search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரபரப்பு"

    • இதையடுத்து அருகில் இருந்த சிலரும் கூச்சல் போட்டனர்.
    • அந்த தொழிலாளி எதற்காக ஏறினார் என்று தெரியவில்லை.

    மெலட்டூர்:

    மெலட்டூர் பகுதியை சேர்ந்த 40 வயது மதிக்கதக்க கூலி தொழிலாளி ஒருவர் அரசு மருத்துவமனை அருகே உள்ள மின் டிரான்ஸ்பர்மரில் திடீரென கம்பத்தில் ஏறி மின் கம்பிகளை தொட முயற்சி செய்து கொண்டி ருந்தார்.

    அந்த வழியாக வந்த நபர் ஒருவர் பார்த்துவிட்டு அதிர்ச்சியடைந்து கீழே இறங்க சொல்லி சத்தம் போட்டுள்ளார்.

    இதையடுத்து அருகில் இருந்த சிலரும் கூச்சல் போட்டனர்.

    பின்னர் அந்த தொழிலாளி மின் கம்பத்தில் இருந்து பத்திரமாக கீழே இறங்கி அங்கிருந்து சென்றுவிட்டார்.

    அமின் ஊழியர்கள் மட்டுமே கம்பத்தில் ஏற அனுமதி என்ற நிலையில் அந்த தொழிலாளி எதற்காக ஏறினார் என்று தெரிய வில்லை.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பாம்பை லாவமாக பிடித்தனர்.

    கடலூர்:

    கடலூர் புதுக்குப்பத்தில் குழந்தைகள் மையம் செயல்பட்டு வருகின்றது. இந்த குழந்தைகள் மையத்தில் 16 குழந்தைகள் படித்து வருகின்றனர். இன்று காலை வழக்கம் போல் குழந்தைகள் மையம் இயங்கி வந்தது. அங்கு இருந்த பணியாளர் சத்து மாவு எடுப்பதற்காக அறைக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென்று பாம்பு ஒன்று இருந்தது. இதனை பார்த்து அலறிய பணியாளர் "பாம்பு பாம்பு" என அலறிக்கொண்டு அங்கிருந்த குழந்தைகளை பாதுகாப்பாக மீட்டு வெளியில் கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து அங்கிருந்து பணியாளர்கள் தங்கள் மேல் அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன் பேரில் மேல் அதிகாரிகள் கடலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பாம்பை லாவமாக பிடித்தனர். இதனை பார்த்த பிறகு தான் பணியாளர்கள் பெரும் மூச்சுவிட்டபடி அமைதி நிலைக்கு வந்தனர். தற்போது மழைக்காலங்கள் என்பதால் கட்டிடங்களுக்குள் பாம்புகள் வருவதால் அனைவரும் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தீயணைப்பு துறையினர்கள் அறிவுறுத்தினார்கள். இந்த சம்பவத்தால் பொதுமக்களும் பெற்றோர்களும் திரண்டதால் பரபரப்பாக காணப்பட்டது.

    டலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த வாலிபர் தன் மீது மண்எண்ணையை ஊற்றி கொண்டார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வாலிபரிடம் இருந்த கேனை பறிமுதல் செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று திங்கட்கி மை மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து வருகின்றனர்.இந்த நிலையில் இன்று காலை பெண் ஒருவர் தனது மகனுடன் கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்தார். அவர் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை தன் மீது ஊற்றிக்கொண்டார்.அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து உடனடியாக அவரிடம் இருந்த மண்எண்ணையை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினார்கள்.இதில் அவர் பண்ருட்டி தாலுக்கா கண்டரக்கோட்டையை சேர்ந்த பரமேஸ்வரி என்பது தெரியவந்தது. அவர் போலீசாரிடம் கூறியதாவது:- எனது கணவர் முத்துக்குமரன் என்னை 2-வது திருமணம் செய்து கொண்டு உடல்நிலை பாதிப்பு காரணமாக இறந்துவிட்டார்.நான் எனது 8 வயது மகனுடன் முத்துக்குமரன் வீட்டில் இருந்து வருகிறோம். எங்களுக்கு சரியான முறையில் உணவு, மகன் படிப்பு செலவுக்கு பணம் போன்றவைகளை வழங்காமல் அவரது குடும்பத்தார் துன்புறுத்தி வருகின்றனர்.இது தொடர்பாக பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும், நடவடிக்கை ஏதும் இல்லை. தினந்தோறும் என்னை சித்திரவதை செய்து வருவதோடு, நானும் எனது மகனும் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் மேலோங்கி வருகின்றது. எனது தாயார் வீட்டிலும் எந்தவித ஆதரவும் எனக்கு கிடையாது.ஆகையால் இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அலுவலக போலீசாரிடம் பரமேஸ்வரி கூறினார்.இதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலக போலீசார் பரமேஸ்வரி மற்றும் அவரது மகனை கலெக்டர் அலுவலகத்திற்கு உள்ளே அழைத்து சென்று மனு அளிக்க வைத்தனர். மனு தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தெரிவித்தனர்.

