பத்மநாபபுரத்தில் பா.ஜனதாவினர் நடத்திய போராட்டத்திற்கு பிறகு வைத்த பாரதமாதா படம் மீண்டும் அகற்றப்பட்டதால் பரபரப்பு

பத்மநாபபுரம் கோட்டை வாசல் முன்பு அரசியல் மற்றும் அமைப்பு சார்ந்த போர்டுகள் வைக்கப்பட்டிருந்தது. பாரத மாதா ப்ளக்ஸ் போர்டும் அங்கு வைக்கப்பட்டிருந்தது.
நள்ளிரவில் மீண்டும் வைக்கப்பட்ட பாரதமாதா போர்டு.
நள்ளிரவில் மீண்டும் வைக்கப்பட்ட பாரதமாதா போர்டு.
Published on

கன்னியாகுமரி:

பத்மநாபபுரம் கோட்டை வாசல் முன்பு அரசியல் மற்றும் அமைப்பு சார்ந்த போர்டுகள் வைக்கப்பட்டி ருந்தது. இதேபோல் பாரத மாதா ப்ளக்ஸ் போர்டும் அங்கு வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அந்த போர்டுகளை பத்மநாபபுரம் நகராட்சி பணியாளர்கள் நேற்று காலையில் அகற்றி னர். இதை அறிந்த பாரதிய ஜனதா கவுன்சிலர் உன்னி கிருஷ்ணன் உள்ளிட்டோர் மாலையில் நகராட்சி அலு வலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இவர்களுக்கு ஆதரவாக குமரி மாவட்ட பாரதிய ஜனதா ஓ.பி.சி. அணித்தலை வர் குமாரதாஸ், மாவட்ட துணைத் தலைவர் ரமேஷ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அவர்கள் நகராட்சி வளாகத்தில், உள்ளிருப்பு போராட்டத்தி லும் ஈடுபட்டனர். தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன், ஆணை யாளர் லெனின் ஆகியோர் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதில்உடன்பாடு ஏற்படா ததால் கவுன்சிலர்கள் அலுவ லக அறைக்குள் சென்று தரையில் அமர்ந்து உள்ளி ருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். அவர்களுடன் நகராட்சி தலைவர் அருள் சோபன் பேச்சு வார்த்தை நடத்தினார். தொடர்ந்து பாரத மாதா போர்டு போரா ட்டம் நடத்தியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதனை பெற்றுக் கொண்ட அவர்கள், அகற்ற ப்பட்ட இடத்திலேயே இர வில் வைத்துச் சென்றனர். இந்த நிலையில் இன்று காலை அந்த இடத்தில் பாரதமாதா போர்டு மாயமாகி இருந்தது.

இதுபற்றி விசாரித்த போது, நகராட்சி நிர்வாகம் அந்த போர்டை மீண்டும் அகற்றியிருப்பதாக தெரியவந்தது. இதனால் பாரதிய ஜனதாவினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com