search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணல்"

    • அதுமட்டுமின்றி நீர்மட்டம் தாழ்வாகி கடல் உள்வாங்கும்போது இந்த படகுகள் தரை தட்டி நிற்கின்றன.
    • ராட்சத பொக்லைன் எந்திரம் மூலம் சுமார் 5 டன் மணல்கள் கடலில் இருந்து தூர்வாரப்பட்டு கரையில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இதற்கான 5 படகுகளும் கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த படகு துறையில் கடும் இடநெருக்கடிக்கு இடையே இந்த படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதால் கடல் சீற்றம், கடல் கொந்தளிப்பு, கடல் நீர்மட்டம் உயர்வு போன்ற இயற்கை சீற்றங்களின்போது இந்த படகுகள் ஒன்றோடு ஒன்று இடித்து சேதமடைந்து வருகின்றன.

    அதுமட்டுமின்றி நீர்மட்டம் தாழ்வாகி கடல் உள்வாங்கும்போது இந்த படகுகள் தரை தட்டி நிற்கின்றன. படகுத்துறையில் குவிந்து கிடக்கும் மணல் குவியல்களை அவ்வப்போது அகற்றாததன் காரணமாக இந்த படகுகள் கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கும்போது தரை தட்டி நிற்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து இந்த பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறையில் குவிந்து கிடக்கும் மணல் குவியல்களை அகற்ற பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன் பயனாக 2 மாதங்களுக்கு பிறகு கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறையில் ரூ.1 லட்சம் செலவில் தூர்வாரும் பணி தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ராட்சத பொக்லைன் எந்திரம் மூலம் சுமார் 5 டன் மணல்கள் கடலில் இருந்து தூர்வாரப்பட்டு கரையில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

    • வாகன ஓட்டிகள் பொன்னேரி-மீஞ்சூர் வழியாக சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் சுற்றி சென்று வருகிறார்கள்.
    • 95 சதவீதம் மணல்கள் அகற்றப்பட்டு உள்ள நிலையில் இன்று முழுவதும் அகற்றப்படும் என்று தெரிகிறது.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த பழவேற்காடு-காட்டுப்பள்ளி சாலை வழியாக அதானி துறைமுகம் மற்றும் காட்டுப் பள்ளி கப்பல் கட்டும் தளம், எண்ணூர் துறைமுகம் , நிலக்கரி சேமிப்பு கிடங்கு வடசென்னை அனல் மின் நிலையம், எண்ணூர் திருவொற்றியூர் சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு பழவேற்காடு வாகனங்கள் சென்று வருகின்றன. அதிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையை சுற்று வட்டார பகுதி மக்களும் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும்.

    கடந்த வாரத்தில் மிச்சாங் புயல் காரணமாக பெய்த கனமழை மற்றும் சூறைக்காற்றால் கடல் அரிப்பு ஏற்பட்டு கடலில் இருந்து மணல் முழுவதும் பழவேற்காடு-காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் படர்ந்தது. சுமார் அரை கிலோமீட்டர் தூரம் சாலையே தெரியாத அளவுக்கு மணல் திட்டுக்களாக காட்சி அளிக்கிறது.

    இதனால் அந்த சாலையில் வாகன போக்குவரத்து கடந்த ஒரு வாரமாக முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளன. வாகன ஓட்டிகள் பொன்னேரி-மீஞ்சூர் வழியாக சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் சுற்றி சென்று வருகிறார்கள்.

    மணலால் மூடப்பட்ட சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து தாங்கல் பெரும்புலம் ஊராட்சி தலைவர் ஞானவேல் தலைமையில் 2 ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் சாலையை மூடிய மணல் திட்டுக்கள் அகற்றப்பட்டு வருகிறது.

    இதனை மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜ் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 95 சதவீதம் மணல்கள் அகற்றப்பட்டு உள்ள நிலையில் இன்று முழுவதும் அகற்றப்படும் என்று தெரிகிறது. நாளைக்குள் பழவேற்காடு-காட்டுப்பள்ளி சாலையில் வழக்கம்போல் வாகன போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    ஏரி உள்ளிட்ட இடங்களில் ஏதாவது உடைப்புகள் ஏற்பட்டால் உடனடியாக அதனை சரி செய்வதற்காக செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தில் மணல் மூட்டைகள் தயார் நிலையில் அடுக்கி வைக்கப்பட்டு வருகிறது.

