search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடல்"

    • இந்தியாவில் அனைத்து வித நோய்களும் தவறான உணவு பழக்கத்தால் 56.4 சதவீதம் ஏற்பட்டு வருகிறது.
    • எனவே தவறான உணவு பழக்கத்தை மக்கள் கடைபிடிப்பதை தவிர்க்க வேண்டும் என ICMR எச்சரித்துள்ளது.

    உடற்பயிற்சி கூடங்களில் உடற்பயிற்சி செய்பவர்கள் புரோட்டீன் சப்ளிமெண்ட் அதிகம் பயன்படுத்தும் பழக்கம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

    இவற்றை உட்கொள்வதால் உடலின் செயல்பாடுகளில் பலவித மாற்றங்களும், உடல்நலக் கோளாறுகளும் ஏற்பட்டு உடல் உறுப்புக்கள் பாதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துகொண்டேதான் இருக்கிறது.




    இந்த நிலையில் தான் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ( ICMR ) இந்திய மக்களுக்கான புதிய உணவு வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

    புரோட்டீன் சப்ளிமெண்ட்களில் மற்றும் செயற்கை உணவு பொருட்களில் சர்க்கரை, கலோரி அல்லாத இனிப்புகள் மற்றும் செயற்கை சுவைகள் இருக்கலாம்.இதை சாப்பிடுவதால் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பாதிக்கப்படுவது தற்போது அதிகரித்து வருகிறது. 

    எனவே உடல் எடையை அதிகரிக்க புரோட்டீன் சப்ளிமெண்ட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.




    முட்டை, பால் பால், மோர் மற்றும் சோயா பீன்ஸ், பட்டாணி மற்றும் அரிசி போன்ற பல்வேறு தாவர அடிப்படையிலான பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் இந்த புரத பவுடர்கள் சப்ளிமெண்ட்ஸ், உடற்பயிற்சி ஆர்வலர்கள் மற்றும் தசை வளர்ச்சிக்காக அதிகமாக பயன்படுத்துவதால் பலவித எதிர் விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

    புரோட்டீன் பவுடர்களை அதிக அளவில் நீண்ட காலத்திற்கு உட்கொள்வதால் எலும்பு தாது இழப்பு மற்றும் சிறுநீரக பாதிப்பு உருவாகும். ஒவ்வொருவரும் தினமும் உண்ணும் உணவில் சர்க்கரை அளவு 5 சதவீதத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும்.




    நாம் சாப்பிடும் உணவில் உப்பு, சர்க்கரை, கொழுப்பு ஆகியவற்றை குறைக்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறைத்தல் மிகவும் அவசியமாகும்.பெரும்பாலான கலோரிகள், கொட்டைகள், காய்கறிகள், பழங்கள், பால் போன்ற இயற்கை பொருட்களில் நமது உடலுக்கு கிடைக்க வேண்டும்.

    இந்தியாவில் அனைத்துவித நோய்களும் தவறான உணவு பழக்கத்தால் 56.4 சதவீதம் ஏற்பட்டு வருகிறது. எனவே தவறான உணவு பழக்கத்தை மக்கள் கடைபிடிப்பதை தவிர்க்க வேண்டும் என ICMR எச்சரித்துள்ளது.




    மேலும், உடல் செயல்பாடு மற்றும் ஆரோக்கியமான உணவு பழக்கங்கள் மூலம் கரோனரி இதய நோய் (CHD)மற்றும் உயர் இரத்த அழுத்தம் (HTN) ஆகியவற்றின் கணிசமான விகிதத்தைக் குறைப்பதுடன், டைப் 2 நீரிழிவு நோயை 80 சதவீதம் வரை தடுப்பதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.

    • உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
    • ருக்‌ஷாவை கொலை செய்து உடலை அலமாரியில் வீசி சென்றிருக்கலாம் என அவரது தந்தை போலீசாரிடம் புகார் அளித்தார்.

    புதுடெல்லி:

    தென்மேற்கு டெல்லியில் துவாராகாவின் ராஜபுரி பகுதியை சேர்ந்தவர் முஸ்தகின்.

