என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருவட்டார் அருகே தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு
Byமாலை மலர்11 Jan 2023 7:38 AM GMT
- டாஸ்மாக் ஊழியர் மீது வழக்கு
- திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
திருவட்டார் அருகே உள்ள சரல்விளை அருவி க்கரை பகுதியை சேர்ந்தவர் சுனில் (வயது 37), தொழிலாளி.
இவரது உறவினர் பாபு (50) . இவர் தக்கலை பகுதியில் அரசு டாஸ்மாக்கடையில் விற்பனையாளராக பணி யாற்றி வருகிறார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் 2 பேருக்கும் முன் விரோதம் இருந்து வருகிறது.
சம்பவத்துன்று சுனிலின் வீட்டிற்குச் சென்ற பாபு தகாத வார்த்தைகள் பேசிய தோடு கையில் மறைத்து வைத்து இருந்த அரி வாளை எடுத்து சுனிலை வெட்டினார். இதில் வலது கையில் பலத்த காயம் அடைந்த அவர் சத்தம் போட்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.
இதனைப் பார்த்ததும் பாபு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். சுனில் தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து பாபுவை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X