search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயணிகள்"

    • போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர்.
    • புதுவை வழியாக தமிழக பகுதிக்கு செல்லும் அரசு பஸ்கள், புதுவையிலிருந்து இயக்கப்படும் அரசு பஸ்களும் அடங்கும்.

    புதுச்சேரி:

    புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர்.

    இதன்படி இன்று வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. புதுவையை பொறுத்தவரை நகரம், கிராமப்பகுதிகளுக்கு அதிகளவில் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது.

    ஆனால் புதுவையிலிருந்து தமிழக பகுதிக்கு அதிகளவில் தமிழக அரசு பஸ்கள்தான் இயக்கப்படுகிறது. இதில் புதுவை வழியாக தமிழக பகுதிக்கு செல்லும் அரசு பஸ்கள், புதுவையிலிருந்து இயக்கப்படும் அரசு பஸ்களும் அடங்கும்.

    சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், வேளாங்கன்னி, கும்பகோணம், காரைக்கால், கடலூர் பகுதியிலிருந்து சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட நகரங்களுக்கு அதிகளவில் பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் புதுவை பஸ்நிலையம் வந்து பயணிகளை இறக்கி, ஏற்றி செல்கின்றனர்.

    புதுவை உப்பளம் அம்பேத்கார் சாலையில் உள்ள அரசு பணிமனையில் 54 பஸ்களும், மறைமலை அடிகள் சாலையில் உள்ள பணி மனையில் இருந்து 22 பஸ்களும் இயக்கப்படுகிறது. தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் காரணமாக தமிழக பகுதியிலிருந்து மிக குறைந்த எண்ணிக்கையில் ஓரிரு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது.

    இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். இதனால் தனியார் பஸ்களில் கூட்டம் அலை மோதியது.

    உப்பளத்தில் உள்ள தமிழக அரசு போக்கு வரத்துக்கழக பணிமனை முன்பு தொழிற்சங்கத்தினர் மற்றும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    • இதுவரை இல்லாத அளவிற்கு 2023-ம் ஆண்டில் மட்டும் 9.11 கோடி பேர் மெட்ரோ ரெயிலில் பயணித்துள்ளார்கள்.
    • வாட்ஸ்அப் டிக்கெட் மூலமாக மற்றும் பேடிஎம் ஆப் மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னை மெட்ரோ ரெயிலில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 3 லட்சம் பேர் பயணிக்கின்றனர். சென்னை மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்ட எட்டு ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு 2023-ம் ஆண்டில் மட்டும் 9.11 கோடி பேர் மெட்ரோ ரெயிலில் பயணித்துள்ளார்கள்.

    கடந்த 2022-ம் ஆண்டில் 6.09 கோடி பேர் பயணித்துள்ளார்கள். 2022-ம் ஆண்டை விட 2023-ம் ஆண்டில் 3.01 கோடி பேர் அதிகமாக பயணித்துள்ளார்கள். சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் க்யுஆர் குறியீடு பயணச்சீட்டு, பயண அட்டைகள், வாட்ஸ்அப் டிக்கெட், மற்றும் போன்பே போன்ற அனைத்து வகையான பயணச்சீட்டுகளுக்கும் 20 சதவீத கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் பேடிஎம் ஆப் மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆத்திரமடைந்த அசிம்கான் கண்டக்டரிடம் தகராறு செய்தார். பணத்தை திருப்பித் தருமாறு கேட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தெலுங்கானா மாநிலம், அடி சுந்தரவாடா பஸ் நிலையத்தில் இருந்து உட்னூர் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டு இருந்தது. இந்த பஸ்சில் கான் என்ற கண்டக்டர் பணியில் இருந்தார்.

    அப்போது அன்ஸ்னாபூரை சேர்ந்த அசிம் கான் என்பவர் பஸ்சில் ஏறினார். அவர் கண்டக்டரிடம் டிக்கெட் வாங்கினார். பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அசிம்கானுக்கு சீட் கிடைக்கவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த அசிம்கான் கண்டக்டரிடம் தகராறு செய்தார். பணத்தை திருப்பித் தருமாறு கேட்டார்.

