search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாட்டு"

    • செம்பொன் விளை-திக்கணங்கோடு சாலையில் நாட்டு வைத்திய சாலை நடத்தி வருகிறார்.
    • 4 பவுன் நகை பறிப்பு

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே பெத்தேல்புரம் படுவாக்கரை பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 71).

    இவர் செம்பொன் விளை-திக்கணங்கோடு சாலையில் நாட்டு வைத்திய சாலை நடத்தி வருகிறார். கடந்த 24-ந்தேதி வைத்திய சாலையில் ஜார்ஜ் இருந்த போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் அவரை தாக்கிவிட்டு 4 பவுன் நகையை பறித்து சென்றார்.

    இதுகுறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப் பற்றி விசாரணை நடத்தப்பட்டது.

    இந்த வழக்கு தொடர்பாக கொடுப்ப குழியை சேர்ந்த சிவசங்கு (53) அவரது மகன் கார்த்திக் என்ற ஜோதி (29), அபிஷேக் (22), சுபின் (19) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அபிஷேக் அரசு ஊழியர் ஆவார். கைது செய்யப்பட்ட 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இந்த வழக்கில் கொடுப்ப குழியை சேர்ந்த சிவா (27) என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    முக்கிய குற்றவாளியான இவரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டி ருந்தது. தனிப்படை போலீ சார் சிவாவை தேடி வந்த னர். இந்த நிலையில் சிவா இரணியல் கோர்ட்டில் நேற்று மாலை சரணடைந்தார். போலீசார் அவரை காவல் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

    • தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்திற்கான பசுமை திட்டத்தின் கீழ் நாட்டு வைத்தியம், பாரம்பரிய மருத்துவ பயிற்சி குறித்தான கருத்தரங்கம் நடைபெற்றது.
    • இதில் ஏற்காடு பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் வனத்துறை சார்பில், சேலம் மண்டல வனப்பாதுகாவலர் பெரியசாமி முன்னிலையில் தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்திற்கான பசுமை திட்டத்தின் கீழ் நாட்டு வைத்தியம், பாரம்பரிய மருத்துவ பயிற்சி குறித்தான கருத்தரங்கம் நடைபெற்றது.

    இந்த கருத்தரங்கில் சேலம் மாவட்ட வன அலுவலர் ஷசாங் ரவி, உதவி வனபாதுகாவலர்கள் கண்ணன் மற்றும் சிவகுமார், இமாசல பிரதேசத்தில் உள்ள தர்மசாலா மாவட்ட வனப்பாதுகாவலர் ரெஜினால்டு ராய்டன், ஏற்காடு உதவி மருத்துவ அலுவலர் டாக்டர் பாலமுருகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

    இதில் ஏற்காடு பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். கருத்தரங்கில் பேசிய சேலம் மாவட்ட வனப்பாதுகாவலர் பெரியசாமி, வனத்தையும், வனப்பகுதியில் உள்ள மூலிகை செடிகளையும் எவ்வாறு பாதுகாப்பது என்று பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினார்.

    பின்னர் பேசிய சித்த மருத்துவர் பாலமுருகன், நம் அதிகம் பயன்படுத்தும் நெல்லிக்காய், எலுமிச்சை, முருங்கை, முடக்கத்தான் கீரை, கீழாநெல்லி, சீத்தாப்பழம், கருவேப்பிலை, புதினா, வேம்பு போன்றவற்றின் பலன்களை விளக்கி கூறினார். முடிவில் ஏற்காடு வனச்சரக அலுவலர் பழனிவேல் நன்றி கூறினார்.

    • டி.என்.பாளையம் அடுத்த வினோபா நகர் ஆவின் பால் கொள்முதல் நிலையம் அருகே ஒரு நாட்டு துப்பாக்கி கிடப்பதாக அப்பகுதியினர் இன்று காலை பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • இதனையடுத்து போலீசார் நாட்டு துப்பாக்கியை மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் ஊராட்சி வனப்பகுதியையொட்டிய வினோபா நகர் ஆவின் பால் கொள்முதல் நிலையம் அருகே ஒரு நாட்டு துப்பாக்கி கிடப்பதாக அப்பகுதியினர் இன்று காலை பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே பங்களாப்புதூர் தனிப்பிரிவு போலீஸ்காரர் மஞ்சுநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு கிடந்த ஒற்றை குழல் நாட்டுத் துப்பாக்கியை கைப்பற்றி போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.

    துப்பாக்கி கிடந்தது வனப்பகுதியையொட்டிய பகுதி என்பதால் யாரோ வனவிலங்குகளை வேட்டையாட பயன்படுத்தி விட்டு விட்டு சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் விசாரணை நடத்தி வருகின்றார்.

    வழக்கமாக அப்பகுதியில் ரோந்து செல்லும் வனத்துறையினர் இது போன்று துப்பாக்கி கிடப்பதை எப்படி கவனிக்க தவறினர் என்றும் அப்பகுதியினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×