search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போராட்டத்தால்"

    • மாலை 5.30 மணிக்கு தொடங்கிய போராட்டம் 2 மணி நேரம் நீடித்தது.
    • வழக்கறிஞர்கள் குலசேகரம் போலீஸ் நிலையம் முன் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே மணலிவிளை பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின்ராஜ். இவர் பத்மநாபபுரம் கோர்ட்டில் வக்கீலாக உள்ளார்.

    இவருக்கு சொந்தமான இடம் மங்கலம் பகுதியில் உள்ளது. இந்த பகுதியில் செல்லுவதற்கு ரோடு எடுப்பதற்கு மங்கலம் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ரூ.1 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் அவர் வழி எடுக்க இடம் கொடுக்காததால் தான் கொடுத்த ரூபாயை திரும்ப கேட்டுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    குலசேகரம் போலீசில் இது தொடர்பாக ஜஸ்டின் ராஜ் புகார் கொடுத்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை என தெரிகிறது. இதனால் ஜஸ்டின் ராஜிற்கு ஆதரவாக பத்மநாபபுரம் வக்கீல் சங்க தலைவர் வின்சென்ட் தலைமையில் போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பலன் இல்லாததால் வழக்கறிஞர்கள் குலசேகரம் போலீஸ் நிலையம் முன் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாலை 5.30 மணிக்கு தொடங்கிய போராட்டம் 2 மணி நேரம் நீடித்தது. இதனால் கல்லுரி மாணவ-மாணவிகள் சென்ற வாகனங்கள், அரசு பஸ்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் காத்து நின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிடவில்லை. போராட் டம் இரவு 7.30 மணி வரை நீடித்தது. இன்ஸ்பெக்டர் வந்தால் தான் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று வழக்கறிஞர்கள் கூறினார்கள்.

    இதனால் குலசேகரம் பகுதியில் கடும் போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டது. மாலை நேரமானதால் பொதுமக்கள் எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் ஆவேச மடைந்து போராட்டம் நடத்தியவர்களுடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவியது.

    உடனடியாக குலசேகரம் இன்ஸ்பெக்டர் பால முருகன் வழக்கறிஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வழக்குப்பதிவு செய்வதாக உறுதி அளித்ததின் பேரில் வழக்கறிஞர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    இரவு தக்கலை டி.எஸ்.பி. குலசேகரம் போலீஸ் நிலையம் வந்து இன்ஸ்பெக்டருடன் ஆலோசனை நடத்தினார்.

    • வெளியாட்களை கொண்டு தூய்மை பணி செய்ய எதிர்ப்பு
    • விடுமுறை நாட்கனில் வெளியாட்களை வேலைக்கு அமர்த்தி விடுகின்றனர்.

    கோவை:

    கோவை மருதமலையில் சுமார் 70-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் சிலர் மருதமலை கோவில் தூய்மைப் பணியாளர்களாக வேலை செய்து வருகின்றனர்.

    இவர்கள் வனத்துறையினரின் வேண்டுகோளுக்கிணங்க மருதமலை கோவிலில் பல்வேறு வேலைகளை செய்து வருகின்றனர். அவர்கள் தற்போது வரை காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை ஒரு பிரிவினரும், 1 மணி முதல் இரவு 8 மணி வரை ஒரு பிரிவினரும் தூய்மைப் பணியை செய்து வந்தனர்.

    அதற்கு நாளொனறுக்கு ரூ.300 சம்பளம் வழக்கப்படுகிறது. இந்த நிலையில் அவர்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனைத்து ஊழியர்களும் வேலையில் இருக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் கூறியதாக தெரிகிறது.

    ஒரு சில நேரங்களில் இரவு 9 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணி வரை தூய்மைப் பணியில் ஈடுபட வைப்பதாக மலைவாழ் மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் ஊழியர்கள் விடுமுறை நாட்கனில் வெளியாட்களை வேலைக்கு அமர்த்தி விடுகின்றனர். ஷிப்ட் அடிப்படையில் பழைய முறைப்படி எங்களுக்கு வேலை வழங்க வேண்டும். என மலைவாழ் மக்கள் பணிக்கு செல்லவில்லை. அவ்வாறு செல்லாததால் வெளி ஆட்களை பணியில் அமர்த்தி உள்ளனர். இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறும்போது:-

    இந்த தொழிலை மட்டுமே நம்பி இருக்கும் எங்களை விடுத்து வெளியூர் நபர்களை வேலையில் அமர்த்தி உள்ளனர். இரவு நேரம் என்றும் பாராமல் வேலை செய்து வந்தோம். யானை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளது.

    பல ஆண்டுகாலம் கோவிலில் உள்ள வேலை களை செய்து வாழ்ந்து விட்டோம். எங்களுக்கு வேலை மறுக்கும் பட்சத்தில் மரம் வெட்டும் தொழிலுக்கு செல்ல நினைக்கிறோம். மரம் வெட்டும் தொழில் செய்தால் மழை அழிந்துவிடும் என்று அரசு எடுத்த முடிவினால் இன்று வரை கோவில் பணி செய்து வருகிறோம்.

    கடந்த சில நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு சுத்தம் செய்யவில்லை. இதனால் மருதமலை கோவில் பகுதியில் குப்பைகள் அதிகளவில் தேக்கம் அடைந்துள்ளது. இதனால் பக்தர்கள் முகம் சுளித்தபடி செல்கிறார்கள்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×