search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில்கள்"

    • ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடி வரையிலான கோவில் வருமானத்தில் 5 சதவீதத்தையும்,
    • ரூ.1 கோடிக்கு மேல் வருவாய் இருந்தால் அதில் 10 சதவீதத்தையும் தார்மிக பரிஷத்துக்கு வழங்க வேண்டும்.

    கர்நாடக சட்டசபையில் போக்குவரத்து மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மந்திரி ராமலிங்கரெட்டி, கர்நாடக இந்து வழிபாட்டு நிறுவனங்கள் அதாவது இந்து கோவில்கள் சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

    இதில் ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடி வரையிலான கோவில் வருமானத்தில் 5 சதவீதத்தையும், ரூ.1 கோடிக்கு மேல் வருவாய் இருந்தால் அதில் 10 சதவீதத்தையும் தார்மிக பரிஷத்துக்கு வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதற்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அரசு கோவில் வருவாயை வேறு நோக்கங்களுக்கு பயன்படுத்துவதாக அக்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டினர். இதற்கு ஆளும் காங்கிரஸ் தலைவர்களும் உரிய பதிலடி கொடுத்தனர்.

    இந்த நிலையில் கர்நாடக மேல்-சபையில் நேற்று மந்திரி ராமலிங்கரெட்டி, இந்து வழிபாட்டு நிறுவனங்கள் சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். இதன் மீது பேசிய பா.ஜனதா உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆளும் காங்கிரஸ் உறுப்பினர்கள் அதற்கு ஆதரவு தெரிவித்து பேசினர்.

    இறுதியில் மேலவை தலைவர் இருக்கையில் இருந்த துணைத்தலைவர் பிரானேஷ், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாவை நிறைவேற்ற முயன்றார். மசோதாவுக்கு எதிராக அதிக உறுப்பினர்கள் குரல் கொடுத்தனர்.

    இதையடுத்து மசோதாவுக்கு ஆதரவு, எதிர்ப்பு தெரிவிப்போரின் எண்ணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் மசோதாவுக்கு 7 பேரும், எதிராக 18 பேரும் வாக்களித்தனர். இதையடுத்து அந்த மசோதா தோல்வி அடைந்தது. இது ஆளும் காங்கிரஸ் அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேல்-சபையில் காங்கிரசுக்கு பெரும்பான்மை பலம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    மசோதா தோல்வி அடைந்ததும் பா.ஜனதா உறுப்பினர்கள் ஜெய்ஸ்ரீராம் என்று கோஷமிட்டனர். பதிலுக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜெய் பீம் என்று முழக்கமிட்டனர். இதனால் சபையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    மேல்-சபையில் மசோதா தோல்வியடைந்தது சித்தராமையாக அரசுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    • கர்நாடக இந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலைய அறக்கட்டளை மசோதா 2024 நேற்று நிறைவேற்றப்பட்டது.
    • இச்சட்டம் காங்கிரஸ் அரசின் இந்து விரோத கொள்கையை காட்டுகிறது என பா.ஜ.க. கண்டனம் தெரிவித்தது.

    பெங்களூரு:

    கர்நாடகா மாநில சட்டசபையில் கர்நாடக இந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலைய அறக்கட்டளை மசோதா 2024 நேற்று நிறைவேற்றப்பட்டது.

    ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் திருக்கோவில்களின் வருமானத்தில் 10 சதவீதத்தை அரசு வசூலிக்க இந்தச் சட்ட மசோதா அனுமதிக்கிறது.

    இந்நிலையில், இந்தச் சட்டம் கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசின் இந்து விரோத கொள்கையை காட்டுகிறது என கண்டனம் தெரிவித்த பா.ஜ.க, முதல் மந்திரி சித்தராமையா தலைமையிலான மாநில அரசு நிதியைத் தவறாக பயன்படுத்துகிறது என குற்றம் சாட்டியது.

