search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலை போக்குவரத்து"

    • 60 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை தள்ளுபடி செய்யப்படுகிறது.
    • டிசம்பர் 26-ந்தேதி முதல் ஜனவரி 10-ந்தேதிக்குள் செலுத்த வேண்டும் என அறிவிப்பு.

    சாலை போக்குவரத்து விதிமுறை மீறுபவர்களுக்கு போக்குவரத்துத்துறை அதிகாரிகளால் அபராதம் விதிக்கப்படும். லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவது, ஹெல்மெட் அணியால் வாகனம் ஓட்டுவது, சிக்னலில் நிற்காமல் செல்வது, பார்க்கிங் செய்ய தடை செய்யப்பட்ட இடத்தில் வாகனத்தை நிறுத்தி வைப்பது போன்ற விதிமுறை மீறல் காரணத்திற்காக அபராதம் விதிக்கப்படும்.

    சாலை விபத்துகளை தவிர்க்கும் வகையில் தற்போது தண்டனை மற்றும் அபராதம் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பலர் அபராதம் செலுத்த முடியாமல் உள்ளனர்.

    இந்த வகையில் தெலுங்கானா மாநிலத்தில் போக்குவரத்து விதிமுறையை மீறி அபராதம் செலுத்த வேண்டிய நிலையில், அபராதம் செலுத்தாமல் இருக்கும் நபர்களுக்கு அம்மாநில அரசு 60 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

    தெலுங்கானா மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் கட்சி புதிதாக ஆட்சி அமைத்துள்ளது. ரேவந்த் ரெட்டி முதல்வராக பதவி ஏற்றுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட வாகன உரிமையாளர்கள் பயனடையும் வகையில் தெரிவிக்கப்பட்டதன் ஒரு பகுதி இது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டிசம்பர் 26-ந்தேதி (நேற்று) முதல் ஜனவரி 10-ந்தேதிக்குள் நிலுவையில் உள்ள அபராதத் தொகையை கட்டுபவர்களக்கு இந்த தள்ளுபடி சலுகை பொருந்தும்.

    தெலுங்கானா மாநில போக்குவரத்தின் e-challan இணைய தளத்தில் சென்று அவர்களுடைய வாகனத்திற்கான நிலுவை அபராதத் தொகை ரசீது உள்ளதா? என பரிசோதித்து, தள்ளுபடி செய்யப்பட்ட தொகையை கட்டலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தெலுங்கானா மாநிலத்தில் சுமார் 2 கோடி ரசீதுக்கு இன்னும் பணம் செலுத்தவில்லை எனத் தெரிகிறது.

    2022-ல் நாடு முழுவதும் 7563.60 கோடி ரூபாய் அளவிற்க 4.73 ரசீதுகள் வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

    தள்ளுவண்டி, தெலுங்கானா மாநில போக்குவரத்து கழகம் பேருந்துகள் நிலுவைத் தொகையில் 10 சதவீதம் மட்டுமே கட்டினால் போதும். இரு சக்கரம் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் 20 சதவீதம் கட்டினால் போதும். 80 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • புது டெல்லியில் ஒரு சந்திப்பில் நிதின் கட்கரி உரையாற்றினார்
    • சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அந்நிறுவனங்கள் விலையை ஏற்றுகின்றன

    இந்தியாவின் ஆளும் பா.ஜ.க. அரசாங்கத்தின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருப்பவர் நிதின் கட்கரி (66).