    மற்றொரு சம்பவம் :கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த வாலிபர் தன் மீது மண்எண்ணையை ஊற்றி கொண்டார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வாலிபரிடம் இருந்த கேனை பறிமுதல் செய்தனர்.விசாரணையில், பண்ருட்டி மேல் இருப்பை சேர்ந்த அருள் முருகன் என்பது தெரியவந்தது. அவர் கூறும்போது, எனது தந்தையின் பெயரில் நிலம் உள்ளது. ஒரு கும்பல் எனது தந்தை பெயரில் உள்ள பட்டாவை மாற்றம் செய்து உள்ளனர். இது தொடர்பாக ஏற்கனவே மனு வழங்கி உள்ளேன்.ஆனால் இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால், என் தந்தையின் பெயரில் மீண்டும் பட்டாவை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.இதனை தொடர்ந்து போலீசார் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது. உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்து தீர்வு காண வேண்டும் என எச்சரிக்கை செய்து அனுப்பினர். இந்த2 சம்பவங்களால் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • குழந்தைகளுடன் வந்தவர்கள் பரிதவிப்பு
    • பயணச்சீட்டை பெற்று பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்.

    நாகர்கோவில்:

    தமிழ்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப் பட்டது பெண்களுக்கான இலவச அரசு பேருந்து வசதி திட்டம். இந்தத் திட்டத்தின் மூலம், அதற்கென இயக்கப்படும் பிரத்தியேக அரசு பேருந்துகளில், பிரத்யேகமாக வழங்கப்படும் பயணச்சீட்டை பெற்று பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்.

    தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பெண்களுக்கான இலவச அரசு பேருந்துகளில் இலவ சமாக பயணம் செய்வதன் மூலம் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை தங்களுக்கு மிச்சமாவதாக பெண்கள் தெரிவித்துள்ளனர்.

    குமரி மாவட்டத்தில் பெண் களுக்கான இலவச அரசு பேருந்து வசதி திட்டத்தில் ஏராளமான பஸ்கள் இயக்கப் படுகின்றன. மாவட்டத்தின் புறநகர் பகுதிகளுக்கும் இலவச பஸ்கள் இயக்கப்படுவதால், கிராமப்புறம் நகர்ப்புறம் என அனைத்து பகுதி பெண்களும் பயனடைந்து வருகின்றனர்.

    குமரி மாவட்டத்தில் பெண்களுக்கான இலவச பஸ்கள் ஏராளமாக இயக்கப்படுகின்றன. காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த பஸ்களில் ஏராளமான பெண்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் பயணிக்கின்றனர். காலை முதல் இரவு வரை பெண்களுக்கான இலவச பஸ்கள் தொடர்ந்து இயக்கப் படுவதால் மார்க்கெட் மற்றும் கடைகளுக்கு செல்பவர்கள், பணி நிமித்தமாக செல்பவர்கள், பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவிகள் என அனைத்து தரப்பு பெண்களுக்கும் மிகவும் பயனுள்ள திட்டமாக இருக்கிறது.

