search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "on Bhawani-Ammapet road"

    • 100-க்கும் மேற்பட்ட கடைகள் 2 புறங்களிலும் அமைந்துள்ளது.
    • சாலை நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்பை எடுத்து பொதுமக்களுக்கு உதவ வேண்டும்.

    அந்தியூர், 

    ஈரோடு மாவட்டம் அந்தியூர்பஸ் நிலையத்தில் இருந்து அண்ணா மடுவு வரை சாலை விரி வாக்கம் பணி கடந்த 6 மாதத்திற்கு முன்பு தொடங்கி நடைபெற்று முடிவடைந்தது.

    இந்த நிலையில் அண்ணா மடுவில் இருந்து அந்தியூர் பஸ் நிலையம் வரை சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் வாகனங்கள் திரும்பிச் செல்ல பொதுமக்கள் நடந்து செல்ல பாதைவிடப்பட்டுள்ளது.

    இந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் 2 புறங்களிலும் அமைந்துள்ளது. இதனால் தங்களின் வியாபாரம் பாதிக்கப்படுவதுடன் குடியிருப்புகளும் அதிக அளவில் உள்ளதால் அனைவரும் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு சென்று தான் திரும்பி வந்து அவர்கள் இல்லத்திற்கு வர வேண்டி உள்ளது.

    மேலும் இந்த பகுதியில் தனியார் திருமண மண்டபம் முக்கிய வங்கிகள் செயல்பட்டு வருகிறது. எனவே குறிப்பாக அந்தந்த இடங்களில் செல்வதற்கு சாலை நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்பை எடுத்து பொதுமக்களுக்கு உதவ வேண்டும்.

    என்று அந்த பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் இன்று காலை அந்தியூர் பஸ்நிலையம் அருகே உள்ள பவானி-அம்மாபேட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து அந்தியூர் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை வரவழைத்து இதற்கு தீர்வு கிடைக்கும் வரை சாலை மறியலை கைவிட மாட்டோம் என்று கூறி சாலை மறியலில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

    அவர்கள் வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

    ×