    விழுப்புரம்:

    புயல் அறிவிப்பு எதிரொலியாக செஞ்சி ஒன்றியத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புயல் தாக்கம் எதிரொலியாக இன்று முதல் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரி, குளங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

    ஏரி உள்ளிட்ட இடங்களில் ஏதாவது உடைப்புகள் ஏற்பட்டால் உடனடியாக அதனை சரி செய்வதற்காக செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தில் மணல் மூட்டைகள் தயார் நிலையில் அடுக்கி வைக்கப்பட்டு வருகிறது. மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்படுவதை செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார் மேற்பார்வையில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீத்தாலட்சுமி, வெங்கடசுப்பிரமணியன் ஆகியோர் கிராமப் பகுதிகளில் முகாமிட்டு அங்கு செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படா வண்ணம் கண்காணிக்க வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீடுகளில் மழைநீர் சூழ்ந்தால் அவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.
    • மணல் அள்ளப்பட்டதற்கான தெளிவான அளவினை காண்பிக்கும் என்கின்றனர்,

    கரூர்:

    கரூர் மாவட்டம், வாங்கல் அருகே மல்லம்பாளையம், நன்னியூர் புதூர் ஆகிய 2 இடங்களில் மணல் குவாரி செயல்பட்டு வந்தது. இந்த மணல் குவாரிகளை புதுக்கோட்டை ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம் ஆதியோர் ஓப்பந்த அடிப்படையில் நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், கடந்த மாதம் செப்டம்பர் 12-ந் தேதி, அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த 2 குவாரிகள் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் ஒரு மணல் குவாரி என 3 குவாரிகளில் 2 நாட்கள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர்.

    இதைத் தொடர்ந்து கடந்த 10-ந் தேதி மீண்டும் 2-வது முறையாக மணல் திடங்கு, மணல் குவாரிகளில் அமலாக்கத் துறையினர் சோதனை செய்து, காவிரி ஆற்றினுள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட, அதிகமாக மணல் அள்ளப்பட்டதா என அளவீடு செய்தனர்.

    பின்னர் 3-வது முறையாக 18-ந்தேதியும், 4-வது முறையாக கடந்த 20-ந்தேதியும் மத்திய போலீஸ் பாதுகாப்புடன் மணல் அள்ளப்பட்ட இடத்தை, ஜிட்டல் சர்வே எந்திரங்களைக் கொண்டும், ட்ரோன் கேமரா மூலமாகவும் ஆய்வு செய்து சோதனை மேற்கொண்டனர்.

    இந்த பல்வேறு கட்ட சோதனைகளில் போலி ரசீதுகள், போலி கியூ ஆர் குறியீடுகள் உள்ளிட்டமுக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. மேலும் கம்ப்யூட்டர்களில் பதிவான சி.சி.டி.வி. காட்சிகள், ஹார்டு டிஸ்க் போன்றவையும் ஆய்வு செய்யப்பட்டது.

    இதனிடையே இந்த குவாரிகளில் கடந்த 2 ஆண்டுகளில் அள்ளப்பட்ட மணல், விற்கப்பட்ட மணல் போன்ற விவரங்களை செயற்கைகோள் உதவியுடன் அதிகாரிகள் கணக்கிட்டுள்ளனர். இதற்காக இஸ்ரோ, கான்பூர் ஐ.ஐ.டி. உதவியுடன் செயற்கைகோள் படங்கள் எடுக்கப்பட்டு உள்ளது.

    இவை மணல் அள்ளப்பட்டதற்கான தெளிவான அளவினை காண்பிக்கும் என்கின்றனர். அதிகாரிகள். டிஜிட்டல் சர்வே முறையில் மணல் அள்ளப்பட்டது அளவீடு செய்து உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது.

    • 2 சரக்கு வாகனங்களில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தனர்.
    • மணல் கடத்திய வழக்கில் 3 பேரையும் கைது செய்தனர்.

    பேராவூரணி:

    பேராவூரணி பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது பேராவூரணி சிதம்பரம் ரோடு பகுதியைச் சேர்ந்த நீலகண்டன் (29), பட்டத்தூரணி கிராமத்தைச் சேர்ந்த முரளிதரன் (21), சாணாகரை கிராமத்தைச் சேர்ந்த பிரபு (30), ஆகிய மூன்று பேரும் 2 சரக்கு வாகனத்தில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தனர்.

    அப்போது பேராவூரணி காவல்துறையினர் 2 வாகனங்களையும் மறித்து சோதனையில் ஈடுப்பட்டனர்.