    இதையடுத்து கண்டக்டர் பணத்தை திருப்பி கொடுத்து அசின் கானை பஸ்சிலிருந்து கீழே இறக்கினார்.

    அப்போது அசிம் கான் கண்டக்டரை தாக்கினார். அவரை கீழே தள்ளி கன்னத்தைக் கடித்து துப்பினார்.

    இதில் கண்டக்டரின் கன்னத்தில் இருந்து ரத்தம் கொட்டியது. இதனைக் கண்டு பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

    அசிம் கானை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாரத்தில் திங்கள், வியாழன், சனி, ஆகிய 3 தினங்களில் இந்த விமான சேவைகள் இயக்கப்பட உள்ளன.
    • தினசரி விமான சேவையாக மாற்றப்பட வாய்ப்பு உள்ளது என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து வங்காளதேச தலைநகர் டாக்காவுக்கு ஏற்கனவே, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனமும், யூ.எஸ். பங்களா விமான நிறுவனமும், தினசரி நேரடி விமான சேவையை இயக்கி வருகின்றன. இந்நிலையில் சென்னை- டாக்கா இடையே பயணிகள் போக்குவரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இதையடுத்து பீமன் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் என்ற விமான நிறுவனம், டாக்கா- சென்னை இடையே, புதிதாக நேரடி விமான சேவையை, இன்று முதல் தொடங்கியது. வாரத்தில் திங்கள், வியாழன், சனி, ஆகிய 3 தினங்களில் இந்த விமான சேவைகள் இயக்கப்பட உள்ளன.

    இந்த விமானம் வாரத்தின் 3 நாட்களிலும், பகல் 12.50 மணிக்கு டாக்காவில் புறப்பட்டு, மாலை 3.20 மணிக்கு, சென்னை விமான நிலையம் வருகிறது. அதே விமானம் மீண்டும், மாலை 4.15 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு,

    இரவு 7.30 மணிக்கு டாக்கா விமான நிலையம் சென்றடைகிறது.

    இப்போது வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இயக்கப்படும் இந்த விமான சேவை, பயணிகளின் வரவேற்பை பொறுத்து, தினசரி விமான சேவையாக மாற்றப்பட வாய்ப்பு உள்ளது என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 500க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
    • விபத்தில் உயிரிழப்புகள் இல்லை என்றாலும் ரெயிலில் பயணித்தவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

    சீனாவின் பெய்ஜிங் மாகாணத்தில் சுரங்கப்பாதையில் நின்று கொண்டிருந்த மெட்ரோ ரெயில் மீது மற்றொரு ரெயில் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.

    இந்த கோர விபத்தில் 102 பயணிகளுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. மேலும், 500க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. 

    ரெயில் விபத்து தொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில், தண்டவாளத்தில் பனி படர்ந்திருந்ததால் ரெயில் பாதியில் நிறுத்தப்பட்டது. அப்போது, அதே வழியில் வந்த மற்றொரு ரெயில், பிரேக் பிடித்தும் நிற்காமல் சறுக்கிக் கொண்டே சென்று, நின்று கொண்டிருந்த ரெயில் மீது மோதியது தெரியவந்துள்ளது.

    இந்த விபத்தில் உயிரிழப்புகள் இல்லை என்றாலும் ரெயிலில் பயணித்தவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

    • பயணிகள் விமான நிறுவன கவுண்டரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மதியம் ஒரு மணிக்கு விமானம் புறப்பட்டு செல்லும் என்று அறிவித்துள்ளனர்.

    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் இன்று அதிகாலை 1.40 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. 168 பயணிகள் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமானத்தில் ஏற தயாராக இருந்தனர். விமானி பரிசோதித்தபோது விமானத்தில் எந்திர கோளாறு இருப்பதை கண்டுபிடித்தார்.

