search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெயின் அருவி"

    • குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி ஐந்தருவி பழைய குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு சற்று குறைந்ததை அடுத்து அங்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இரவில் பெய்த மழையின் காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீர் கொட்டியது. அதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்பட்டது.

    இதற்கிடையே இன்று பிற்பகலில் வெள்ளப்பெருக்கு சற்று குறைந்ததால் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு சற்று குறைந்ததை அடுத்து அங்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இன்று சுற்றுலா பயணிகளும் ஐயப்ப பக்தர்களும் குளிக்க உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

    • அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது தடை விதிப்பதும், பின்னர் தண்ணீரின் அளவு சீராகும் போது அனுமதிப்பதும் தொடர்ந்து வருகிறது.
    • நேற்று நள்ளிரவு முதல் பெய்து வந்த சாரல் மழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    தென்காசி:

    குற்றால சீசன் இந்த ஆண்டு தாமதாக தொடங்கிய நிலையில், தென்காசி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. அதேநேரம் சீசன் தொடங்கி இருப்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் கணிசமாக உயர்ந்து வந்தது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைகளின் உட்பகுதிகளில் பெய்து வரும் மழையினால் அருவிகளில் சில நேரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. அப்போது சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை விதிப்பதும், பின்னர் தண்ணீரின் அளவு சீராகும் போது அனுமதிப்பதும் தொடர்ந்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் பெய்து வந்த சாரல் மழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து இன்று காலை முதல் சுற்றுலா பயணிகள் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் கேரளா மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து குற்றாலம் வந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர் அவர்கள் பழைய குற்றால அருவிக்கு சென்று குளித்து மகிழ்ந்தனர். நேரம் செல்ல செல்ல பழைய குற்றாலத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    • உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், அண்டை மாநிலம் என பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் முகாமிடுவார்கள்.
    • மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிப்பதற்கு காலை முதலே சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருந்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளமான குற்றாலத்தில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் சீசன்களை கட்டும்.

    அப்போது குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுவார்கள். உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், அண்டை மாநிலம் என பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் முகாமிடுவார்கள்.

    இந்நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவில் இன்னும் பொழியாததால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளுக்கு தண்ணீர் வரத்து மிகவும் குறைந்து காணப்படுகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் உட்பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் சாரல் மலை காரணமாக குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவிக்கு மட்டும் தண்ணீர் வரத்து தற்போது சற்று அதிகரித்து காணப்படுகிறது. இன்று சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிப்பதற்கு காலை முதலே சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருந்தனர்.

    அருவி பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே காணப்பட்டது. ஐந்தருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டதால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அருவியில் குளிக்க வந்த பயணிகள் அனைவரையும் வரிசையில் நின்று குளித்து செல்ல அறிவுறுத்தினர்.

    ×