search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A leopard"

    • ஒரு சிறுத்தை ஊட்டி ரோட்டை கடந்து செல்லும் காட்சி, பொமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஊட்டி,

    மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம், சுமார் 60 சதவீதம் வனப்பகுதிகளை உள்ளடக்கியது. இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன.

    ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட எச்.பி.எப், கலெக்டர் குடியிருப்பு, ரோஸ்மவுண்ட், எல்க்ஹில் உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் தற்போது அதிகரித்து வருகிறது. அவை இந்திரா நகர், பெரிய பிக்கட்டி ஆகிய பகுதிகளில் அடிக்கடி உலா வந்து செல்கின்றன. இந்த நிலையில் ஒரு சிறுத்தை ஊட்டி ரோட்டை கடந்து செல்லும் காட்சி, பொமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை கண்கா ணித்து, அதனை கூண்டு வைத்து பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • சி.சி.டி.வி கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ள இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது
    • சிறுத்தையை வனத்துறையினர் பிடித்து அடர்ந்த காட்டுக்குள் விடவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தனியார் குடியிருப்பு உள்ளது. அங்கு வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்புக்காக நாய்களை வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் ஒரு சிறுத்தை காட்டில் இருந்து வெளியேறி, புதன்கிழமை அதிகாலை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது.

    அப்போது நாய்கள் குரைத்தன. சிறுத்தை ஒரு நாயை வேட்டையாடி கொன்று தூக்கி சென்றது. இது அந்த குடியிருப்பு பகுதியில் உள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு காமிராவில் தெளிவாக பதிவாகி உள்ளது. தற்போது இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.இதனை பார்த்த பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். பொதுமக்கள் அதிகம் வசிக்க கூடிய பகுதிகளில் சிறுத்தை நுழைந்து வளர்ப்பு நாயை வேட்டையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஊட்டியில் குடியிருப்பு பகுதிக்குள் சுற்றித்திரியும் சிறுத்தையை வனத்துறையினர் பிடித்து அடர்ந்த காட்டுக்குள் விடவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • சிறுத்தை ஒன்று சாலையில் நடந்து சென்றது.
    • வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் மான், யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையில் உலா வருவதும், சாலையை கடப்பதும் தொடர்கதையாகி வருகின்றன.

    இந்நிலையில் இரவு திம்பம் மலைப்பாதை 24-வது கொண்டை ஊசி வளைவு அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை ஒன்று சாலையில் நடந்து சென்றது.

    பின்னர் சிறிது தூரம் சாலையில் நடந்து சென்ற சிறுத்தை அருகே உள்ள வனப்பகுதிக்குள் தாவி சென்று மறைந்தது.

    இந்த காட்சியை அவ்வழியாக வாகனத்தில் பயணித்த வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். சாலையில் உலா வந்த சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

    தற்போது திம்பம் மலைப்பாதை வழியாக இரவு நேரங்களில் வாகனங்கள் அனுமதிக்கப்படாததால் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படும் எனவும்,

    திம்பம் மலைப்பாதை வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் வாகனங்களை கவனத்துடன் இயக்குமாறும் வனத்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

    • சிறுத்தை ஒன்று சாலையில் உலா வந்தது.
    • செல்போன்களில் படம் பிடித்தனர்.

    ஈரோடு:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதிகளில் ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    திம்பம் மலைப்பாதையில் மொத்தம் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. தமிழகம்-கர்நாடகம் இடையே முக்கிய பாதையாக திம்பம் மலைப்பாதை உள்ளது.

    இதனால் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். இந்நிலையில் வனப்பகுதி களில் இருந்து உணவு மற்றும் தண்ணீரை தேடி வெளியேறும் வன விலங்கு கள் சாலையோ ரங்களுக்கு வந்து நின்று கொள்கின்றன.

    சில சமயங்களில் வனப்பகு தியையொட்டி உள்ள கிராமங்களுக்குள் புகுந்து ஆடு, மாடுகளை வேட்டையாடுகின்றன.

    இந்த நிலையில் நேற்று இரவு சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி நோக்கி 4 பேர் காரில் சென்று கொண்டு இருந்தனர்.

    மலைப்பாதையின் 24-வது கொண்டை ஊசி வளைவில் கார் திரும்பியபோது சிறுத்தை ஒன்று சாலையில் உலா வந்தது. இதனை பார்த்த வாகன ஓட்டி அதிர்ச்சி அடைந்தார்.

    மேலும் காரில் இருந்தவர்கள் சிறுத்தையை தங்களுடைய செல்போன்களில் படம் பிடித்தனர். பின்னர் சிறிது நேரத்தில் வனப்பகுதிக்குள் சென்று சிறுத்தை மறைந்து கொண்டது.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், வனப்பகுதி களில் இரவு நேரங்களில் சிறுத்தையின் நடமாட்டம் அடிக்கடி நடைபெறுகிறது.

    இதனால் மலைப்பாதைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனமுடன் செல்ல வேண்டும் என்றும், வாகனங்களை மலைப்பாதையில் நிறுத்த கூடாது என்றும் எச்சரித்த னர்.

    • திம்பம் மலைப்பாதையில் அவ்வப்போது இரவு நேரங்களில் சிறுத்தைகள் நடமாடுவது வழக்கம்.
    • வாகன ஓட்டி ஒருவர் சிறுத்தை நடமாட்டத்தை செல்போனில் வீடியோ பதிவு செய்தார்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசிக்கின்றன.

    இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது.

    திம்பம் மலைப்பாதையில் அவ்வப்போது இரவு நேரங்களில் சிறுத்தைகள் நடமாடுவது வழக்கம்.

    இந்த நிலையில் இரவு 19-வது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையோர தடுப்புச் சுவரில் ஒரு சிறுத்தை ஜாலியாக நடந்து சென்றது. அப்போது அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் சிறுத்தை நடமாட்டத்தை கண்டு அச்சமடைந்தனர்.

    வாகன ஓட்டி ஒருவர் சிறுத்தை நடமாட்டத்தை செல்போனில் வீடியோ பதிவு செய்தார். சிறிது நேரம் சாலையோரம் நடமாடிய சிறுத்தை பின்னர் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.

    ×