வைத்திருக்க வேண்டும். தீ தடுப்பு கருவி இருக்க வேண்டும். மின் இணைப்புகள் பழுதின்றி இருக்க வேண்டும். கடைகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும், அவசர கால வழி கண்டிப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    ஆய்வின் போது பேராவூரணி வட்டாட்சியர் ஆர். தெய்வானை, வருவாய் ஆய்வாளர்கள் ஜெயதுரை, முருகேசன், சிறப்பு வருவாய் ஆய்வாளர் கமலநாதன், கிராம நிர்வாக அலுவலர் சிவா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    • பொதுமக்களுக்கு எந்தப் பகுதியில் பந்தல்கள் அமைத்து பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் வருகிற 10 -ந் தேதி மகளிர் உரிமைத் தொகை மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது இந்நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இதனை தொடர்ந்து விழா மேடை அமைப்பதற்கான இடங்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலை ஓரம் நாறவாக்கம் மற்றும் கைப்பணி குப்பம் இடை யில் உள்ள கடற்கரை ஓரமுள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான இடத்தை தேர்வு செய்தனர். இந்த இடத்தினை விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஈஸ்ரூதன் ஜெய் நாராயணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் .

    அப்போது விழா மேடை எப்படி அமைக்க வேண்டும். முதல்-அமைச்சரின் வாகனத்தை எந்த இடத்தில் நிறுத்த வேண்டும். முதல்- அமைச்சருடன் வரும் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எந்தெந்த இடங்களில் பாதுகாப்பாக வாகனங்களை நிறுத்த வேண்டும். நிகழ்ச்சிக்கு வரும் பொது மக்களுக்கு எந்தப் பகுதியில் பந்தல்கள் அமைத்து பாதுகாப்பு வழங்க வேண்டும். நிகழ்ச்சிக்கு வரும் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு போதிய குடிநீர் உணவு இருக்கைகள் மின் வசதி போன்றவைகள் எவ்வாறு அமைத்து தர வேண்டும் போன்றவைகள் குறித்து ஆலோசனை வழங்கினார். அப்போது மரக்காணம் தாசில்தார் பாலமுருகன், விழுப்புரம் வடக்கு மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார் மரக்காணம் ஒன்றிய சேர்மன் தயாளன், மாவட்ட கவுன்சிலர் புஷ்ப வல்லி குப்புராஜ் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரி கள் உடன் இருந்தனர்.

    • கலெக்டர் ஸ்ரீதர் அறிக்கை
    • 10-ம் வகுப்பு படிப்பை தொடர்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் வில்லுக்குறி பேரூராட்சிக்குட்பட்ட தோட்டியோட்டில் செயல்பட்டுவரும் பெண்கள் குறுகிய கால தங்கும் விடுதி மற்றும் அழகிய மண்டபம் பேரூராட்சிக்குட்பட்ட பிலாங்காலை முதியோர் இல்லம் போன்றவற்றை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டார். அங்குள்ளவர்களிடம் நேரடியாக பேசிய அவர் குறைகள் ஏதும் உள்ளதா? என கேட்டறிந்தார். பின்னர் கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் சுவதார் கிரஹக் என்ற பெண்கள் குறுகிய கால தங்கும் விடுதியானது சுரக்க்ஷா தொண்டு நிறுவனத்தால் நடத்தப்பட்டு வருகிறது. வன்முறையினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான தங்குமிடம் ஏற்பாடு, ஆலோசனை மையம் அதனுடன் சுயதொழில் என பெண்களுக்காக பல்வேறு உதவிகள் இம்மையம் ஏற்படுத்தி உள்ளது. வன்முறையினால் பாதிக்கப்பட்ட பெண்களை 5 நாட்கள் வரை இங்கு தங்க வைக்கலாம். இருப்பினும், நீண்ட கால தங்கும் தேவைக்காக, அத்தகைய பெண்கள் மற்றும் கடத்தல்களால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது 18 வயதிற்கு குறைந்த துன்பப்பட்ட அல்லது ஆதரவற்ற பெண்கள், சக்தி சதனுக்கு பரிந்துரைக்கப்படு வார்கள்.

    அங்கு அவர்கள் அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை தங்கலாம். சக்தி சதனில் தங்குவதற்கு 3 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்கப்படலாம். சம்பந்தப்பட்ட மாவட்ட மாஜிஸ்திரேட் மூலம் தேவை அடிப்படையில் இருப்பினும், 55 வயதுக்கு மேற்பட்ட வயதான பெண்கள் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் தங்கலாம். அதன் பிறகு அவர்கள் முதியோர் இல்லங்கள் அல்லது பிற நிறுவனங்களுக்கு மாற்றப்பட வேண்டும். மேலும் இக்குறுகிய கால தங்கும் விடுதியில் இருந்த 16 வயது சிறுமி, 10-ம் வகுப்பு படிப்பை தொடர்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்து றையின் கீழ் செயல்பட்டு வரும் முதியோர் இல்லங்களில் அக்டோபர் மாதம் முழுவதும் முதியோர் தினவிழா அனுசரிக்கப்பட்டது. மாவட் டத்தில் ஒவ்வொரு திங்கட் கிழமையும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மூத்த குடிமக்கள் தொடர்பாக வரும் மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு வருகின்றது.

    மூத்த குடிமக்கள் உதவி எண் மூலம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல், வழிதவறியவர்கள் மற்றும் கைவிடப்பட்ட முதியவர்கள் உறவினர்களிடம் ஒப்படைக்க உதவுதல் உள்ளிட்டவை செயல்படுத்தப் பட்டு வருகிறது.

    முதியோர் உதவி எண்ணில் அழைக்கும் போது முதி யோர்களின் உடல்ரீதியான, பாதுகாப்பு, மனநல ஆலோ சனை, சுகாதார தேவைகள் தொடர்பான வழிகாட்டுதல் உறுதி செய்து கொடுக்கப்படு கிறது. மாவட்டத்தில் தற்போது 31 முதியோர் இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன.

    பிள்ளைகளால் கைவிடப் படும் முதியோர்களை பாதுகாத்து அவர்களிடம் அன்பும் பாசமும் காட்டி மூத்த குடிமக்களை சிறப்பான முறையில் பராமரித்து வருகின்றனர். பிலாங்காலை மற்றும் மாத்தார் முதியோர் இல்லங்களில் 129 முதி யோர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். தமிழ்நாடு அரசு தற்போது முதியோர் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறன்றது.

    முதியோர் உதவி எண் 14567 ஆகும். வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மூத்த குடிமக்கள் குறைதீர்க்கும் நாள் நடைபெற்று அவர்களின் குறைகள் அறியப்பட்டு தீர்க்கப்படுகிறது. மூத்த குடிமக்கள் வழக்கு தொடர் பாக மாவட்ட ஆட்சியரின் தீர்ப்பே இறுதியானது ஆகும். எந்த நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாலும் ஆட்சியரின் தீர்ப்பே இறுதி தீர்ப்பாக கருதப்படும்.

    எனவே ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்கள் வீட்டில் உள்ள முதியோர்க ளுக்கு பாதுகாப்பு வழங்கி அவர்களை சிறந்த முறையில் பராமரித்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    அதனைத் தொடர்ந்து பிலாங்காலை முதியோர் இல்லத்தில் கொண்டாடப் பட்ட சர்வதேச முதியோர் தினவிழாவில், கலெக்டர் ஸ்ரீதர் முதியோர்களுடன் இணைந்து கேக் வெட்டினார். முதியோர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். கூட்டத்தில் மாவட்ட சமூகநல அலுவலர் சரோஜினி, குறுகிய கால தங்கும் விடுதி தலைவர் சாந்தா பாலகிருஷ்ணன், மாத்தார் மற்றும் பிலாங் காலை முதியோர் இல்ல நிர்வாகிகள் மற்றும் முதி யோர்கள் கலந்து கொண்டனர்.

    • கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகில் உள்ள களமசேரியில் நேற்று கிறிஸ்தவ கூட்டத்தில் குண்டு வெடிப்பு நடைபெற்றது.
    • இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் முக்கியமான விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    திருச்சி

    கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகில் உள்ள களமசேரியில் நேற்று கிறிஸ்தவ கூட்டத்தில் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் முக்கியமான விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    திருச்சி விமான நிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் என விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி தெரிவித்தார்.

    விமான நிலையத்தின் உள்ளே நுழையும் வாகனங்கள் சோதனை முதல் விமான பயணிகளின் உடைமைகள் வரை அனைத்தும் பரிசோதனைக்கு பின்னரே விமான நிலையப் பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது. மேலும் திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களின் பெட்டிகளும் சோதனைக்கு பின்னரே விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது.

