என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஐந்தருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்- மெயின் அருவி, பழைய குற்றாலத்தில் தடை நீடிப்பு
- மலைப்பகுதியில் மழை குறைந்ததால் ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீரின் வரத்து குறைந்தது.
- மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் அந்த அருவிகளில் குளிப்பதற்கு தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று மாலை வரை தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக குற்றாலத்தில் உள்ள பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் அங்கு குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.
இந்நிலையில் இன்று காலையில் மலைப்பகுதியில் மழை குறைந்ததால் ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீரின் வரத்து குறைந்தது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். அதேநேரம் மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் அந்த அருவிகளில் குளிப்பதற்கு தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது.
2 அருவிகளிலும் இன்று பிற்பகலில் தண்ணீர் வரத்து குறையும்பட்சத்தில் அங்கும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவர் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






