search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குலசேகரம்"

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணெலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்
    • கலெக்டர் ஸ்ரீதர் குத்துவிளக்கேற்றியதுடன் அந்த இடத்தில் அடிக்கல் நாட்டி முதல்- அமைச்சருக்கு நன்றி தெரிவித்து பேசினார்.

    திருவட்டார்:

    பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, திருவட்டார் வட்டம், குல சேகரம் பேரூராட்சி செருப்பாலூர் கல்லடிமா மூடு பகுதியில் பொதுப்ப ணித்துறைக்கு சொந்தமான 4.83 ஏக்கர் நிலத்தினை தமிழ்நாடு அரசின் அனுமதி பெற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கு ஒப்படைக்கப் பட்டதைத் தொடர்ந்து ரூ.3 கோடி மதிப்பில் புதிய மினி விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான பணியை முதல்-அமைச்சர் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இதையடுத்து செருப்பாலூர் கல்லடிமா மூட்டில் மினி விளையாட்டரங்கம் அமையவுள்ள இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் குத்துவிளக்கேற்றியதுடன் அந்த இடத்தில் அடிக்கல் நாட்டி முதல்- அமைச்சருக்கு நன்றி தெரிவித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    பத்மநாபபுரம் தொகு திக்குட்பட்ட கல்லடி மாமூட்டில் மினி விளை யாட்டரங்கம் அமைக்கும் பணியினை தொடங்கி வைத்த தமிழக முதல்-அமைச்சருக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும், பொதுமக்களின் சார்பிலும் நன்றி தெரி வித்துக்கொள்கி றேன். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்கனவே நாகர்கோ வில் சட்டமன்ற தொகுதியில் அண்ணா விளை யாட்டரங்கம் உள்ளது. மீதமுள்ள 5 தொகுதிகளிலும் மினி விளையாட்டரங்கங் கள் அமைய உள்ளன.

    இதில் முதற்கட்டமாக பத்மநாபபுரம் தொகு திக்குட்பட்ட குல சேகரம் கல்லடிமாமூட்டில் அமைக் கப்படுகிறது. அடுத்த கட்டமாக குளச்சல் தொகுதியில் அமைக்கப்படும். அதனை தொடர்ந்து கிள்ளியூர், விளவங்கோடு, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் நிலம் தேர்வு செய்யப்பட்டு அமைக்கப்படும். குறிப் பிட்ட ஒரு இடத்தை மையமாக கொண்டு இந்த அந்த விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படாமல் அனைத்து பகுதி மக்க ளுக்கும் பயன் கிடைக்க வேண்டுமென்பதற்காக இதுபோன்ற திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட செய்தித்தொடர்பு அலுவலர் ஜான் ஜெகத் பிரைட் வரவேற்றார். குலசேகரம் பேரூராட்சி தலைவி ஜெயந்தி ஜேம்ஸ் நன்றி கூறினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேஷ், திருவட்டார் தாசில்தார் முருகன், மாவட்ட அரசு வக்கீல் ஜான்சன், குலசேரம் பேரூராட்சி செயல் அலுவலர் எட்வின் ஜோஸ், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ரெமோன் மனோ தங்கராஜ், குலசேகரம் பேரூராட்சி துணை தலைவர் ஜோஸ் எட்வர்ட், தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் அலாவுதீன், மாவட்ட வர்த்தகர் அணி தலைவர் ஜே.எம்.ஆர். ராஜா, கலை இலக்கிய பகுத்தறிவு அணி தலைவர் ஜெஸ்டின் பால்ராஜ், குலசேகரம் பேரூர் தி.மு.க. செயலாளர் வக்கீல் ஜெபித் ஜாஸ், வட்டார காங்கிரஸ் பொருளாளர் ஜேம்ஸ் ராஜ் மற்றும் குலசேகரம் பேரூராட்சி கவுன்சிலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • சாவுக்கு கல்லூரி பேராசிரியர் பரமசிவம் உட்பட 3 பேர் காரணம் என்று கடிதம் எழுதி வைத்திருந்தார்.
    • வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கையை வைத்து வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    குலசேகரம் மூகாம்பிகா மருத்துவ கல்லூரியில் முதுகலை 2-ம் ஆண்டு படித்து வந்த மருத்துவ மாணவி சுகிர்தா விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது சாவுக்கு கல்லூரி பேராசிரியர் பரமசிவம் உட்பட 3 பேர் காரணம் என்று கடிதம் எழுதி வைத்திருந்தார். அந்த கடிதத்தை கைப்பற்றி குலசேகரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மாணவி சுகிர்தாவை தற்கொலைக்கு தூண்டிய தாக பரமசிவம் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. எனவே இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கையை வைத்து வருகிறார்கள். இந்த நிலையில் குமரி மாவட் டத்தை சேர்ந்த கல்லூரி மாணவ- மாணவிகள் மருத்துவ மாணவி சுகிர்தா சாவுக்கு நீதி கேட்டு இன்று போராட்டம் நடத்துவதாக கூறினார்கள். இதையடுத்து நாகர்கோ வில் கலெக்டர் அலுவல கத்தில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இந்நிலையில் ஏராள மான மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்துவதற்காக வந்தனர்.பின்னர் கலெக்டர் அலுவல கம் எதிரே ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் செயலாளர் முகமது முபிஸ் தலைமை தாங்கினார். இந்திய மாணவர் சங்க மாவட்ட துணை செயலாளர் சந்துரு,எட்வின்பிரைட், ரெதீஸ், ரகுபதி,மேரி ஸ்டெல்லா பாய் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தை மாதர் சங்க மாநில நிர்வாகி உஷா பாசி தொடங்கி வைத்தார்.மருத்துவ மாணவி சுஜிர்தா சாவில் உள்ள மர்மங்களை வெளிக் கொண்டு வந்து, சம்பந்தப் பட்டவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப் பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த பல்வேறு கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • ஆடுகள் ரோட்டில் சுற்றுவதால்
    • போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது

    நாகர்கோவில் : குலசேகரம் பேரூராட்சிக்குட்பட்ட காவஸ்தலம், அரசமூடு, நாகக்கோடு போன்ற பகுதிகளில் ஆடுகள் ரோட்டில் சுற்றுவதால் வாகனங்களில் செல்பவர்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறதுஆடுகள் ரோட்டில் சுற்றுவதால் வாகனங்களில் செல்பவர்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்த வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்தவர்கள் குலசேகரம் பேரூராட்சியில் புகார் செய்தார்கள். பேரூராட்சி நிர்வாகம் சம்மந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு ஆடுகளை வீட்டில் கட்டி போட்டு வளர்க்க வேண்டும். சாலைகளில் தனியாக விட கூடாது என்று அறிவுறுத்தி நோட்டீஸ் அனுப்பினார்கள்.

    ஆனால் சம்மந்தப்பட்ட ஆடுகளின் உரிமையாளர்கள் அதை கண்டு கொள்ளாமல் மீண்டும் ரோட்டில் ஆடுகளை தனியாக விட்டார்கள். நேற்று குலசேகரம் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் ரோட்டில் சுற்றி திரிந்த 2 ஆடுகளை பிடித்து பேரூராட்சியில் கட்டி போட்டார்கள். ஆட்டின் உரிமையார்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

    • இந்த கோவிலின் விசேஷம் நட்சத்திர மண்டபம் ஆகும்.
    • காளையின் கால் தடம்பதித்த இடம்., கயிறு தடம் ஆகியவற்றை அந்த குன்றில் இப்போதும் காணலாம்.

    துன்பங்கள் நீங்கி மன அமைதி தரும் திருநந்தீஸ்வரர்

    குமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள திரு நந்திக்கரையில் திருநந்தீஸ்வரர் கோவில் உள்ளது.

    சிவனே பிரதிஷ்டை செய்த நந்தி என்பதால், பிரதோஷ நாட்களில் வழிபாடு செய்ய, இந்த கோவிலை விட ஏற்ற கோவில் எதுவும் இல்லை எனலாம்.

    இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

    காளையை சிவபெருமான் அடக்கி இழுத்து வந்தபோது அருகிலிருந்த ஒரு குன்றில் காளை தகராறு செய்தது.

    காளையின் கால் தடம்பதித்த இடம்., கயிறு தடம் ஆகியவற்றை அந்த குன்றில் இப்போதும் காணலாம்.

    இந்த கோவிலின் விசேஷம் நட்சத்திர மண்டபம் ஆகும்.

    27 நட்சத்திர மண்டலம் கொண்ட கண துவாரங்கள் இங்கு உள்ளன. இந்த மண்டபத்துக்கு ஆண்டிற்கு 52 வாரங்கள் என்பதை குறிக்கும் வகையில் மண்டபத்தை சுற்றி 52 மரக்கட்டைகள் வைக்கப்பட்டுள்ளன.

    இந்த கட்டைகளில் நட்சத்திரங்களின் அதிதேவதை உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

    பொதுவாக பரிகார வலம் வரும்போது மூன்று முறை சுற்றுவது வழக்கமாக இருக்கிறது.

    ஆனால் திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவிலில் உள்ள மண்டபத்தை ஒரு தடவை சுற்றினால் ஒரு ஆண்டு சுற்றியதற்கான பலன் கிடைக்கிறது.

    குமரி மாவட்டத்தில் 12 சிவாலயங்கள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றன.

    இந்த கோவிலில் சிவனை வழிபட்டால் துன்பங்கள் நீங்கி மன அமைதி கிடைப்பதாக கூறப்படுகிறது.

    இங்குள்ள குளத்து நீர் இந்நாள் வரை வற்றியதாக இல்லை.

    பகவான் இங்கு சுயம்பாக காட்சி தருவதால் முப்பத்தி முக்கோடி தேவர்களும் நேரடியாக தொண்டு செய்வதாக நம்பப்படுகிறது.

    இக்கோவிலில் அணையா விளக்கு ஒன்று காணப்படுகிறது.

    இவ்விளக்கில் எண்ணை தொடர்ந்து ஊற்றி வரும் பக்தர்களின் வேண்டுதல்களையும், இனி எண்ணை ஊற்ற வேண்டும் என எண்ணுபவர்களுடைய வேண்டுதல்களையும் இறைவன் ஏற்று அருள்புரிவார் என்பது ஐதீகம்.

    • போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
    • 12 மதுபாட்டில்கள், 10 பண்டல் புகையிலை பாக்கெட் இருந்ததை பறிமுதல் செய்தனர்.

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே கல்லடி மாமூடு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையில மறைத்து வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் குலசேகரம் போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். நேற்று மாலை அதிரடியாக கல்லடி மாமூடு பகுதியை சேர்ந்த ராஜேஸ் (வயது 40) என்பவர் புகையில விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

    உடனே போலீசார் அவரின் வீட்டை சோதனை செய்த போது 12 மதுபாட்டில்கள், 10 பண்டல் புகையிலை பாக்கெட் இருந்ததை பறிமுதல் செய்தனர். அவரை போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதன் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர்.

    அவருக்கு எங்கியிருந்து புகையிலை பாக்கெட் வருகிறது எந்த பகுதியில் விற்பனை செய்து வந்தார் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தாரா? என்று போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

    • தரம் பிரிக்கும் குப்பைகளை சாக்கு மூட்டைகளில் கட்டி வைப்பது வழக்கம்.
    • இரவு 1 மணி வரை போராடி தீயனைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து தீயை அணைத்தனர்.

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே திற்பரப்பு பேரூராட்சிக்குட்பட்ட திருநந்திக்கரையில் சந்தை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியில் திற்பரப்பு பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை சேகரித்து இந்த பகுதியில் கொட்டி வைத்து பிளாஸ்டிக் குப்பை, மக்கும் குப்பை மக்காத குப்பை என்று தரம் பிரித்து எடுத்து செல்கிறார்கள்.

    தினமும் தரம் பிரிக்கும் குப்பைகளை சாக்கு மூட்டைகளில் கட்டி வைப்பது வழக்கம். இந்த பகுதியில் வேறு கடைகள் எதுவும் இல்லை. இதனால் குப்பைகள் மட்டும் ஒரு பகுதியில் சேகரிக்கப்பட்டு வந்தனர். நேற்று இரவு அந்த பகுதியில் இருந்து திடீரென தீ மளமளவென எரிந்தது. உடனே அந்த பகுதியில் உள்ளவர்கள் திற்பரப்பு பேரூராட்சி தலைவர் பொன்.ரவி, துணை தலைவர் ஸ்டாலின்தாஸ் ஆகி யோர்களுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் இது குறித்து குலசேகரம் தீய ணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீர் பீய்த்து அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இரவு 1 மணி வரை போராடி தீயனைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து தீயை அணைத்தனர்.

    குலசேகரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீ எவ்வாறு பரவியது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள கன்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • மாலை 5.30 மணிக்கு தொடங்கிய போராட்டம் 2 மணி நேரம் நீடித்தது.
    • வழக்கறிஞர்கள் குலசேகரம் போலீஸ் நிலையம் முன் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே மணலிவிளை பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின்ராஜ். இவர் பத்மநாபபுரம் கோர்ட்டில் வக்கீலாக உள்ளார்.

    இவருக்கு சொந்தமான இடம் மங்கலம் பகுதியில் உள்ளது. இந்த பகுதியில் செல்லுவதற்கு ரோடு எடுப்பதற்கு மங்கலம் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ரூ.1 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் அவர் வழி எடுக்க இடம் கொடுக்காததால் தான் கொடுத்த ரூபாயை திரும்ப கேட்டுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    குலசேகரம் போலீசில் இது தொடர்பாக ஜஸ்டின் ராஜ் புகார் கொடுத்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை என தெரிகிறது. இதனால் ஜஸ்டின் ராஜிற்கு ஆதரவாக பத்மநாபபுரம் வக்கீல் சங்க தலைவர் வின்சென்ட் தலைமையில் போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பலன் இல்லாததால் வழக்கறிஞர்கள் குலசேகரம் போலீஸ் நிலையம் முன் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாலை 5.30 மணிக்கு தொடங்கிய போராட்டம் 2 மணி நேரம் நீடித்தது. இதனால் கல்லுரி மாணவ-மாணவிகள் சென்ற வாகனங்கள், அரசு பஸ்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் காத்து நின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிடவில்லை. போராட் டம் இரவு 7.30 மணி வரை நீடித்தது. இன்ஸ்பெக்டர் வந்தால் தான் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று வழக்கறிஞர்கள் கூறினார்கள்.

    இதனால் குலசேகரம் பகுதியில் கடும் போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டது. மாலை நேரமானதால் பொதுமக்கள் எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் ஆவேச மடைந்து போராட்டம் நடத்தியவர்களுடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவியது.

    உடனடியாக குலசேகரம் இன்ஸ்பெக்டர் பால முருகன் வழக்கறிஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வழக்குப்பதிவு செய்வதாக உறுதி அளித்ததின் பேரில் வழக்கறிஞர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    இரவு தக்கலை டி.எஸ்.பி. குலசேகரம் போலீஸ் நிலையம் வந்து இன்ஸ்பெக்டருடன் ஆலோசனை நடத்தினார்.

    • சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை
    • மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் லதா மீது ஆசிட் வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே உண்ணியூர்கோணம் மாடத்தூர்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் லதா (வயது 46). இவரது மகன் சுபாஷ் வயது (26).

    இவர் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். தற்போது விடுமுறையில் வந்து இருக்கிறார். லதா சித்திரங்கோடு அருகே ரைஸ் மில் நடத்தி வருகிறார். நேற்று இரவு 7.30 மணி அளவில் உண்ணியூர்கோணம் பகுதியில் பஸ்சில் இருந்து இறங்கி வீட்டிற்கு நடந்து சென்றார்.

    அப்போதுமோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் லதா மீது ஆசிட் வீசிவிட்டு தப்பிச் சென்றனர். அதிர்ச்சி அடைந்த லதா கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு முதலுதவி அளித்து, குலசேகரம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தகவல் அறிந்து குலசேகரம் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

    இது தொடர்பாக விசாரிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் லதா மீது ஆசிட் வீசிய மர்ம நபர்களை அடை யாளம் காணும் விதமாக அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. ஆய்வு செய்து வருகிறார்கள். லதாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை காரணமாக ஆசிட் வீசப்பட்டதா? வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    தக்கலை டி.எஸ்.பி. உதயசூரியன் நேரடியாக சென்று அந்த பகுதியை ஆய்வு செய்தார்.

    • அரிசி, சீனி மூடைகள் சேதம்
    • இடிமின்னலுடன் திடீர் கோடை மழை

    கன்னியாகுமரி:

    குலசேகரம், பேச்சிப் பாறை, திற்பரப்பு, திருநந்திக்கரை, திருவரம்பு, திருவட்டார், பொன்மனை, மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் நேற்று மாலை இடிமின்னலுடன் திடீர் கோடை மழை பெய்தது.

    இந்த மழையின்போது சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியது. இதனால் கடும் வெயில் இருந்த நிலையில் சற்று வெப்பம் குறைந்தது. குலசேகரம்-திருவரம்பு சாலையில் நாகக்கோடு சந்திப்பு அருகிலுள்ள ஒரு ரேஷன் கடைக்குள் திடீரென்று தண்ணீர் புகுந்தது. அப்போது கடையில் பணியில் இருந்த பெண் ஊழியர் தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் தொடர்ந்து சாலையில் பாய்ந்த தண்ணீர் கடைக்குள் புகுந்த வண்ணம் இருந்தது.

    இது குறித்து குலசேகரம் பேரூராட்சி தலைவி ஜெயந்தி ஜேம்ஸூக்கு தகவல் கொடுத்தார். அவர் உடனடியாக பேரூராட்சி தூய்மைப் பணியாளர்களை அந்த ரேஷன் கடைக்கு அனுப்பி வைத்து, தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அப்பகுதி மக்களின் ஒத்து ழைப்புடன் கடையிலிருந்த ரேஷன் மற்றும் சர்க்கரை அரசி மூடைகள் அங்கிருந்து அருகிலுள்ள பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டது.

    இந்த ரேசன் கடையில் சுமார் 160 மூடைகள் சர்க்கரை, அரிசி மூடைகள் இருந்த நிலையில் அவற்றில் சில மூடைகள், கடையில் தண்ணீர் புகுந்த காரணத்தால் நனைந்து சேதமடைந்தன. தற்போது குலசேகரம்-திருவரம்பு சாலையில் சாலை விரிவாக்கப்பணிகள் நடப்பதால் சாலையில் பாய்ந்த தண்ணீர் ரேஷன் கடைக்குள் புகுந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ரேஷன் கடைக்குள் தண்ணீர் புகுந்து அரிசி மூடைகள் சேதமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.இனிமேல் வரும் நாட்களில் இது போன்ற சம்பவங்கள் ஏற்படாத வகையில் உணவுப் பொருள் வழங்கல் துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் விரைந்து நடவ டிக்கை எடுக்க வேண்டு மென்று அந்த பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

    உருக்கமான தகவல்கள்

    கன்னியாகுமாரி, மார்ச். 14 -

    பொன்மனை அருகே சமாதிநடையைச் சேர்ந்தவர் சதீஸ்குமார். இவரது மனைவி நந்தினி. சதீஸ் குமார் வெளிநாட்டில் ஒரு கட்டிட கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகன்கள் சபரீஷ் (வயது 9), சூரிய நாத் (7). இருவரும் குலசேகரம் படநிலம் பகுதியிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு மற்றும் 1 -ம் வகுப்பு படித்து வந்தனர்.

    தற்போது பிளஸ்-2 தேர்வுகள் தொடங்கி யுள்ள நிலையில் மாணவர் களுக்கு பிற்பகலில் வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், சபரீஷ் மற்றும் சூரிய நாத் ஆகியோர் நேற்று பிற்பகலில் வழக்கம் போல் செல்லும் தனியார் வேனில் பள்ளிக்குச் சென்று விட்டு மாலை 4.30 மணி அளவில் அதே தனியார் வேனில் வீட்டின் அருகில் வந்து இறங்கினர்.

    அப்போது சபரீஷ், சூரியநாத் ஆகியோர் வேனின் முன்பக்கம் வழியாக சாலையைக் கடந்துள்ளனர். இதனைக் கவனிக்காத வேன் டிரைவர் வேனை இயக்கியுள்ளார். இதில் சபரீஷ், சூரிய நாத் ஆகிய இருவரும் வேனின் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குழந்தைகளை அழைத்துச் செல்லும் வகையில் சாலையின் எதிரே வந்து கொண்டிருந்த மாணவர்களின் தாய் நந்தினியின் கண்முன்னே நடந்தது. அப்போது அவர் அலறித்துடித்த வண்ணம் வேனில் அருகில் ஓடிச்சென்றார்.

    இதையடுத்து படுகாய மடைந்த 2 மாணவர் களையும் உடனடியாக ஒரு ஆட்டோவில் ஏற்றி குலசேகரத்திலுள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதில் ஆஸ்பத்திரியில் சூரிய நாத்தை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர். மேலும் சபரீசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள். வேன் டிரைவர் பொன்மனையைச் சேர்ந்த ஜார்ஜ் (52) என்பவரிடம் விசாரணை நடத்தி வரு கின்றனர். பலியான மாணவன் சூரியநாத் உடல் பிரேத பரி சோதனைக்காக குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • விழா 3 நாட்கள் நடக்கிறது.
    • 29 தட்டுகளில் சீர் பொருட்கள் மேள தாளத்துடன் ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே நாகக்கோடு பகுதியில் குழிவிளை இசக்கியம்மன் கோவில் வருடாந்திர திருவிழா நேற்று தொடங்கியது. விழா 3 நாட்கள் நடக்கிறது.

    இந்த கோவிலுக்கு பக்கத்து ஊரில் உள்ள அம்பலத்துவிளை சக்தி பரமேஸ்வரி கோவிலில் இருந்து அம்மனுக்கு பக்தர்கள் சீர் கொண்டு வந்து விழாவை தொடங்கி வைத்தனர்.

    இந்த சீரில் பெண்கள் முன்னால் விளக்கு ஏந்தி வரிசையாக வர பின் 29 தட்டுகளில் சீர் பொருட்கள் மேள தாளத்துடன் ஊர்வலமாக கொண்டு வந்தனர். குழிவிளை இசக்கியம்மன் கோவில் அம்மன் பக்தர்கள் சீருடை அணிந்து வந்த அவர்களை வரவேற்று சீரை பெற்றுக்கொண்டனர்.

    இது இப்பகுதியில் உள்ள கோவில்களில் முதல் முதலாக நடக்கும் நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்வை பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். வரும் காலங்களில் இந்த நிகழ்வு அனைத்து அம்மன் கோவில்களிலும் நடக்கும் என்று பக்தர்கள் கூறினர். இதனால் ஊர் ஒன்றுமை ஓங்கும், மக்களிடம் பரஸ்பரம், விட்டுக்கொடுத்து செல்லுதல், அன்பு ஏற்படும். இதனால் சுபிட்சம் உண்டாகும் என அம்மன் பக்தர்கள் கூறினார்கள்.

    • மர்ம நபர்கள் கைவரிசை
    • புகாரின் பேரில் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே செருப்பாலூரில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது.

    இப்பள்ளியில் உபயதாரர்கள் சார்பில் மாணவிகள் கை கழுவும் பகுதியில் 6 ஸ்டீல் குழாய்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் 3 நாட்கள் தொடர் விடுமுறைக்குப் பின்னர் பள்ளி ஆசிரியர்களும், மாணவ- மாணவிகளும் நேற்று காலையில் பள்ளிக்கு வந்த போது மாணவிகள் கைகழுவும் இடத்தில் பொருத்தப் பட்டிருந்த 6 குழாய்கள் திருடப் பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    மேலும் கழிவறையினுள்ள பைப் இணைப்புகளும் திருடப்பட்டிருந்தது. ஏற்கனவே கடந்த வருடம் அக்டோபர் மாதம் இது போன்று இப்பள்ளியில் மாணவர்கள் கைகழுவும் இடத்தில் பொருத்தப் பட்டிருந்த 6 ஸ்டீல் குழாய்கள் திருட்டுப் போயிருந்தன.

    இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் சித்தார்தன் குலசேகரம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து வருகிறார்கள்.

    அந்த பள்ளியின் அருகில் உள்ளவர்களிடமும் விசாரனை நடத்தி வருகிறார்கள். திருட்டில் ஈடுப்பட்ட மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

    ×