    மேலும் விமான நிலையத்தின் கார் நிறுத்தும் இடங்களில் தேவையற்ற வாகனங்கள் ஏதேனும் நிறுத்தப்பட்டிருந்தால் அது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதைத் தவிர பயணிகள் எவரேனும் சந்தேகப்படும் வகையில் விமான நிலைய பகுதிக்குள் நுழைந்திருந்தால் அவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பயணிகளின் உடைமைகள் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது .

    • 5 துறைகளும் ஒன்றாக இணைந்து வெடி மருந்து குடோன் ஆய்வு மேற்கொண்டனர்.
    • பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா? எனவும் ஆய்வு செய்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே புதுப்பேட்டை கொக்குபாளையம் மற்றும் நல்லூர் பாளையம், காடாம்புலியூர் பகுதியில் உள்ள மேலிருப்பு பட்டாசு தயாரிக்கும் வெடிமருந்து குடோ ன்களில் வருவாய்த்துறை, தீயணைப்பு துறை,காவல் துறை, தொழிலாளர் நலத்துறை, தொழிற்சாலை மேம்பாட்டு வாரியம் மேற்கண்ட 5 துறைகளும் ஒன்றாக இணைந்து வெடி மருந்து குடோன் ஆய்வு மேற்கொண்டனர்.

    ஆய்வில் தொழிற்சாலைகளின் துணை இயக்குநர் மகேஷ்வரன், பண்ருட்டி சிறப்பு திட்ட தனி தாசில்தார் பிரகாஷ்,புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், தீயணைப்பு அலுவலர் வேல்முருகன் தொழிலாளர் அலுவலர் ஆகியோர்உடனிருந்தனர்.ஆய்வின்போது விதிமீ றல்கள் ஏதாவது உள்ளதா? எனவும்,பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா? எனவும் ஆய்வு செய்தனர்.

    • திருமண உறவானது துணைக்கு ஊன்றுகோலாக தான் இருக்க வேண்டும்.
    • எல்லோரது வாழ்விலும் காதல் என்கிற ஒரு தருணம் கண்டிப்பாக வரும்.

    மனிதராக பிறந்த ஒவ்வொருக்குள்ளும் காதல் உணர்வு என்பது கண்டிப்பாக இருக்கும், ஆண் - பெண் என யாராக இருந்தாலும் சரி காதலிக்காமல் இருக்க முடியாது. ஏதேனும் ஒரு கட்டத்தில் எல்லோரது வாழ்விலும் காதல் என்கிற ஒரு தருணம் கண்டிப்பாக வரும். ஆரோக்கியமான காதலில் அன்பு, பாதுகாப்பு, நம்பிக்கை மற்றும் ஆறுதல் போன்றவற்றை ஒவ்வொருவரும் வழங்க வேண்டும்.

    நம்முடைய திருமண உறவானது நமது துணைக்கு ஊன்றுகோலாக தான் இருக்க வேண்டுமே தவிர, ஒருபோதும் தொந்தரவாக இருக்கக்கூடாது. சிலர் தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் சில விஷயங்கள் அவர்களது துணைக்கு பெரும் தொல்லையாகவோ அல்லது அவர்களது வளர்ச்சியை தடுக்கக்கூடியதாகவோ இருந்துவிடக்கூடும்.

    * கணவன்-மனைவி இருவருக்கும் சண்டை வருவது என்பது சகஜமான ஒன்றுதான், அடிக்கடி கருத்து வேறுபாடுகளும் ஏற்றப்படுவது சகஜம். அதற்காக ஒருவர் தனது துணையின் மீது வன்முறை தாக்குதல் நடத்துவது தவறான ஒன்றாகும். இதுபோன்று துணையின் மீது வன்முறை தாக்குதல் நடத்துவது பாதுகாப்பு, மற்றும் நம்பிக்கையின் உணர்வைப் பாதிக்கக்கூடும். மன மற்றும் உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகமும் இதனால் ஏற்படும், மேலும் இதனால் இருவரது சுய மரியாதைக்கு இழுக்கு ஏற்படும்.

    * கணவன்-மனைவி உறவில் வெறுப்பு இருக்கக்கூடாது, அப்படி வெறுப்பு இருந்தால் அது வலி, கோபம் மற்றும் எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்தும். வெறுப்புணர்வை வைத்திருப்பது உங்கள் கணவன்-மனைவியின் ஆழ்மனதில் தவறான சிந்தனையை ஏற்படுத்திவிடும். வெறுப்புகளை வைத்திருப்பது உறவு முறிவு, மனச்சோர்வு, பதட்டம் மற்றும் கோபம் போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும். புண்படுத்தும் நிகழ்வுகள் அல்லது நடத்தை குறித்து கசப்பாக மாறாமல் இருக்க, உங்கள் உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளைப் உங்கள் துணையிடம் வெளிப்படையாக பேசுங்கள்.

    * உங்கள் கணவனை-மனைவியை ஒருபோதும் உங்கள் முந்தைய உறவோடோ அல்லது வேறொருவரின் உறவோடு ஒப்பிட்டு பேசாதீர்கள். அப்படி நீங்கள் அவர்களை வேறொருவருடன் ஒப்பிட்டு பேசினால் அவர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுவார். அப்படி நீங்கள் உங்கள் துணையை மற்றவருடன் ஒப்பிட்டு பேசுகிறீர்கள் என்றால் அவர்கள் செய்யும் தவறுகளை மட்டுமே தான் நீங்கள் உற்றுநோக்குகிறீர்கள் என்பதை வெளிக்காட்டுகிறது. இதனால் உங்கள் கணவன்-மனைவி உறவில் பெரியளவில் சிக்கல் ஏற்படும்.

    * உங்கள் கணவன்-மனைவியின் தொலைபேசி அல்லது பிற சமூக வலைதள பக்கங்களை அவர்களுக்குத் தெரியாமல் பார்ப்பது மிகவும் தவறான செயலாகும், இது உங்கள் துணையின் தனி உரிமையை மீறக்கூடிய மோசமான செயலாகும், இது அவர்கள் மீதான நம்பிக்கையின்மையை காட்டுகிறது. இவ்வாறு செய்வது உங்களுக்கு மட்டுமின்றி உங்கள் துணைக்கும் ஒரு வித மனசோர்வை ஏற்படுத்திவிடும். இதுபோன்று சந்தேக கண்ணோட்டத்துடன் உங்கள் துணையின் செயலை உற்றுநோக்குவது தவறான புரிதலை ஏற்படுத்தி உங்கள் உறவில் விரிசலை ஏற்படுத்தும்.

    * உங்கள் துணையின் சில பழக்கவழக்கங்கள், ஆடைத் தேர்வுகள் மற்றும் உங்கள் துணை யாருடனாவது பேசினால் அவர்களை கட்டுப்படுத்துவது போன்ற செயல்களை நீங்கள் செய்யக்கூடாது. இப்படி அவர்களது விருப்பம் எல்லாவற்றிலும் நீங்கள் மூக்கை நுழைத்தால் அது அவர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்காது.

    • திருமங்கலத்தில் பேரிடர் பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்திகை நடந்தது.
    • பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே செங்குளம் கண்மாயில் தீயணைப்பு, வருவாய் துறையினர் இணைந்து பேரிடர் மேலாண்மை தினத்தை முன்னிட்டு வடகிழக்கு பருவமழை கால பேரிடர் பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்திகை நடந்தது.

    திருமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் முத்து ராமன் தலைமையில் மழை வெள்ளத்தில் பொதுமக்கள் சிக்கிக் கொண்டால் அவர் களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து செய்து காட்டப்பட்டது.

    மேலும் பாதிக்கப்பட்ட வர்களுக்கு எவ்வாறு முதலு தவி சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து கியாஸ் அடுப்பு பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது.

    • திருத்துறைப்பூண்டியில் நீர்நிலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ஆறு, ஏரி, குளங்கள் ஆகியவை உயிரினங்களுக்கும் தேவையான நீராதாரங்களை கொடுக்கக்கூடியது.

    திருத்துறைப்பூண்டி:

    உலக ஆறுகள் தினத்தையொட்டி நீர்நிலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார் தலைமையில் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் கலந்து கொண்டு விழிப்புணர்வு துண்டு பிரசுத்தை வெளியிட்டு பேசுகையில்:-

    ஆறு, ஏரி, குளங்கள் போன்றவை அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான நீராதாரங்களை கொடுக்கக்கூடியது.

    இவைகளை நாம் மாசுபடாமல் பாதுகாத்து எதிர்கால சந்ததிகளுக்கு விட்டுச்செல்வதே இந்த தினத்தின் நோக்கமாகும்.

    நாட்டின் வளத்திற்கு ஆறுகளே பெரும் பங்கு வகிக்கிறது என்றார்.

    நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர் கோமதி செந்தில்குமார், கணக்காளர் முத்து மீனாட்சி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ஆனைமலை, நெகமம் போன்ற பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு ஆடு, மாடு மற்றும் கோழி போன்ற கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது.
    • மழைக்காலங்களில் ஈரமான புற்கள் அளிக்காமல் சற்று உலர வைத்து அல்லது உலர் தீவனமான வைக்கோல் மற்றும் கடலைக் கொடியுடன் அளித்தல் வேண்டும்.

    உடுமலை

    ஆனைமலை, நெகமம் போன்ற பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு ஆடு, மாடு மற்றும் கோழி போன்ற கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. இந்த நிலையில், விரைவில் பருவமழை தீவிரமடைய உள்ளது.

    இதனையடுத்து, மழை காலங்களில் கால்நடைகளை எவ்வாறு நோய்களில் இருந்து பாதுகாப்பது என்பது குறித்து அரசு கால்நடைத்துறையினர் விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    அதன்படி கால்நடைத்துறை அதிகாரிகள் வழங்கிய அறிவுரைகள் வருமாறு:-

    கால்நடைகள் அதிக நேரம் மழையில் நனையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கொட்டகையில் நீர்த்தேங்க விடக்கூடாது. நீர்த்தேங்குவதன் மூலம் ஒட்டுண்ணி பிரச்சினைகள், சளி மற்றும் கொளம்பு அழுதல் போன்ற நோய் அதிகரிக்கும். குறிப்பாக ஆடு மற்றும் செம்மறி ஆடுகள் அதிகம் பாதிக்கப்படும். எனவே, சீரான வடிகால் அமைத்தல் அவசியம். குளிர் மற்றும் ஈரப்பதம் அதிகரிக்கும் சமயங்களில் சாம்பிராணி மற்றும் வேப்பங்கொட்டை கலந்து கொட்டகையில் காலை மற்றும் மாலை வேலைகளில் புகை மூட்டுதல் வேண்டும்.

    சுத்தமான குடிநீர் அளித்தல் அவசியம். மழைக்காலங்களில் ஈரமான புற்கள் அளிக்காமல் சற்று உலர வைத்து அல்லது உலர் தீவனமான வைக்கோல் மற்றும் கடலைக் கொடியுடன் அளித்தல் வேண்டும். குளிர்காலங்களில் குட்டிகளை நோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்க போதிய சூட்டினை தர வேண்டும். அனைத்து கால்நடைகளுக்கும் தடுப்பூசி போடுதல் அவசியம். குறிப்பாக கோமாரி, ஆட்டுக் கொல்லி மற்றும் துள்ளுமாரி நோய்களுக்கு தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.

    மடி நோய் வராமல் இருக்க கொட்டகை மற்றும் மாட்டின் மடியை சுத்தமாக வைத்திருத்தல் வேண்டும். கோழி கொட்டகையின் தரைப்பகுதியை ஈரம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.ஈரம் அதிகமானால் ரத்த கழிச்சல் நோய் பரவி பேரிழப்பு ஏற்படுத்தும். அக ஒட்டுண்ணிப் பிரச்சினைகளில் இருந்து கால்நடைகளை காத்துக் கொள்ள இயற்கை மருந்துகளான கோமியம் அல்லது தண்ணீர் 10 லிட்டர், நொச்சி இலை கரைசல் 50 கிராம், உன்னிச்செடி கரைசல் 50 கிராம், வசம்பு 50 கிராம் கலந்து கால்நடை கொட்டகையில் தெளிக்க வேண்டும்.

    இந்த முறையை பயன்படுத்தி கால்நடைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

    • பாமினி ஆற்றில் மாலை 6 மணிக்கு கரைக்கப்படுகிறது.
    • முத்துப்பேட்டை பகுதியில் உள்ள 9 டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் 31-ம்ஆண்டு விநாயகர் சிலை ஊர்வலம் இன்று மாலை நடைபெற உள்ளது.

    இதற்கு பா.ஜனதா மாநில விவசாய அணி துணைத்தலைவர் ரமேஷ் தலைமை தாங்குகிறார்.

    இந்து முன்னணி ஒன்றிய தலைவர் வெங்கடேசன் அனைவரையும் வரவேற்று பேசுகிறார்.

    அனைத்து கிராம கமிட்டி ஒருங்கிணைப்பு குழு தலைவர் சிவபிரகாஷம், இந்து முன்னணி மாவட்ட தலைவர் ரமேஷ், முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், ஊராட்சி உறுப்பினர் பாலு ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    சிதம்பரம் ராமஜெயம் அறக்கட்டளை நிறுவனர் ராமகிருஷ்ணன் ஊர்வலத்தை தொடங்கி வைக்கிறார்.

    சிறப்பு அழைப்பாளர்களாக பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகாணந்தம், இந்து முன்னணி மாநில செயலாளர் செந்தில்குமார், பா.ஜனதா மேலிட பார்வையாளர் பேட்டை சிவா, மாவட்ட துணை தலைவர் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    ஊர்வலத்தில் உப்பூர், ஆலங்காடு, தில்லைவிளாகம், ஜாம்புவானோடை உள்பட 19 பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் எடுத்து வரப்படுகிறது.

    ஊர்வலமானது மதியம் 2 மணிக்கு தொடங்கி ஜாம்புவானோடை வடக்காடு சிவன் கோவிலிருந்து புறப்பட்டு வைரவன் சோலை, ஜாம்புவானோடை தர்ஹா, மேலக்காடு, கொய்யா முக்கம், பங்களாவாசல், ஓடக்கரை வழியாக செம்படவன்காடு சென்று அங்குள்ள பாமினி ஆற்றில் மாலை 6 மணிக்கு கரைக்கப்படுகிறது.

    இதனை முன்னிட்டு முத்துப்பேட்டையின் முக்கிய பகுதி மற்றும் ஊர்வல பாதை முழுவதும் 165 இடங்களில் கண்காணிப்பு கேமாரக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.

    5ஆளில்லா குட்டி விமானங்கள், ஊர்வலம் செல்லும் பாதையில் கண்காணிக்க ஆங்காங்கே தற்காலிக கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

    100-க்கும் மேற்பட்ட இடத்தில் போலீசார் நிறுத்தி பைனாக்குலர் பயன்படுத்த உள்ளது.

    மேலும் பதற்றமான பகுதிகளில் சாலை இருபுறங்களிலும் தடுப்பு கம்புகள் கொண்டு வேலிகள், ஆஸ்பட்டாஸ் சீட் கொண்ட தடுப்பு வேலிகள் அமைத்து மற்றும் ஆங்காங்கே நூற்றுக்கணக்கான பேரிக்காடுகள் போடப்பட்டுள்ளது.

    ஊர்வலத்தை முன்னிட்டு திருச்சி சரக ஐ.ஜி. கார்த்திகேயன், தஞ்சை டிஐஜி ஜெயசந்திரன், திருச்சி டிஐஜி பலவன், விழுப்புரம் டிஐஜி ஜியாவுல் ஹக், திருவாரூர் எஸ்.பி.சுரேஷ்குமார், மயிலாடுதுறை எஸ்பி மீனா, தஞ்சை எஸ்.பி ஆஸிஷ் ராவத், எஸ்ஐயூ எஸ்பி பாண்டியராஜன், திருச்சி டிராபிக் எஸ்பி செல்வகுமார், சேலம் எஸ்பி மதிவாணன், கரூர் எஸ்பி சுந்தரவதனம், கடலோர காவல் படை எஸ்பி அதிவீரப்பாண்டியன், திருச்சி ரயில்வே எஸ்பி செந்தில்குமார், அரியலூர் எஸ்பி பரோஸ்கான் அப்துல்லா உட்பட 10 ஏடிஎஸ்பி, 37 டிஎஸ்பிகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர், சப்இன்ஸ்பெக்டர், சிறப்பு சப்இன்ஸ்பெக்டர்கள் தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசார், ஆயுதப்படை போலீசார், ஊர்காவலர் படை போலீசார் உள்பட திருச்சி மண்டலத்தில் உள்ள தஞ்சை, நாகை, திருச்சி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களை சேர்ந்த சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டு உள்ளனர்.

    இந்தநிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினரும், கமோண்டோ போலீசாரும் வந்துள்ளனர்.

    மேலும் திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள வருவாய்துறை அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர். முத்துப்பேட்டை நகரை போலீசார் தீவிர கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

    இதனை முன்னிட்டு முத்துப்பேட்டை பகுதியில் உள்ள 9 டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    ×