search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PRADOSHA WORSHIP"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத கடைசி வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அதனைத் தொடர்ந்து சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத கடைசி வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பெருமான், பரமேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதேபோல் பரமத்திவேலூர் பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், பரமத்தி வேலூரில் 400 ஆண்டுகள் பழமையான எல்லையம்மன் ஆலயத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பிலிக்கல்பாளையம், கரட்டூர் விஜயகிரி வடபழனியாண்டவர் கோவிலில் எழுந்தருளியுள்ள பர்வதீஸ்வரர் மற்றும் பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் கார்த்திகை மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சோழவந்தான் பிரளயநாதர்சுவாமி கோவிலில் கார்த்திகை மாத பிரதோஷ விழா நடந்தது.
    • மண்ணாடிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திலும் கார்த்திகை மாத பிரதோஷ விழா நடைபெற்றது.

    சோழவந்தான்

    சோழவந்தான் பிரளயநாதர்சுவாமி கோவிலில் கார்த்திகை மாத பிரதோஷ விழா நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு பால், தயிர் உள்பட 12 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்று அம்பாலும் சுவாமியும் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். சிறப்பு பூஜை நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதேபோல் தென்கரை அகிலாண்ட ஈஸ்வரி சமேத மூலநாதர் சுவாமி கோவிலிலும், திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலிலும், திருவாலவாயநல்லூர் கிராமத்தில் உள்ள மீனாட்சிசுந்தரேஸ்வரர் ஆலயத்திலும், மண்ணாடிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திலும் கார்த்திகை மாத பிரதோஷ விழா நடைபெற்றது. இந்த பிரதோஷ விழாவில் பக்தர்கள் ஏராளமானவர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த பாக்கம் கிராமத்தில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த உமாமகேஸ்வரி உடனுறை கைலாயநாதர் கோவில் உள்ளது.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் நேற்று கார்த்திகை பிரதோஷ வழிபாடு நடந்தது.

    இதில் சிவபெருமான் மற்றும் நந்தி பகவானுக்கு 108 லிட்டர் பால் மற்றும் தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர், சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மானாமதுரை, திருப்புவனம் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
    • 16 வகையான வாசனை பொருள்களால் அபிஷேகம் நடத்தி, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    மானாமதுரை

    மானாமதுரை ஆனந்தவல்லி சமேதசோமநாதர் சுவாமிகோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, சோமநாதர் சுவாமிக்கும், நந்தி தேவ ருக்கும் 16 வகையான வாசனை பொருள்களால் அபிஷேகம் நடத்தி, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. சோமநாதர் வெள்ளி ரிஷப வாகனத்தில் சன்னதியை வலம் வந்து பிரதோஷ மூர்த்தி புறப்பாடு நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    திருப்புவனம் புஷ்பவனேசுவரர்- சவுந்திரநாயகி அம்மன் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ சிறப்பு வழிபாட்டில் சுவாமிக்கும் நந்திக்கும் அபிஷேகம் நடத்தி, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து ரிஷப வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. திருப்பாச்சேத்தி சிவன் கோவில், இளையான்குடி ஒன்றியம் குறிச்சி காசி விஸ்வநாதர் சுவாமி கோயிலிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்தி பெருமானுக்கு புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு 18 வகை யான வாசனைத் திரவியங்க ளால் அபிஷேகம் நடை பெற்றது.
    • பின்னர் சாமி ரிஷப வாகனத்தில் கோவிலை சுற்றி வலம் வந்தார். அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்தி பெருமானுக்கு புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திரு மஞ்சனம், தேன், கரும்புச்சாறு விபூதி உள்ளிட்ட 18 வகை யான வாசனைத் திரவியங்க ளால் அபிஷேகம் நடை பெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பின்னர் சாமி ரிஷப வாகனத்தில் கோவிலை சுற்றி வலம் வந்தார். அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பெரு மான், பரமேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதேபோல் பரமத்தி வேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவில், நன்செய் இடையாறு திருவே லீஸ்வரர் கோவில், மாவு ரெட்டி பீமேஸ்வரர் கோவில், பில்லூர் வீரட்டீஸ்வரர் கோவில், பொத்தனூர் காசி விஸ்வநாதர் கோவில், பரமத்திவேலூர் பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், எல்லையம்மன் கோவிலில் உள்ள ஏகாம்ப ரேஸ்வரர் கோவில், பிலிக்கல்பாளையம் கரட்டூர் விஜயகிரி வடபழனியாண்ட வர் கோவிலில் உள்ள பருவ தஈஸ்வரர், பரமத்திவேலூர் வல்லப விநாயகர் கோவிலில் உள்ள விசாலாட்சி சமேத பானலிங்கவிஸ்வேஸ்வரர் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் எழுந்தருளியுள்ள சிவபெரு மானுக்கும், நந்திகேஸ்வ ரருக்கும் புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆரா தனைகளும், சிறப்பு அலங்கா ரமும் நடைபெற்றது. இதில் அந்தப் பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
    • சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம், கொண்டாபுரம் கிராமத்தில் காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ பஞ்சலிங்கேஷ்சுவர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

    முன்னதாக நந்தி பகவானுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் மற்றும் பழங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து மூலவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் பூஜைகள், மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கோவில் வளாகத்திலேயே சாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பரமேஸ்வரர் கோவிலில் ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார். பின்னர் நந்திபெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    அதேபோல் பாண்ட மங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஸ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், பரமத்தி வேலூரில் 400 ஆண்டுகள் பழமையான எல்லையம்மன் ஆலயத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோவில், பிலிக்கல்பாளையம் கரட்டூர் விஜயகிரி வடபழனியாண்டவர் கோவிலில் எழுந்தரு ளியுள்ள பருவதீஸ்வரர் மற்றும் பரமத்திவேலூர் வல்லப விநாயகர் கோவிலில் உள்ள விசாலாட்சி சமேத பானலிங்கவிஸ்வேஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கும், நந்திகேஸ்வரருக்கு ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிவன் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    வேதாரண்யம் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

    பிரதோஷம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    பின்னர் வண்ண மலர்களால் சாமியும், நந்திகேஸ்வரரும் அலங்கரிக்கப்பட்டு ஒரே நேரத்தில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் பிரதோஷ நாயனார் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவில் வெளிப்பிரகாரத்தில் புறப்பாடு நடைபெற்றது.