    பெண்களுக்கான இலவச பஸ்களில் ஆண்க ளும் பயணிக்கலாம். இந்த பஸ்களில் மற்ற வகை பஸ்களை காட்டி லும், கட்டணம் குறை வாகும். இதனால் ஆண்களும் இந்த பஸ்களில் அதிகளவில் பயணிக்கின்றனர். இந்த நிலையில் நாகர்கோவிலில் பெண்களுக்கான இலவச பஸ் ஒன்று பாதி வழியிலேயே பயணிகளை இறக்கி விட்ட சம்பவம் நடந்துள்ளது.

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து அரிய பெருமாள்விளை காலனிக்கு தடம் எண் 36பி என்ற அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்தின் கீழ் இயக்கப்படும் அந்த பஸ், நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து கோட்டார், செட்டிகுளம் ஜங்ஷன், இந்து கல்லூரி, பீச் ரோடு, இருளப்ப புரம், வல்லன் குமாரன்விளை, என்.ஜி.ஓ. காலனி, மேல கிருஷ்ணன்புதூர், புத்தளம் வழியாக அரிய பெருமாள்விளை காலனிக்கு சென்று வருகிறது.

    அந்த பஸ் நேற்று பிற்பகல் 3.15 மணியளவில் வழக்கம் போல் புறப்பட்டது. அந்த பஸ்ஸில் பீச் ரோடு, இருளப்ப புரம், என்.ஜி.ஓ. காலனி, புத்தளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டிய ஏராளமான பெண்கள் பயணித்தனர். ஒரு சிலரை தவிர அனைவருமே பெண் பயணிகள் ஆவார். சில பெண்கள் தங்களது குழந்தைகளுடன் அந்த பஸ்ஸில் சென்ற னர்.

    அவர்களில் கைக் குழந்தை களுடன் வந்த பெண்களும் இருந்தனர். அனைவருக்குமே கண்டக்டர் பயணச்சீட்டை கொடுத்தார். பெண் பயணி களுக்கு இலவச பயண டிக்கெட்டை வழங்கினார். இந்நிலையில் அந்த பஸ் செட்டிகுளம் ஜங்ஷனை தாண்டி சென்று கொண்டி ருந்தது. அப்போது இந்து கல்லூரி அருகே உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அந்த பஸ் நிறுத்தப்பட்டது.

    பணிமனைக்குள் பஸ் செல்வதாக கூறி, பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் பணிமனைக்கு வெளியே இறக்கி விடப்பட்டனர். இந்த பஸ்சுக்கு பதிலாக மாற்று பஸ் மாலை 4 மணிக்கு பிறகு வரும் என்றும், அதுவரை பணி மனைக்கு வெளியே காத்திருக்குமாறும் பயணிகளிடம் கண்டக்டர் கூறினார்.

    பஸ் புறப்படும் போது எதுவும் கூறாமல், அனை வரையும் ஏற்றுக்கொண்டு செல்ல வேண்டிய இடத்திற்கு பயண டிக்கெட்டையும் கொடுத்துவிட்டு, நடுவழியில் இறக்கி விட்டதால் அந்த பஸ்ஸில் வந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். திடீ ரென நடுவழியில் இறக்கி விட்டால் தங்களது ஊருக்கு எப்படி செல்வோம் என்று சில பயணிகள் கண்டக்டரிடம் கேட்டனர்.

    அதற்கு அவர் பஸ்ஸில் ஒரு போல்ட் மாட்ட வேண்டி இருக்கிறது. ஆகவே அந்த பஸ்சை தொடர்ந்து இயக்க முடியாது. மாற்று பேருந்து வரும்வரை காத்திருக்குமாறு கண்டக்டர் கூறியிருக்கிறார். அரை மணி நேரத்திற்கு மேல் எவ்வாறு நடுவழியில் காத்திருப்பது என்று பயணிகள் கேட்டனர். அதற்கு கண்டக்டர் வேறு வழியில்லை எனவும், விரும்பினால் அண்ணா பஸ் நிலையத்திற்கு மாற்று பஸ்சில் ஏற்றி விடுவதாக தெரிவித்திருக்கிறார்.

