search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பகுதியில்"

    • அணை திறக்கப்பட்டு ஒரு மாதமாகியும் தண்ணீர் வராததால் விவசாயிகள் கவலை
    • குமரி மாவட்டத்தில் கன்னி பூ, கும்ப பூ என இருபோக சாகுபடிகள் செய்யப்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் கன்னி பூ, கும்ப பூ என இருபோக சாகுபடிகள் செய்யப்பட்டு வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை தண்ணீரை நம்பி விவசாயிகள் சாகுபடி செய்து வருகிறார்கள். தற்பொழுது மாவட்டம் முழுவதும் கன்னி பூ சாகுபடி பணியில் விவ சாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

    சுசீந்திரம், அருமநல்லூர், தேரூர், பூதப்பாண்டி, புத்தேரி, சுங்கான்கடை, பொற்றையடி, அஞ்சுகி ராமம் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடிகள் செய்ய ப்பட்டுள்ளது. நடவுப்பணி மற்றும் நேரடி விதைப்பின் மூலமாக சுமார் 4000 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    மேலும் 1500 ஹெக்டேரில் சாகுபடி செய்ய விவசாயிகள் தயார் ஆகிவருகிறார்கள். கன்னி பூ சாகுபடிக்காக ஜூன் 1-ந்தேதி பேச்சிப்பாறை அணை திறக்கப்பட்டது. அணை திறக்கப்பட்டு 30 நாட்கள் ஆகியும் கடைமடை பகுதியில் வரை தண்ணீர் செல்லவில்லை. சானல்கள் சரி வர தூர்வாராததே இதற்கு காரணம் என்று விவசாயிகள் குற்றம் சாட்டினார்கள். இதை த்தொடர்ந்து சானல்களை தூர்வார ரூ.5 கோடியே 34 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வரு கிறது. கிளை கால்வாய்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. தோவாளை சானல், அனந்தனார் சானல் உட்பட பிரதான கால்வாய்களை தூர்வருவது தொடர்பாக விவசாய பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது 2 நாட்கள் மட்டுமே தண்ணீரை அடைத்து தூர்வார வேண்டும் இல்லாவிட்டால் நெற்பயிர்கள் பாதிக்கப்படும் என்று கருத்து தெரிவித்தார். நாகர்கோவில் புத்தேரி அருகே புளியடி பகுதியில் அனந்தனார் சானலின் கிளை கால்வாயான பீசாத்தி கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. அணை பாசனத்தை நம்பி அந்த பகுதியில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்தனர்.

    தண்ணீர் திறக்கப்பட்டு ஒரு மாதம் ஆகியும் தண்ணீர் வராததால் நெற்ப யிர்கள் காய்ந்து வருகிறது. வயல்கள் வடித்து நெற்ப யிர்கள் முற்றிலும் கருகி காணப்படுகிறது.

    இதேபோல் புத்தேரி அருகே லட்சுமி குளம், அட்டகுளம் பகுதியிலும் தண்ணீ ர் இல்லாத நிலை உள்ளது. பண்டார தோப்பு பகுதியில் பாதி அளவு சாகுபடி செய்து மீதமுள்ள இடங்களில் சாகுபடி செய்ய தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். தென்மேற்கு பருவமழை தொடர்ந்து கண்ணாமூச்சி காட்டிவரும் நிலையில் அணைகளின் நீர்மட்டமும் சரிந்து காணப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 19.45 அடியாக சரிந்துள்ளது. பேச்சிப்பாறை அணை நீர்மட்ட மும் சரிந்து வருவதால் சாகு படி செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    தென்மேற்கு பருவ மழை கை கொடுத்தால் மட்டுமே சாகுபடி செய்துள்ள அந்த பயிர்களை காப்பாற்ற முடியும் என்ற நிலைக்கு தள்ளப்ப ட்டுள்ளனர். ஆனால் தென்மேற்கு பருவ மழை தொடர்ந்து கண்ணாமூச்சி கட்டி வருகிறது. வருண பகவான் வழிவி ட்டால் மட்டுமே நெற்பயிர்களை காப்பாற்ற முடியும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

    • சமூக வலைதளங்களில் புகைப்படம் வெளியானதால் பரபரப்பு
    • தினமும் யானையை டாக்டர் குழுவினர் கண் காணித்து வருகிறார்கள்.