    இதைத்தொடர்ந்து விமானம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் விமானம் புறப்பட தொடர்ந்து தாமதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த பயணிகள் விமான நிறுவன கவுண்டரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அதிகாரிகள் சமாதானம் செய்தனர்.

    இன்று மதியம் ஒரு மணிக்கு விமானம் புறப்பட்டு செல்லும் என்று அறிவித்துள்ளனர். சென்னை விமான நிலையத்தில் சுமார் 12 மணி நேரத்திற்கு மேலாக பயணிகள் தவித்தபடி இருந்தனர்.

    • சாலையின் நடுவே டிரைவர்கள் பஸ்களை நிறுத்தி திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • அங்கிருந்த சில பயணிகள் தங்களது செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்தனர்.

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் இருந்து காலை 6.30 மணி அளவில் புறப்பட்ட தனியார் பஸ்சும், திண்டிவனத்தில் இருந்து ஆரணிக்கு புறப்பட்ட தனியார் பஸ்சும், வந்தவாசி அடுத்த சடத்தாங்கல் கூட்ரோட்டில் சந்தித்து கொண்டன.

    அப்போது 2 பஸ்களும் நேர வித்தியாசம் காரணமாக ஒருவரை ஒருவர் முந்தி செல்ல முயன்றன. அப்போது பஸ்கள் ஒன்றோடு ஒன்று உரசுவது போன்று இருந்தது.

    இதனால் பஸ்களில் பயணம் செய்த பயணிகள் அச்சம் அடைந்து பீதியில் உறைந்தனர்.

    பின்னர் சாலையின் நடுவே டிரைவர்கள் பஸ்களை நிறுத்தி திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனை அங்கிருந்த சில பயணிகள் தங்களது செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்தனர். செல்போன்களில் பதிவான வீடியோக்களை சமூக வலைதளங்களில் தற்போது வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    மேலும் இது போன்ற செயல்களில் பஸ் டிரைவர்கள், பயணிகளை அச்சுறுத்த வேண்டாம் எனக் கூறி சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.

    • பண்டிகை காலகட்டங்களிலும், சீசன் காலங்களிலும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.
    • பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க தற்போது இந்த ரெயில்களின் சேவை ஜனவரி மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    தென்மாவட்டங்களில் இருந்து சென்னை உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக தென்னக ரெயில்வேயின் மதுரை கோட்டம் சார்பில் பண்டிகை காலகட்டங்களிலும், சீசன் காலங்களிலும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.

    அதன் ஒரு பகுதியாக நாகர்கோவிலில் இருந்து நெல்லை வழியாக சென்னை தாம்பரத்திற்கு (நாகர்கோவில்-தாம்பரம்) சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டு அந்த ரெயில் இந்த மாதம் இறுதி வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்த நிலையில், வார இறுதி நாள் மற்றும் பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க தற்போது இந்த ரெயில்களின் சேவை ஜனவரி மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி நாகர்கோவிலில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்படும் தாம்பரம் சிறப்பு ரெயில்(06012) அடுத்த மாதம் 3, 10, 17, 24, 31, அடுத்த ஆண்டு ஜனவரி 7, 14, 21, 28 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை நேரத்தில் சென்னை புறப்படுகிறது. இந்த ரெயில் மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும். மறு மார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரெயில்(06011) இன்று, அடுத்த மாதம் 4, 11, 18, 25, வருகிற ஜனவரி மாதம் 1, 8, 15, 22, 29 ஆகிய திங்கட்கிழமைகளில் இரவு 8.45 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

    • தக்கலை பகுதியில் நேற்று முன்தினம் கனமழை கொட்டி தீர்த்தது.
    • சிறுவர் பூங்காவில் உள்ள சிறிய குளம் நிரம்பி தண்ணீர் நடைபாதையிலும் சூழ்ந்தது.

    தக்கலை, நவ.24-

    தக்கலை பகுதியில் நேற்று முன்தினம் கனமழை கொட்டி தீர்த்தது. கன மழையின் காரணமாக உதயகிரி கோட்டை பகுதி யில் தண்ணீர் புகுந்தது. அங்குள்ள சிறுவர் பூங்காவில் உள்ள சிறிய குளம் நிரம்பி தண்ணீர் நடைபாதையிலும் சூழ்ந்தது. மேலும் மான்கள் நின்று கொண்டிருக்கும் பகுதி யிலும் தண்ணீர் சூழ்ந்ததால் அங்கு நின்ற மான்கள் கடும் அவதிக்கு ஆளானது. சிறுவர் பூங்காவிலும் தண்ணீர் புகுந்து சுற்றுலா பயணிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலையில் அந்த பகுதிகளில் தண்ணீர் வடியாமல் உள்ளது. மான்களில் நின்று கொண்டிருக்கும் பகுதியில் இருந்து தண்ணீர் மட்டும் சிறிது வடிந்துள்ளது. ஆனால் அந்த பகுதி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. சிறுவர் பூங்கா மற்றும் செல்பி பாயிண்ட் பகுதியில் தண்ணீர் வடியாத நிலை யிலேயே இருந்து வருகிறது. இன்று காலையில் உதயகிரி கோட்டை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

    ஆனால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கிடந்ததால் அவர்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள். உதயகிரி கோட்டை முழுவதும் சுற்றி பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். எனவே உடனடியாக உதயகிரி கோட்டை பகுதியில் தேங்கி கிடக்கும் தண்ணீரை மாற்ற நடவ டிக்கை எடுப்பதுடன் நிரந்தரமாக அந்த பகுதியில் தண்ணீர் தேங்காத வண் ணம் வடிகால்களை அமைத்து சீரமைக்க வேண்டும் என்பது சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

    • பாரபட்சம் காட்டப்படுவதாக பயணிகள் புகார்
    • 1-ந் தேதி ஒரு நாள் மட்டும் பகுதியாக கன்னியாகுமரி-–நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுகிறது.

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி ெரயில் நிலையத்தில் தற்போது 3 நடைமேடைகள் பயன்பாட்டில் உள்ளது. இங்கு கன்னியாகுமரி-திருவனந்தபுரம் ரெயில் பாதை இரட்டிப்பாக்கும் திட்டத்தின் கீழ் புதிதாக 2 நடைமேடைகள், சுற்றுலா பயணிகள் வரும் ரெயில்கள் நிறுத்தி வைப்பதற்கு ஒரு நடைமேடை என்று மொத்தம் 3 புதிய நடைமேடைகள் தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ள புதிய இருப்பு பாதைகள் தற்போது ரெயில்கள் இயங்கும் பழைய இருப்பு பாதையுடன் இணைக்கப்பட உள்ளன. இதற்காக வேண்டி வருகிற 24-ந் தேதி முதல் டிசம்பர் 4-ம் தேதி வரை நாகர்கோவில்-கன்னியாகுமரி, திருநெல்வேலி-நாகர்கோவில், திருவனந்தபுரம்-நாகர்கோவில் மார்க்கங்களில் ரெயில்கள் இயக்கத்தில் பல்வேறு மாற்றங்களை ரெயில்வே துறை அறிவித்துள்ளது.

    இந்த பணிகள் பகல் நேரத்தில் நடக்க இருப்பதால் கன்னியாகுமரி ரெயில் நிலையத்திலிருந்து பகல் நேரத்தில் இயங்கும் சில ரெயில்கள் மாற்றங்கள் அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி ரெயில் நிலையத்திலிருந்து காலை, மாலை, இரவு நேரங்களில் இயங்கும் ரெயில்களில் எந்த மாற்றமும் இல்லாமல் இயங்கும்.

    நாகர்கோவில்-கன்னியாகுமரி (எண் 06643) பயணிகள் ரெயில் 26-ந் தேதி முதல் டிசம்பர் 4-ந் தேதி வரை 9 நாட்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கொல்லம்-கன்னியாகுமரி மெமு ரெயில் இரு மார்க்கங்களிலும் 26-ந் தேதி முதல் 30-ந் தேதி வரையிலும், டிசம்பர் 2 முதல் 4-ந் தேதி வரை என மொத்தம் 8 நாட்களுக்கு முழுமையாக இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுகிறது. புனே-கன்னியாகுமரி (எண் 16381) ரெயில் நாகர்கோவில்-கன்னியாகுமரி இடையே 26-ந் தேதி முதல் டிசம்பர் 4-ந் தேதி வரை 9 நாட்களுக்கு பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பெங்களுர்-கன்னியாகுமரி (எண் 16526) ரெயில் 8 நாட்களுக்கு நாகர்கோவில்-கன்னியாகுமரி வரை பகுதியாக 8 நாட்களுக்கும், திருவனந்தபுரம்-கன்னியாகுமரிக்கு ஒரு நாளும் ரத்து செய்யப்படுகிறது. மறு மார்க்கமாகவும் இவ்வாறு அதே நாட்களில் ரத்து செய்யப்படுகிறது. கன்னியாகுமரி-புனலூர் ரெயில் நாகர்கோவில் டவுண்- கன்னியாகுமரி இடையே 9 நாட்களுக்கு பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. புதுச்சேரி-கன்னியாகுமரி ரெயில் திருநெல்வேலி-– கன்னியாகுமரி இடையே 26-ம் தேதி ஒரு நாள் மட்டும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மறு மார்க்கமாக கன்னியாகுமரி-புதுச்சேரி ரெயில் 27-ந் தேதி கன்னியாகுமரி-திருநெல்வேலி மார்க்கமாக ஒருநாள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    ஹவுரா-கன்னியாகுமரி ரெயில் நாகர்கோவில்-கன்னியாகுமரி இடையே 27-ந் தேதி ஒருநாள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. கன்னியாகுமரி-திப்ருகர் ரெயில் 3 நாட்களுக்கு கன்னியாகுமரி-– நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. கன்னியாகுமரி-கத்ரா ரெயில் டிசம்பர் 1-ந் தேதி ஒரு நாள் மட்டும் பகுதியாக கன்னியாகுமரி-–நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுகிறது.

    தாம்பரம்-நாகர்கோவில் அந்தியோதயா ெரயில் 3-ந் தேதி ஒரு நாள் மட்டும் திருநெல்வேலி-–நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக இந்த ரெயில் 4-ந் தேதி நாகர்கோவிலுக்கு பதிலாக திருநெல்வேலியிருந்து புறப்படும். சென்னை எழும்பூர்-கன்னியாகுமரி ரெயில் 3-ந் தேதி பகுதியாக நாகர்கோவில்-கன்னியாகுமரி இடையே ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக இந்த ரெயில் 4-ம் தேதி கன்னியாகுமரிக்கு பதிலாக நாகர்கோவிலிருந்து புறப்படும். நிஜாமுதீன்-கன்னியாகுமரி ரெயில் வருகிற 2-ந் தேதி அன்று பகுதியாக நாகர்கோவில்-கன்னியாகுமரி இடையே ரத்து செய்யப்படுகிறது. தாம்பரம்-நாகர்கோவில் ரெயில் ஒரு நாள் மட்டும் 4-ந் தேதி பகுதியாக திருநெல்வேலி-–நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக இந்த ரெயில் 4-ந் தேதி நாகர்கோவிலுக்கு பதிலாக திருநெல்வேலியிருந்து புறப்படும். கன்னியாகுமரி- புனே ரெயில் 4-ம் தேதி அன்று பகுதியாக நாகர்கோவில்-கன்னியாகுமரி இடையே ரத்து செய்யப்படுகிறது.

    கடந்த 5 ஆண்டுகளாக புதிய ரெயில்கள் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து அறிவித்து இயக்காத காரணத்தால் சாதாரண மக்கள் தங்கள் பயணங்களை குறிப்பாக சென்னைக்கு பயணம் செய்ய சுமார் 60 முதல் 100 நாட்களுக்கு முன்பாகவே முடிவு செய்து பயணச்சீட்டு முன்பதிவு செய்து விடுகின்றனர். இவ்வாறு முன்பதிவு செய்த பயணிகள் பயணம் செய்யும் 10 நாட்களுக்கு முன்பாக ரெயில்வே துறை திடீரென ரெயில்களை பகுதியாகவோ அல்லது முழு ரெயிலும் ரத்து என அறிவிப்பு செய்வது, முன்பதிவு செய்த பயணிகளுக்கு வேண்டும் என்றே மன உளைச்சலை ஏற்படுத்துவதாக பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    ரத்து செய்யப்படும் ரெயில்களில், தாம்பரம்-நாகர்கோவில் அந்தியோதயா மற்றும் தாம்பரம் -நாகர்கோவில், கன்னியாகுமரி – புதுச்சேரி ஆகிய 3 ரெயில்களும் திருநெல்வேலியுடன் ஒருநாள் நிறுத்தப்படுகின்றது. இந்த ரெயில்களில் குமரி மாவட்ட பயணிகள் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கும் இங்கிருந்து தங்கள் மாநில தலைநகர் சென்னைக்கும் அதிக அளவில் பயணம் செய்வார்கள்.

    கேரளா மார்க்கமாக இயக்கப்படும் ரெயில்களான கன்னியாகுமரி – புனே, கன்னியாகுமரி-பெங்களுர், கன்னியாகுமரி-திப்ருகார், புனலூர்-நாகர்கோவில் ஆகிய ரெயில்களை கொச்சுவேலியுடன் நிறுத்தி வைத்து விட்டு தாம்பரம்-நாகர்கோவில் அந்தியோதயா, தாம்பரம் - நாகர்கோவில் ஆகிய 2ரெயில்களையும் நாகர்கோவிலிருந்து புறப்படுமாறு இயக்க வேண்டும்.

    இந்த ெரயில்கள் ரத்து செய்வதில் அதிக அளவில் ரெயில்கள் டிசம்பர் 3-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் 4-ம் தேதி திங்கட்கிழமை ஆகும். ஞாயிற்றுக்கிழமை நாகர்கோவிலிருந்து புறப்படும் நாகர்கோவில் -ஷாலிமார் ரெயில் திருவனந்தபுரத்தில் நிறுத்த வேண்டும். இவ்வாறு ரெயில்களை பகுதியாக ரத்து செய்வதற்கு முன்பு அதிக அளவில் பயணிகள் பயணிக்கும் ெரயில்களை ரத்து செய்யாமல் மிகவும் குறைவான எண்ணிக்கையில் பயணிகள் பயணம் செய்யும் ரெயில்களை முதலில் ரத்து செய்துவிட்டு பின்னர் இடபற்றாக்குறை இருக்கும் பட்சத்தில் இந்த ரெயில்களை ரத்து செய்வது பற்றி யோசிக்க வேண்டும். ஆனால் இவ்வாறு ரத்து செய்யப்பட்ட ெரயில்கள் ஒரே ஒரு ெரயில் ஒரே ஒருநாள் மட்டும் திருவனந்தபுரத்தில் நிறுத்தப்பட்டு திருவனந்தபுரம்-கன்னியாகுமரி இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் திருநெல்வேலியில் நிறுத்தப்படும் படியாக மூன்று ெரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது பாரபட்சமானது. கன்னியாகுமரி மாவட்ட பயணிகளை பாதிக்கும் வகையில் உள்நோக்கத்துடன் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ரத்து செய்யப்படும் ரெயில்களில் அதிக அளவில் நாகர்கோவில்- கன்னியாகுமரி இடையே இயங்கும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் கன்னியாகுமரிக்கு சுற்றுலா மற்றும் ஆன்மீகத்துக்கு என்று செல்லும் பயணிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வசதிக்காக தனியாக நாகர்கோவில் ரெயில் நிலையத்திலிருந்து ரயில்கள் வரும் கால அட்டவணையை வைத்து கன்னியாகுமரிக்கு செல்ல தனி பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும். இதற்கு ரயில்வே துறை சார்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா மற்றும் தாம்பரம் -நாகர்கோவில், கன்னியாகுமரி – புதுச்சேரி ஆகிய ரெயில்கள் திருநெல்வேலியுடன் நிறுத்தப்பட்டுள்ள நாட்களில் சென்னையிலிருந்து இந்த ரெயில்களில் திருநெல்வேலி வரும் பயணிகளை கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வருவதற்கு வசதியாக திருநெல்வேலியிருந்து திருவனந்தபுரத்துக்கு செல்லத்தக்க வகையில் சிறப்பு ரயில்களை அறிவித்து இயக்க வேண்டும்.

    இந்த ெரயில்கள் ரத்து இன்னமும் தொடர்ந்து வர இருக்கிறது. அடுத்த மாதம் ஆரல்வாய்மொழி-நாகர்கோவில் 2-ம் புதிய இருப்புபாதை பழைய பாதையுடன் இணைக்கப்படுகிறது. இதற்கும் ரெயில்கள் ரத்து செய்யப்படும். இது முடிந்த பிறகு திருநெல்வேலி-மேலப்பாளையம் இடையே அமைக்கப்பட்டுள்ள 2-ம் புதிய இருப்புபாதை பழைய பாதையுடன் இணைக்கப்படுகிறது. இதற்கும் இவ்வாறு பல்வேறு ரெயில்கள் ரத்து செய்யப்பட இருக்கிறது. கடைசியாக நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலைய விரிவாக்க பணிகளுக்காக பல்வேறு ரெயில்கள் இயக்கத்தில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒரு சில பயணிகள் ரெயிலில் இப்படி செய்யலாமா? என கேட்டு கண்டித்தது மட்டுமின்றி அறிவுரையும் கூறினர்.
    • ரெயில் பெட்டிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டால் இது போன்ற சம்பவங்களை தடுக்க முடியும்.

    நாகர்கோவில்:

    பெங்களூரில் இருந்து நாகர்கோவிலுக்கு தினமும் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலையில் பெங்களூரில் இருந்து புறப்பட்ட ரெயிலில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர்.

    இன்று அதிகாலையில் பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் அதிகாலை 5.30 மணியளவில் நெல்லை ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அப்போது ஏராளமான பயணிகள் நாகர்கோவிலுக்கு வருவதற்காக ரெயிலில் ஏறினர். அதிகாலை நேரம் என்பதால் வெளியூர்களில் இருந்து முன்பதிவு பெட்டியில் பயணம் செய்த பயணிகள் தூங்கி கொண்டிருந்தனர்.

    அந்த ரெயிலின் எஸ்-1 பெட்டியில் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரும், வாலிபர் ஒரு வரும் பயணம் செய்தனர். நெல்லை வரை மேலடுக்கு படுக்கையில் (இருவரும் ஒரே இருக்கையில் வந்தனர்) வந்த ஜோடி, சிறிது நேரத்தில் அந்த பெட்டியில் ஆட்கள் இல்லாத இருக்கைக்கு சென்றது.

    பின்பு இருவரும் ஒரே இருக்கையில் அமர்ந்து சில்மிஷத்தை தொடங்கினார்கள். நேரம் செல்லச் செல்ல அந்த ஜோடியினர் எல்லை மீறி சென்றனர். இருவரும் மாறி மாறி முத்தமழை பொழிந்தனர். ஓடும் ரெயிலில் மாறி மாறி கட்டி அணைப்பது, முத்த மழை பொழிவது என சல்லாப்பத்தை தொடர்ந்தனர்.

    அந்த பெட்டியில் மற்ற பயணிகள் இருப்பதை அவர்கள் கண்டு கொள்ளவே இல்லை. ஒரு கட்டத்தில் அவர்கள் அத்துமீறல் எல்லை மீறி செல்லவே, அந்த பெட்டியில் இருந்த சக பயணிகள் முகம் சுளித்தனர். மேலும் அந்த ஜோடியை எச்சரித்தனர்.

    ஒரு சில பயணிகள் ரெயிலில் இப்படி செய்யலாமா? என கேட்டு கண்டித்தது மட்டுமின்றி அறிவுரையும் கூறினர். இதனால் அந்த ஜோடி முகத்தை மறைந்தபடி அமர்ந்து கொண்டது. இந்த சம்பவங்கள் நடந்து கொண்டிருந்தபோதே பெங்களூரு ரெயில், நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.

    இதையடுத்து அந்த ஜோடி ரெயிலை விட்டு இறங்கி தலை தெறிக்க ஓட்டம் பிடித்தது. அந்த ஜோடி நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து விட்டு வீட்டிற்கு வரும் போது ஓடும் ரெயிலில் எல்லை மீறியதும் தெரிய வந்தது.

    ரெயில்களில் இது போன்ற அறுவறுக்கத்தக்க செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இதனால் குடும்பத்துடன் வரும் பயணிகள் முகம் சுளிக்கும் நிலைக்கு தள்ளப்படுவதாகவும் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ரெயில் பெட்டிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டால் இது போன்ற சம்பவங்களை தடுக்க முடியும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    • 500-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் பயணிகளை ஏற்றி சென்று வருகிறது.
    • பொதுமக்கள் செல்வதற்கு இரவு நேரத்தில் கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றது.

    கடலூர்:

    நாடு முழுவதும் நாளை மறுநாள் (12-ந் தேதி) தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது . இதனை தொடர்ந்து தமிழகத்தில் வெளியூரில் இருந்து தனது சொந்த ஊருக்கு திரும்பும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இடையூறு இல்லாமல் வந்து செல்வதற்கு தமிழக அரசு சார்பில் ஆயிரக்கணக்கான பஸ்கள் கூடுதலாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. கடலூர் மாவட்டத்தில் கடலூர், குறிஞ்சிப்பாடி,சிதம்பரம் ,விருத்தாச்சலம், நெய்வேலி, காட்டுமன்னானர்கோவில் உட்பட 11 பஸ் டெப்போ செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் இருந்து வெளியூருக்கு தினந்தோறும் 500-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் பயணிகளை ஏற்றி சென்று வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழக்கமாக இருக்கக்கூடிய பஸ்கள் மட்டுமின்றி கூடுதலாக 200 பஸ்கள் வெளியூர்களுக்கு சென்று வருகின்றது.

    இதில் கடலூர் மாவட்டத்தில் இருந்து சென்னை, சேலம், திருச்சி, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றது. மேலும் கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம் ,விருத்தாச்சலம் நெய்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்வதற்கு இரவு நேரத்தில் கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இது மட்டும் இன்றி கிராமப்புற பகுதிக்கு பொதுமக்கள் செல்வதற்கும் கூடுதல் நேரமாக பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நேற்று முதல் நாளை வரை3 நாட்களுக்கு கூடுதலாக தினந்தோறும் 200 பஸ்களும் தீபாவளி முடிந்து அடுத்த2 நாட்களுக்கு இதே போல் கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட உள்ளது. ஆகையால் பொதுமக்கள் கூடுதலாக இயக்கப்படும் பஸ்களை பயன்படுத்தி கொள்ளலாம் .மேலும் பஸ் நிலையத்தில் இரவு நேரங்களில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    ×