    இதுதொடர்பாக, கர்நாடக பா.ஜ.க. தலைவர் விஜயேந்திர எடியூரப்பா வெளியிட்டுள்ள செய்தியில், இந்த மசோதா மூலம் காங்கிரஸ் அரசு தனது கஜானாவை நிரப்ப முயற்சிக்கிறது. மாநில அரசு ஏன் இந்துக் கோவில்களில் இருந்து வருமானம் ஈட்டப் பார்க்கிறது? தொடர்ந்து இந்து விரோத கொள்கைகளை கடைப்பிடித்து வரும் காங்கிரஸ் அரசு, தற்போது இந்துக் கோவில்களின் வருவாயை குறிவைத்துள்ளது என பதிவிட்டுள்ளார்.

    • கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்தல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
    • மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் சிவக்குமார், உதவி ஆணையர்கள் சாமிநாதன், அன்னக்கொடி கலந்து கொண்டனர்.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை, தனது நிர்வாகக்கட்டுப்பாட்டில் உள்ள தொன்மையான கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளுதல், குடமுழுக்குகள் நடத்துதல், புதிய ராஜகோபுரங்களை கட்டுதல், திருத்தேர் மற்றும் திருக்குளங்களை புனரமைத்தல், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்தல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    அந்த வகையில் , வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்று ஈரோடு மாவட்டம், திண்டல் வேலாயுத சுவாமி கோவில் வளாகத்தில் அக்கோவிலுக்கு ரூ.2.11 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் புதிய ஐந்து நிலை ராஜகோபுரம், சென்னிமலை, சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ. 93 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள பசுமடம், தங்கமேடு, தம்பிக்கலை அய்யன் சுவாமி கோவிலில் ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் வணிக வளாகம், பவானி சங்க மேஸ்வரர் கோவிலில் ரூ. 51 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் யானை மணிமண்டபம் மற்றும் ரூ. 34.50 லட்சம் மதிப்பீட்டிலான பணியாளர் குடியிருப்பு மராமத்துப் பணிகள், அந்தியூர், செல்லீஸ்வரர் கோவிலில் ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் மதில் சுவர் கட்டும் பணி என மொத்தம் 5 கோவில்களில் ரூ. 4.76 கோடி மதிப்பீட்டிலான 6 திருப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தனர்.

    இப்பணிகளில் ரூ.2.11 கோடி மதிப்பீட்டிலான பணி உபயதாரர் நிதியின் மூலமாகவும், ரூ. 2.65 கோடி மதிப்பீட்டிலான பணிகள் அந்தந்த கோவில் நிதியின் மூலமாகவும் மேற்கொள்ளப் படுகின்றன. நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, அந்தியூர் எம்.பி.எம்.எல்.ஏ.க்கள் ப.செல்வராஜ் ஏ.ஜி.வெங்கடாசலம், டாக்டர் சி. சரஸ்வதி, ஈரோடு மாநகராட்சி மேயர் சு. நாகரத்தினம், ஈரோடு மண்டல இணை ஆணையர் அ.தி. பரஞ்சோதி, துணை ஆணையர் ரா.மேனகா, மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் சிவக்குமார், உதவி ஆணையர்கள் சாமிநாதன், அன்னக்கொடி கலந்து கொண்டனர்.

    • இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 1,224 கோவில்களில் குடமுழுக்குகள் நடைபெற்றுள்ளது.
    • இந்த மாத இறுதிக்குள் மேலும் 40 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று கோவில்களின் கட்டண சேவைகளில் விரைவாக கட்டண சீட்டுகளை வழங்கிடும் வகையிலும், கட்டணச் சீட்டு மையங்களில் கூட்டத்தினை தவிர்க்கவும், பக்தர்கள் எளிய முறையில் பற்று அட்டை மற்றும் கடன் அட்டை மூலமாக கட்டணச் சீட்டு பெறும் வகையில் இரண்டாம் கட்டமாக, 260 கோவில்களுக்கு 315 கையடக்க கருவிகளை மண்டல இணை ஆணையர்களிடம் வழங்கினார். பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 1,224 கோவில்களில் குடமுழுக்குகள் நடைபெற்றுள்ளது. இந்த மாத இறுதிக்குள் மேலும் 40 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளன. 2024-ம் ஆண்டு இறுதிக்குள் 2 ஆயிரம் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்திடும் வகையில் செயலாற்றி கொண்டிருக்கிறோம்.


    கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் நிலையில் கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்து உள்ள இடத்தினை மக்களின் பயன்பாட்டிற்கு உகந்த வகையில், அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின்னர், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று இறுதி முடிவினை எடுக்கும். ஆகவே தற்போது இதில் தேவையற்ற சர்ச்சையை கிளப்ப வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
    • ரேணுகா தேவி துணை ஆணையர் நித்யா, மாநகராட்சி மன்ற உறுப்பினர் காமராஜ் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு இன்று சென்னை, திருவல்லிக்கேணி பார்த்த சாரதி சுவாமி கோவிலில், கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

    அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோவில், அழகர்கோவில் கள்ளழகர் கோவில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆகிய கோவில்களுக்கு வருகைதரும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தினை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

    இத்திட்டத்தின் மூலம் 5 கோவில்களில் நாள் ஒன்றுக்கு சுமார் 15,000 பக்தர்களும், விசேஷ மற்றும் திருவிழா நாட்களில் சுமார் 50,000 பக்தர்களும் பிரசாதங்களை பெற்று பயனடைவார்கள். பிரசாதங்கள் தரமாகவும், சுகாதாரமாகவும் தயார் செய்திட அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளதோடு, அவற்றை பக்தர்களுக்கு வழங்கிட அந்தந்த கோவில்களில் பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    பின்னர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

    நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் ஏற்கனவே 2 கோவில்களில் இருந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு திருவண்ணாமலை திருச்செந்தூர் உட்பட மேலும் 6 கோவில்களில் இந்த முழு நேர அன்னதான திட்டத்தை விரிவுப்படுத்தி 8 கோவிலில் அந்த திட்டம் செயல்பாட்டில் இருக்கின்றது.

    பெரியபாளையம் பவானி அம்மன் கோவில், மேல் மலையனூர் அங்காளம்மன் கோவில், ஆனைமலை மாசாணி அம்மன் ஆனைமலை கோவில் ஆகிய 3 கோவில்கள் இணைக்கப்பட உள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெகு விரைவில் இந்த மூன்று கோவிலிலும் முழு நேர அன்னதான திட்டத்தை துவக்கிட உள்ளார்.

    அருட்பெருஞ்ஜோதி வள்ளலாரின் சன்னிதானத்தில் தைப்பூசத்தன்று இருபதாயிரம் நபர்களுக்கு அன்னதானம் வழங்கிட திட்டமிடப்பட்டு இந்த ஆண்டு அதை துவக்க வைக்க இருக்கின்றோம்.

    இதோடு மட்டுமல்லாமல், ஒருவேளை அன்னதான திட்டத்தில் ஏற்கனவே இருந்த 754 கோவிலோடு இணைத்து இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 10 கோவில்கள் கூடுதலாக இணைக்கப்பட்டன. இந்த ஆண்டு 7 கோவில்கள் கூடுதலாக இணைக்கப்பட உள்ளன.

    கோவில்களின் பிரசாதம் மற்றும் அன்னதான உணவுகள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தயாரிப்பதை உறுதிப்படுத்தி ஒன்றிய அரசினால் வழங்கப்படுகின்ற தரச்சான்றிதழ்களை 523 கோவில்களுக்கு இதுவரையில் பெற்று இருக்கின்றோம். இந்தியாவிலேயே அதிகமான கோவில்களுக்கு உணவு தர கட்டுப்பாட்டுக்காக வழங்கப்பட்ட சான்று தமிழகத்தில் தான் அதிகம்.

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோவிலில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசிக்கு 73 ஆயிரம் பக்தர்கள் வருகை தந்த போதும் சிறு அசம்பாவிதம் இல்லாமல் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்கின்ற நல்ல சூழலை உருவாக்கி தந்தோம். அதுபோல் ஆங்கில புத்தாண்டிற்கு கடந்த ஆண்டுகளில் எந்தெந்த கோவில் எல்லாம் இரவு 12 மணிக்கு திறக்கப்பட்டிருந்ததோ, ஒரு சில கோவில் காலையில் திறக்கப்பட்டதோ அந்த நடைமுறையை பின்பற்ற சொல்லியும் எந்த கோவிலிலும் அர்ச்சகர்களுக்கு அழுத்தம் தராமல் பக்தர்களுக்கு இலகுவான தரிசனத்தை ஏற்படுத்தித் தர உத்தரவிடப்பட்டிருந்தது.

    48 முதுநிலை கோவில்களுக்கும் சிசிடிவி பொருத்தப்பட்டு இந்து சமய அறநிலையத்துறையின் தலைமை அலுவலகத்தில் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கின்றோம். அதிகமான பக்தர்கள் வருகின்ற கோவில்களை ஆணையாளர் கண்காணித்துக் கொண்டு இருக்கின்றார்.

    ஆகவே கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் ஆங்கில புத்தாண்டிற்கு சிறப்பாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருக்கின்றோம். மேலும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

    சிதம்பரம் நடராஜர் கோவிலை பொறுத்தவரை சுமார் 30-க்கும் மேற்பட்ட விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன. அவை முறையாக ஆய்வு செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது. நீதிமன்றத்தில் என்னென்ன விதி மீறல்கள் இருக்கிறது என்பதை சமர்ப்பிக்க இருக்கின்றோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சோழவந்தான் அருகே சக்திவிநாயகர், பாலதிரிபுர சுந்தரி அம்மன் கோவில்களில் கும்பாபிஷேக விழா நடந்தது.
    • பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர் உட்பட 12 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள தேனூர் கிராமத்தில் சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இங்கு 60 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது. அதற்கு பின்னர் கும்பாபிஷேகம் நடக்க வில்லை. இந்த நிலையில் இந்தக் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்து திருப்பணிகள் செய்யப்பட்டன. தொடர்ந்து கும்பாபிஷேக விழா 3 நாட்கள் நடந்தது. மதுரை வீரராகவ பெருமாள் கோவில் பட்டர்கள் ரவி, வீர ராகவன் ஆகியோர் தலைமையில் சிவாச்சா ரியார்கள் யாக பூஜை நடத்தினர். தொடர்ந்து நான்காம் கால ஹோமம் நடந்து மேளதாளத்துடன் புனித நீர் குடங்களை எடுத்து கோவிலை வலம் வந்தனர். பின்னர் கோவில் கோபுரத்தின் கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சக்தி விநாயகர் உட்பட பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர் உட்பட 12 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. சமயநல்லூர் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    கொடிமங்கலம் கிரா மத்தில் பெரியபுன மங்கை என்ற பாலதிரிபுர சுந்தரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு கும்பாபிஷேக விழா 4 நாட்கள் நடந்தது. முதல் நாளில் திருவிளக்குபூஜை, மூத்த பிள்ளையார் வழிபாடு, நிலத்தேவர் வழிபாடும், 2-ம் நாள் கோ பூஜை, மண் எடுத்தல், முளையிடுதல், காப்பணிதல், களை ஈர்ப்பு வழிபாடும், 3-ம் நாள் இரண்டாம், மூன்றாம் கால யாகபூஜை, மருந்து சாத்துதல் நடந்தது. 4-ம் நாளில் நான்காம் கால யாகபூஜை நடந்து நிர்வாகிகள் மற்றும் சிவாச்சாரியார்கள் மேளதா ளத்துடன் திருக்குடங்கள் எடுத்துக் கோவிலை வலம் வந்தனர். பின்னர் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவர், பரிவார தெய்வங்க ளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. நாகமலை புதுக்கோட்டை போலீசார் 

    • தமிழக கோவில்கள் அனைத்திலும் இலவசமாய் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
    • கோவில்களில் உண்டியல் காணிக்கையை தவிர வேறு எந்த கட்டணங்களும் வசூல் செய்யக்கூடாது.

    தஞ்சாவூர்:

    தமிழக கோவில்கள் அனைத்திலும் இலவசமாய் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

    திருச்செந்தூர் முருகன் கோவில் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து சைவ, வைணவ கோவில்களிலும் உண்டியல் காணிக்கையை தவிர வேறு எந்த கட்டணங்களையும் வசூல் செய்யக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு சார்பில் தஞ்சை ரெயிலடியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று காலை நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சாவூர் மாவட்ட தலைவர் ராஜா சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தை தேசிய பொதுச்செயலாளர் வக்கீல் சந்திரபோஸ் பெருமாள் தொடங்கி வைத்தார்.

