search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவட்டார்"

    • திற்பரப்பு, திருநந்திக்கரை, அரசமூடு ஆகிய இடங்களுக்கு மின் வினியோகம் இருக்காது.
    • இந்த தகவலை குழித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    திருவட்டார்:

    வீயன்னூர் துணை மின் நிலைய உயர் மின்ன ழுத்தப்பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. எனவே நாளை காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை ஆற்றூர், திருவட்டார், செருப்பாலூர், வெண்டலிகோடு, வலியாற்றுமுகம், பிலாவிளை, குமரன்குடி, பூவன்கோடு, வேர்க்கிளம்பி, மணலிக்கரை, மணக்காவிளை, முகிலன்கரை, பெருஞ்சக்கோணம், காயல்கரை, சித்திரங்கோடு, சாண்டம், ஆத்துக்கோணம் ஆகிய பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது.

    இதுபோல் பேச்சிப்பாறை துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கடையாலுமூடு, கோதையார், குற்றியார், மைலார், உண்ணியூர்கோணம், சிற்றார், களியல், ஆலஞ் சோலை, பத்துகாணி, திற்பரப்பு, திருநந்திக்கரை, அரசமூடு ஆகிய இடங்களுக்கு மின் வினியோகம் இருக்காது.

    தக்கலை உபமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது. எனவே, நாளை காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மணலி, தக்கலை, பத்மநாபபுரம், குமாரகோவில், வில்லுக்குறி, புலியூர்குறிச்சி, அப்பட்டு விளை, பரசேரி, ஆளூர், பேயன்குழி, மொட்டவிளை, காரங்காடு, நெட்டான்கோடு, பூலன்கோடு, வீராணி, தோட்டி யோடு, கேரளபுரம், திருவிதாங்கோடு, வட்டம், ஆலங் கோடு, மங்காரம், புதூர், சேவியர்புரம், பரைக்கோடு, அழகியமண்டபம், கோழிப்போர்விளை, வெள்ளிகோடு, காட்டாத்துறை, சாமிவிளை, முளகுமூடு, சாமியார்மடம், கல்லுவிளை, மேக்கா மண்டபம், செம்பருத்திவிளை, மூலச்சல், பாலப்பள்ளி, மணலிக்கரை, மணக்காவிளை, சித்திரங்கோடு, குமாரபுரம், பெருஞ்சிலம்பு, முட்டைக்காடு, சரல் விளை ஆகிய இடங்களுக்கு மின் வினியோகம் இருக்காது. இந்தநேரத்தில் மின்பாதை மற்றும் மின்கதட கங்களுக்கு இடையூறாக நிற்கும் மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தக்கலை மின் வினியோக செயற்பொறியாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    இதுபோல் குழித்துறை துணை மின் நிலையத்தில் மாதாந் திர பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது. எனவே, நாளை காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை ஆலுவிளை, மேல்புறம், மருதங்கோடு, கோட்டவிளை, செம்மங்காலை, இடைக்கோடு, மாலைக்கோடு, புலியூர்சாலை, மேல்பாலை, பனச்சமூடு, அருமனை, பளுகல், களியக்காவிளை, மடிச்சல், பாலவிளை, பெருந்தெரு, பழவார், விளவங்கோடு, கழுவன் திட்டை, குழித்துறை, இடைத் தெரு ஆகிய பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை குழித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • ஐப்பசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • பிரகலாத சரிதம் கதகளி ஆகியவை நடக்கிறது.

    திருவட்டார்:

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பங்குனி மற்றும் ஐப்பசி மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு ஐப்பசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நேற்று காலை நிர்மால்யம், அபிஷேகம், தீபாராதனையை தொடர்ந்து, கருட இலச்சினை பொறிக்கப்பட்ட கொடி ஆதிகேசவ பெருமாளின் பாதத்தில் பூஜைக்கு வைக்கப்பட்டது. தொடர்ந்து மேளதாளம் முழங்க கொடி மர பீடம் அருகே கொடி கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதைத்தொடர்ந்து கோவில் தந்திரி கோகுல், தங்க கொடி மரத்தில் கொடியேற்றினார்.

    இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாக அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், உறுப்பினர் முரளிதரன் நாயர், குழித்துறை தேவஸ்வம் சூப்பிரண்டு சிவகுமார் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மதியம் அன்னதானம், இரவு சாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல் நடந்தது.

    இதையடுத்து விழாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு நவநீதம் நாராயணியம் சமிதி வழங்கும் நாராயணீய பாராயணம், இரவு 9 மணிக்கு சாமி அனந்த வாகனத்தில் பவனி, 10 மணிக்கு பிரகலாத சரிதம் கதகளி ஆகியவை நடக்கிறது. தொடர்ந்து விழா நாட்களில் தினமும் மதியம் ஸ்ரீபூதபலி எழுந்தருளல், இரவு சாமி பவனி வருதல், கதகளி ஆகியவை நடக்கிறது.

    விழாவில் 18-ந் தேதி இரவு 8 மணிக்கு கிருஷ்ணன் சன்னதியில் கொடியேற்றம் நடக்கிறது. 22-ந் தேதி இரவு 8.30 மணிக்கு சிறப்பு நாதஸ்வர கச்சேரி, 9.30 மணிக்கு சாமி கருட வாகனத்தில் பள்ளிவேட்டைக்கு எழுந்தருளல் ஆகியவை நடக்கிறது.

    விழாவின் 10-ம் நாளான 23-ந் தேதி காலை 11 மணிக்கு திருவிலக்கு எழுந்தருளல், மாலை 7 மணிக்கு சிறப்பு நாதஸ்வர கச்சேரி, இரவு 8 மணிக்கு கருட வாகனத்தில் ஆராட்டுக்கு தளியல் ஆற்றுக்கு சாமி எழுந்தருளல் ஆகியவை நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் இணைந்து செய்துள்ளனர்.

    • ரூ.20 லட்சம்‌ மதிப்பில்‌ கட்டப்பட்டு வரும்‌ ஒர்கிங்‌ சென்டர்‌ கட்டிட பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.
    • உதவி செயற்பொறியாளர்கள்‌, வட்டார வளர்ச்சி அலுவலர்கள்‌, பொதுமக்கள்‌ உட்பட பலர்‌ கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் திருவட்டார் ஊராட்சி ஒன்றியம், பேச்சிப்பாறை ஊராட்சி மற்றும் மேல்புறம் ஊராட்சி ஒன்றியம், மாங்கோடு மற்றும் புலியூர் சாலை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணி களை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட சமத்துவபுரம் குடியிருப்பில் ரூ.10.40 லட்சம் மதிப்பில் மறு சீரமைக்கப்பட்டு வரும் கட்டிட பணிகளை பார்வை யிட்டேன். பணிகளை விரைந்து முடித்து குடியி ருப்பு பகுதி மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மணியங்குழியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2021-22-ன் கீழ் ரூ.11.97 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிட பணியும் ஆய்வு செய்யப்பட் டது.அதனைத்தொடர்ந்து மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சுய உதவி குழு கட்டிட பணி களை ஆய்வு மேற்கொண்ட தோடு பணிகளை விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவு றுத்தப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம் 2022-23-ன் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஒர்கிங் சென்டர் கட்டிட பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.

    கட்டுமான பணிகளின் தரத்தினை உறுதி செய்திட வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து மேல்புறம் ஊராட்சி ஒன்றி யத்துக்குட்பட்ட மாங்கோடு ஊராட்சி பகுதியில் பிர தான் மந்திரி கிராம சாலை இணைப்பு திட்டத்தின் கீழ் ரூ.1.69 கோடி மதிப்பில் வெள்ளாடிச்சிப்பாறை-ஓடவள்ளி முதல் நெட்டா வரை 2,400 மீட்டர் நீளத்தில் புதிதாக அமைக்கப் பட்டுள்ள தார் சாலையை பார்வை யிட்டேன். சாலை யின் தரம் ஆய்வு செய்யப் பட்டது. மேலும், புலி யூர்ச்சாலை ஊராட்சி யில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.23.57 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப் பட்டு வரும் ஊராட்சி அலுவலக கட்டி டத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. இவ்வாறு அவர் கூறினார். இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, ஊராட்சி மன்ற தலைவர்கள், உதவி செயற்பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலு வலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தார்.
    • இவருக்கு மது குடிக்கும் பழக்கமும் உண்டு.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே நீங்காரவிளை, முளகுமூடு, பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 27). இவர் சினேகா (25) என்ற பெண்ணை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர் கூலி வேலை செய்து குடும்பம் நடத்தி வந்தார்.

