என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தெலுங்கானா"
- இந்த சாக்லேட்டுகளை தெலுங்கானா மாநில உணவு ஆய்வகத்திற்கு அனுப்பி சோதனை செய்ததில் அதில் வெள்ளைப் புழுக்கள் இருப்பது உறுதியாகியுள்ளது.
- இத்தகைய நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி 9-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள அமீர்பேட்டையில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இருந்து கேட்பெரி டைரி மில்க் சாக்லேட்டுகளை சமூக ஆர்வலர் ராபின் சாக்கியஸ் வாங்கியுள்ளார். அதில் புழு ஊர்ந்து செல்வதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்த சாக்லேட்டுகளை தெலுங்கானா மாநில உணவு ஆய்வகத்திற்கு அனுப்பி சோதனை செய்ததில் அதில் வெள்ளைப் புழுக்கள் இருப்பது உறுதியாகியுள்ளது. ஆதலால் இந்த சாக்லேட்டுகள் சாப்பிடுவதற்கு தகுதியில்லாதவை என்று உணவு ஆய்வகம் தெரிவித்துள்ளது.
உணவு ஆய்வகத்தின் அறிக்கையை ராபின் சாக்கியஸ் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
குழந்தைகள் அடிக்கடி உண்ணும் பாதுகாப்பற்ற உணவை வழங்குவதற்காக எப்எம்சிஜி (FMCG) நிறுவனங்களை பொறுப்பேற்க வைத்து தண்டிக்க வேண்டிய தருணம் இது. இத்தகைய நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும் அந்த X பதிவில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை அவர் டேக் செய்துள்ளார்.
இந்த பதிவிற்கு கேட்பெரி (Cadbury) பிராண்டின் உரிமையாளரான மாண்டலெஸ் (Mondelez) பதில் அளித்துள்ளார். அதில், உலகின் மிக விரிவான உணவுப் பாதுகாப்பு அமைப்பை நாங்கள் பின்பற்றுகிறோம். மேலும், எங்கள் தயாரிப்புகள் உடல் ரீதியாக எந்த பிரச்சினைகளையும் உருவாக்காது என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
- 90 லட்சம் குடும்பங்களுக்கு ₹500 சிலிண்டர் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி
- அனைத்து வெள்ளை ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் 500 ரூபாய்க்கு சமையல் சிலிண்டர் வழங்கப்படும்
தெலங்கானாவில் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த 200 யூனிட் வரை இலவச மின்சாரம் மற்றும் ₹500 சிலிண்டர் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி
அனைத்து வெள்ளை ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் 500 ரூபாய்க்கு சமையல் சிலிண்டர் வழங்கப்படும் என்றும், மகாலட்சுமி திட்டத்தின் மூலம் மொத்தம் 40 லட்சம் குடும்பங்கள் இதில் பயனடைவார்கள் என்றும் அமைச்சர் உத்தம் குமார் ரெட்டி தெரிவித்தார்.
தெலுங்கானாவில் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயண வசதியை வழங்கும் திட்டத்தையும், ராஜீவ் ஆரோக்யஸ்ரீ திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக மேம்படுத்தப்பட்ட காப்பீட்டு திட்டத்தையும் டிசம்பர் 9-ஆம் தேதி காங்கிரஸ் அரசு அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
- எம்.எல்.ஏ லாஸ்யா நந்திதா (வயது 37) கார் விபத்தில் உயிரிழந்தார்.
- எம்.எல்.ஏ. லாஸ்யா நந்திதா மறைவிற்கு அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தளத்தில் இரங்கல் தெரிவித்திருந்தார்.
தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத் கண்டோண்ட்மெண்ட் எம்.எல்.ஏவான லாஸ்யா நந்திதா (வயது 37) பிப்ரவரி 23-ம் தேதி நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். கார் விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 13-ந் தேதி நல்கொண்டாவில் பி.ஆர்.எஸ் கட்சி தலைவர் சந்திரசேகர் ராவ் தலைமையில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்துகொண்டு பின்னர் வீடு திரும்பிய நந்திதாவின் கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் நந்திதா அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இன்று 2-வது விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார்.