    இதில் தமிழ் மாநில முதன்மை செயலாளர் புலவர் ஆதி நெடுஞ்செழியன் சிறப்புரை ஆற்றினார்.

    கரந்தை கண்ணன், மாநில இணை செயலாளர் மகேந்திரன், மாஸ்டர் சுரேஷ், மாநில துணை தலைவர் கோவி ந்தராஜ் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.

    முடிவில் மாவட்ட செயலாளர் மகேந்திரன் நன்றி கூறினார்.

    இதற்கான ஏற்பாடுகளை மையக்குழு உறுப்பினர் கே.ஆர்.ஜி. ராஜா செய்திருந்தார்.

    இதில் முன்னாள் காவல் அதிகாரி வைத்தியநாதன், மகளிர் அணி கோமதி, அலமேலு, சண்முகம், சக்தி, மாவட்ட பொரு ளாளர் கோவிந்தராஜ் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • வேடசந்தூர் தாசில்தார் விஜயலட்சுமி ஆக்கிரமிப்பில் இருந்த கோவில்களை அகற்ற முயன்றபோது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • நவம்பர் 17-ந்தேதிக்குள் கோவில்களை அகற்றக்கூடாது என ஒரு தரப்பினர் தெரிவித்தனர்.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் உள்ள வி.புதுக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட மினுக்கம்பட்டியில் கருப்பணசாமி, அங்காள பரமேஸ்வரி, பாப்பாத்தியம்மன் கோவில்கள் அமைந்துள்ளன. நீண்ட காலமாக மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்த இந்த கோவில்கள் ஓடைப்புறம்போக்கு பகுதியில் இருப்பதாக தெரியவந்தது.

    இதனையடுத்து இதேபகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்தார். இதனை தொடர்ந்து இப்பகுதியில் இருந்த வீடுகள் அகற்றப்பட்டன. ஆனால் 3 கோவில்கள் மற்றும் 2 குடிநீர் தொட்டிகள் மட்டும் அகற்றப்படவில்லை.

    இதனிடையே அப்பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவர் கோவில்களை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடுத்தார். ஆனால் ஏற்கனவே வழக்கு தொடர்ந்து சுப்பிரமணி மீண்டும் நீதிமன்றத்தை அணுகியதால் ஆக்கிரமிப்புகள் முறையாக அகற்றப்படவேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதனையடுத்து வேடசந்தூர் தாசில்தார் விஜயலட்சுமி ஆக்கிரமிப்பில் இருந்த கோவில்களை அகற்ற முயன்றபோது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து பழனி ஆர்.டி.ஓ சரவணன் தலைமையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேடசந்துர் தாசில்தார் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடைபெற்றது. அப்போது பொதுமக்கள் கோவில்களை இடிக்க கூடாது என்றும், வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு எடுத்து செல்ல வசதியாக மேலும் சில நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.

    நவம்பர் 17-ந்தேதிக்குள் கோவில்களை அகற்றக்கூடாது என ஒரு தரப்பினர் தெரிவித்தனர். அதன்படி கெடு இன்றுடன் நிறைவடைவதால் தாசில்தார் விஜயலட்சுமி, வேடசந்தூர் டி.எஸ்.பி துர்க்காதேவி மற்றும் அதிகாரிகள் கோவில்களை அகற்றும் முயற்சியில் இறங்கினர். ஆனால் பொதுமக்கள் அதிகாரிகளை தடுத்து நிறுத்தியும், ஜே.சி.பி எந்திரத்தை சிறைபிடித்தும் போராட்டம் நடத்தினர்.

    அதிகாரிகள் சமரசம் செய்தும் கேட்காமல் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் உருவானது.

    • மானாமதுரை, திருப்புவனம் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
    • 16 வகையான வாசனை பொருள்களால் அபிஷேகம் நடத்தி, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    மானாமதுரை

    மானாமதுரை ஆனந்தவல்லி சமேதசோமநாதர் சுவாமிகோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, சோமநாதர் சுவாமிக்கும், நந்தி தேவ ருக்கும் 16 வகையான வாசனை பொருள்களால் அபிஷேகம் நடத்தி, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. சோமநாதர் வெள்ளி ரிஷப வாகனத்தில் சன்னதியை வலம் வந்து பிரதோஷ மூர்த்தி புறப்பாடு நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    திருப்புவனம் புஷ்பவனேசுவரர்- சவுந்திரநாயகி அம்மன் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ சிறப்பு வழிபாட்டில் சுவாமிக்கும் நந்திக்கும் அபிஷேகம் நடத்தி, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து ரிஷப வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. திருப்பாச்சேத்தி சிவன் கோவில், இளையான்குடி ஒன்றியம் குறிச்சி காசி விஸ்வநாதர் சுவாமி கோயிலிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உறுப்பினர் குறிப்பிட்ட வேதபுரீஸ்வரர் கோவிலை புனரமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
    • நிதி முழுமையாக செலவிடப்படுவதால் தான் உபயதாரர்கள் அதிகளவில் முன்வந்து கோவில் திருப்பணிக்கு உதவி செய்து வருகிறார்கள்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் புவனகிரி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அருண்மொழி தேவன் இன்று கேள்வி நேரத்தின் போது புவனகிரியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலை புனரமைத்து குடமுழுக்கு நடத்த ஆவன செய்யுமாறு கூறினார்.

    இதற்கு பதில் அளித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது:-

    உறுப்பினர் குறிப்பிட்ட வேதபுரீஸ்வரர் கோவிலை புனரமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு 286 கோவில்கள் உபயதாரர்கள் மூலம் புனரமைக்கப்பட்டது.

    இதற்காக உபயதாரர்கள் ரூ.600 கோடி உதவி உள்ளனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இது போன்று பெறப்படும் நிதி முழுமையாக செலவிடப்படுவதால் தான் உபயதாரர்கள் அதிகளவில் முன்வந்து கோவில் திருப்பணிக்கு உதவி செய்து வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எஸ்.அய்யாதுரை பாண்டியனுக்கு தொண்டர்கள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • சங்கரன்கோவிலில் உள்ள முக்கிய கோவில்களில் அய்யாதுரை பாண்டியன் சாமி தரிசனம் செய்தார்.

    தென்காசி:

    அ.தி.மு.க. மாநில கொள்கை பரப்பு துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள தென்காசி தொழிலதிபரும், அ.தி.மு.க. நிர்வாகியுமான எஸ்.அய்யாதுரை பாண்டியனுக்கு தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூரில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து, மேளதாளங்கள் முழங்க மாலை அணிவித்தும், சால்வை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். சுமார் 100-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. தொண்டர்கள் ஒன்றாக இணைந்து கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதசுவாமி கோவிலின் பூரண கும்பம் மரியாதை உடன் உற்சாகமாக வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து சங்கரன்கோவிலில் உள்ள முக்கிய கோவில்களில் அய்யாதுரை பாண்டியன் சாமி தரிசனம் செய்தார்.

    • அதிகாலை 4 மணி முதல் சாமி தரிசனம் செய்வதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
    • பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும் காசிக்கு நிகரான கோவில் போன்ற பல சிறப்பு வாய்ந்த அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. நேற்று ஆடிபெருக்கை முன்னிட்டு சுவாமி சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை நடந்தது.

    அதிகாலை 4 மணி முதல் சாமி தரிசனம் செய்வதற்காக அவினாசி, கருவலூர், சேவூர், தெக்கலூர், பழங்கரை, மற்றும் திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து குழந்தைகள் பெண்கள், உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இதே போல் அவினாசி கரிவரதராஜப்பெருமாள் கோவில், வீர ஆஞ்சநேயர் கோவில், காரணப் பெருமாள் கோவில், ஆகாசராயர் கோவில்,கருவலூர் மாரியம்மன் கோவில், பழங்கரை பொன்சோ ழீசுவரர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

    ×