search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரணியலில் தற்கொலை செய்த 3 பேரின் உடல்களை அடக்கம் செய்வதில் சிக்கல்
    X

    இரணியலில் தற்கொலை செய்த 3 பேரின் உடல்களை அடக்கம் செய்வதில் சிக்கல்

    • 3 பேரின் உடல்களையும் அடக்கம் செய்ய ஒரு தனியார் தொண்டு நிறுவனம் முன்வந்துள்ளது
    • இறந்து 2 நாட்கள் வரை ஆகியிருக்கலாம் என்பதும் விசா ரணையில் தெரியவந்தது.

    நாகர்கோவில்:

    இரணியல் அருகே உள்ள தாந்தவிளையை சேர்ந்தவர் பாபு (வயது 46), தொழிலாளி. இவரது சகோதரிகள் ஸ்ரீதேவி (44), உஷா பார்வதி (38). இவர்கள் 3 பேருக்கும் திருமணமாகவில்லை.

    வாடகை வீட்டில் வசித்து வந்த 3 பேரும் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசிய வந்த பிறகே அவர்களது சாவு பற்றிய விவரம் தெரியவந்தது. குளச்சல் போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்திய போது 3 பேரும் தற்கொலை செய்திருப்பதும், இறந்து 2 நாட்கள் வரை ஆகியிருக்கலாம் என்பதும் விசா ரணையில் தெரியவந்தது. ஆனால் தற்கொலைக்கான காரணம் இன்னும் சரிவர தெரியவில்லை. பாபு மற்றும் அவருடைய சகோத ரிகளுக்கு சொந்தம் என்று சொல்லிக் கொள்ள யாரும் இல்லை. இதனால் அவர்கள் பற்றிய கூடுதல் தகவல்களை போலீசாரால் விசாரிக்க முடியவில்லை.

    இதைத் தொடர்ந்து 3 பேரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 3 பேரின் உடல்களும் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் உடல்களை பெற்றுச் செல்ல உறவினர்கள் யாரும் இல்லை. இதனால் அந்த உடல்கள் அடக்கத்துக்காக பிணவறையில் காத்திருக்கின்றன. உடலை வாங்க உறவினர்கள் யாரும் வராதபட்சத்தில் போலீஸ் சார்பில் 3 பேரின் உடல்களும் அடக்கம் செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    இதற்கிடையே தற்கொலை செய்து கொண்ட 3 பேரின் உடல்களையும் அடக்கம் செய்ய ஒரு தனியார் தொண்டு நிறுவனம் முன்வந்துள்ளது. தங்களது சொந்த செலவில் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அந்த தொண்டு நிறுவனம் கேட்டுள்ளது. ஆனால் தற்போது வரை போலீஸ் சார்பில் அடக்கம் செய்யவே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தற்கொலை செய்துகொண்ட 3 பேரின் உடல்களை அடக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×