லாஸ்யா நந்திதா தந்தை சயன்னா 5-முறை எம்.எல்.ஏ.வாக இருந்தார். அவர் உடல்நலக்குறைவால் கடந்த ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி இறந்தார்.
அவரது மறைவிற்குப் பிறகு சந்திரசேகர ராவ் அவரது மகளான லாஸ்யா நந்திதாவிற்கு, செகந்திராபாத் கண்டோண்ட்மெண்ட் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்தார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட வெண்ணேலாவை அதிக வாக்கு வித்தியாசத்தில் அவர் தோற்கடித்தார்.
பெண் எம்.எல்.ஏ. ஒருவர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் தெலுங்கானாவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தெலுங்கானா எம்.எல்.ஏ. லாஸ்யா நந்திதா மறைவிற்கு அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தளத்தில் இரங்கல் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், எம்.எல்.ஏ லாஸ்யா நந்திதா உயிரிழப்பு போன்ற சம்பவங்களை தவிர்ப்பதற்காக மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளின் ஓட்டுநர்களுக்கு தேர்வு வைக்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக பேசிய அம்மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர், "அனுபவமில்லாத ஓட்டுநர்களால் சாலை விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாக இருக்கிறது. தொலைதூரப் பயணங்களுக்காக திறமையான ஓட்டுநர்களை நியமிக்க வேண்டியது அவசியம். இதை கருத்தில்கொண்டு, ஓட்டுநர்களுக்கு தேர்வு வைக்க முடிவு செய்துள்ளோம். ஓட்டுநர் சோதனை நடத்துவதற்கான பயிற்சி இன்னும் சில நாட்களில் தொடங்கப்படும்" என தெரிவித்தார்.
- கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து இடது புறத்தில் உள்ள சாலையோர இரும்பு தடுப்பில் மோதியது.
- உயிருக்கு போராடிய கார் டிரைவரை மீட்டு படன் சேருவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத் கண்டோண்ட்மெண்ட் எம்.எல்.ஏவாக இருந்தவர் லாஸ்யா நந்திதா (வயது 37).
இன்று அதிகாலை ஐதராபாத்தில் இருந்து தனது சொந்த ஊருக்கு காரில் புறப்பட்டார். சங்கரெட்டி மாவட்டம் படன்செருவில் உள்ள எக்ஸ்பிரஸ் வெளிவட்ட சாலையில் கார் சென்று கொண்டிருந்தது.
காலை 6.30 மணி அளவில் வேகமாக வந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து இடது புறத்தில் உள்ள சாலையோர இரும்பு தடுப்பில் மோதியது. இதில் காரில் முன்பகுதி நொறுங்கியது.
காரில் இருந்த லாஸ்யா நந்திதா படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய கார் டிரைவரை மீட்டு படன் சேருவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மேலும் நந்திதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நந்திதா கடந்த 13-ந் தேதி நல்கொண்டாவில் பி.ஆர்.எஸ் கட்சி தலைவர் சந்திரசேகர் ராவ் தலைமையில் பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் கலந்துகொண்டு பின்னர் வீடு திரும்பிய நஞ்சிதாவின் கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் நந்திதா அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இன்று 2-வது விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார்.
லாஸ்யா நந்திதா தந்தை சயன்னா 5-முறை எம்.எல்.ஏ.வாக இருந்தார். அவர் உடல்நலக்குறைவால் கடந்த ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி இறந்தார்.
அவரது மறைவிற்குப் பிறகு சந்திரசேகர ராவ் அவரது மகளான லாஸ்யா நந்திதா செகந்திராபாத், கண்டோண்ட்மெண்ட் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்தார்.
தன்னை எதிர்த்து போட்டியிட்ட வெண்ணேலாவை அதிக வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தந்தை இறந்தார். இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நந்திதா விபத்தில் சிக்கி இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண் எம்.எல்.ஏ. ஒருவர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் தெலுங்கானாவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் தெலுங்கானா எம்.எல்.ஏ. லஷ்ய நந்திதா மறைவிற்கு அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
"கண்டோண்ட்மெண்ட் சட்டமன்ற உறுப்பினர் லாஸ்யா நந்திதாவின் அகால மரணம் என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நந்திதாவின் தந்தையுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. அவர் கடந்த ஆண்டு இதே மாதத்தில் இறந்தார்.