    இவர் அப்பகுதியில் உள்ள டப்ரி போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் ஒரு புகார் அளித்தார். அதில், தனது மகள் ருக்ஷாரை (வயது26). கடந்த சில நாட்களாக தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் தங்கி இருந்த வீடு பூட்டப்பட்டுள்ளது. மாயமான எனது மகளை கண்டுபிடித்து தர வேண்டும் என கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் போலீசார் ருக்ஷா தங்கியிருந்த வீட்டுக்கு சென்றனர். பிளாட்டுக்குள் நுழைந்து போலீசார் பல்வேறு இடங்களில் தேடிய போது ருக்ஷார் கொலை செய்யப்பட்டதும், அவரது உடல் அலமாரியில் வீசப்பட்டதும் தெரியவந்தது.

    அவரது உடல் முழுவதும் காயங்கள் இருந்தன. கழுத்தை கத்தியால் நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. மேலும் வீடு முழுவதும் பொருட்கள் சிதறி கிடந்தன. அவரது உடல் கதவு அருகே உள்ள அலமாரியில் அமர்ந்த நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டதாக துணை போலீஸ் கமிஷனர் அங்கித்சிங் கூறினார்.

    இதைத்தொடர்ந்து உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    ருக்ஷார், குஜராத்தின் சூரத் பகுதியை பூர்வீகமாக கொண்ட விபால் டெய்லர் என்ற வாலிபருடன் கடந்த 1½ மாதங்களாக அந்த வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இருவரும் அந்த வீட்டில் திருமணம் செய்யாமல் வசித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ருக்ஷார் அவரது தந்தைக்கு போன் செய்துள்ளார்.

    அப்போது தனது நண்பரான விபால் டெய்லர் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் கூறியுள்ளாராம். எனவே அவர் ருக்ஷாவை கொலை செய்து உடலை அலமாரியில் வீசி சென்றிருக்கலாம் என அவரது தந்தை போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில், கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார் விபால் டெய்லரை தேடி வருகின்றனர்.

    • தேமுதிக அலுவலகத்தில் இருந்து விஜயகாந்தின் உடல் வாகனம் மூலமாக பூந்தமல்லி சாலை வழியாக தீவுத்திடலுக்கு எடுத்து வரப்பட்டது.
    • போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

    சென்னை:

    தேமுதிக நிறுவனரும், பிரபல திரைப்பட நடிகருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரின் உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில், அவரது உடலுக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வந்தனர். அவரது உடல் இன்று மாலை 4.45 மணிக்கு தேமுதிக தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

    இந்த சூழலில் விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை தீவுத்திடலில் தற்போது வைக்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் இருந்து விஜயகாந்தின் உடல் வாகனம் மூலமாக பூந்தமல்லி சாலை வழியாக தீவுத்திடலுக்கு எடுத்து வரப்பட்டது.

    இந்த நிலையில் தீவுத்திடல் பகுதியில் மக்கள் அதிக அளவில் கூடிவருகின்றனர். இதன் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். அதன்படி, வாகனங்கள் காமராஜர் சாலையில் இருந்தும் மன்றோ சிலை மற்றும் சென்டிரல் வழியாகவும் தீவுத்திடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தீவுத்திடல் மைதானம், ஈ.வி.ஆர். சாலை, அண்ணா சாலை, காமராஜர் சாலை, கோயம்பேடு மேம்பாலம், கோயம்பேடு, வடபழனியில் இருந்து திருமங்கலம் வரையிலான 100 அடி சாலை ஆகிய முக்கிய பகுதிகளுக்குள் வணிக வாகனங்கள் அனுமதிக்கப்படாது.

    அனைத்து விஐபி மற்றும் விவிஐபி வாகனங்களும் காமராஜர் சாலை, நேப்பியர் பாலம், போர் நினைவுச் சின்னம், தீவுத்திடல் மைதானத்தின் இடதுபுற நுழைவு வழியாக அண்ணாசாலை செல்லும் சாலையில் அனுமதிக்கப்படும். பிற மூத்த கலைஞர்கள், பல்லவன் முனை, வாலஜா முனை(அண்ணாசாலை, கொடிப்பணியாளர் சாலை சந்திப்பு) வரை அனுமதிக்கப்படுவார்கள்.

    தீவுத்திடல் மைதானம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில், போக்குவரத்து நெரிசலாக இருக்கும் என்பதால் வாகன ஓட்டிகள் மாற்று வழியை தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் கட்சி வாகனங்கள், கனரக வாகனங்கள்(போக்குவரத்து பேருந்துகள், மேக்சிகேப்கள்) அண்ணா சிலைக்கு அனுமதிக்கப்படும்.

    மேலும் கட்சிக் குழுவினர் கடற்கரை சாலை வாகன நிறுத்துமிடத்திற்கு திருப்பி விடப்படுவார்கள். அனைத்து இலகுரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், தன்னார்வ வாகனங்கள் பெரியார் சிலை, சுவாமி சிவானந்தா சாலை, எம்எல்ஏ விடுதி சாலை வழியாக அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
    • தமிழகத்தில் சுகாதாரத்துறை செயல்படவில்லை

     புதுக்கோட்டை 

    புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

    இதில் தெற்கு மாவட்ட செயலாளர் வைரமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக் தொண்டைமான், பாசறை கருப்பையா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.பின்னர் டாக்டர் விஜய் பாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது ;-

    வருகிற நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்ல எந்த தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க அ.தி.மு.க. தயாராக உள்ளது. உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை என்பது நல்ல விஷயம் என்றாலும் அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. தி.மு.க. ஆட்சியில் சுகாதாரத்துறை செயல்படாமல் திறனற்ற துறையாக, தலை இல்லாத துறையாக உள்ளது. இதனால் மக்களும், நோயாளிகளும் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

    எம்.ஆர்.பி. செவிலியர்கள் தொடர்ந்து சென்னையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அந்த செவிலியர்களுக்கு பணி கொடுக்க இந்த அரசுக்கு மனமில்லை 2 1/2 ஆண்டுகளில் மருத்துவர் உள்ளிட்ட எந்தவித மருத்துவ பணியிடங்களும் நிரப்பப்படவில்லை. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தமிழகத்தில் 2-வது பல் மருத்துவ கல்லூரியினை புதுக்கோட்டையில் தொடங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. ஆட்சி மாற்றத்தால் 2 1/2 ஆண்டு காலம் முடிந்த பிறகும் இதுவரை பல் மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு தாமதம் செய்து வருகிறார்கள். தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்பட்டால் மட்டுமே டெங்குவை ஒழிக்க முடியும். வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. இனியாவது அரசு விழித்துக் கொண்டு டெங்கு ஒழிப்பு பணிகளை முடுக்கி விட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • கோவில்பாளையம் போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • முட்புதரில் குழந்தையை மர்மநபர் வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கோவை,

    கோவை கோவில்பாளையம் அருகே உள்ள கருவலூர் ரோட்டில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி அருகே கவுசிகா நதி செல்கிறது. இந்த நதிக்கரையில் உள்ள முட்புதரில் பிறந்து சில நாட்களேயான ஆண் குழந்தை இறந்த நிலையில் கிடந்தது. இதனை பார்த்த அந்த வழியாக சென்ற கல்லூரி மாணவர் ஒருவர் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    உடனடியாக அவர் இதுகுறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை ஆய்வு செய்தனர். அப்போது குழந்தை பிறந்து 2 நாட்கள் இருக்கும் என்பது தெரிய வந்தது. மேலும் குழந்தையின் உடலில் எறும்பு கடித்த காயங்கள் மட்டுமே இருந்தது. வேறு எந்த காயமும் இல்லை.

    பின்னர் கோவில்பாளையம் போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை முட்புதரில் வீசி சென்றவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை வீசி சென்றார்களா அல்லது குழந்தை இறந்து பிறந்ததால் வீசி சென்றார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் அந்த பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கடை களில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு காமிராக்களில் குழந்தையை வீசி சென்ற மர்மநபர் வந்து செல்லும் காட்சிகள் எதுவும் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர்.

    முட்புதரில் குழந்தையை மர்மநபர் வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வரு கிறார். இவர்களது 2-வது மகன் சரண் (17), அம்மாப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
    • நேற்று காலை வழக்கம் போல ஜிம்முக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர் அங்கு செல்லாமல் திடீரென மாய மானார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள முத்தம்பட்டியை சேர்ந்தவர் மகாலிங்கம் ரத்த பரிசோதனை லேப் வைத்துள்ளார். இவரது மனைவி வசந்தி, இவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வரு கிறார். இவர்களது 2-வது மகன் சரண் (17), அம்மாப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    ஏரி

    இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல ஜிம்முக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர் அங்கு செல்லாமல் திடீரென மாய மானார். பின்னர் போலீசார் அவரது செல்போன் எண்ணை வைத்து அவரை தேடினர். அப்போது கன்னங்குறிச்சி புது ஏரி பகு தியை காட்டியது. தொடர்ந்து போலீசார் அங்கு சென்று பார்த்த போது ஏரிக்கரையில் சர ணின் மோட்டார் சைக்கிள், செல்போன், செருப்பு, ஐ.டி.கார்டு ஆகியவை இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் ஏரியில் தேடினர். பிற்பகல் 3 மணி யளவில் சரணின் உடலை தீயணைப்பு வீரர்கள் பிண மாக மீட்டு பிரேத பரிசோ தனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட உள்ளது. இதையொட்டி அரசு ஆஸ்பத்திரியில் உற வினர்கள் குவிந்துள்ளதால் அந்த பகுதியில் சோகம் நிலவி வருகிறது.

    இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில், சரண் சரியாக படிக்காத தால் சரணை மன வேதனை யில் இருந்த சரண் ஏரியில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    மேலும் அவரது செல்போனை ஆய்வு செய்த போது அதில் 77 தவறிய அழைப்புகள் கிடந்தன. ஆனால் அவரது செல்போன் பாஸ்வேர்டு மூலம் லாக் செய்யப்பட்டிருந்ததால் யார், யாரிடம் இருந்து போன் வந்தது. கடைசியாக யாரிடம் பேசினார் என்ற விவரத்தை கண்டு பிடிக்க முடியவில்லை. சரணின் செல் போனில் 77 தவறிய அழைப்புகள் கிடந்ததால் சரணை காணாததால் அவ ரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவருக்கு போன் செய்திருக்கலாம் என்று தெரிகிறது.

    செல்போன் ஆய்வு

    மேலும் இன்று அந்த செல்போனை திறந்து பார்த்து ஆய்வு செய்ய போலீ சார் முடிவு செய்துள்ளனர். அப்போது தான் யார், யாரி டம் பேசி னார், யார் யாரிடம் இருந்து போன் வந்தது என்ற முழு விவரம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்த னர். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

    • 3 பேரின் உடல்களையும் அடக்கம் செய்ய ஒரு தனியார் தொண்டு நிறுவனம் முன்வந்துள்ளது
    • இறந்து 2 நாட்கள் வரை ஆகியிருக்கலாம் என்பதும் விசா ரணையில் தெரியவந்தது.

    நாகர்கோவில்:

    இரணியல் அருகே உள்ள தாந்தவிளையை சேர்ந்தவர் பாபு (வயது 46), தொழிலாளி. இவரது சகோதரிகள் ஸ்ரீதேவி (44), உஷா பார்வதி (38). இவர்கள் 3 பேருக்கும் திருமணமாகவில்லை.

    வாடகை வீட்டில் வசித்து வந்த 3 பேரும் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசிய வந்த பிறகே அவர்களது சாவு பற்றிய விவரம் தெரியவந்தது. குளச்சல் போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்திய போது 3 பேரும் தற்கொலை செய்திருப்பதும், இறந்து 2 நாட்கள் வரை ஆகியிருக்கலாம் என்பதும் விசா ரணையில் தெரியவந்தது. ஆனால் தற்கொலைக்கான காரணம் இன்னும் சரிவர தெரியவில்லை. பாபு மற்றும் அவருடைய சகோத ரிகளுக்கு சொந்தம் என்று சொல்லிக் கொள்ள யாரும் இல்லை. இதனால் அவர்கள் பற்றிய கூடுதல் தகவல்களை போலீசாரால் விசாரிக்க முடியவில்லை.

    இதைத் தொடர்ந்து 3 பேரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 3 பேரின் உடல்களும் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் உடல்களை பெற்றுச் செல்ல உறவினர்கள் யாரும் இல்லை. இதனால் அந்த உடல்கள் அடக்கத்துக்காக பிணவறையில் காத்திருக்கின்றன. உடலை வாங்க உறவினர்கள் யாரும் வராதபட்சத்தில் போலீஸ் சார்பில் 3 பேரின் உடல்களும் அடக்கம் செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    இதற்கிடையே தற்கொலை செய்து கொண்ட 3 பேரின் உடல்களையும் அடக்கம் செய்ய ஒரு தனியார் தொண்டு நிறுவனம் முன்வந்துள்ளது. தங்களது சொந்த செலவில் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அந்த தொண்டு நிறுவனம் கேட்டுள்ளது. ஆனால் தற்போது வரை போலீஸ் சார்பில் அடக்கம் செய்யவே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தற்கொலை செய்துகொண்ட 3 பேரின் உடல்களை அடக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    • லோடு ஆட்டோவில் எடுத்து சென்று பட்டம் பகுதியில் உள்ள பாலத்தின் அருகே புதைத்தது தெரியவந்தது.
    • புதைக்கப்பட்ட இடத்தில் தற்போது சிமெண்டு கலவை கொண்டும், சாலையும் போடப்பட்டிருந்தது.

    கும்பகோணம்:

    திருப்பனந்தாள் அருகே கீழ்மாந்துார் பகுதியை சேர்ந்தவர் பாரதி (வயது 35), இவரது மனைவி திவ்யா (27), இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

    பாரதி, சென்னையில் டீக்கடையில் வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் பாரதி திடீரென மாயமானார்.

    இதைத் தொடர்ந்து அவரது உறவினர் அளித்த புகாரின் பேரில் பந்தநல்லுார் போலீசார், பாரதியை தேடினர்.

    தொடர்ந்து விசாரணை யில், போலீசாருக்கு பாரதி மனைவி மீது சந்தேகம் ஏற்பட, அவருடைய மொபைல் எண்ணை பரிசோதனை செய்தனர். அப்போது, திவ்யாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை தெரிந்துக் கொண்ட போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர்.

    இதில், திவ்யா தனது கள்ளக்காதலனுடம் சேர்ந்து தனது கணவரை கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது. விசாரணையில், திவ்யாவுக்கும், கீழ்மாந்துார் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து கள்ளக்காதல் விவகாரம் தனது கணவருக்கு தெரிந்த நிலையில், இடையூராக இருப்பார் என்பதால், அவரை தனது கள்ளக்கா தலுனுடன் சேர்ந்து கொலை செய்ய திவ்யா திட்டமிட்டுள்ளார்.

    தனது கணவரை கட்டையால் தலையில் அடித்து, கயிற்றால் கழுத்தை நெறித்து கள்ளகாதலுடன் சேர்ந்து கொலை செய்துள்ள னர். பின்னர், பாரதியின் உடலை, மூட்டை யாக கட்டி, சதீஷ்குமார், திவ்யா இருவரும், லோடு ஆட்டோ வில் எடுத்து சென்று, திருப்பனந்தாள் அருகே பட்டம் பகுதியில் உள்ள பாலத்தில் அருகே புதைத்து தெரியவந்தது.

    இதையடுத்து பந்தநல்லுார் போலீசார், திவ்யா, சதீஸ்குமார் இருவரையும் கைது செய்தனர்.

    அத்துடன் லோடு ஆட்டோ டிரைவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பட்டம் குறுக்கு சாலையில் நான்கு வழிப்பாதையில் பைபாஸ் சாலை அமைக்கும் பணி நடைப்பெற்ற போது சாலை மேம்பாலம் தூண்கள் மேல் பகுதி இணைப்பு பணிகள் நடந்த போது தான் அந்த இடத்தில் கொலை செய்யப்பட்ட பாரதி புதைக்க ப்பட்டிருப்பது தெரியவந்தது.

    ஆனால் ஒரு மாதம் முன்பு புதைக்கப்பட்ட இடத்தில் தற்போது சிமெண்ட் கலவை கொண்டும், சாலையும் போடப்பட்டிருந்தது.

    பாரதி புதைக்கப்பட்ட இடத்தினை திருவிடை மருதூர் தாசில்தார் சுசீலா டிஎஸ்பி ஜாபர் சித்திக் முன்னிலையில் தோண்டி எடுக்கும் பணி நடந்தது.

    சாலையை சுமார் ஏழு அடி பள்ளம் தோன்றிய நிலையில் சாக்கு மூட்டையில் பாரதி உடலில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.

    பாரதியின் முகம் பகுதியில் பிளாஸ்டிக் கேரி பேக் கொண்டு மூடியதோடு எட்டு சாக்குகள் கொண்டும் அவரது உடலை கட்டி புதைத்து ள்ளனர்.

    தங்கள் வீட்டில் பூஜை செய்த பொருளை புதைக்க வேண்டும் என்று கூறி லோடு ஆட்டோவில் ஏற்றி வந்து சாலை பணியில் ஈடுபட்டிருந்த சில வட மாநில பணியா ளர்களின் உதவி யோடு சதீஷ்குமார் உடலை புதைத்துள்ளது போலீசாரை திகைக்க செய்துள்ளது.

    சாலையை தோண்டி மீட்கப்பட்ட பாரதி உடலை டாக்டர் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தனர்.

    இச்சம்பவத்தில் சாலை பணிகளில் ஈடுபட்டுள்ள வட மாநிலத்தவர்ளின் தொடர்பு உள்ளதா? வேறு யாருக்கேனும் தொடர் உள்ளதா? எனும் கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு தோண்டி எடுக்கப்பட்டது.
    • ஏராளமான பொது மக்கள் மற்றும் மிசோரிக்கு சுற்றுலா வந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர்.

    மிசோரி:

    உலகத்தில் எங்காவது ஒரு இடத்தில் அதிசய சம்பவங்கள் நடைபெறுவது உண்டு. அதுபோல தான் அமெரிக்காவில் உள்ள மிசோரி என்ற சிறிய நகரத்தில் ஒரு அதிசயம் அரங்கேறி உள்ளது.

    அங்குள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த வில்ஹல்மினா லான்சாஸ்டர் என்ற கன்னியாஸ்திரி கடந்த 2019-ம் ஆண்டு தனது 95-வது வயதில் மரணம் அடைந்தார்.

    அவரது உடல் மரச்சவப் பெட்டியில் வைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் அவரது உடலை வேறு ஒரு இடத்தில் புதைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையொட்டி அவரது உடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு தோண்டி எடுக்கப்பட்டது.

    பின்னர் சவப்பெட்டியை திறந்து பார்த்தபோது மற்ற கன்னியாஸ்திரிகள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால் கன்னியாஸ்திரி வில்ஹல்மினா லான்சாஸ்டர் உடல் புதைக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆன போதிலும் அப்படியே கெடாமல் இருந்தது. அவரது தலைமுடி, மூக்கு, உதடு மற்றும் கண்கள் எந்தவித சேதமும் இல்லாமல் இருந்தது.

    முகம் சிரித்த முகத்துடன் காட்சிஅளித்தது. பொதுவாக யாராவது இறந்து அவரது உடல் புதைக்கப்பட்டால் சில மாதங்களில் அது எலும்புக் கூடாக மாறிவிடும். ஆனால் அப்படி எதுவும் இல்லாமல் கன்னியாஸ்திரி உடல் இருந்ததால் இந்த தகவல் வேகமாக பரவியது. இதனால் ஏராளமான பொது மக்கள் மற்றும் மிசோரிக்கு சுற்றுலா வந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் கன்னியாஸ்திரி உடலை அதிசயத்துடன் பார்த்தனர். பொதுமக்கள் அவரது பாதத்தை தொட்டு வணங்கினார்கள். இன்று வரை அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது. அதன்பிறகு மீண்டும் அடக்கம் செய்யப்படும். இதனை அந்த நகர மக்கள் இது மிசோரியின் ஒரு அதிசயம் என தெரிவித்து உள்ளனர்.

    அவரது உடலுக்கு அருகே ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. தயவு செய்து சகோதரியின் உடலை குறிப்பாக அவரது பாதங்களை தொடுவதில் மென்மையாக இருங்கள் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    • சப்பாத்து பாலம் பகுதியில் உடல் கிடந்ததால் பரபரப்பு
    • 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சுய நினைவின்றி கிடந்துள்ளார்.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே சப்பாத்து பாலம் பகுதியில் 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சுய நினைவின்றி கிடந்துள்ளார். இதனை அந்த வழியே சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இது பற்றி அவர்கள், ஏற்றக்கோடு ஊராட்சி மன்ற தலைவி ஹெப்சி பாய்க்கு தகவல் கொடுத்தனர். அவர் சம்பவ இடம் வந்து பார்த்தார். உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தார்.

    பின்னர் அந்த வாலிபரை ஆம்புலன்சில் ஏற்றி ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அங்கு டாக்டர்கள் பரிசோ தித்த போது வாலிபர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.

    அந்த வாலிபர் யார்? அவர் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது. இதுகுறித்து திருவட்டார் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றினர். தொடர்ந்து அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

    • சிவகாசியில் அரசு ஆஸ்பத்திரி கழிவறையில் ஆண் சிசு உடலை வீசியது யார்? என சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்கிறனர்.
    • தலைமை டாக்டர் அய்யனாரிடம் தகவல் தெரிவித்தார்.

    சிவகாசி

    சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்ற னர். மகப்பேறு சிகிச்சை பிரிவு தனியாக இயங்கி வருகிறது. நேற்று மதியம் மகப்பேறு சிகிச்சை பிரிவில் உள்ள ஒரு கழிவறையை சுத்தம் செய்ய தூய்மை பணியாளர் சென்றார்.

    அப்போது 250 கிராம் எடை உள்ள குறைமாத ஆண் சிசு உடல் கிடந்தது. இதைக்கண்ட தூய்மை பணியாளர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சம்பந்தப்பட்ட பிரிவின் தலைமை டாக்டர் அய்யனாரிடம் தகவல் தெரிவித்தார்.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சிவகாசி டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிசு உடலை மீட்டு அதனை வீசி சென்ற பெண் யார்? என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி சம்பந்தப்பட்ட நபர்களை பிடிக்க விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் சிவகாசி அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போலீசார் விஜயகுமார் உடலை ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • கந்து வட்டி கும்பல் மீது நடவடிக்கை வேண்டும் என புகார்

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பாகோடு மேல்புறம் மணலி விளையைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 67). இவர் மினி பஸ் நிறுவனம் நடத்தி வந்தார்.

    விஜயகுமார், படந்தாலு மூட்டில் உள்ள ஒரு தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் மினி பஸ்கள் நடத்துவதற்காக கடன் பெற்றுள்ளார். கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் தவித்த விஜயகுமார் என்ன செய்வதென்று தெரியாமல், ஒவ்வொரு மினி பஸ்சாக விற்பனை செய்து கடனை செலுத்தி வந்தார்.

    இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக கடன் கொடுத்தவர்கள் அவரது வீட்டில் முகாமிட்டு டார்ச்சர் செய்து வந்துள்ளனர். இதனால் மனம் உடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மகன் வினேஷ் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் கந்து வட்டி கும்பல் மீது நடவடிக்கை வேண்டும் என புகார் அளித்துள்ளார்.

    இந்நிலையில் மினி பஸ் உரிமையாளர் விஜய குமாரின் உடல் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவரது மகன் வினேஷ் கந்துவட்டி கும்பலின் மிரட்டலால் தான் தந்தை தற்கொலை செய்து கொண்டார் எனவும்,கந்து வட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுக்கும் வரை மினி பஸ் உரிமையாளர் விஜயகுமார் உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என போலீசாரிடம் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து போலீசார் விஜயகுமார் உடலை ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் இன்று விஜயகுமாரின் உற வினர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அதிகாரிகளை சந்தித்து முறையிட போவதாக தெரி வித்துள்ளனர்.

    ×