search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குலசேகரம் அருகே தொடர் மழையால் கால்வாய் கரையில் மண் சரிவு
    X
    மண் சரிவால் சேதமடைந்த சாலையை படத்தில் காணலாம் 

    குலசேகரம் அருகே தொடர் மழையால் கால்வாய் கரையில் மண் சரிவு

    • மின்கம்பமும் சாய்ந்ததால் மக்கள் அச்சம்
    • பொதுப்பணித்துறையினர் துரித நடவடிக்கை எடுத்து உடனே அந்த பகுதியை சீர்செய்ய வேண்டும்

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே காவஸ்தலம் சந்திப்பில் இருந்து மணலிவிளை செல்லும் ரோடு பகுதியானது பட்டணங்கால்வாய் சானல் கரையோரம் பகுதியாகும்.

    இந்த சானல் இரண்டு பகுதிகளிலும் ஏராளமான வீடுகள் உள்ளது தினமும் இந்த பகுதி வழியாக கார், மோட்டார் சைக்கிள் வாகனம் அதிகம் செல்கிறது. அந்த பகுதியில் தனியார் பள்ளிகூடங்கள் அமைந்துள்ளது. பள்ளி வேன்கள் இந்த பகுதியாக தான் செல்கிறது. நேற்று மாவட்டம் முழுவதும் தொடர் மழை பெய்து வந்தது. குலசேகரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வந்தது.

    இதனால் சானல் கரை யோரம் இருந்த பகுதிகள் மிக மோசமாக இருந்தது. காவஸ்தலம் சந்திப்பில் இருந்து செல்லும் ரோடு நேற்று பெய்த மழையில் சானலின் கரையோர பகுதி இடிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதி யில் விரிசல் ஏற்பட்டது அந்த பகுதி வழியாக வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    அதன் அருகில் மின்சாரத் துறைக்கு சொந்தமான மின்கம்பமும் சரிந்து நிற்கிறது. எனவே பொதுப் பணித்துறையினர் துரித நடவடிக்கை எடுத்து உடனே அந்த பகுதியை சீர்செய்ய வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    Next Story
    ×