search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "strolled down"

    • ஒற்றை யானை ஒன்று சாலையில் சுற்றி திரிந்தது.
    • வாகன ஓட்டிகள் அச்சத்தோடு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலை பாதையில் மைசூருக்கு செல்லக்கூடிய பிரதான சாலை உள்ளது.

    இன்று காலை 9 மணி அளவில் வரட்டுபள்ளம் அணை அருகே ஒற்றை யானை ஒன்று சாலையில் அங்கும் இங்குமாய் சுற்றி திரிந்தது.

    இதனால் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட நேரம் நின்று செல்லும் நிலை ஏற்பட்டது.தற்போது கோடை காலம் தொடங்கி இருப்பதனால் வனப்பகுதிகளுக்குள் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    இதனால் வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகளால் வாகன ஓட்டிகள் அச்சத்தோடு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் இந்த ஒற்றை யானை கடந்த 2 நாட்களுக்கு முன்பு வட்டக்காடு பகுதிகளில் இரவு நேரத்தில் ஊருக்குள் உலா வந்து பொதுமக்களை வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையை உருவாக்கி வந்தது.

    எனவே இந்த ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் செல்ல வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வட்டக்காடு பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சிறுத்தை ஒன்று சாலையில் நடந்து சென்றது.
    • வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் மான், யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையில் உலா வருவதும், சாலையை கடப்பதும் தொடர்கதையாகி வருகின்றன.

    இந்நிலையில் இரவு திம்பம் மலைப்பாதை 24-வது கொண்டை ஊசி வளைவு அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை ஒன்று சாலையில் நடந்து சென்றது.

    பின்னர் சிறிது தூரம் சாலையில் நடந்து சென்ற சிறுத்தை அருகே உள்ள வனப்பகுதிக்குள் தாவி சென்று மறைந்தது.

    இந்த காட்சியை அவ்வழியாக வாகனத்தில் பயணித்த வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். சாலையில் உலா வந்த சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

    தற்போது திம்பம் மலைப்பாதை வழியாக இரவு நேரங்களில் வாகனங்கள் அனுமதிக்கப்படாததால் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படும் எனவும்,

    திம்பம் மலைப்பாதை வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் வாகனங்களை கவனத்துடன் இயக்குமாறும் வனத்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

    • சிறுத்தை ஒன்று சாலையில் உலா வந்தது.
    • செல்போன்களில் படம் பிடித்தனர்.

    ஈரோடு:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதிகளில் ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    திம்பம் மலைப்பாதையில் மொத்தம் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. தமிழகம்-கர்நாடகம் இடையே முக்கிய பாதையாக திம்பம் மலைப்பாதை உள்ளது.

    இதனால் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். இந்நிலையில் வனப்பகுதி களில் இருந்து உணவு மற்றும் தண்ணீரை தேடி வெளியேறும் வன விலங்கு கள் சாலையோ ரங்களுக்கு வந்து நின்று கொள்கின்றன.

    சில சமயங்களில் வனப்பகு தியையொட்டி உள்ள கிராமங்களுக்குள் புகுந்து ஆடு, மாடுகளை வேட்டையாடுகின்றன.

    இந்த நிலையில் நேற்று இரவு சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி நோக்கி 4 பேர் காரில் சென்று கொண்டு இருந்தனர்.

    மலைப்பாதையின் 24-வது கொண்டை ஊசி வளைவில் கார் திரும்பியபோது சிறுத்தை ஒன்று சாலையில் உலா வந்தது. இதனை பார்த்த வாகன ஓட்டி அதிர்ச்சி அடைந்தார்.

    மேலும் காரில் இருந்தவர்கள் சிறுத்தையை தங்களுடைய செல்போன்களில் படம் பிடித்தனர். பின்னர் சிறிது நேரத்தில் வனப்பகுதிக்குள் சென்று சிறுத்தை மறைந்து கொண்டது.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், வனப்பகுதி களில் இரவு நேரங்களில் சிறுத்தையின் நடமாட்டம் அடிக்கடி நடைபெறுகிறது.

    இதனால் மலைப்பாதைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனமுடன் செல்ல வேண்டும் என்றும், வாகனங்களை மலைப்பாதையில் நிறுத்த கூடாது என்றும் எச்சரித்த னர்.

    ×