    ஏறிய இடத்திற்கே மீண்டும் ஏற்றி விடுவதாக கண்டக்டர் கூறியதால், பயணிகள் என்ன செய்வ தென்று தவித்தபடி நின்றனர். அந்த பஸ்ஸில் தான் சென்றாக வேண்டும் என்ற நிலையில் இருந்த பயணிகள், பணிமனைக்கு வெளியிலேயே வெகு நேரம் காத்திருந்தனர். அருகில் உள்ள பகுதிக்கு செல்ல வேண்டியவர்கள் அந்த வழியாக வந்த தனியார் மினி பஸ் உள்ளிட்ட வேறு பேருந்துகளில் ஏறிச் சென்றனர். அரசு பஸ்களை பொறுத்தவரை, நடுவழியில் பழுதாகி நின்றால் செல்ல வேண்டிய இடத்திற்கு உடனடி யாக மாற்று பஸ் மூலம் பயணிகள் அழைத்து செல்லப்படுவார்கள்.

    ஆனால் பணி மனைக்கு செல்லும் ஒரு பஸ்ஸில், பயணிகளை பயணச் சீட்டு கொடுத்து ஏற்றுக்கொண்டு சென்றது மட்டுமின்றி, அவர்களை நடுவழியிலேயே இறக்கி விட்டு காத்திருக்கு மாறு கூறிய சம்பவம் அந்த பஸ்ஸில் சென்ற பயணி கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி யது. இலவச பஸ் என்பதால் பயணிகளை இவ்வாறு நடத்து கிறார்கள் என்று பெண்கள் பலர் புலம்பினர். பெண்களுக்கான இலவச பஸ்ஸில் பயணிப்போருக்கு இதுபோன்று அசவுகரியம் நடக்காத வகையில் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • பால்பண்ணை ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
    • இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் திரு முக்குளம் அருகே கூட்டுறவு பால் பண்ணை உள்ளது. இங்கு ஏராளமான ஊழி யர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ரைட்டான்பட்டி பகுதியைச் சேர்ந்த சேவுகன் (வயது57) என்பவரும் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் சரிவர வேலைக்கு வராமல் இருந்ததால் சஸ்பெண்டு செய்யப் பட்டதாக கூறப்படுகிறது. மீண்டும் வேலையில் சேர்த்து கொள்ளும்படி கேட்பதற்காக பால் பண்ணைக்கு சேவுகன் சென்றார். அப்போது உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று வேலையில் சேரும் படி சக ஊழியர்கள் கூறியுள்ளனர்.

    அதன்படி மேலாளரை சந்திப்பதற்காக சேவுகன் சென்றார். அப்போது அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் பால் பண்ணை முன்பு சேவுகன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவில்லி புத்தூர் துணை சூப்பிரண்டு முகேஷ் ஜெயக்குமார் இன்ஸ்பெக்டர் முத்துக் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    சேவுகனின் உடலை கைப்பற்றி பிரயோத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சேவுகனின் மகன் தங்க திருப்பதி ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார்.