    கேரளா எல்லை பகுதி களிலும், தேனி மாவட்டத்திலும் மக்களை அச்சுறுத்தி வந்த அரிசி கொம்பன் யானையை வனத்துறை யினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

    பின்னர் அந்த யானையை நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை வன சரக்கத்திற்குட்பட்ட அப்பர் கோதையாறு பகுதியில் விடப்பட்டது. காட்டுக்குள் விடப்பட்ட அரிசி கொம் பன் யானை குடியிருப்பு பகுதியில் வரக்கூடும் என்பதால் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்ட வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அரிசி கொம்பன் யானையின் கழுத்தில் ரேடியோ காலர்கருவி பொருத்தப்பட்டு கண் காணிக்கப்பட்டு வருகிறது. அப்பர் கோதையாறு பகுதியில் அரிசி கொம்பன் யானைக்கு தேவையான உணவு, குடிநீர் கிடைத்து வருவதால் அந்த பகுதியிலேயே யானை சுற்றி வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் அரிசி கொம்பன் யானை மெலிந்து எலும்புகளுடன் சுற்றித்திரிவது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது. இது யானை பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    அரிசி கொம்பன் யானை மூணாறு பகுதியில் பிறந்தது. அதன் பிறகு தேனி பகுதியில் இருந்து தற்போது அப்பர் கோதையாறு பகுதியில் விடப்பட்டுள்ளது.

    அப்பர் கோதையாறு பகுதியில் யானைக்கு தேவையான தண்ணீர், உணவு வகைகள் கிடைக் கிறது. தினமும் யானையை டாக்டர் குழுவினர் கண் காணித்து வருகிறார்கள். தினமும் யானை சாப்பிடும் உணவு போன்றவையும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. யானையின் சாணத்தையும் டாக்டர் குழுவினர் கண்காணித்து வருகிறார்கள். யானை ஏற்கனவே இருந்த சீதோ சண நிலையில் இருந்து தற்பொழுது புதிய சீதோ சண நிலைக்கு வந்துள்ளது காரணமாக அதன் உடல் நிலையில் சில மாற்றங்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான்.

    அதை டாக்டர் குழு வினர் கண்காணித்து அதற் கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் கள். கடந்த 14 நாட்களாக 5 கிலோ மீட்டர் சுற்றள விலேயே யானை சுற்றி வரு கிறது. அரிசி கொம்பன் யானை குடியிருப்பு பகுதிக்கு வரும் என மக்கள் அச்சப்பட தேவையில்லை. தற்பொழுது கடல் மட்டத் திலிருந்து 1350 மீட்டர் மேல் உள்ள கோதை ஆற்றின் பிறப்பிடம் அருகே வனப் பகுதியில் தான் அரிசி கொம்பன் யானை உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
    • தமிழகத்திலேயே குமரி மாவட்டத்தில் தான் அதிக இருச்சக்கர வாகனங்கள் விற்பனை ஆகின்றன.

    கொல்லங்கோடு, ஜூன்.17-

    தமிழகத்திலேயே குமரி மாவட்டத்தில் தான் அதிக இருச்சக்கர வாகனங்கள் விற்பனை ஆகின்றன.

    இதில் நவீன ரக வாகனங்களும், விலை உயர்ந்த இருச்சக்கர வாகனங்களும் இங்கு அதிகம் விற்பனை ஆகின்றன. மாணவர்கள் மற்றும் இளைஞர்களே இத்தகைய வாகனங்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இந்த வாகனங்களில் அரசு அனும தித்து உள்ள அள வை விட அதிக ஒலி எழுப்பும் கருவி களை பொருத்தி வீதிகளிலும், சாலைகளி லும் வலம் வரு கிறார்கள்.

    குறிப்பாக கிராம புறங்களில் உள்ள சாலைகளில் இப்படி அதிக ஒலி எழுப்பியபடி செல்லும் இருச்சக்கர வாகனங்களால் பொதுமக்கள் பலரும் அலறியடித்து ஓட்டம் பிடிக்கிறார்கள். மேலும் முதியோர் மற்றும் பெண்கள், குழந்தைகள் இச்சத்தத்தை கேட்டு மிரண்டு ஓடும் சம்பவங்களும் நடக்கிறது. இப்படி அதிக ஒலியுடன் வலம் வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.