    அப்போது அவர்கள் உரிய அனுமதியின்றி மணல் கடத்தி செல்வது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து போலீசார் சரக்கு வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் மணல் கடத்திய வழக்கில் 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

    • அனுமதியின்றி மணல் கடத்துவதாக வாட்டாத்திக்கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • 3 சரக்கு வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    திருவோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே வாட்டாத்திக்கோட்டை போலீஸ் சரக்கத்துக்குட்பட்ட பகுதியில் நெய்வேலி அக்னி ஆற்றில் இருந்து அனுமதி இன்றி மணல் கடத்துவதாக வாட்டாத்திக்கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து வாட்டாத்திக்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் விஷ்ணுபிரசாத், காவலர் சிற்றரசு, உள்ளிட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது நெய்வேலி அக்னி ஆற்றில் இருந்து அனுமதியின்றி 3 சரக்கு வாகனத்தில் மணல் கடத்தி செல்வது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் விரட்டி சென்று மணல் கடத்தல் வாகனத்தை தடுத்து நிறுத்தினர். உடனே அதில் இருந்தவர்கள் தப்பி ஓடினர். உடனே போலீசார் விரட்டி சென்று ஒருவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் நெய்வேலி வடபாதி ஆவனாண்டி கொள்ளை பகுதியைச் சேர்ந்தவர்கள் பாண்டிஸ்வரன் ( வயது 20) என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் 3 சரக்கு வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய ரமேஷ், , ராஜஸ்ரீஹரன், வினோத், அறிவழகன், அஜய் ,உள்ளிட்ட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • மணல் ஏற்றி சென்ற லாரிகளை சிறைபிடித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பள்ளி நேரங்களில் லாரிகள் செல்லாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த கோளூர் ஏரியில் சவுடு மண் குவாரி செயல்பட்டு வருகிறது. இதனால் தினமும் 500-க்கும் மேற்பட்ட லாரிகள் பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு, திருப்பாலைவனம், ஏலியம்பேடு உள்ளிட்ட பகுதிகள் வழியாக சென்று வருகின்றன.

    பொன்னேரி அடுத்த பெரியகாவனம் பகுதியில் மணல் ஏற்றிசெல்லும் லாரிகளால் சாலைகள் சேதம் அடைந்து வருவதுடன் போக்கு வரத்து நெரிசல், மாசு, காரணமாக காலை-மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி, மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்தனர்.

    மேலும் லாரிகளில் அளவுக்கு அதிகமான சவுடு மண் ஏற்றி செல்லும் போது அதனை தார்பாய்மூலம் மூடாமல் செல்வதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிப்பதாகவும் குற்றம் சாட்டினர். இந்த நிலையில் இன்று காலை அப்பகுதி மக்கள் கவுன்சிலர் செந்தில்குமார் தலைமையில் மணல் ஏற்றி சென்ற லாரிகளை சிறைபிடித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 8 மணி முதல் 10 மணி வரை பள்ளி நேரங்களில் லாரிகள் செல்லக்கூடாது என்று அவர்கள் தெரிவித்தனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் தாசில்தார் மதியழகன், இன்ஸ்பெக்டர் சின்னதுரை மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பள்ளி நேரங்களில் லாரிகள் செல்லாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • மணலை அள்ளி மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு வந்தனர்.
    • ரோந்து போலீசார் மாட்டுவண்டியை மடக்கிப்பிடித்தனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள டி.புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் அய்யப்பன் (வயது 32), மணிகண்டன் (39). இருவரும் தனித்தனியே மாட்டு வண்டி வைத்துள்ளனர். இவர்கள் ஆற்றில் இருந்து மணலை அள்ளி மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு, திருக்கோவிலூர் - திருவெண்ணைநல்லூர் சாலையில் இன்று அதிகாலை வந்தனர். அப்போது அவ்வழியே சென்ற ரோந்து போலீசார் மாட்டுவண்டியை மடக்கிப்பிடித்தனர். அய்யப்பன், மணிகண்டன் ஆகியோர் மீது திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.

    • அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த மண்ணை பொக்லைன் எந்திரம் மூலம் லாரிகளில் ஏற்றிக்கொண்டு இருந்தனர்.
    • ரோடு ஓரங்களில் கொட்டப்படுவதற்காக மண் எடுக்கப்படுகிறது என்பது தெரியவந்தது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி நொச்சிபாளையம் பகுதியில், அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த மண்ணை பொக்லைன் எந்திரம் மூலம் லாரிகளில் ஏற்றிக்கொண்டு இருந்தனர். அவ்வழியே சென்ற பொதுமக்கள் இது குறித்து கேட்டபோது முறையான அனுமதி இன்றி மண் எடுப்பது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த வாகனங்களை சிறைபிடித்த பொதுமக்கள், கிராம நிர்வாக அலுவலர், பல்லடம் தாசில்தார் ஆகியோருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடம் வந்த கிராம நிர்வாக அலுவலர் மண் எடுத்தவர்களிடம் விசாரணை செய்த போது, ரோடு ஓரங்களில் கொட்டப்படுவதற்காக மண் எடுக்கப்படுகிறது என்பது தெரியவந்தது. இதையடுத்து உரிய அனுமதி பெற்று எடுக்க வேண்டும் என அந்த வாகன உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • வெட் மிக்ஸ் 2300 இல் இருந்து 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி விற்கப்பட உள்ளது.
    • டிப்பர் லாரி உரிமையாளர்கள் கற்கள் விளையினை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி இருக்கின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பெருமாநல்லூரில் ஊத்துக்குளி டிப்பர் லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம் சங்க தலைவர் சந்திரன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் மூர்த்தி முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்திற்கு பின் தலைவர் சந்திரன் கூறியதாவது:-