    அதில் மேலாளர் சிவனான், ஊழியர்கள் ராம்குமார், நாராயணன், முனியசாமி ஆகியோர் சேர்ந்து தந்தையை அடித்துக் கொலை செய்ததாக கூறியிருந்தார். அதன்பேரில் இந்த வழக்கை போலீசார் கொலை வழக்கமாக மாற்றி சிவனான் உள்பட 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வேதவள்ளி வீட்டுக்குள் திடீரென 4 அடி உயரம் உள்ள நல்ல பாம்பு புகுந்தது.
    • அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் முடுக்குத் தெருவில் வசித்து வருபவர் வேதவள்ளி. இவரது வீட்டுக்குள் 4 அடி உயரம் உள்ள நல்ல பாம்பு திடீரென புகுந்தது. இதுகுறித்து பாபநாசம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    பாபநாசம் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் செல்வம் தலைமையில் தீயணைப்புத்துறை படை வீரர்கள் விரைந்து வந்து வீட்டிற்கு புகுந்த 4 அடி உயர நல்ல பாம்பினை பிடித்து சாக்கு பையில் அடைத்து அடர்ந்த காட்டுப் பகுதியில் கொண்டு சென்று விட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
    • கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்படு பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளிலும் நோயாளிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டு வருகின்றது. குறிப்பாக கடலூர் அரசு தலைமை மருத்துவமனை யில் மட்டும் கடந்த ஒரு வார மாக தினசரி 500-க்கும் மேற்பட்டோர் சளி, காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதில் சிறுவர்களே அதிகள வில் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    மேலும் தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 400-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை மேற்கொண்ட தில், 83 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டி ருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. இதற்கிடையே சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 600-க்கும் மேற்பட்டோர் இன்று கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். இதனால் பதிவு சீட்டு வாங்கும் இடத்தில் நோயா ளிகள் கூட்டம் அலை மோதியது. இவர்களில் பெரும்பாலானோர் காய்ச்ச லால் பாதிக்கப்பட்ட தங்க ளது குழந்தைகளுடன் வந்தி ருந்தனர். பின்னர் அவர்கள் நீண்ட வரிசையில் காத்தி ருந்து சிகிச்சை பெற்று சென்றனர்.

    இதில் 3 நாட்களுக்கு மேல் தொடர் காய்ச்சலால் அவதிப்பட்ட 70-க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் காய்ச்சல் பரிசோ தனை செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவு நாளை (செவ்வாய்க்கிழமை) தெரி விக்கப்பட உள்ளது. கடலூர் மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி 36 ேபர்கள் டெங்கு காய்ச்ச லால் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்க தாகும்.

    • மோட்டார் சைக்கிள் லாரியில் சிக்கி 1 கி.மீ. தூரம் இழுத்து சென்றதால் பரபரப்பு
    • உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே கொஞ்ச மங்கலம் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவர் ஒழுந்தியாம்பட்டு பகுதியில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சேகரின் மகன் சுதாகர் (வயது 26) விவசாயி. நேற்று இரவு சுதாகர் கிளியனூர் பகுதியை சேர்ந்த தனது நண்பர் அசோக் (27) என்பவருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் ஒழுந்தியாம்பட்டில் வேலை பார்க்கும் தனது தந்தை சேகரை பார்க்க சென்றனர். பின்னர் ஒழுந்தியாம்பட்டு அருகே சாலை ஒரமாக மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு 2 பேரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது புதுவையில் இருந்து திண்டிவனம் நோக்கி லாரி ஒன்று வந்தது. 

    இதனையடுத்து லாரி ஒழுந்தியாம்பட்டு பகுதியில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த சுதாகர், இவரது நண்பர் அசோக் மீது வேகமாக மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த விபத்து நடந்தது. இந்த விபத்தில் லாரி மோதி 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சாலையில் சிதறி விழுந்தனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலே சுதாகர் துடிதுடித்து இறந்தார். அசோக் பலத்த படுகாயம் அடைந்தார். இதனையடுத்து விபத்தை ஏற்படுத்திவிட்டு லாரி டிரைவர் தொடர்ந்து அங்கு இருந்து லாரியை ஓட்டி சென்றார். அப்போது சுதாகர், அசோக் வந்த மோட்டார் சைக்கிள் லாரியில் சிக்கி கொண்டு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை இழுத்து சென்றது. இதில் மோட்டார் சைக்கிள் சாலையில் வேகமாக உறசி பயங்கர சத்தம் கேட்டது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் இந்த பயங்கர சத்தத்தை கேட்டு பதறினர். பின்னர் அவர்கள் சாலையில் தறிகெட்டு வந்த லாரியை மடக்கி டிரைவரை பிடித்தனர். இந்த சம்பவம் குறித்து கிளியனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த கிளியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிவ ண்ணன் தலைமையி லான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விப த்தில் உயிரிழந்த சுதாகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் படுகாயம் அடை ந்த அசோகை மீட்டு சிகிச்சை க்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இந்த விகத்தை நடத்திய தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியை சேர்ந்த முத்துபாண்டி (40) லாரி டிரைவரை போலீசார் கைது செய்து தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையில் நின்று பேசிக்கொண்டி ருந்தபோது லாரி மோதி விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • அஸ்வின்குமாருக்கு திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்தனர்.
    • 1 லட்சம் ரொக்க பணம் திருடு போய் இருந்தது தெரியவந்தது.

    கடலூர்:

    பண்ருட்டி எல்.என்.புரம் குமரன் நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி புஷ்பலதா (வயது 51). இவர்களின் 2-வது மகன் அஸ்வின்குமாருக்கு திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்தனர். இதனால் வருகிற 17-ம்தேதி நடைபெற உள்ள மகன் திருமணத்திற்கு உறவினர்கள் வீட்டிற்கு பத்திரிகை வைப்பதற்கு 2 நாட்களாக வீட்டிலிருந்து வெளியில் சென்றதாக தெரிகிறது.

    வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று இரவு ரவிச்சந்திரன் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து வீட்டினுள் இருந்த பீரோவில் நகை, பணத்தை கொள்ளை அடித்து சென்றனர். பின்னர் வீட்டிற்கு வந்த ரவிச்சந்திரன் மற்றும் இவரது மனைவி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 15 பவுன் நகை, 3 கிலோ வெள்ளி பொருட்கள், 1 லட்சம் ரொக்க பணம் திருடு போய் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ரவிச்சந்திரன் பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் திருட்டு நடந்த வீட்டிற்கு வந்து பார்வையிட்டு வழக்குபதிவு செய்து பீரோவை உடைத்து கைவரிசை காட்டிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • அந்தியூர் பகுதியில் முகமூடி அணிந்து மர்ம நபர்கள் குழந்தைகளை கடத்த வந்ததாக பரபரப்பு ஏற்பட்டது
    • எனவே போலீசார் அந்தியூர் பகுதியில் இரவு ரோந்து பணியினை தீவிரப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    அந்தியூர்;

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சாந்திய பாளை யம் பகுதியில் ஏராளமான பொது மக்கள் வசித்து வருகிறார்கள். அந்த பகுதியில் ஒரு மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த நிலையில் அந்த பகுதியில் நேற்று இரவு குழந்தைகள் விளையாடி கொண்டு இருந்தனர். அப்போது அங்கு ஒரு காரில் மர்ம நபர்கள் சிலர் முகமூடி அணிந்து கொண்டு வந்தனர். அந்த மர்ம நபர்கள் குழந்தையை கடத்த வந்ததாக கூறப்படுகிறது.

    அவர்கள் பொதுமக்களை கண்டதும் அங்கு இருந்து காரில் தப்பி சென்றாக மக்கள் கூறினர். இது குறித்த தகவல் அந்தப் பகுதி பொதுமக்கள் சமூக வளை தலங்களில் பதிவிட்டனர். இந்த தகவல் வேகமாக பரவியது. இத னால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. இது குறித்து போலீசா ருக்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது. இதனை அடுத்து அந்தப் பகுதிக்கு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சக்திவேல், கமலக்கண்ணன் மற்றும் போலீசார் சென்று விசா ரணை நடத்தினர்.

    மேலும் காரில் வந்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசார ணை நடத்தி வரு கிறார்கள். இதனால் அந்த பகுதி பொது மக்கள் ஒரு வித அச்சத்தோடு இருந்து வரு கிறார்கள். எனவே போலீசார் அந்தியூர் பகுதியில் இரவு ரோந்து பணியினை தீவிரப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • அலுவலகத்தில் நேற்று சார் பதிவாளர் கணேசன் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு இருந்தார்.
    • போலீசார் வேறு வழியின்றி அவர்களை விசாரணைக்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    உடுமலை:

    உடுமலை கச்சேரி வீதியில் சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. அலுவலகத்தில் நேற்று சார் பதிவாளர் கணேசன் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு இருந்தார்.அப்போது அங்கு வருகை தந்த உடுமலை தாலுகா சாலையூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ் செல்வி மற்றும் அவரது கணவர் ஆறுச்சாமி ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பத்திரப்பதிவு சம்பந்தமாக சார்பதிவாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் அலுவலகப்பணிக்கு இடையூறு செய்ததுடன் கூச்சல் போட்டு ரகளை செய்தனர்.அதைத் தொடர்ந்து சார்பதிவாளர் அலுவலகத்தின் மூலம் உடுமலை போலீஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன் பேரில் அங்கு வருகை தந்த போலீசார் அந்த தம்பதியிடம் சமாதானம் பேசினார்கள். அதற்கு அவர்கள் உடன்பட மறுத்து தொடர்ந்து சார் பதிவாளர் மீது குற்றச்சாட்டு வைத்து ரகளையில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் வேறு வழியின்றி அவர்களை விசாரணைக்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    இது குறித்து சார்பதிவாளர் கணேசன் போலீசில் புகார் ஒன்றையும் அளித்தார்.அதன் பேரில் மனுஏற்பு ரசீது பதிவு செய்யப்பட்டது. பின்னர் அந்த தம்பதிக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    அலுவலகத்தில் நேற்று சார் பதிவாளர் கணேசன் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு இருந்தார்.இந்த சம்பவத்தால் பத்திர பதிவு பாதிக்கப்பட்டதுடன் கச்சேரி வீதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.

    • விவசாயிகள் அந்த பகுதியில் ஒன்று திரண்டு போரா ட்டம் நடத்தினர்.
    • இதையடுத்து சிவகிரி பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    சிவகிரி:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே மாரப்பன் பாளையம் கன்னிமார் தோட்டம் என்ற இடத்தில் எல். பீ .பி. வாய்க்கால் செல்கிறது

    இந்த வாய்க்காலின் இடது கரையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுமார் 200 மீட்டருக்கு பக்க வாட்டு தடுப்பு சுவர் அமைக்க முடிவு செய்யபட்டு பணிகள் தொடங்கியது.

    இதற்கு அந்த பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் வாய்க்காலில் கான்கிரீட் சுவர் அமைக்க கூடாது என்று தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பணிகள் நிறுத்த ப்பட்டது.

    இந்நிலையில் நேற்று அப்பகுதியில் மீண்டும் வாய்க்கால் பக்கவாட்டு தடுப்பு சுவர் வேலை தொடங்கப்ப்பட்டதாக கூறப்படுகிறது. இதை பற்றி தகவல் கிடைத்ததும் விவசாயிகள் அந்த பகுதியில் ஒன்று திரண்டு போரா ட்டம் நடத்தினர்.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் ஈரோடு நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம், ஈரோடு நீர்வள துறை செயற் பொறியாளர் திருமூர்த்தி, நீர்வள துறை உதவி செயற் பொறியாளர் ஜெய பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்து க்கு விரைந்து வந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் விவ சாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகள் இங்கு கான்கிரீட் சுவர் அமைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ஆனால் அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து போலீசார் போராட்டம் நடத்திய 20 விவசாயிகளை கைது செய்து சிவகிரி உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    அதை தொடர்ந்து போலீசாரின் பாதுகாப்பு டன் நீர்வளது றை உதவி பொறி யாளர் முருகேசன் முன்னி லை யில் தடுப்புச்சுவர் அமை க்கு பணிகள் தொடர்ந்து நடைபெற்றது. பின்னர் மாலையில் அனை வரும் விடுவிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் வாய்க்கா லின் இடது கரையில் பக்க வாட்டு தடுப்பு சுவர் அமைக்க கான்கிரீட் சுவர் அமைப்பதற்கு விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரி வித்தனர்.

    இதையடுத்து சிவகிரி பகுதியில் விவசாயி கள் ஒன்று திரண்டு இன்று மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

    இதையடுத்து சிவகிரி பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்ப ட்டது.

    ×