search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று கன்னியாகுமரி வருகை
    X

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று கன்னியாகுமரி வருகை

    • பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
    • 2 நாள் சுற்றுப்பயணம்

    கன்னியாகுமரி,ஜூலை.24-

    தமிழக கவர்னர் ஆர்.என். ரவி 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று கன்னியாகுமரிக்கு வருகிறார். அவர் இன்று (திங்கட்கிழமை) மதியம் விமானம் மூலம் தூத்துக் குடிக்கு வருகிறார். பின்பு அங்கிருந்து கார் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தி னர் மாளிகைக்கு வருகிறார்.

    அங்கு கவர்னர் ஆர்.என். ரவிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அரசு விருந்தினர் மாளிகையில் கவர்னர் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். பின்பு சன்செட் பாயிண்ட் கடற் கரைக்கு சென்று சூரியன் மறையும் காட்சியை கண்டு ரசிக்கிறார்.

    இரவில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கும் அவர், நாளை (25-ந்தேதி) காலையில் கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை கண்டு ரசிக்கிறார். அதன்பிறகு கடல் நடுவில் அமைந்துள்ள விவே கானந்தர் நினைவு மண்ட பத்துக்கு தனிப்படகில் சென்று தியானம் செய்கிறார்.

    பின்னர் விவேகானந்தபு ரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திராவுக்கு செல்லும் கவர்னர், அங்கு பாரத மாதா கோவில் மற்றும் ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடத்தை பார்வையிடுகிறார். தொடர்ந்து அவர் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவி லுக்கு சென்று தரிசனம் செய்கிறார். அதன்பிறகு அவர் கன்னியாகுமரியில் இருந்து கார் மூலம் புறப்பட்டு தூத்துக்குடி செல்கிறார்.

    கவர்னர் வருகையை யொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கன்னியா குமரி நகரப்பகுதி முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    அனைத்து சோதனைச் சாவடிகளிலும் போலீசார் தீவிர காண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கன்னியாகுமரிக்கு வரக்கூ டிய அனைத்து வாகனங்களை யும் போலீசார் தீவிர சோதனை செய்தபிறகே அனுமதிக்கி றார்கள். கவர்னர் பயணிக்கக் கூடிய அனைத்து பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு உள்ளனர்.

    கவர்னர் தங்கக்கூடிய அரசு விருந்தினர் மாளிகை, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம், விவேகானந்தர் மண்டபம், விவேகானந்தா கேந்திரா, சுசீந்திரம் கோவில் உள்ளிட்ட பகுதிகள் அனைத்தும் முழுவது மாக போலீஸ் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவரப் பட்டு உள்ளது.

    கன்னியாகுமரியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடு களை குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் குமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    Next Story
    ×