    இவருக்கு மது குடிக்கும் பழக்கமும் உண்டு. வேலை முடிந்து வீட்டுக்கு வரும் போது மது அருந்தி விட்டு வந்து மனைவி சினேகாவிடம் தகராறு செய்வது வழக்கம்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு மது குடித்துவிட்டு வந்து மனைவி சினேகாவை அடித்து கொடுமை படுத்தி உள்ளார். அவர் தனது 3 பிள்ளைகளையும் அழைத் துக் கொண்டு தன் தந்தை வீட்டுக்கு சென்றார். மனைவி தன்னை விட்டு சென்றதை எண்ணி மன வேதனையில் சுரேஷ் இருந்து வந்தார். சம்பவத் தன்று வீட்டில் யாரும் இல்லாத போது மின் விசிறி கம்பியில் தூக்கில் தொங்கி னார்.

    இதை பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் பார்த்து சினேகாவுக்கு தகவல் கொடுத்தனர். அவர் வந்து பார்த்து உடனே திருவட்டார் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சினேகா கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • கணவர் கேரளாவில் கட்டிட வேலை பார்த்து வருகிறார்.
    • தக்கலை டி.எஸ்.பி. உதயசூரியன் சம்பவம் நடந்த இடத்தை பார்த்து ஆய்வு செய்தார்.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே நான்காம் திட்டுவிளை செறுகோல் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், கூலி தொழிலாளி. இவரது மனைவி செல்வி (வயது (57). இவர்களுக்கு ஸ்டாலின் ஜோஸ் (23) என்ற மகனும், ஷைனி (28) என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. ஸ்டாலின் ஜோஸ் கேரளாவில் கட்டிட வேலை பார்த்து வருகிறார். வாரம்தோறும் வீட்டுக்கு வருவது வழக்கம்.

    வீட்டில் செல்வராஜ் அவரது மனைவி செல்வி, மருமகள் பென்சிறோஸ் ஆகியோர் வீட்டில் வசித்து வந்தனர். சமீபகாலமாக செல்வி உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் நோய் குணமாகாததால் மன அழுத்ததில் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று காலையில் வீட்டின் பின்புற தோட்டத்தில் செல்வி தன் மீது மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார். தீ மளமளவென பிடித்து உடல் முழுவதும் பரவியது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் செல்வி உடல் கருகி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக திருவட்டார் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் ஜானகி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரனை மேற்கொண்டனர்.

    மேலும் தக்கலை டி.எஸ்.பி. உதயசூரியன் சம்பவம் நடந்த இடத்தை பார்த்து ஆய்வு செய்தார். மேலும் போலீஸ் மோப்ப நாய் குக்கி வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. செல்வியின் கணவர் செல்வராஜ் திருவட்டார் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்வி தற்கொலை செய்தது ஏன்? என்பது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • மனைவியும், 3 பிள்ளைகளும் உள்ளனர்.

    கன்னியாகுமரி:

    திருவட்டாரை அடுத்த செங்கோடி மாத்தாரை சேர்ந்தவர் மணிதாஸ் (வயது 59 ), பந்தல் தொழிலாளி.

    இவர் மாத்தார் பகுதியில் உள்ள காவு கோவில் திருவிழாவுக்காக பந்தல் அமைக்கும் வேலையில் ஈடுபட்டார். அப்போது மேல் பகுதியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த மணிதாஸ், நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இருப்பினும் சிகிச்சை பலனின்றி மணிதாஸ் பரிதாபமாக இறந்தார். சம்பவம் குறித்து திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் மணிதாசின் உடல் உறவினர்களிடம் ஒப்ப டைக்கப்பட்டது. அவருக்கு மனைவியும், 3 பிள்ளைகளும் உள்ளனர்.

    • சப்பாத்து பாலம் பகுதியில் உடல் கிடந்ததால் பரபரப்பு
    • 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சுய நினைவின்றி கிடந்துள்ளார்.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே சப்பாத்து பாலம் பகுதியில் 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சுய நினைவின்றி கிடந்துள்ளார். இதனை அந்த வழியே சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இது பற்றி அவர்கள், ஏற்றக்கோடு ஊராட்சி மன்ற தலைவி ஹெப்சி பாய்க்கு தகவல் கொடுத்தனர். அவர் சம்பவ இடம் வந்து பார்த்தார். உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தார்.

    பின்னர் அந்த வாலிபரை ஆம்புலன்சில் ஏற்றி ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அங்கு டாக்டர்கள் பரிசோ தித்த போது வாலிபர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.

    அந்த வாலிபர் யார்? அவர் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது. இதுகுறித்து திருவட்டார் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றினர். தொடர்ந்து அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

    • கலெக்டர் ஸ்ரீதர் நேரில் ஆய்வு
    • பொதுமக்களின் தேவைக் கேற்ப வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில், திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட ஏற்றக்கோடு மற்றும் குமரன்குடி ஊராட்சி பகுதிகளில் முடிவுற்ற மற்றும் நடை பெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

    பின்னர் கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-

    தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை அறிவித்து, சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட ஊராட்சி பகுதிகளில் சாலைகள் அமைப்பது, நீர் நிலைகளை தூர்வாருவது, குடிநீர் வசதி உள்ளிட்ட பொதுமக்களின் தேவைக் கேற்ப வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக, திருவட்டார் ஊராட்சி ஒன்றியம், ஏற்றக்கோடு ஊராட்சிக்குட்பட்ட குளச்சல் திருவட்டார் சாலை முதல் கட்டைக்கால் சாலை வரை தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.43 லட்சம் மதிப்பில் கருந்தளம் அமைக்கப்பட்டி ருந்த பணியினை பார்வை யிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    சிற்றார் பட்டணக்கால் கால்வாய் முதல் கூடளாகம் வரை மகாத்மா காந்தி தேசிக ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.9.80 லட்சம் மதிப்பில் நடை பெற்று வரும் கால்வாய் தூர்வாரி மேம்படுத்தும் பணியினை விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    குமரன்குடி ஊராட்சிக் குட்பட்ட கண்ணன்கரை விளை முதல் கொல்லன் விளை சாலை வரை பத்மநா பபுரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.8.99 லட்சம் மதிப்பில் அமைக்கப் பட்ட சிமெண்ட் சாலை மற்றும் கட்டி முடிக்கப் பட்ட தடுப்புச்சு வர் பணியினை யும், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சம் மதிப்பில் வடக்கநாடு பகுதியில் புதிதாக கட்டப் பட்டு வரும் அங்கன்வாடி கட்டிட பணி என மொத்தம் ரூ.71.69 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, திருவட்டார் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜெகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் யசோதா, கீதா, ஊராட்சி மன்ற தலைவர்கள் பால்சன் (குமரன்குடி), ஹெப்சிபாய் கிறிஸ்டி (ஏற்றக்கோடு), உதவி பொறியாளர்கள் சஞ்சு பொன்ராஜன், கீதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மர்மநபர்கள் கைவரிசை
    • அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே குட்டைக்குழி பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டிலுள்ள கும்பளத்தில் மகாதேவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் காலையில் பூஜை நடப்பது வழக்கம்.

    நேற்று கோவிலில் பூஜைகள் முடிந்த பின்னர் பூசாரிகள் கோவில் நடையை அடைத்துவிட்டு சென்றனர்.

    இன்று காலை யில் பூஜை செய்வதற்காக ராமன் போற்றி கோவிலுக்கு சென்றார். உள்ளே சென்று பார்க்கும்போது கோவிலில் இருந்த பெரிய 15 கிலோ எடையிலுள்ள அணையா விளக்கு, மற்றும் 20 கிலோ எடையிலான பெரிய மணி மற்றும் 10 கிலோ மதிப்பிலான சிறிய மணிகள் உட்பட சுமார் 60 கிலோ எடையிலான வெண்கல பொருட்கள் மாயமாகி இருந்தது.

    இதன்மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். இதனை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

    இதையடுத்து அர்ச்சகர் ஆலய நிர்வாகிகளுக்கு தகவல் அளித்தார். அவர்கள் சம்பவம் குறித்து திருவட்டார் போலீசில் புகார் செய்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜானகி, சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் கொள்ளை நடந்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இந்த ஆலயத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது குறிப்பிடதக்கது. அதன் பிறகு தினமும் அதிகளவு பக்தர்கள் வந்து செல்கிறார்கள். கடந்த ஜனவரி மாதம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவில் அருகே நரசிம்மர் ஆலயத்தில் உண்டியில் பணம் திருட்டு போனநிலையில் தற்போது திருவட்டார் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கொள்ளை சம்பவத்தால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்,

    • அழுகிய உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரணை
    • அவர் இறந்து 5 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என தெரிகிறது.

    கன்னியாகுமரி:

    திருவட்டாரை அடுத்த ஆற்றூர் புல்லாணி விளையை சேர்ந்தவர் ராஜேஷ், ஓட்டல் மேலாளர்.

    இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 19 வயது மகள், 14 வயது மகன் உண்டு. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ராஜேசுக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதனால் கணவரை பிரிந்து குழந்தைகளுடன் தனது பெற்றோர் வீட்டுக்கு ராஜேசின் மனைவி சென்று விட்டார். அதன்பிறகு தாயார் தங்கத்துடன் ராஜேஷ் வசித்து வந்தார்.

    பல்வேறு ஓட்டல்களில் மேனேஜராக வேலை பார்த்து வந்த ராஜேஷ், மனைவி மற்றும் குழந்தைகள் பிரிந்த பின்னர் சரியாக வேலைக்குச்செல்லாமல் குடிப்பழக்கத்துக்கு அடிமை யானார்.

    இந்த நிலையில் அவரது தாயார் தங்கத்துக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருநந்திக்கரையில் உள்ள சகோதரி வசந்தாவின் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    இதனால் ராஜேஸ் மட்டும் வீட்டில் தனிமையில் இருந்து உள்ளார். இந்த நிலையில் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது. இது தொடர்பாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த சசிகுமார் என்பவர், தங்கத்துக்கு தகவல் கொடுத்தார்.

    அதனையடுத்து தங்கம் வீட்டுக்கு வந்து பார்த்த போது, வீட்டின் முன்புற அறையில் உள்ள சோபா வில் ராஜேஸ் அழுகிய நிலையில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே திருவட்டார் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். சப்-இன்ஸ்பெக்டர் ஞானதாஸ் வழக்குப்பதிவு செய்து உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    இன்ஸ்பெக்டர் ஜானகி விசாரணை நடத்தி வரு கிறார். ராஜேசை கடந்த 15-ந்தேதி மாலை வீட்டில் வைத்து பார்த்ததாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த சசிகுமார் கூறியுள்ளார். எனவே அவர் இறந்து 5 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என தெரி கிறது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மகள் புகாரின் பேரில் போலீசார் விசாரணை
    • கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே உள்ள கொக்கவிளை, சாரூர் பகுதியை சேர்ந்தவர் கமலதாஸ் (வயது60), செங்கல்சூளை தொழிலாளி.

    இவருக்கு லைலா (47) என்ற மனைவியும் 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.மகள்கள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் கமலதாசும் அவருடைய மனைவி லைலாவும் வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.

    நேற்று மாலை கமலதாஸ் வேலைக்கு சென்றுவிட்டு மதியம் வீட்டுக்கு வந்தார்.அப்போது மனைவி லைலா சுயநினைவின்றி ரத்தக் காயங்களுடன் அங்கு கிடந்து உள்ளார். இதனை பார்த்து கமலதாஸ் அதிர்ச்சி அடைந்தார்.

    லைலாவின் இடதுபக்கம் நெற்றி மற்றும் கன்னத்தில் பலத்த காயங்கள் காணப் பட்டன.கமலதாஸ் பக்கத்து வீட்டை சேர்ந்த சுபின், எட்வின் ஆகியோர் உதவியுடன், மனைவியை மீட்டு ஆற்றூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு முதலுதவி பெற்ற பிறகு மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு லைலாவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    சம்பவம் குறித்து கமல தாஷின் மகள் அனிஷா, திருவட்டார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றியும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வேன் நடு வழியில் நின்றதால் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.
    • திருவட்டார் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்தனர்.

    கன்னியாகுமரி:

    குலசேகரத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு பார்சல் வேன் புறப்பட்டுச் சென்றது. அதனை சுபாஷ் என்பவர் ஓட்டி சென்றார்.

    புலியிறங்கி பகுதியில் வேன் சென்றபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 பேர் ஹாரன் ஒலித்தபடி வழிவிட கேட்டுள்ளனர். ஆனால் போக்குவரத்து நெருக்கடி காரணமாக வேன் டிரைவர் வழி விடாமல் மெதுவாக சென்றதாக தெரிகிறது.

    திருவட்டார் காங்கரை சந்திப்பில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள், வேன் டிரைவரை தகாத வார்த்தைகளால் பேசி, தகராறு செய்துள்ளனர். மேலும் கண் இமைக்கும் நேரத்தில் வேனின் சாவியை எடுத்துக்கொண்டு அவர்கள் தப்பி சென்றனர்.

    இதனால் டிரைவர் சுபாஷ் அதிர்ச்சி அடை ந்தார். வேன் நடு வழியில் நின்றதால் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்ததால், திருவட்டார் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்தனர்.

    இதற்கிடையில் மோட்டார் சைக்கிள் ஆசாமி கள், அங்கு வந்து வேன் சாவியை தூக்கி எறிந்து விட்டு மின்னல் வேகத்தில் சென்றனர். சம்பவம் குறித்து வேன் டிரைவர் சுபாஷ், திருவட்டார் போலீசில் புகார் செய்தார்.

    சாவியை பறித்துச்சென்ற நபர்கள் யார்? என்பது பற்றி அப்பகுதி சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றி திருவட்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×