    இந்திய தலைநகர் புது டெல்லியில், "க்ரிசில் இந்தியா இன்ஃப்ராஸ்ட்ரக்சர் கான்க்லேவ் 2023" எனும் இந்தியாவின் உள்கட்டமைப்பில் பங்கு பெறும் நிறுவனங்களுக்கான ஒரு சந்திப்பில் அவர் உரையாற்றினார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது;

    அரசாங்கம் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதை ஊக்குவித்தாலும் உள்கட்டமைப்பு அமைப்பதில் பங்கு பெறும் நிறுவனங்கள் தற்போதைய தொழில்நுட்பங்களுக்கு மாற தயங்குகின்றன. இதனால் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனது திட்டங்களுக்கு டிபிஆர் எனும் 'விரிவான திட்ட அறிக்கைகள்' (Detailed Project Reports) தயாரிக்க மிகுந்த சிரமங்களை சந்திக்கின்றன. இது மட்டுமின்றி சிமெண்ட் மற்றும் எக்கு தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களுக்குள் 'ரகசிய கூட்டமைப்பு' ஒன்றை உருவாக்கி விலை குறையாமல் பார்த்து கொள்கின்றன. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அந்நிறுவனங்கள் விலையை ஏற்றுவதையும் வழக்கமாக கொண்டுள்ளன. நிலையின்றி அடிக்கடி உயரும் விலையினால் டிபிஆர் உருவாக்குவது மிக கடினமாக உள்ளது. எங்குமே ஒரு முழுமையான டிபிஆர் உருவாக்கப்படுவதில்லை. தயாரிக்கப்படும் திட்ட அறிக்கைகளிலும் பல தவறுகள் இடம்பெறுகின்றன. சரக்கு போக்குவரத்திற்கான செலவினங்கள் இந்தியாவில் 14லிருந்து 16 சதவீதம் உள்ளது. ஆனால் சீனாவில் 8லிருந்து 10 சதவீத அளவிலேயே உள்ளது. இதனால் திட்டங்களுக்கான செலவுகள் வரையறுக்கப்பட்டதை விட அதிகமாகி விடுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • 100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணை 97 அடியை எட்டியதால் வெள்ளநீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
    • உயர்மட்ட பாலம் பயன்பாட்டுக்கு வந்ததால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளை ஒட்டியுள்ள கேரளா, நீலகிரி மாவட்டத்தில் கடந்தாண்டு ஜூன், ஜூலை மாதங்களில் அதிகளவில் பருவ மழை பெய்தது.

    இதனால் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே 100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணை 97 அடியை எட்டியதால் வெள்ளநீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    மேலும் நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி, கூடலூர் மாயாறு பகுதிளில் இருந்தும் மழைநீர் பவானிசாகர் அணைக்கு தண்ணீா் வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்தது.

    இதையொட்டி பவானிசாகர் நீர்த்தேக்க பகுதிகளான சிறுமுகை 1-வது வார்டுக்குட்பட்ட லிங்காபுரம் கிராமத்தில் இருந்து பழங்குடியின கிராமங்களான காந்தவயல், உலியூர், ஆலூர், காந்தையூர் உள்ளிட்ட கிராமளுக்கு செல்லும் உயர்மட்ட பாலம் தண்ணீரில் மூழ்கியது.

    மேலும் இந்த பகுதியில் உள்ள விளைநிலங்களும் தண்ணீரில் மூழ்கியது. இதனிடையே கடந்த ஆகஸ்டு மாதம் லிங்காபுரத்தில் இருந்து காந்தவயல் செல்லும் சாலையின் உயர்மட்ட பாலம் முற்றிலும் தண்ணீரில் மூழ்கியதால் சாலை போக்குவரத்து முடங்கியது.

    இதனால் சிறுமுகை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பரிசல், மோட்டார் படகு போக்குவரத்து மேற்கொள்ளப்பட்டது.

    இந்நிலையில் தற்போது பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதையொட்டி காந்தவயல்-லிங்காபுரம் இடையே தண்ணீரில் மூழ்கிய உயர்மட்ட பாலம் 7 மாதங்களுக்கு பின் மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.

    இதனிடையே நேற்று முதல் பொதுமக்கள் இந்த உயர்மட்ட பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே ஒருசில வாரங்களில் லிங்காபுரம்-காந்தவயல் இடையே உயர்மட்டம் பாலம் பகுதியில் நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு செய்து தண்ணீரில் மூழ்காதவாறு பால பணிகள் மேற்கொள்ளப்படும் என சிறுமுகை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×