    இதையடுத்து நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த போக்குவரத்து விழிப்புணர்வு ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற கலெக்டர், குமரி மாவட்டத்தில் அதிக ஒலி எழுப்பி செல்லும் வாகனங்களை அனைத்தையும் பறிமுதல் செய்து கடும் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என போலீசாருக்கு அறிவுறுத்தினார். கலெக்டரின் உத்தரவை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் அதிக ஒலி எழுப்பும் வாகனங்கள் போக்குவரத்து போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வாகனங்களை போலீஸ் நிலையம் கொண்டு சென்ற போலீசார் அதில் பொருத்தப்பட்ட கருவிகளை அகற்றியதோடு, அதனை ஓட்டி வந்தோருக்கு அபராதமும் விதித்தனர்.

    குளச்சல் பகுதியில் நேற்று சுமார் 12-க்கும் மேற்பட்ட வாகனங்கள் போலீ சாரால் பறிமுதல் செய்யப்பட்டன. இது போல நாகர்கோ வில், தக்கலை, மார்த்தாண்டம் பகுதிகளில் வாகனங்களை கண்காணிக்கும் பணி நடந்து வரு கிறது.

    ஆனால் கொல் லங்கோடு பகுதி யில் இன்னும் அதிக ஒலி எழுப் பியபடி செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட வில்லை. இதனால் இங்கு சாலையில் நடந்து செல்லும் முதியோரும், பெண்களும் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். சில இடங்களில் ஆடு, மாடு போன்ற விலங்குகள் மிரண்டு ஓடி விபத்தை ஏற்படுத்தும் சம்பவங்களும் நடந்தது.

    எனவே இந்த பகுதியில் அதிக ஒலி எழுப்பும் வாகனங்களால் பேராபத்து ஏற்படும் முன்பு போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றமாக காணப்படுவது வழக்கம்.
    • ராட்சத அலைகள் எழுந்து மணல் பரப்பு வரை விழும்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றமாக காணப்படுவது வழக்கம். ராட்சத அலைகள் எழுந்து மணல் பரப்பு வரை விழும். இதனால் பாதுகாப்பு கருதி விசைப்படகுகள், பைபர் வள்ளங்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்வதில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு குளச்சல் கடல் பகுதியில் பலத்த காற்று வீசியதால் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகள் கரை திரும்பின. இதனால் மீன்பிடித்தொழில் பாதிக்கப்பட்டது. தற்போது கடந்த 1-ந்தேதி முதல் மேற்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகளுக்கு 60 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளதால் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை.

    ஆனால் பைபர் வள்ளங்கள், கட்டு மரங்கள் வழக்கம்போல் மீன் பிடித்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று காலை குளச்சல் கடல் பகுதியில் கடல் திடீர் சீற்றமாக இருந்து வருகிறது. ராட்சத அலைகள் எழுந்து மணல் பரப்பு வரை விழுந்து செல்கிறது.

    இந்த அலை வெள்ளத்தால் துறைமுக பழைய பாலத்தின் தூண் பகுதியில் ஏற்பட்ட கடலரிப்பு பகுதியில் மணல் குவிந்து உள்ளது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட கடலரிப்பு பகுதியில் மணல் திட்டு உருவாகி உள்ளது. குளச்சல், கொட்டில்பாடு சுற்று வட்டார பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் மணல்பரப்பில் நிறுத்தப்பட்ட பைபர் வள்ளங்களை மீனவர்கள் பாதுகாப்பாக வேறு இடத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் விசைப்படகுகள், பைபர் வள்ளங்கள் தொழில் பாதிப்பில்லாமல் வழக்கம் போல் மீன்பிடிக்க சென்றன.

    • சப்பாத்து பாலம் பகுதியில் உடல் கிடந்ததால் பரபரப்பு
    • 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சுய நினைவின்றி கிடந்துள்ளார்.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே சப்பாத்து பாலம் பகுதியில் 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சுய நினைவின்றி கிடந்துள்ளார். இதனை அந்த வழியே சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இது பற்றி அவர்கள், ஏற்றக்கோடு ஊராட்சி மன்ற தலைவி ஹெப்சி பாய்க்கு தகவல் கொடுத்தனர். அவர் சம்பவ இடம் வந்து பார்த்தார். உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தார்.

    பின்னர் அந்த வாலிபரை ஆம்புலன்சில் ஏற்றி ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அங்கு டாக்டர்கள் பரிசோ தித்த போது வாலிபர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.

    அந்த வாலிபர் யார்? அவர் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது. இதுகுறித்து திருவட்டார் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றினர். தொடர்ந்து அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

    • மாலை 5.30 மணிக்கு தொடங்கிய போராட்டம் 2 மணி நேரம் நீடித்தது.
    • வழக்கறிஞர்கள் குலசேகரம் போலீஸ் நிலையம் முன் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே மணலிவிளை பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின்ராஜ். இவர் பத்மநாபபுரம் கோர்ட்டில் வக்கீலாக உள்ளார்.

    இவருக்கு சொந்தமான இடம் மங்கலம் பகுதியில் உள்ளது. இந்த பகுதியில் செல்லுவதற்கு ரோடு எடுப்பதற்கு மங்கலம் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ரூ.1 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் அவர் வழி எடுக்க இடம் கொடுக்காததால் தான் கொடுத்த ரூபாயை திரும்ப கேட்டுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    குலசேகரம் போலீசில் இது தொடர்பாக ஜஸ்டின் ராஜ் புகார் கொடுத்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை என தெரிகிறது. இதனால் ஜஸ்டின் ராஜிற்கு ஆதரவாக பத்மநாபபுரம் வக்கீல் சங்க தலைவர் வின்சென்ட் தலைமையில் போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பலன் இல்லாததால் வழக்கறிஞர்கள் குலசேகரம் போலீஸ் நிலையம் முன் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாலை 5.30 மணிக்கு தொடங்கிய போராட்டம் 2 மணி நேரம் நீடித்தது. இதனால் கல்லுரி மாணவ-மாணவிகள் சென்ற வாகனங்கள், அரசு பஸ்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் காத்து நின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிடவில்லை. போராட் டம் இரவு 7.30 மணி வரை நீடித்தது. இன்ஸ்பெக்டர் வந்தால் தான் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று வழக்கறிஞர்கள் கூறினார்கள்.

    இதனால் குலசேகரம் பகுதியில் கடும் போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டது. மாலை நேரமானதால் பொதுமக்கள் எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் ஆவேச மடைந்து போராட்டம் நடத்தியவர்களுடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவியது.

    உடனடியாக குலசேகரம் இன்ஸ்பெக்டர் பால முருகன் வழக்கறிஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வழக்குப்பதிவு செய்வதாக உறுதி அளித்ததின் பேரில் வழக்கறிஞர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    இரவு தக்கலை டி.எஸ்.பி. குலசேகரம் போலீஸ் நிலையம் வந்து இன்ஸ்பெக்டருடன் ஆலோசனை நடத்தினார்.

    • பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
    • திற்பரப்பு பேரூராட்சிக்குட்பட்ட பினந்தோடு மாஞ்சக்கோணம் குளம் அருகே தனியாருக்கு சொந்தமான பன்றி பண்ணை.

    கன்னியாகுமரி:

    திற்பரப்பு பேரூராட்சிக்குட்பட்ட பினந்தோடு மாஞ்சக்கோணம் குளம் அருகே தனியாருக்கு சொந்தமான பன்றி பண்ணை ஒன்று செயல்பட்டு வந்தது.

    இந்த பன்றி பண்ணையில் உள்ள பன்றி கழிவுகள் எல்லாம் அதன் அருகில் உள்ள நீரோடையில் கலந்து திற்பரப்பு அருவியின் அருகில் கலந்து சென்று கொண்டு இருந்தது. மழை காலங்களில் பன்றிகளுக்கு உணவாக போடும் கழிவுகளால் அந்த பகுதி முழுவதும் தூர்நாற்றம் வீச தொடங்கியது. இதனால் அந்த பகுதி முழுவதும் சுகாதாரகேடு ஏற்பட்டு வந்தது.

    அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சுகாதாரகேடு விளைவிக்கும் பன்றி பண்ணையை அப்புறப்படுத்த வேண்டும் என்று பேரூராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தனர்.

    பேரூராட்சி நிர்வாகம் பன்றி பண்ணை உரிமையாளருக்கு பண்ணையை அகற்றும்படி நோட்டீஸ் கொடுத்தார்கள். அதன்பிறகும் பன்றி பண்ணை அகற்றப்படாமல் செயல்பட்டு வந்தது. இதை கண்டித்து அந்த பகுதியை சேர்ந்த தி.மு.க., பாரதிய ஜனதா, நாம் தமிழர் கட்சியினர் சேர்ந்து பேரூராட்சி அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். போராட்டகாரர்களிடம் பேரூராட்சி மன்ற தலைவர் பொன்.ரவி, செயல் அலுவலர் எட்வின் ஜோஸ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி 2 நாட்களில் பன்றி பண்ணை அகற்றப்படும் என்று உறுதி அளித்தனர். அதன் பிறகு சம்மந்தப்பட்ட பன்றி பண்ணை உரிமையாளருக்கு பேரூராட்சி நிர்வாகம் நோட்டீஸ் கொடுத்தது. அதன்பிறகும் அவர் பன்றி பண்ணையை காலி செய்யவில்லை.

    இதையடுத்து நேற்று பேரூராட்சி நிர்வாகம் அதிரடியாக பன்றி பண்ணையை அகற்ற சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதியுடன் மூடி சீல் வைப்பது என முடிவு செய்தனர். குலசேகரம் போலீசார் அனுமதியுடன் வருவாய் துறையினர், சுகாதார துறையினர் மற்றும் பேரூராட்சி பணியாளர்களுடன் பேரூராட்சி தலைவர் பொன். ரவி, செயல் அலுவலர் எட்வின் ஜோஸ், துணைத்தலைவர் ஸ்டாலின் தாஸ் ஆகியோர் பன்றி பண்ணையை பூட்டி சீல் வைத்தனர். உடனே பண்ணை உரிமையாளர் சுமார் 500 பன்றிகளை டெம்போவில் ஏற்றி வேறு பகுதிக்கு கொண்டு சென்றார். இதனால் அந்த பகுதியில் 2 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பன்றி பண்ணை பிரச்சினை முடிவுக்கு வந்தது.

    • காவிரி நீர் பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால், கர்நாடக அணைகள் நிரம்பி மேட்டூர் அணைக்கு உபரி நீர் அதிக அளவில் வந்து கொண்டுள்ளது.
    • காவிரி வெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடாமல் இருக்க, தாழ்வான பகுதிகளில் பொக்லின் மூலம் மண் கொட்டி மேடான பகுதியாக மாற்றும் பணியை நகராட்சி ஊழியர்கள் துவங்கியுள்ளனர்.

    குமாரபாளையம்:

    காவிரி நீர் பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால், கர்நாடக அணைகள் நிரம்பி மேட்டூர் அணைக்கு உபரி நீர் அதிக அளவில் வந்து கொண்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 45 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், குமாரபாளையம் காவிரி கரையோர பகுதியில் வசிக்கும் மக்களை மேடான பகுதிக்கு செல்லுமாறு வருவாய்த்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இவர்களை பாதுகாக்க, பாதுகாப்பு மையங்களும் தாயார் நிலையில் உள்ளன.

    இந்நிலையில் மணிமேகலை தெரு, கலைமகள் தெரு உள்ளிட்ட கரையோர பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மழைக் காலங்களில் காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது, இந்த குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்வது வாடிக்கையாக உள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வந்தனர். எனவே இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண அப்பகுதிகள் மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனிடையே, தற்போது பெய்து வரும் தொடர்மழை காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும், காவிரி வெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடாமல் இருக்க, தாழ்வான பகுதிகளில் பொக்லின் மூலம் மண் கொட்டி மேடான பகுதியாக மாற்றும் பணியை நகராட்சி ஊழியர்கள் துவங்கியுள்ளனர். முதற்கட்டமாக மணிமேகலை தெருவில் இப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    • நம்பியூர் பகுதியில் 2 வீடுகளிலும் நகை- பணம் ஏதும் கிடைக்காததால் கொள்ளையர்கள் ஏமாந்து சென்றனர்.
    • இதுகுறித்து நம்பியூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் வேணுகோபால், வெற்றிவேல்.

    வேணுகோபால் நம்பியூர் அரசு போக்குவரத்து பணிமனை கிளையில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். வெற்றிவேல் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் செயலாளராக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் வேணு கோபால் தனது வீட்டை நேற்று முன்தினம் பூட்டி விட்டு தனது மற்றொரு வீடான திருப்பூரில் உள்ள வீட்டில் தனது குடும்பத்துடன் தங்கியுள்ளார்.

    நேற்று தனது வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைத்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ மற்றும் அறைகளில் பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதேபோல் வெற்றிவேல் தனது வீட்டை இந்திராணி என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். அவரது வீட்டிலும் கதவுகள் உடைக்கப்பட்டு உள்ளே பீரோ மற்றும் அறைகளில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தது.

    2 வீடுகளிலும் நகை- பணம் ஏதும் கிடைக்காததால் கொள்ளையர்கள் ஏமாந்து சென்றனர். மேலும் கைரேகை தெரியாதவாறு பனியன் துணி மூலம் கைகளை துடைத்து விட்டு சென்றுள்ளனர்.

    இதுகுறித்து நம்பியூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டி.என்.பாளையம் அடுத்த வினோபா நகர் ஆவின் பால் கொள்முதல் நிலையம் அருகே ஒரு நாட்டு துப்பாக்கி கிடப்பதாக அப்பகுதியினர் இன்று காலை பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • இதனையடுத்து போலீசார் நாட்டு துப்பாக்கியை மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் ஊராட்சி வனப்பகுதியையொட்டிய வினோபா நகர் ஆவின் பால் கொள்முதல் நிலையம் அருகே ஒரு நாட்டு துப்பாக்கி கிடப்பதாக அப்பகுதியினர் இன்று காலை பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே பங்களாப்புதூர் தனிப்பிரிவு போலீஸ்காரர் மஞ்சுநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு கிடந்த ஒற்றை குழல் நாட்டுத் துப்பாக்கியை கைப்பற்றி போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.

    துப்பாக்கி கிடந்தது வனப்பகுதியையொட்டிய பகுதி என்பதால் யாரோ வனவிலங்குகளை வேட்டையாட பயன்படுத்தி விட்டு விட்டு சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் விசாரணை நடத்தி வருகின்றார்.

    வழக்கமாக அப்பகுதியில் ரோந்து செல்லும் வனத்துறையினர் இது போன்று துப்பாக்கி கிடப்பதை எப்படி கவனிக்க தவறினர் என்றும் அப்பகுதியினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • அம்மாபேட்டை பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
    • அம்மாபேட்டை பகுதியில் நாளை மின் விநியோகம் இருக்காது என கோபி மின்பகிர்மான வட்ட பவானி கோட்ட செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

    அம்மாப்பேட்டை:

    கோபி மின்பகிர்மான வட்டம் பவானி கோட்டம் கோனேரிப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது.

    இதையொட்டி நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அம்மாப்பேட்டை, நெரிஞ்சிப்பேட்டை, சிங்கம்பேட்டை,சித்தார்,சின்னப்பள்ள ம்,ஆனந்தம்பாளையம் குட்டமுனியப்பன்கோயில்,கேசரிமகலம்,காடப்பநல்லூர், கல்பாவி,பூதப்பாடி,எஸ்.பி.கவுண்டனூர்,குறிச்சி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என கோபி மின்பகிர்மான வட்ட பவானி கோட்ட செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

    • பெத்தாம்பாளையம் பகுதியில் 14-ந் தேதி மின் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
    • கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் பெத்தாம்பாளையம் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    ஈரோடு:

    கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் பெத்தாம்பாளையம் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதையொட்டி வரும் 14-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பெத்தாம்பாளையம், கொளத்தான் பாளையம், மூலக்கடை, செங்கோடன் பாளையம், பூச்சம்பதி, கே.ஜி.புதூர், திட்டுக்காடு, புலவர் பாளையம், தண்ணீர் பந்தல் பாளையம், எம்.ஜி.பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

    ×