அதே மாதத்தில் திடீரென நந்திதாவும் மரணம் அடைந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. அவர்களது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- ஹூக்கா பார்களை தடை செய்யும் மசோதாவை கர்நாடக அரசு இன்று நிறைவேற்றியது.
- கல்வி நிறுவனங்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவில் சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்களை விற்பனை செய்யவும் தடை விதித்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் சிகரெட் விற்பனைக்கான குறைந்தபட்ச வயது வரம்பை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் ஹூக்கா பார்களை தடை செய்யும் மசோதாவை கர்நாடக அரசு இன்று நிறைவேற்றியது. தடையை மீறும் குற்றவாளிகளுக்கு ஓராண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் வரை அபராதம் உட்பட கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இயற்றப்பட்ட சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் சட்டத்தில் (COTPA) திருத்தம் செய்யப்பட்டு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்காகவும், புகையிலை தொடர்பான நோய்களைத் தடுப்பதற்காகவும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், புகை இல்லாத சூழலை உருவாக்குவதற்காக இந்த திருத்தப்பட்ட மசோதா பொது இடங்களில் புகையிலை பொருட்களைப் பயன்படுத்துவதற்கும் தடை விதித்துள்ளது.
சித்தராமையா தலைமையிலான கர்நாடகா அரசு, கல்வி நிறுவனங்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவில் சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்களை விற்பனை செய்யவும் தடை விதித்துள்ளது. இந்த விதியை மீறினால், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
இம்மாதம், தெலுங்கானா அரசாங்கம் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ஹூக்கா பார்களையும் தடை செய்ய இதேபோன்ற மசோதாவை நிறைவேற்றியது. கடந்த ஆண்டு, ஹரியானா மாநிலம் முழுவதும் உள்ள ஹோட்டல்கள், உணவகங்கள், பார்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் வாடிக்கையாளர்களுக்கு ஹூக்காவை வழங்க அம்மாநில அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
- மாநில முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- பார்வையாளர் இருக்கையில் அமர்ந்திருந்த, முன்னாள் துணை முதல்வர் மயங்கி சரிந்தார்.
நாட்டின் 75-வது குடியரசு தினவிழா நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆந்திர மாநிலம் தெலுங்கானா பவனில் இன்று காலையில் குடியரசு தின விழா கொண்டாட்டம் வெகு விமர்சையாக நடந்து கொண்டிருந்தது. இவ்விழாவில் தெலுங்கானா மாநில முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கலைநிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தபோது பார்வையாளர் இருக்கையில் அமர்ந்திருந்த, தெலுங்கானா முன்னாள் துணை முதல்வர் மஹ்மூத் அலி திடீர் உடல்நலக்குறைவால் மயங்கி சரிந்தார். அப்போது அவரை அருகில் இருந்தவர்கள் கைத்தாங்கலாக உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு அவசர சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
#WATCH | Hyderabad: Former Telangana Deputy CM Mahmood Ali faints during #RepublicDay2024 celebrations at Telangana Bhawan. pic.twitter.com/GCzoMb9l8U
— ANI (@ANI) January 26, 2024
2018-ஆம் ஆண்டில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி சார்பில் மஹ்மூத் போட்டியிட்டு முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்ததுடன், துணை முதலமைச்சராகவும் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- வட இந்திய மாநிலங்களிலும் இந்த பறவை இனங்கள் வர தொடங்கியுள்ளன.
- குளிர்காலம் என்பதால் இறைதேடி தெலுங்கானா மாநிலத்திற்கு வந்துள்ளன.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் மோமின் பேட்டை மண்டலத்தில் உள்ள வனப்பகுதியில் அரிய வகை பறவை ஒன்று தென்பட்டது.
இந்த பறவை மத்திய கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளில் வாழக்கூடியதாகவும். தற்போது வட இந்திய மாநிலங்களிலும் இந்த பறவை இனங்கள் வர தொடங்கியுள்ளன.
தற்போது குளிர்காலம் என்பதால் இறைதேடி தெலுங்கானா மாநிலத்திற்கு வந்துள்ளன. கடந்த 2023-ம் ஆண்டில் தெலுங்கானாவில் காணப்பட்ட பறவைகளின் பட்டியலில் இது இடம்பெற்றுள்ளது.
- 60 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை தள்ளுபடி செய்யப்படுகிறது.
- டிசம்பர் 26-ந்தேதி முதல் ஜனவரி 10-ந்தேதிக்குள் செலுத்த வேண்டும் என அறிவிப்பு.
சாலை போக்குவரத்து விதிமுறை மீறுபவர்களுக்கு போக்குவரத்துத்துறை அதிகாரிகளால் அபராதம் விதிக்கப்படும். லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவது, ஹெல்மெட் அணியால் வாகனம் ஓட்டுவது, சிக்னலில் நிற்காமல் செல்வது, பார்க்கிங் செய்ய தடை செய்யப்பட்ட இடத்தில் வாகனத்தை நிறுத்தி வைப்பது போன்ற விதிமுறை மீறல் காரணத்திற்காக அபராதம் விதிக்கப்படும்.
சாலை விபத்துகளை தவிர்க்கும் வகையில் தற்போது தண்டனை மற்றும் அபராதம் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பலர் அபராதம் செலுத்த முடியாமல் உள்ளனர்.
இந்த வகையில் தெலுங்கானா மாநிலத்தில் போக்குவரத்து விதிமுறையை மீறி அபராதம் செலுத்த வேண்டிய நிலையில், அபராதம் செலுத்தாமல் இருக்கும் நபர்களுக்கு அம்மாநில அரசு 60 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் கட்சி புதிதாக ஆட்சி அமைத்துள்ளது. ரேவந்த் ரெட்டி முதல்வராக பதவி ஏற்றுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட வாகன உரிமையாளர்கள் பயனடையும் வகையில் தெரிவிக்கப்பட்டதன் ஒரு பகுதி இது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 26-ந்தேதி (நேற்று) முதல் ஜனவரி 10-ந்தேதிக்குள் நிலுவையில் உள்ள அபராதத் தொகையை கட்டுபவர்களக்கு இந்த தள்ளுபடி சலுகை பொருந்தும்.
தெலுங்கானா மாநில போக்குவரத்தின் e-challan இணைய தளத்தில் சென்று அவர்களுடைய வாகனத்திற்கான நிலுவை அபராதத் தொகை ரசீது உள்ளதா? என பரிசோதித்து, தள்ளுபடி செய்யப்பட்ட தொகையை கட்டலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் சுமார் 2 கோடி ரசீதுக்கு இன்னும் பணம் செலுத்தவில்லை எனத் தெரிகிறது.
2022-ல் நாடு முழுவதும் 7563.60 கோடி ரூபாய் அளவிற்க 4.73 ரசீதுகள் வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது.
தள்ளுவண்டி, தெலுங்கானா மாநில போக்குவரத்து கழகம் பேருந்துகள் நிலுவைத் தொகையில் 10 சதவீதம் மட்டுமே கட்டினால் போதும். இரு சக்கரம் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் 20 சதவீதம் கட்டினால் போதும். 80 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து கடன்காரராக மாறிய விரக்தியில் தற்கொலை.
- வட்டிக்கு பணம் வாங்கியும் நரேஷ் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதை மனைவி சைதன்யா கண்டித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் மனைவி, மகன், மகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு ஆயுதப்படை காவலர் தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து கடன்காரராக மாறிய விரக்தியில் தற்கொலை எண்ணத்திற்கு தள்ளப்பட்ட ஆயுதப்படை காவலர்.
தற்கொலை செய்து கொண்ட ஆயுதப்படை காவலர் நரேஷ், சித்தபேட்டை ஆட்சியரின் மெய்க்காவலராக பணியாற்றி வந்தவர்.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான நரேஷ் தனது மொத்த சம்பளத்தையும் பல மாதங்களாக சூதாட்டத்தில் இழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இழந்த பணத்தை பிடிக்கலாம் என்ற ஆர்வத்தில் நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்களிடம் லட்சக்கணக்கில் கடன் வாங்கி நரேஷ் சூதாடியுள்ளார்
வட்டிக்கு பணம் வாங்கியும் நரேஷ் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதை மனைவி சைதன்யா கண்டித்துள்ளார்.
