என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலையில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட பாரதி உடல்.
கள்ளக்காதல் விவகாரம்; புதைத்த உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை
- லோடு ஆட்டோவில் எடுத்து சென்று பட்டம் பகுதியில் உள்ள பாலத்தின் அருகே புதைத்தது தெரியவந்தது.
- புதைக்கப்பட்ட இடத்தில் தற்போது சிமெண்டு கலவை கொண்டும், சாலையும் போடப்பட்டிருந்தது.
கும்பகோணம்:
திருப்பனந்தாள் அருகே கீழ்மாந்துார் பகுதியை சேர்ந்தவர் பாரதி (வயது 35), இவரது மனைவி திவ்யா (27), இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
பாரதி, சென்னையில் டீக்கடையில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் பாரதி திடீரென மாயமானார்.
இதைத் தொடர்ந்து அவரது உறவினர் அளித்த புகாரின் பேரில் பந்தநல்லுார் போலீசார், பாரதியை தேடினர்.
தொடர்ந்து விசாரணை யில், போலீசாருக்கு பாரதி மனைவி மீது சந்தேகம் ஏற்பட, அவருடைய மொபைல் எண்ணை பரிசோதனை செய்தனர். அப்போது, திவ்யாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை தெரிந்துக் கொண்ட போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர்.
இதில், திவ்யா தனது கள்ளக்காதலனுடம் சேர்ந்து தனது கணவரை கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது. விசாரணையில், திவ்யாவுக்கும், கீழ்மாந்துார் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கள்ளக்காதல் விவகாரம் தனது கணவருக்கு தெரிந்த நிலையில், இடையூராக இருப்பார் என்பதால், அவரை தனது கள்ளக்கா தலுனுடன் சேர்ந்து கொலை செய்ய திவ்யா திட்டமிட்டுள்ளார்.
தனது கணவரை கட்டையால் தலையில் அடித்து, கயிற்றால் கழுத்தை நெறித்து கள்ளகாதலுடன் சேர்ந்து கொலை செய்துள்ள னர். பின்னர், பாரதியின் உடலை, மூட்டை யாக கட்டி, சதீஷ்குமார், திவ்யா இருவரும், லோடு ஆட்டோ வில் எடுத்து சென்று, திருப்பனந்தாள் அருகே பட்டம் பகுதியில் உள்ள பாலத்தில் அருகே புதைத்து தெரியவந்தது.
இதையடுத்து பந்தநல்லுார் போலீசார், திவ்யா, சதீஸ்குமார் இருவரையும் கைது செய்தனர்.
அத்துடன் லோடு ஆட்டோ டிரைவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டம் குறுக்கு சாலையில் நான்கு வழிப்பாதையில் பைபாஸ் சாலை அமைக்கும் பணி நடைப்பெற்ற போது சாலை மேம்பாலம் தூண்கள் மேல் பகுதி இணைப்பு பணிகள் நடந்த போது தான் அந்த இடத்தில் கொலை செய்யப்பட்ட பாரதி புதைக்க ப்பட்டிருப்பது தெரியவந்தது.
ஆனால் ஒரு மாதம் முன்பு புதைக்கப்பட்ட இடத்தில் தற்போது சிமெண்ட் கலவை கொண்டும், சாலையும் போடப்பட்டிருந்தது.
பாரதி புதைக்கப்பட்ட இடத்தினை திருவிடை மருதூர் தாசில்தார் சுசீலா டிஎஸ்பி ஜாபர் சித்திக் முன்னிலையில் தோண்டி எடுக்கும் பணி நடந்தது.
சாலையை சுமார் ஏழு அடி பள்ளம் தோன்றிய நிலையில் சாக்கு மூட்டையில் பாரதி உடலில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.
பாரதியின் முகம் பகுதியில் பிளாஸ்டிக் கேரி பேக் கொண்டு மூடியதோடு எட்டு சாக்குகள் கொண்டும் அவரது உடலை கட்டி புதைத்து ள்ளனர்.
தங்கள் வீட்டில் பூஜை செய்த பொருளை புதைக்க வேண்டும் என்று கூறி லோடு ஆட்டோவில் ஏற்றி வந்து சாலை பணியில் ஈடுபட்டிருந்த சில வட மாநில பணியா ளர்களின் உதவி யோடு சதீஷ்குமார் உடலை புதைத்துள்ளது போலீசாரை திகைக்க செய்துள்ளது.
சாலையை தோண்டி மீட்கப்பட்ட பாரதி உடலை டாக்டர் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தனர்.
இச்சம்பவத்தில் சாலை பணிகளில் ஈடுபட்டுள்ள வட மாநிலத்தவர்ளின் தொடர்பு உள்ளதா? வேறு யாருக்கேனும் தொடர் உள்ளதா? எனும் கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.






