search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குற்றால சீசன்"

    • சி.சி.டி.வி. காமிராக்கள், நீரில் தவறி விழுந்தவரை மீட்கும் உபகரணங்கள் போதுமான அளவில் உள்ளதா? என்பது குறித்து எஸ்.பி. ஆய்வு மேற்கொண்டார்.
    • போக்குவரத்து முறையாக செல்கிறதா என்பது குறித்தும் போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் ஆய்வு செய்தார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம், குற்றாலம் சீசனை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வரும் நிலையில் அவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது சி.சி.டி.வி. காமிராக்கள், நீரில் தவறி விழுந்தவரை மீட்கும் உபகரணங்கள் போதுமான அளவில் உள்ளதா? அவை சரியான நிலையில் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்தார். மேலும் ஒலிபெருக்கியில் தொடர் விழிப்புணர்வு, ஆண் மற்றும் பெண் காவலர்கள் போதுமான அளவில் பணியில் உள்ளனரா, போக்குவரத்து முறையாக செல்கிறதா என்பது குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து அருவிகளில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் அனைவரையும் பாதுகாப்பாக குளித்து மகிழ்ந்து செல்லுமாறும் அறிவுறுத்தினார்.

    • அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது தடை விதிப்பதும், பின்னர் தண்ணீரின் அளவு சீராகும் போது அனுமதிப்பதும் தொடர்ந்து வருகிறது.
    • நேற்று நள்ளிரவு முதல் பெய்து வந்த சாரல் மழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    தென்காசி:

    குற்றால சீசன் இந்த ஆண்டு தாமதாக தொடங்கிய நிலையில், தென்காசி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. அதேநேரம் சீசன் தொடங்கி இருப்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் கணிசமாக உயர்ந்து வந்தது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைகளின் உட்பகுதிகளில் பெய்து வரும் மழையினால் அருவிகளில் சில நேரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. அப்போது சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை விதிப்பதும், பின்னர் தண்ணீரின் அளவு சீராகும் போது அனுமதிப்பதும் தொடர்ந்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் பெய்து வந்த சாரல் மழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து இன்று காலை முதல் சுற்றுலா பயணிகள் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் கேரளா மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து குற்றாலம் வந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர் அவர்கள் பழைய குற்றால அருவிக்கு சென்று குளித்து மகிழ்ந்தனர். நேரம் செல்ல செல்ல பழைய குற்றாலத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    ×