இந்நிலையில், மன விரக்தியில் இருந்து வந்த நரேஷ் மனைவி குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இடுப்பு எலும்பு முறிவு காரணமாக சந்திரசேகர ராவ் மருத்துவமனையில் அனுமதி.
- எலும்பு முறிவு காரணமாக சந்திரசேகர ராவுக்கு அறுவை சிகிச்சை.
தெலுங்கானா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் கே சந்திரசேகர ராவ் தனது வீட்டின் குளியலறைக்கு சென்ற போது திடீரென வழுக்கி விழுந்தார். கீழே விழுந்ததில், இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக அவருக்கு இடதுபுற இடுப்பு எலும்பு மாற்றப்பட வேண்டும் என்றும், இது முழுமையாக குணமடைய ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை ஆகும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், சந்திரசேகர ராவ் உடல்நிலை குறுத்து மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது.
அந்த அறிக்கையில், "சந்திரசேகர ராவ் உடல்நிலை சீராக உள்ளது. நாள் முழுக்க ஓய்வில் இருந்த அவருக்கு வலி எதுவும் ஏற்படவில்லை. அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் அடங்கிய குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது."
"சர்வதேச மருத்துவ வழிகாட்டுதல்களின் படி நோயாளியை 12 மணி நேரத்திற்குள் நடக்க வைக்க வேண்டும். அந்த வகையில், மருத்துவர்கள் முன்னிலையில் சந்திரசேகர ராவ் நடக்க வைக்கப்பட்டார். அவர் விரைந்து குணமடைய உடற்பயிற்சிகளை பரிந்துரை செய்திருக்கிறோம். சந்திரசேகர ராவ் குணமடையும் விதம் மருத்துவ குழுவுக்கு திருப்தியளிக்கும் வகையில் தான் உள்ளது," என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
- காங்கிரஸ் கட்சியிலும் முன்னணி தலைவராக உருவெடுத்துள்ளார்.
- சீதக்கா 14 வயதில் நக்சலைட் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார்.
தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 64 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியமைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் தெலுங்கானா மாநில முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி தேர்வு செய்யப்பட்டார். இவர் நேற்று (டிசம்பர் 07) பதவியேற்றுக் கொண்ட நிலையில், இவருடன் 11 பேர் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டனர்.
காங்கிரஸ் தலைமையிலான 11 பேர் அடங்கிய அமைச்சரவையில் அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் தான் சீதக்கா. நக்சலைட் அமைப்பில் இருந்து, அரசியலில் எண்ட்ரி கொடுத்து, தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சராகவும் பொறுப்பேற்று இருக்கும் சீதக்கா அம்மாநில அரசியல் மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியிலும் முன்னணி தலைவராக உருவெடுத்து வருகிறார்.
ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேச மாநிலத்தின் முலுகு மாவட்டத்தை அடுத்த ஜகன்னபேட்டாவில் ஆதிவாசி குட்டி கோயா குடும்பத்தில் சாரையா மற்றும் சாரக்கா தம்பதிக்கு பிறந்தவர் தான் சீதக்கா. தனது குடும்பத்தில் இளம் குழந்தையாக பிறந்த தன்சாரி அனுசுயா என்கிற சீதக்கா தனது 14 வயதில் நக்சலைட் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார்.
1980-களில் மாவோயிஸ்ட் அண்ணன்களின் கருத்தியலை விரும்பிய சீதக்கா அவர்கள் நில உரிமையாளர்களை எதிர்கொண்டு சண்டையிட்ட விதத்தால் அமைப்பில் ஈர்க்கப்பட்டார். தனது குடும்பத்தாரை போன்றே சீதக்காவும் தனது வாழ்க்கையை சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவதற்காக தியாகம் செய்ய முன்வந்தார்.
பெற்றோரால் அனுசுயா என்று பெயர்சூட்டப்பட்ட இவருக்கு நக்சல் படையை சேர்ந்த தலைவர்களே சீதா என்ற புதிய பெயர் சூட்டினர். இந்த பெயர் தான் காலப்போக்கில் சீதக்கா என்று மாறியது. மாவோயிஸ்டுகளுடன் தொடர்ந்து பயணித்த சீதக்கா கமாண்டோவாக பணியாற்றி வந்தார். ஒருகட்டத்தில் மாவோயிஸ்டுகளின் அரசியல் கருத்துக்களில் முரண்பாடு ஏற்பட, அந்த அமைப்பில் இருந்து வெளியேறி 1997-ம் ஆண்டு சரண் அடைந்தார்.
பிறகு, அப்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆட்சியின் போது பொது வாழ்க்கையை தொடங்கிய சீதக்கா, வழக்கறிஞர் அவதாரம் எடுத்து பழங்குடியிர் மற்றும் முலுகு பகுதியின் பெண்களுக்கு எதிரான வழக்குகளில் ஆஜராகி வாதாடினார். பின்னர் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்த இவர் 2009-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேச மாநிலத்தில் முலுகு தொகுதியில் களமிறங்கி தேர்தலில் போட்டியிட்ட சீதக்கா, சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
The roaring cheer from the public says enough for what she achieved in her life. Maybe more cheers than CM Revantha. She is an icon and inspiration. Goosebumps. Dansari seethakka ane nenu... ❤✊?#Seethakka pic.twitter.com/3apf7Sywip
— Pr@thamesh? (@prathameshpurud) December 7, 2023
பிறகு முனைவர் பட்டம் பெற வேண்டும் என்ற தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய சீதக்கா தனது சமுதாயம் பற்றிய ஆய்வு செய்து பட்டம் பெற்றார். அந்த வகையில் முலுகு தொகுதியில் மூன்றுமுறை சட்டமன்ற உறுப்பினரான சீதக்கா சமீபத்தில் நடைபெற்று முடிந்த தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பி.ஆர்.எஸ். கட்சியின் பேட் நாகஜோதியை 33 ஆயிரத்து 700 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.
தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்டவரை விட அதிக வாக்குகள் மூலம் வெற்றி பெற்ற சீதக்கா, தெலுங்கானா மாநிலத்தின் பழங்குடியின நலத்துறை அமைச்சராக பதவியேற்றார். பதவியேற்பின் போது இவரது பெயர் அழைக்கப்பட்டதும், அங்கிருந்த கட்சி தொண்டர்கள் எழுப்பிய கரகோஷம் மற்றும் ஆரவாரம் சில நொடிகள் வரை நீடித்தது. இதன் காரணமாக உறுதிமொழி ஏற்க சீதக்கா சில நொடிகள் மேடையிலே காத்திருந்தார்.
- சந்திரசேகர ராவ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
- ஐதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் அனுமதி.
தெலுங்கானா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் கே சந்திரசேகர ராவ் தனது வீட்டின் குளியலறைக்கு சென்ற போது திடீரென வழுக்கி விழுந்தார். வலியால் துடித்த அவரை குடும்த்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இன்று நள்ளிரவு 2 மணி அளவில் சந்திரசேகர ராவ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
69 வயதான சந்திரசேகர ராவ் கீழே விழுந்ததில், இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக அவருக்கு இடதுபுற இடுப்பு எலும்பு மாற்றப்பட வேண்டும் என்றும், இது முழுமையாக குணமடைய ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை ஆகும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மருத்துவமனையில் உள்ள சந்திர சேகர ராவின் உடல்நிலை குறித்து மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அவரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் சந்திர சேகர ராவின் உடல்நிலை குறித்த தகவல்களை தொடர்ந்து வெளியிடுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் தோல்வியுற்ற நிலையில், முன்னாள் முதலமைச்சர் கே சந்திரசேகர ராவ் கடந்த மூன்று நாட்களாக கட்சி பிரமுகர்கள் மற்றும் பலரை தனது இல்லத்தில் தொடர்ச்சியாக சந்தித்து வந்தார். கடந்த 2014 முதல் 2023 வரை தெலுங்கானாவில் ஆட்சி செய்து வந்த கே சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ். கட்சியை காங்கிரஸ் வீழ்த்தியது.
இதையடுத்து காங்கிரஸ் சார்பில் ரேவந்த் ரெட்டி தெலுங்கானா மாநிலத்தின் முதலமைச்சராக நேற்று (டிசம்பர் 08) பதவியேற்றார். இவருடன் 11 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். 119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 64 இடங்களில் வெற்றி பெற்றது.
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சந்திரசேகரராவை பார்க்க கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அப்பகுதியில் குவிந்தனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்