search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CRISIL"

    • பலரக காய்கறிகளை கொண்டு விதவிதமான பதார்த்தங்கள் தாலிக்களில் இடம்பெறும்
    • அசைவ தாலிகளில் பருப்பிற்கு மாற்றாக பிராய்லர் சிக்கன் துண்டு வைக்கப்படும்

    வட இந்திய மற்றும் தென்னிந்திய உணவகங்களில் மதிய நேரங்களில் மக்களால் விரும்பி உண்ணப்படும் பலவகை உணவுகளில் "தாலி" எனப்படும் முழு சாப்பாடு முக்கியமான ஒன்று.

    இதில் பல ரக காய்கறிகளை கொண்டு விதவிதமாக செய்யப்படும் பதார்த்தங்களும், அளவில்லாத சாதமும் வழங்கப்படுவது வழக்கம்.

    இந்நிலையில், கடந்த ஒரு வருட காலகட்டத்தில் "சைவ தாலி" (vegetarian thaali) உணவின் விலை முந்தைய ஆண்டை விட 5 சதவீதம் உயர்ந்துள்ளதாக, நிறுவனங்களுக்கான தரக்குறியீடுகளை வழங்கும் "க்ரிசில்" (CRISIL) மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    அதே நேரத்தில் "அசைவ தாலி" (nonvegetarian thaali) சாப்பாட்டின் விலை 13 சதவீதம் குறைந்துள்ளது.

    "ரோட்டி ரைஸ் ரேட்" (Roti Rice Rate) எனும் பெயரில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கைக்காக, பல சைவ மற்றும் அசைவ உணவகங்களில் கடந்த ஓராண்டுகளாக அவர்கள் தொடர்ந்து வழங்கி வரும் மெனுக்களின் அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

    ஒரு "சைவ தாலி" மெனுவாக, ரோட்டி (Roti), வெங்காயம், தக்காளி, உருளை, அரிசி, பருப்பு (dal), தயிர் மற்றும் பச்சைக்காய்கறி கலவை (salad) உள்ளிட்டவை இந்த ஆய்வில் கணக்கிடப்பட்டது.

    ஒரு அசைவ தாலி மெனுவாக, சைவ தாலியில் உள்ளவைகளுடன் பருப்பிற்கு பதிலாக "பிராய்லர்" கோழி உள்ள மெனு கணக்கிடப்பட்டது.

    இந்த ஆய்வின்படி, 2023 ஜனவரி மாதம் ரூ.26 என இருந்த ஒரு சைவ தாலி சாப்பாட்டின் விலை, 2024 ஜனவரி மாதம் விலை ரூ.28 என உயர்ந்துள்ளது.

    ஆனால், 2023 ஜனவரி மாதம் ரூ.59 என இருந்த ஒரு அசைவ தாலி சாப்பாட்டின் விலை, 2024 ஜனவரி மாதம் ரூ.52 என குறைந்துள்ளது.

    தக்காளி, வெங்காயம், அரிசி, பருப்புகள் ஆகியவற்றின் விலையேற்றமே சைவ தாலியின் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என ஆய்வு குறிப்பிடுகின்றது.

    ஆனால், பிராய்லர் கோழியின் பெருக்கம் காரணமாக அவற்றின் சந்தை விலை 26 சதவீதம் குறைந்து விட்டது. இதனால் அசைவ தாலியின் விலையை உணவக உரிமையாளர்கள் குறைத்தனர்.

    இதன் மூலம் உணவு பொருட்களுக்கான விலைவாசி (food inflation) குறையவில்லை என தெரிகிறது என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    • புது டெல்லியில் ஒரு சந்திப்பில் நிதின் கட்கரி உரையாற்றினார்
    • சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அந்நிறுவனங்கள் விலையை ஏற்றுகின்றன

    இந்தியாவின் ஆளும் பா.ஜ.க. அரசாங்கத்தின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருப்பவர் நிதின் கட்கரி (66).

    இந்திய தலைநகர் புது டெல்லியில், "க்ரிசில் இந்தியா இன்ஃப்ராஸ்ட்ரக்சர் கான்க்லேவ் 2023" எனும் இந்தியாவின் உள்கட்டமைப்பில் பங்கு பெறும் நிறுவனங்களுக்கான ஒரு சந்திப்பில் அவர் உரையாற்றினார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது;

    அரசாங்கம் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதை ஊக்குவித்தாலும் உள்கட்டமைப்பு அமைப்பதில் பங்கு பெறும் நிறுவனங்கள் தற்போதைய தொழில்நுட்பங்களுக்கு மாற தயங்குகின்றன. இதனால் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனது திட்டங்களுக்கு டிபிஆர் எனும் 'விரிவான திட்ட அறிக்கைகள்' (Detailed Project Reports) தயாரிக்க மிகுந்த சிரமங்களை சந்திக்கின்றன. இது மட்டுமின்றி சிமெண்ட் மற்றும் எக்கு தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களுக்குள் 'ரகசிய கூட்டமைப்பு' ஒன்றை உருவாக்கி விலை குறையாமல் பார்த்து கொள்கின்றன. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அந்நிறுவனங்கள் விலையை ஏற்றுவதையும் வழக்கமாக கொண்டுள்ளன. நிலையின்றி அடிக்கடி உயரும் விலையினால் டிபிஆர் உருவாக்குவது மிக கடினமாக உள்ளது. எங்குமே ஒரு முழுமையான டிபிஆர் உருவாக்கப்படுவதில்லை. தயாரிக்கப்படும் திட்ட அறிக்கைகளிலும் பல தவறுகள் இடம்பெறுகின்றன. சரக்கு போக்குவரத்திற்கான செலவினங்கள் இந்தியாவில் 14லிருந்து 16 சதவீதம் உள்ளது. ஆனால் சீனாவில் 8லிருந்து 10 சதவீத அளவிலேயே உள்ளது. இதனால் திட்டங்களுக்கான செலவுகள் வரையறுக்கப்பட்டதை விட அதிகமாகி விடுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×