    இதேபோல தோப்புத்துறை கைலாசநாதர் கோவில், வடமறைக்காடர் கோவில், தேத்தாகுடி வடக்கு அழகியநாதர் கோவில், கோடியக்காடு குழவர் கோவில், அகஸ்தியன்பள்ளி அகஸ்தீஸ்வரர் கோவில், நாலுவேதபதி அமராபதீஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    இதேபோல வெள்ளப்பள்ளம் சிவன் கோவில், புஷ்பவனம் சுகந்தனேஸ்வரர் கோவில், ஆயக்காரன்புலம் எழுமேஸ்வரமுடையர் கோவில், அகரம் அழகியநாதர் கோவில், கரியாப்பட்டினம் கைலாசநாதர் கோவில், வடகட்டளை சோமநாதர் கோவில் மற்றும் ருத்ரசோமநாதர் கோவில், மறைஞாயநல்லூர் மேலமறைக்காடர் சிவன்கோவில், கத்தரிப்புலம் கோவில்குத்தகை காசிநாதர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராமநாதபுரம் அருகே சோமவார பிரதோஷ வழிபாடு நடந்தது.
    • திருவாடானை ஆதி ரெத்தினேஸ்வரர் ஆகிய சிவாலயங்களிலும் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது அன்னபூர னேசுவரி சமேத நம்பு ஈஸ்வரர் கோவில். வாலி வழிபட்ட தலம் என கூறப்படுகிறது.

    அதற்கு சாட்சியாக சீதையை மீட்கும் முன் ராமபிரான் இவ்வழி யாக இலங்கை செல்லும் போது வழிபட்ட வெயிலுக்குகந்த விநாயகர் கோயில் இங்கிருந்து 10 கிலோ மீட்டர் தூர உள்ள உப்பூரில் உள்ளது.

    மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் சோமவார பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. நந்திக்கு பால், பழம், பன்னீர், தயிர், சந்தனம், இளநீர், விபூதி பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. மேலும் பரிவார தெய்வங்களான விநாயகர், முருகன் தட்சி ணாமுர்த்தி, லிங்கோத்பவர், விஷ்ணு துர்க்கை, பைரவர், கல்யாண நவக்கிரங்க ளுக்கும் சிறப்பு அபிஷே கங்கள் நடைபெற்றது. பூஜை ஏற்பாடுகளை வாசு, கருப்பசாமி, சுவாமிநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.விரதமிருந்த பெண்கள் கோவிலைச்சுற்றி வந்து வழிபட்டனர்.

    அதனைத் தொடர்ந்து உற்சவ மூர்த்தி வீதி உலா வந்ததை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.அபிஷேக பால் மற்றும் நெய்வேத்தியம் செய்யப்பட்ட சர்க்கரை பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது. பெண்கள் குழந்தைகள் ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.

    இதே போல் தொண்டி சிதம்பரேஸ்வரர் கோவில், தீர்த்தாண்டதானம் சர்வ தீர்த்தேஸ்வரர், சுந்தர பாண்டிய பட்டிணம் ஏகாம்பரேஸ்வரர், ஓரியூர் சேயுமானவர், தளிர் மருங்கூர் உலகேஸ்வரர், திருவாடானை ஆதி ரெத்தினேஸ்வரர் ஆகிய சிவாலயங்களிலும் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சோழவந்தான் பகுதியில் சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
    • நந்திக்கு 12 திரவிய பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    சோழவந்தான்

    சோழவந்தான் பகுதியில் உள்ள சிவாலயங்களில் சோமவார பிரதோஷ விழா நடந்தது. சோழவந்தான் பிரளயநாத கோவிலில் சோமவார பிரதோஷ வழிபாடு நடந்தது. நந்திக்கு 12 திரவிய பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.சுவாமியும், அம்பாளும் ரிஷபவாகனத்தில் எழுந்தருளி கோவில் வளாகத்தை வலம் வந்தனர். எம்விஎம் குழுமத்தலைவர் மணிமுத்தையா, கவுன்சிலர்கள் வள்ளிமயில், டாக்டர் மருதுபாண்டியன், மற்றும் கோவில் நிர்வா கத்தினர் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தனர். பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.

    திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் கோவில் வளாகத்தில் வலம் வந்தனர். சிறப்பு அர்ச்சனை, பூஜைகள், தீபாராதனை நடந்தது. இதேபோல் மன்னாடி மங்கலம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், சோழவந்தான் பேட்டை அருணாசல ஈஸ்வரர் கோவில், திருவாலவாய நல்லூர் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், விக்கிரமங்கலம் கோவில்பட்டி மருததோய ஈஸ்வர முடையார் கோவில் தென்கரை அகிலாண்டே சுவரி சமேத மூலநாதசுவாமி ஆகிய கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo