சாலையில் நடந்து சென்ற கரடி

அரேபாளையம் செல்லும் சாலையில் கரடி ஒன்று மெதுவாக நடந்து சென்றதுகரடியிடமிருந்து எப்பவுமே 200 மீட்டர் தூரம் தள்ளி இருக்க வேண்டும்.
சாலையில் நடந்து சென்ற கரடி
Published on

சத்தியமங்கலம், 

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் யானை மான், புலி, கரடி, சிறுத்தை, காட்டெருமை, புலி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் இரண்டு நாட்களாக சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களான பண்ணாரி, ஆசனூர், அரேப்பாளையம், தாளவாடி, திம்பம், தலமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் மழையால் குளிர்ச்சியான சீதோஷண நிலை நிலவி வருகிறது

இதனால் வனவிலங்குகள் அவ்வப்போது ரோட்டை கடப்பதும் ரோட்டின் சாலை ஓரம் நடந்து செல்வதும் வாடிக்கையாகிவிட்டது.

இதே போல் நேற்று சத்தியமங்கலத்தில் இருந்து அரேபாளையம் செல்லும் சாலையில் கரடி ஒன்று மெதுவாக நடந்து சென்றது. இதனைப் பார்த்த வாகன ஓட்டிகள் அதை செல்போனில் படம் பிடிக்க ஆரம்பித்தனர். சிறிது நேரம் நடந்து சென்ற கரடி அடர்ந்த வனபகுதிக்குள் சென்று விட்டது.

இதை பார்த்த வனத்துறை அதிகாரிகள் கரடிகள் மிகவும் ஆபத்தானவை கரடியிடமிருந்து எப்பவுமே 200 மீட்டர் தூரம் தள்ளி இருக்க வேண்டும் எனவும் வனவிலங்குகளை தொந்தரவு செய்யாமல் பார்த்து ரசிக்கவும் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com