search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலையில்"

    • பாறை உருண்டு விழுந்து சாலையில் நின்றது.
    • யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பாதை வழியாக கர்நாடகா மாநிலத்திற்கு செல்லக்கூடிய பிரதான சாலை உள்ளது.

    இந்த சாலை வழியாக தினந்தோறும் ஏராளமான இருசக்கரம், நான்கு சக்கர வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகிறது. மேலும் கனரக வாகனங்களும் அதிக அளவில் இந்த பாதையில் வந்து கொண்டுள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மலைப்பகுதியில் மழை அவ்வப்போது பொழிந்து வருவதால் மலைப் பகுதிகளில் மண் அரிப்பு ஏற்பட்டு பாறைகளில் பிடிப்பு தன்மை குறைந்து பாறைகள் சாலையில் சரிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று மாலை அந்தியூர் பர்கூர் சாலையில் செட்டிநெடு என்ற இடத்தின் அருகே பாறை உருண்டு விழுந்து சாலையில் நின்றது. அந்த சமயத்தில் வாகனங்கள் எதுவும் வராமல் இருந்த தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • வாழை மரம் நட்டதால் பரபரப்பு
    • தினமும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.

    திருவட்டார்:

    பேச்சிப்பாறை முதல் மார்த்தாண்டம் வரை உள்ள சாலையானது மிகவும் பரப்பரப்பாக காணப்படும் காலை, மாலை வேளைகளில் அதிக அளவு வாகனங்கள் செல்லும். புத்தன்கடை பகுதியில் ஒரு பள்ளிக்கூடம் உள்ளது. அதன் அருகில் ரோட்டில் பெரிய பள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. அதை சரி செய்ய வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் பல்வேறு கோரிக்கைகள் வைத்தும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. தற்போது தினமும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.

    இதனால் ரோட்டில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்து படுகாயம் அடைந்தனர். அந்த பகுதியில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகளும் மழை காலங்களில் பள்ளத்தில் விழுந்தார்கள். இதை கருத்தில் கொண்டு அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ரோட்டில் ஏற்பட்ட பள்ளத்தில் வாழை மரத்தை நட்டு அதன் மீது மாலை போட்டு பள்ளத்தில் வைத்துள்ளனர். மீண்டும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழாமல் இருக்க கல் வைத்துள்ளனர். எனவே பெரும்விபத்து நடைபெறும் முன் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பள்ளத்தை சரிசெய்ய வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மரம் மின்சார கம்பி மீது திடீரென்று சாலையின் குறுக்கே விழுந்தது.
    • மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    கொல்லங்கோடு:

    கொல்லங்கோடு - ஊரம்பு சாலையில் சிலுவை புரம் பகுதியில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக ஒரு மரம் மின்சார கம்பி மீது திடீரென்று சாலையின் குறுக்கே விழுந்தது.

    இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரத்தை அப்புறப்ப டுத்தும் பணியை மேற் கொண்டனர். மேலும் இது குறித்து மின்வாரிய அலுவல கத்திற்கும் தகவல் கொடுக் கப்பட்டது. மின் ஊழியர் களும் சம்பவ இடத்திற்கு வந்து மின்சார கம்பியை சரி செய்தனர். எனினும் சாலை யின் குறுக்கே மரம் முறிந்து விழுந்ததால் சுமார் 1 மணி நேரம் போக்கு வரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • குமாரபாளையம் கவுரி தியேட்டர் பகுதியில் நேற்று இரவு 7 வயது சிறுமி ஒருவர் சாலையில் அழுதபடி நடந்து வந்துள்ளார்.
    • போட்டோ எடுத்து அனைத்து வாட்ஸ்அப் குரூப்பில் பதிவிட்டார். பின்னர் ஒரு மணி நேரத்தில் இதனை கண்ட பெற்றோர் போலீசாருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்து நேரில் வந்தனர்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கவுரி தியேட்டர் பகுதியில் நேற்று இரவு 7 வயது சிறுமி ஒருவர் சாலையில் அழுதபடி நடந்து வந்துள்ளார். அதை கண்ட அப்பகுதி மக்கள் அந்த சிறுமியிடம் விபரம் கேட்க, அந்த சிறுமி எதுவும் பேசவில்லை.

    போலீஸ் நிலையம்

    உடனே அந்த சிறுமியை போலீஸ் நிலையத்திற்க்கு கொண்டு வந்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி விசாரித்தும் பலனில்லை. அந்த சிறுமி எதுவும் பேசவில்லை. உடனே போட்டோ எடுத்து அனைத்து வாட்ஸ்அப் குரூப்பில் பதிவிட்டார். பின்னர் ஒரு மணி நேரத்தில் இதனை கண்ட பெற்றோர் போலீசாருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்து நேரில் வந்தனர்.

    ஒப்படைப்பு

    இன்ஸ்பெக்டர் விசார ணையில், நாராயண நகரில் வசிக்கும் பெற்றோர் செந்தில்குமார், பிரித்தா என்பதும், 7 வயது சிறுமியின் பெயர் பிரித்திகா என்பது தெரியவந்தது. விளையாடப் போகும் விஷயம் சம்பந்தமாக தாயார் திட்டியதாக தெரி கிறது. இதனால் கோபித்துக் கொண்டு வெளியில் வந்து விட்டார். இன்ஸ்பெக்டர் தவமணி எச்சரித்து, குழந்தையை அவர்களிடம் ஒப்படைத்தார்.

    • ஆம்புலன்ஸ்-சரக்கு வாகனம் மோதியதில் போக்குவரத்து கடும் பாதிப்பு
    • காரை பெண் ஒருவர் ஓட்டி வந்தார்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் பறக்கை சந்திப்பு சாலையில் கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த காரை பெண் ஒருவர் ஓட்டி வந்தார். அந்த கார் திடீரென அவரது கட்டுப்பாட்டை இழந்து திடீரென ரோட்டில் தாறுமாறாக ஓடியது.

    அது ரோட்டோரம் நிறுத் தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது கார் மோதியது. இதில் அந்த பகுதியில் நிறுத்தப்பட்ட நான்கு மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தது. கார் தாறுமாறாக ஓடி ரோட்டோரம் நின்ற மோட்டார்சைக்கிள்கள் மீது மோதியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

    நாகர்கோவிலில் இருந்து மதுரைக்கு தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. ஒழுகினசேரி பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த சரக்கு வாகனம் மீது மோதியது. இதில் சரக்கு வாகனத்தின் டயரும் ஆம்புலன்சின் டயரும் பலத்த சத்தத்துடன் வெடித்தது. விபத்தில் சிக்கிய இருவாகனங்களும் நடுரோட்டில் நின்றது. இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    இது பற்றி தகவல் அறிந்ததும் போக்கு வரத்து இன்ஸ்பெக்டர் அருண் தலை மையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள். அதன் பிறகு போக்குவரத்து சீரானது.

    • நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
    • தமிழகத்திலேயே குமரி மாவட்டத்தில் தான் அதிக இருச்சக்கர வாகனங்கள் விற்பனை ஆகின்றன.

    கொல்லங்கோடு, ஜூன்.17-

    தமிழகத்திலேயே குமரி மாவட்டத்தில் தான் அதிக இருச்சக்கர வாகனங்கள் விற்பனை ஆகின்றன.

    இதில் நவீன ரக வாகனங்களும், விலை உயர்ந்த இருச்சக்கர வாகனங்களும் இங்கு அதிகம் விற்பனை ஆகின்றன. மாணவர்கள் மற்றும் இளைஞர்களே இத்தகைய வாகனங்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இந்த வாகனங்களில் அரசு அனும தித்து உள்ள அள வை விட அதிக ஒலி எழுப்பும் கருவி களை பொருத்தி வீதிகளிலும், சாலைகளி லும் வலம் வரு கிறார்கள்.

    குறிப்பாக கிராம புறங்களில் உள்ள சாலைகளில் இப்படி அதிக ஒலி எழுப்பியபடி செல்லும் இருச்சக்கர வாகனங்களால் பொதுமக்கள் பலரும் அலறியடித்து ஓட்டம் பிடிக்கிறார்கள். மேலும் முதியோர் மற்றும் பெண்கள், குழந்தைகள் இச்சத்தத்தை கேட்டு மிரண்டு ஓடும் சம்பவங்களும் நடக்கிறது. இப்படி அதிக ஒலியுடன் வலம் வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.

    இதையடுத்து நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த போக்குவரத்து விழிப்புணர்வு ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற கலெக்டர், குமரி மாவட்டத்தில் அதிக ஒலி எழுப்பி செல்லும் வாகனங்களை அனைத்தையும் பறிமுதல் செய்து கடும் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என போலீசாருக்கு அறிவுறுத்தினார். கலெக்டரின் உத்தரவை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் அதிக ஒலி எழுப்பும் வாகனங்கள் போக்குவரத்து போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வாகனங்களை போலீஸ் நிலையம் கொண்டு சென்ற போலீசார் அதில் பொருத்தப்பட்ட கருவிகளை அகற்றியதோடு, அதனை ஓட்டி வந்தோருக்கு அபராதமும் விதித்தனர்.

    குளச்சல் பகுதியில் நேற்று சுமார் 12-க்கும் மேற்பட்ட வாகனங்கள் போலீ சாரால் பறிமுதல் செய்யப்பட்டன. இது போல நாகர்கோ வில், தக்கலை, மார்த்தாண்டம் பகுதிகளில் வாகனங்களை கண்காணிக்கும் பணி நடந்து வரு கிறது.

    ஆனால் கொல் லங்கோடு பகுதி யில் இன்னும் அதிக ஒலி எழுப் பியபடி செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட வில்லை. இதனால் இங்கு சாலையில் நடந்து செல்லும் முதியோரும், பெண்களும் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். சில இடங்களில் ஆடு, மாடு போன்ற விலங்குகள் மிரண்டு ஓடி விபத்தை ஏற்படுத்தும் சம்பவங்களும் நடந்தது.

    எனவே இந்த பகுதியில் அதிக ஒலி எழுப்பும் வாகனங்களால் பேராபத்து ஏற்படும் முன்பு போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • 100-க்கும் மேற்பட்ட கடைகள் 2 புறங்களிலும் அமைந்துள்ளது.
    • சாலை நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்பை எடுத்து பொதுமக்களுக்கு உதவ வேண்டும்.

    அந்தியூர், 

    ஈரோடு மாவட்டம் அந்தியூர்பஸ் நிலையத்தில் இருந்து அண்ணா மடுவு வரை சாலை விரி வாக்கம் பணி கடந்த 6 மாதத்திற்கு முன்பு தொடங்கி நடைபெற்று முடிவடைந்தது.

    இந்த நிலையில் அண்ணா மடுவில் இருந்து அந்தியூர் பஸ் நிலையம் வரை சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் வாகனங்கள் திரும்பிச் செல்ல பொதுமக்கள் நடந்து செல்ல பாதைவிடப்பட்டுள்ளது.

    இந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் 2 புறங்களிலும் அமைந்துள்ளது. இதனால் தங்களின் வியாபாரம் பாதிக்கப்படுவதுடன் குடியிருப்புகளும் அதிக அளவில் உள்ளதால் அனைவரும் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு சென்று தான் திரும்பி வந்து அவர்கள் இல்லத்திற்கு வர வேண்டி உள்ளது.

    மேலும் இந்த பகுதியில் தனியார் திருமண மண்டபம் முக்கிய வங்கிகள் செயல்பட்டு வருகிறது. எனவே குறிப்பாக அந்தந்த இடங்களில் செல்வதற்கு சாலை நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்பை எடுத்து பொதுமக்களுக்கு உதவ வேண்டும்.

    என்று அந்த பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் இன்று காலை அந்தியூர் பஸ்நிலையம் அருகே உள்ள பவானி-அம்மாபேட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து அந்தியூர் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை வரவழைத்து இதற்கு தீர்வு கிடைக்கும் வரை சாலை மறியலை கைவிட மாட்டோம் என்று கூறி சாலை மறியலில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

    அவர்கள் வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

    • அரேபாளையம் செல்லும் சாலையில் கரடி ஒன்று மெதுவாக நடந்து சென்றது
    • கரடியிடமிருந்து எப்பவுமே 200 மீட்டர் தூரம் தள்ளி இருக்க வேண்டும்.

    சத்தியமங்கலம், 

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் யானை மான், புலி, கரடி, சிறுத்தை, காட்டெருமை, புலி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

    கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் இரண்டு நாட்களாக சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களான பண்ணாரி, ஆசனூர், அரேப்பாளையம், தாளவாடி, திம்பம், தலமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் மழையால் குளிர்ச்சியான சீதோஷண நிலை நிலவி வருகிறது

    இதனால் வனவிலங்குகள் அவ்வப்போது ரோட்டை கடப்பதும் ரோட்டின் சாலை ஓரம் நடந்து செல்வதும் வாடிக்கையாகிவிட்டது.

    இதே போல் நேற்று சத்தியமங்கலத்தில் இருந்து அரேபாளையம் செல்லும் சாலையில் கரடி ஒன்று மெதுவாக நடந்து சென்றது. இதனைப் பார்த்த வாகன ஓட்டிகள் அதை செல்போனில் படம் பிடிக்க ஆரம்பித்தனர். சிறிது நேரம் நடந்து சென்ற கரடி அடர்ந்த வனபகுதிக்குள் சென்று விட்டது.

    இதை பார்த்த வனத்துறை அதிகாரிகள் கரடிகள் மிகவும் ஆபத்தானவை கரடியிடமிருந்து எப்பவுமே 200 மீட்டர் தூரம் தள்ளி இருக்க வேண்டும் எனவும் வனவிலங்குகளை தொந்தரவு செய்யாமல் பார்த்து ரசிக்கவும் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

    • ஒற்றை யானை ஒன்று சாலையில் சுற்றி திரிந்தது.
    • வாகன ஓட்டிகள் அச்சத்தோடு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலை பாதையில் மைசூருக்கு செல்லக்கூடிய பிரதான சாலை உள்ளது.

    இன்று காலை 9 மணி அளவில் வரட்டுபள்ளம் அணை அருகே ஒற்றை யானை ஒன்று சாலையில் அங்கும் இங்குமாய் சுற்றி திரிந்தது.

    இதனால் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட நேரம் நின்று செல்லும் நிலை ஏற்பட்டது.தற்போது கோடை காலம் தொடங்கி இருப்பதனால் வனப்பகுதிகளுக்குள் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    இதனால் வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகளால் வாகன ஓட்டிகள் அச்சத்தோடு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் இந்த ஒற்றை யானை கடந்த 2 நாட்களுக்கு முன்பு வட்டக்காடு பகுதிகளில் இரவு நேரத்தில் ஊருக்குள் உலா வந்து பொதுமக்களை வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையை உருவாக்கி வந்தது.

    எனவே இந்த ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் செல்ல வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வட்டக்காடு பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சிறுத்தை ஒன்று சாலையில் நடந்து சென்றது.
    • வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் மான், யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையில் உலா வருவதும், சாலையை கடப்பதும் தொடர்கதையாகி வருகின்றன.

    இந்நிலையில் இரவு திம்பம் மலைப்பாதை 24-வது கொண்டை ஊசி வளைவு அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை ஒன்று சாலையில் நடந்து சென்றது.

    பின்னர் சிறிது தூரம் சாலையில் நடந்து சென்ற சிறுத்தை அருகே உள்ள வனப்பகுதிக்குள் தாவி சென்று மறைந்தது.

    இந்த காட்சியை அவ்வழியாக வாகனத்தில் பயணித்த வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். சாலையில் உலா வந்த சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

    தற்போது திம்பம் மலைப்பாதை வழியாக இரவு நேரங்களில் வாகனங்கள் அனுமதிக்கப்படாததால் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படும் எனவும்,

    திம்பம் மலைப்பாதை வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் வாகனங்களை கவனத்துடன் இயக்குமாறும் வனத்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

    • சிறுத்தை ஒன்று சாலையில் உலா வந்தது.
    • செல்போன்களில் படம் பிடித்தனர்.

    ஈரோடு:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதிகளில் ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    திம்பம் மலைப்பாதையில் மொத்தம் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. தமிழகம்-கர்நாடகம் இடையே முக்கிய பாதையாக திம்பம் மலைப்பாதை உள்ளது.

    இதனால் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். இந்நிலையில் வனப்பகுதி களில் இருந்து உணவு மற்றும் தண்ணீரை தேடி வெளியேறும் வன விலங்கு கள் சாலையோ ரங்களுக்கு வந்து நின்று கொள்கின்றன.

    சில சமயங்களில் வனப்பகு தியையொட்டி உள்ள கிராமங்களுக்குள் புகுந்து ஆடு, மாடுகளை வேட்டையாடுகின்றன.

    இந்த நிலையில் நேற்று இரவு சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி நோக்கி 4 பேர் காரில் சென்று கொண்டு இருந்தனர்.

    மலைப்பாதையின் 24-வது கொண்டை ஊசி வளைவில் கார் திரும்பியபோது சிறுத்தை ஒன்று சாலையில் உலா வந்தது. இதனை பார்த்த வாகன ஓட்டி அதிர்ச்சி அடைந்தார்.

    மேலும் காரில் இருந்தவர்கள் சிறுத்தையை தங்களுடைய செல்போன்களில் படம் பிடித்தனர். பின்னர் சிறிது நேரத்தில் வனப்பகுதிக்குள் சென்று சிறுத்தை மறைந்து கொண்டது.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், வனப்பகுதி களில் இரவு நேரங்களில் சிறுத்தையின் நடமாட்டம் அடிக்கடி நடைபெறுகிறது.

    இதனால் மலைப்பாதைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனமுடன் செல்ல வேண்டும் என்றும், வாகனங்களை மலைப்பாதையில் நிறுத்த கூடாது என்றும் எச்சரித்த னர்.

    • தாளவாடி யில் இருந்து தலமலை செல்லும் வனச்சாலை நெய்தாளபுரம் அருகே காட்டாற்று வெள்ளம் சாலையை மூழ்கடித்து சென்றது.
    • தற்போது வெள்ளம் வடிந்த பிறகு சாலையில் மணல் குவியல் குவியலாக குவிந்துள்ளது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அங்குள்ள ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குளம், குட்டைகள் நிரம்பி வழிகிறது.

    அதேப்போல தொடர் மலை காரணமாக விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கி நிற்பதால் விவசாய பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. தாளவாடி யில் இருந்து தலமலை செல்லும் வனச்சாலை நெய்தாளபுரம் அருகே காட்டாற்று வெள்ளம் சாலையை மூழ்கடித்து சென்றது.

    தற்போது வெள்ளம் வடிந்த பிறகு சாலையில் மணல் குவியல் குவியலாக குவிந்துள்ளது. இதனால் அவ்வழியில் செல்லும் வாகன ஓட்டிகள் சாலையை கடக்க முடியாமலும், கீழே விழுந்து அடிபடுவதும் நடந்து வருகிறது.

    எனவே சாலையில் குவிந்துள்ள மணலை அப்பு றப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×