    கட்டுமான பொருட்களான கருங்கற்கள், ஜல்லி, சிப்ஸ் ஆகியவற்றின் விலையினை குவாரி உரிமையாளர்கள் உயர்த்தி உள்ளார்கள். எனவே வேறு வழியின்றி டிப்பர் லாரி உரிமையாளர்கள் கற்கள் விளையினை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி இருக்கிறோம். அதன்படி, எம் சாண்ட் ஒரு யூனிட் 3400 ரூபாயில் இருந்து 4000 ரூபாயாக உயர்த்தி விற்பனை செய்யப்படும்.

    தரமான பி சாண்ட் 3500 இல் இருந்து நான்காயிரம் ரூபாயாகவும், முக்கால் இன்ச் ஜல்லி 2300 இல் இருந்து 3 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி விற்பனை செய்யப்படும். ஒன்றரை இன்ச் ஜல்லி 2300 ரூபாயிலிருந்து 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி விற்கப்படும். சிப்ஸ் ஜல்லி 1300 ரூபாயிலிருந்து 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி விற்கப்படும்.

    வெட் மிக்ஸ் 2300 இல் இருந்து 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி விற்கப்பட உள்ளது. பவுடர் 2000 ரூபாயில் இருந்து 2750 ரூபாயாக உயர்த்தி விற்கப்படும். குவாரி உரிமையாளர்கள் விலை உயத்திய கட்டாயத்தால் இந்த விலை உயர்த்த வேண்டிய நிலைக்கு டிப்பர் லாரி உரிமையாளர்கள் ஆளாகி இருக்கிறோம் என்றார்.

    • 2 சரக்கு வாகனத்தில் ஆற்று மணல் கடத்தி வந்ததை தடுத்து நிறுத்தினர்.
    • தப்பியோடிய இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    திருவோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே உள்ள நெய்வேலி அக்னி ஆற்றில் இருந்து மணல் கடத்தி வருவதாக ஒரத்தநாடு துணை போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அவரது உத்தரவின் பெயரில் ஒரத்தநாடு இன்ஸ்பெக்டர் அன்பழகன் மேற்பார்வையில் தனிப்படை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் குமாரவேல், தலைமையிலான போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது திருவோணம் மேட்டுப்பட்டி கிராம பகுதியில் 2 சரக்கு வாகனத்தில் ஆற்று மணல் கடத்தி வந்ததை தடுத்து நிறுத்தினர்.

    போலீசை பார்த்தும் இரண்டு வாகனத்தில் வந்த மூவரில் 2 பேர் தப்பி ஓடினர்.

    ஒருவரை மட்டும் மடக்கி பிடித்த தனிப்படை போலீசார் திருவோணம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

    விசாரணையில் நெய்வேலி வடபாதி ஆவனா ண்டி கொள்ளையைச் சேர்ந்த கவினேசன் (22) என்பவர் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து இரவு நேரங்களில் அக்னி ஆற்றிலிருந்து மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து

    இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கவிநேசனை சிறையில் அடைத்தனர் . மேலும் தப்பி ஓடிய இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • மணல் கடத்தி வந்த மாட்டு வண்டி மற்றும் ஜோதியை சிறப்பு படை போலீசார், வாணியம்பாடி தாலுகா போலீசிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர்.
    • போலீசார் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேல்குப்பம் பகுதியில் பாலாற்றில் இருந்து மாட்டு வண்டிகள் மூலம் மணல் கொள்ளை நடக்கிறது.

    இதனை தடுக்க சிறப்பு படை போலீசார், இன்று காலை அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த அதே பகுதியைச் சேர்ந்த ஜோதி என்பவரை, மடக்கி பிடித்தனர்.

    மணல் கடத்தி வந்த மாட்டு வண்டி மற்றும் ஜோதியை சிறப்பு படை போலீசார், வாணியம்பாடி தாலுகா போலீசிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர். இதுகுறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்படி வாணியம்பாடி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    சிறப்பு படை போலீசார் பேசிக் கொண்டிருந்ததை, ஓட்டு கேட்ட ஜோதி அங்கிருந்து வேகமாக ஓடினார். கிராமத்தை ஒட்டியுள்ள டிரான்ஸ்பார்மரை ஆப் செய்து அதன் மீது ஏறி உட்கார்ந்து கொண்டார்.

    நீங்கள் என்னை கைது செய்தால், நான் மேலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என போலீசாரை மிரட்டி ரகளையில் ஈடுபட்டார்.

    அவரிடம் போலீசார் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ×