search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயணச்சீட்டு"

    • இதுவரை இல்லாத அளவிற்கு 2023-ம் ஆண்டில் மட்டும் 9.11 கோடி பேர் மெட்ரோ ரெயிலில் பயணித்துள்ளார்கள்.
    • வாட்ஸ்அப் டிக்கெட் மூலமாக மற்றும் பேடிஎம் ஆப் மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னை மெட்ரோ ரெயிலில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 3 லட்சம் பேர் பயணிக்கின்றனர். சென்னை மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்ட எட்டு ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு 2023-ம் ஆண்டில் மட்டும் 9.11 கோடி பேர் மெட்ரோ ரெயிலில் பயணித்துள்ளார்கள்.

    கடந்த 2022-ம் ஆண்டில் 6.09 கோடி பேர் பயணித்துள்ளார்கள். 2022-ம் ஆண்டை விட 2023-ம் ஆண்டில் 3.01 கோடி பேர் அதிகமாக பயணித்துள்ளார்கள். சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் க்யுஆர் குறியீடு பயணச்சீட்டு, பயண அட்டைகள், வாட்ஸ்அப் டிக்கெட், மற்றும் போன்பே போன்ற அனைத்து வகையான பயணச்சீட்டுகளுக்கும் 20 சதவீத கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் பேடிஎம் ஆப் மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இயந்திரத்தில் ஸ்மார்ட் கார்டு, யுபிஐ செயலி மூலம் பயணச்சீட்டு பெறலாம்.
    • ஆர்-வேலட் மூலம் பயணச்சீட்டு பெறுபவர்களுக்கு 3 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    பல்வேறு ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக கூடுதலாக 254 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் நிறுவப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. பயணச் சீட்டு பெறுவதற்காக தற்போது 99 தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்கள் பல்வேறு ரயில் நிலையங்களில் நிறுவப்பட்டுள்ளன.

    இந்நிலையில், கூடுதலாக 254 தானியங்கி பயணச்சீட்டு இயந்திரங்கள் நிறுவப்பட உள்ளன. இதில், சென்னை மண்டலத்தில் 96, திருச்சி மண்டலத்தில் 12, மதுரை மண்டலத்தில் 46, சேலம் மண்டலத்தில் 12 மற்றும் எஞ்சிய 88 இயந்திரங்கள் திருவனந்தபுரம் பாலக்காடு மண்டலத்தில் உள்ள ரயில் நிலையங்களில் நிறுவப்பட உள்ளன.

    இந்த இயந்திரத்தில் ஸ்மார்ட் கார்டு, யுபிஐ செயலி மூலம் பயணச்சீட்டு பெறலாம். மேலும், மாதாந்திர மற்றும் காலாண்டு சீசன் டிக்கெட்டுகளை புதுப்பிக்கலாம். ஆர்-வேலட் மூலம் பயணச்சீட்டு பெறுபவர்களுக்கு 3 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தைப் பயன்படுத்துவதன் மூலம், பயணச் சீட்டு பெறுவதற்காக நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை.

    தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகள் இயந்திரத்தில் இடம் பெற்றுள்ளதால் பயணிகள் எளிதாகப் பயன்படுத்தலாம் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இருப்பினும் ஏடிவிஎம் இயந்திரங்களை பயன்படுத்துவதற்கு கற்பிக்கப்பட்டால் மேலும் உதவியாக இருக்கும் என்பதே பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • முன்பதிவு இல்லாதரெயிலுக்கும் செல்போன் மூலம் டிக்கெட் எடுக்கலாம்.
    • பயணச்சீட்டு பரி சோதகர் கேட்கும்போது செயலியில் உள்ள show ticket குறியீட்டை அழுத்தி செல்போன் பயணச்சீட்டை காண்பிக்கலாம்.

    மதுரை

    செல்போன் மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய இயலும். அதேபோல முன்பதிவு இல்லாத ரெயில் டிக்கெட்டுகளையும் செல்போன் மூலம் பதிவு செய்யும் வசதி உள்ளது. இதனால் பயணிகள் டிக்கெட் வாங்குவதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை.

    செல்போனில் உள்ள பிளே ஸ்டோரில் யூ.டி.எஸ். செயலியை தரவிறக்கம் செய்து அதில் செல்போன் எண், பெயர், பாஸ்வேர்டு, பாலினம், பிறந்த தேதியை பதிவு செய்தால், தகவல்களை சரிபார்க்க ஓ.டி.பி. நம்பர் வரும். அதையும் செல்போனில் பதிவு செய்ய வேண்டும்.

    அதன் பிறகு பயணச்சீட்டு தேவைப்படும் நேரத்தில் பதிவு செய்து கொள்ளலாம் .யு.டி.எஸ். ஆப் செயலியில் செல்போன் எண், பாஸ்வேர்டு பதிவு செய்து தேவையான ரெயில் நிலையத்தை தேர்வு செய்து கொள்ளலாம். இதற்கான கட்டணத்தை மொபைல் பேங்கிங், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, ஆர்வாலட் மூலம் செலுத்தினால் பயணச்சீட்டு பதிவாகி விடும்.

    பயணச்சீட்டு பரி சோதகர் கேட்கும்போது செயலியில் உள்ள show ticket குறியீட்டை அழுத்தி செல்போன் பயணச்சீட்டை காண்பிக்கலாம்.

    குறிப்பிட்ட நிலையத்திற்கு அடிக்கடி சென்றால், அதை பதிவு செய்து Quick booking முறையில் விரைவாக பயணச்சீட்டு பெறலாம். பயணச் சீட்டுகள் மட்டுமின்றி நடைமேடை, சீசன் டிக்கெட்டுகளையும் இந்த செயலி மூலம் எளிதாக பதிவு செய்யலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    ×